Pirapantattiraṭṭu XVIII


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XVIII
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 18 (2237 - 2338)
திருவிடைமருதூர்த்திரிபந்தாதி.




கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

    காப்பு.



    2237 - ஆண்டவிநாயகர்துதி.
    சிதவாரணங்குமுறுந்துறைமூழ்கித்திருமறையோ
    ரிதவாரணங்குலவச்செய்யிடைமருதீசனென்றோ
    மதவாரணங்குமுலைபாகற்பாடுதற்காண்டபெரு
    மதவாரணங்குவலயங்கொண்டாடும்வரந்தருமே. - 1



    2238 - குருவணக்கம்.

    2238.
    பெரும்புங்கவர்புகழ்கோமுத்திவாழ்சுப்பிரமணிய
    வரும்புங்கவன்பதம்யான்றொழவென்கையருட்குறியொன்
    றிரும்புங்கரையவெடுத்தளித்தானதையேத்தல்செய்வேன்
    கரும்புங்கனியுமெனவன்புசாருங்கதியுமுண்டே. - 2

    நூல்.


    2239 - திருவருந்தாமரைமேலாருமாயசிறப்பினர்க
    ளிருவருந்தாமரைநாட்டேடிக்காண்பிலிடைமருத
    வொருவருந்தாமரைபோலுழலாமலுவந்தெனையா
    டருவருந்தாமரைவேண்டேனிதரசமையத்தரே. - 1



    2240 - சமையத்தவரையிகழாந்தற்போதந்தடிந்துசெம்பொ
    னிமையத்தவரையெடுத்தவிடைமருதீச்சுரரை
    யுமையத்தவரையரையோர்ந்துதம்மையுமோர்ந்தருள்பெற்
    றமையத்தவரையடிமலர்தாழ்ந்துள்ளடங்குறினே. - 2



    2241 - அடக்கந்தரத்தரைமேற்பயிலாமன்பருளடையா
    மடக்கந்தரத்தரையென்றாழிநல்கவருகொடிய
    விடக்கந்தரத்தரைமேவிடைமாமருதூரின்மென்புற்
    றடக்கந்தரத்தரையெவ்வாறுநாஞ்சென்றுசார்வதுவே. - 3



    2242 - சாராததென்னைதமைவிழைந்தாரைவிண்டாங்குதலிற்
    சோராததென்னையிடைமருதீசர்தந்தூமனமு
    மோராததென்னையொருவேள்சமருமுடற்றியென்றுந்
    தீராததென்னைதரக்கரம்வீசுறுந்திங்கள்வந்தே. - 4



    2243 - வந்தித்தவரையயன்மால்வந்திக்கவிண்வைப்பவரைச்
    சிந்தித்தவரையிடைமருதீரென்றுந்தீயமதின்
    முந்தித்தவரையெடுத்தீரென்றுந்திண்ணர்மொய்செருப்புக்
    கந்தித்தவரையுடையீரென்றுஞ்சொலக்கற்றனமே. - 5



    2244 - கற்றனமாலையிடைமருதூரரைக்கம்பவென்று
    முற்றனமாலைவயலாருங்கோமுத்தியும்பவென்றுஞ்
    சொற்றனமாலைமின்னாரம்பராயென்றுஞ்சொற்றிடநாண்
    விற்றனமாலையிராவதவாழ்க்கையும்வேண்டலமே. - 6



    2245 - வேண்டாதவரைவிழையாதவரைவிழைந்தெனுள்ளத்
    தீண்டாதவரையிடைமருதீசரையென்றுமன்பே
    பூண்டாதவரையரையரையக்கரைப்போந்துகொடி
    தீண்டாதவரையுறைவாரையன்றியொர்தெய்வமுண்டே. - 7



    2246 - உண்டலங்காரவன்னாயாயத்தாரொடுமுற்றுச்செய்த
    வண்டலங்காரவுற்றேனென்றுகூறியொர்மாரனொப்பா
    னெண்டலங்காரமனையாரிடைமருதீசர்க்கொல்லாக்
    கண்டலங்காரகனைப்போற்பறித்திவள்கைத்தந்ததே. - 8



    2247 - தந்தவளக்கரிகொங்கையொண்பாம்பல்குல்சங்கங்கள
    நந்தவளக்கரியன்றுதருநஞ்சநாட்டமிய
    லந்தவளக்கரியான்கோலமாகியறமுயன்று
    முந்தவளக்கரியானிடைமாமருதூர்முதலே. - 9



    2248 - முதலைப்பரவைதருநஞ்சமுண்டமுதல்வமண
    மதலைப்பரவையிடைமருதூரவிண்வாழ்க்கைபெற்ற
    சிதலைப்பரவையகந்தாழ்வன்மீகசிறியனென்றும்
    விதலைப்பரவையழுந்தாதுகாத்தலுன்மெய்யருளே. - 10



    2249 - மெய்யருளத்தனைநண்மருதூரனைவீணர்க்கெல்லாம்
    பொய்யருளத்தனையீயானைமாரிப்புயல்சமழ்க்கப்
    பெய்யருளத்தனையும்முடையானைப்பெரிதெண்ணினோஞ்
    செய்யருளத்தனையாறாறுந்தீர்த்தருடேவனென்றே. - 11



    2250 - தேவவருக்கம்பணிவானயனரிதீர்தருநாண்
    மேவவருக்கவெலும்பணிவான்விழைகங்கைமங்கை
    நோவவருக்கஞ்சடையேற்றினானன்னுதல்வதன
    மேவவருக்கன்மதியழலான்வைப்பிடைமருதே. - 12



    2251 - மருதவனத்தனிடைமுதலாங்கடைமன்னியவுள்
    கருதவனத்தனரிமுதலோருங்கழிந்தபெரு
    விருதவனத்தன்விண்மண்முடிந்தாலும்விளங்கவனெற்
    கொருதவனத்தன்மையனெனவோதுமெம்மொண்ணுதலே. - 13



    2252 - ஒண்ணுதலானைகரந்தீர்ந்தவர்க்கொளியைப்புரவு
    பண்ணுதலானையுகைப்பானைத்தன்னுருப்பற்றுருவென்
    றெண்ணுதலானையெனையாண்டவனையிடைமருதூர்க்
    கண்ணுதலானைக்கருதார்பிறப்பிற்கரங்கணன்றே. - 14



    2253 - கரமனகத்தையுறுநாயுமற்றொளிகால்கனக
    வாமனகத்தைவளைத்தபிரானிடைமாமருதப்
    புரமனகத்தையலர்பணிபூண்டுழல்புன்மையரப்
    பரமனகத்தைமுழக்காரடைந்தபவத்தினுமே. - 15



    2254 - பவம்பலவாயினுமாகவெனக்குவிண்பற்றுகன
    கவம்பலவாயினுநல்லவகற்றுவல்லாமுருடர்க்
    குவம்பலவாயினுந்தீதில்லிடைமருதூர்குறுகுந்
    தவம்பலவாயினுமென்றொருஞானந்தலைப்படினே. - 16



    2255 - தலையுமடியுமிசைகிழக்கார்பியறாங்கப்பெற்றே
    அலையுமடியுமதளாரிடைமருதார்நமனார்
    குலையுமடியுமென்னாதருள்வார்நஞ்சுகொண்டிலரே
    னிலையுமடியும்படைப்புமடியுநெடுநிலத்தே. - 17



    2256 - நிலங்காவலவென்றுமேதக்கவதமிழ்நேயத்தின்மிக்
    கலங்காவலவென்றுபோலொளிர்வாய்கவியாய்கொடையின்
    மலங்காவலவென்றுபாடாமலேயிடைமாமருதூர்த்
    தலங்காவலவென்றுமுள்ளாயென்றீசனைச்சார்மின்களே. - 18



    2257 - சாரலங்கற்றைநினைந்துசெலாவெனத்தானங்கிழி
    வேரலங்கற்றையொளிக்கயிலாயத்தும்வேட்கைமிக
    வாரலங்கற்றையலாள்பாகன்வாழ்மத்தியார்ச்சுனத்தை
    யோரலங்கற்றையையோவறிதேபொழுதோட்டுவமே. - 19



    2258 - ஒடுங்கனகமுமொன்றார்கொண்மன்றுமுபரிகையென்
    றாடுங்கனகமுஞ்சேரிடைமாமருதூரண்ணலைப்
    பாடுங்கனகமுமுண்டாகுமின்பப்பயனென்பது
    நீடுங்கனகமுமொவ்வாவருள்வந்துநேர்நிற்குமே. - 20



    2259 - நிற்குநடக்குமிருக்குநின்னாடனெறியனைத்துங்
    கற்குநடக்கும்படியெவனென்றுகருதியுள்ளத்
    தற்குநடக்குமிடைமருதூரவத்தாணியிருப்
    பிற்குநடக்குமுலாவிற்குங்காமுற்றவென்மயிலே. - 21



    2260 - என்னாவியன்னமணிமிடற்றானையிமையவர்தோய்
    துன்னாவியன்னமலியிடைமாமருதூரனைச்சொ
    னன்னாவியன்னமவென்குழல்பாகனைநாடினர்போன்
    மன்னாவியன்னமடமாதர்மேவுமிவ்வைகலிலே. - 22



    2261 - வையம்பரவவிடைமருதூர்வதிவார்வரைவாய்க்
    கையம்பரவமெனக்கொடுவேடர்கலப்பருள
    நையம்பரவலரிப்பானிற்பானெனினண்ணவனு
    தையம்பரவவருதியித்தானந்தராதிபனே. - 23



    2262 - தரங்கந்தருவல்விடமூணிடைமுதல்சார்மருதே
    புரங்கந்தருவமறையுடைதோறில்லங்காடுபொலி
    யரங்கந்தருவமைவாழ்க்கையர்யாருமடிமையென்னிற்
    றரங்கந்தருவகைசெய்யும்பிதாவிவர்செய்கைநன்றே. - 24



    2263 - நன்றாவிருக்கினுந்தீதாவிருக்கினுநல்லருளே
    யொன்றாவிருக்கினுமோராவிடைமருதூரன்செய்கை
    யென்றாவிருக்கினும்பாலேயிகபரமெய்துங்குணக்
    குன்றாவிருக்கினுமாலாதியரிதுகொள்வரிதே. - 25



    2264 - அரியரவிந்தன்மகவான்முதலியரஞ்சலிக்க
    வரியரவிந்தம்புனைவாரிடைமருதூரர்வரைக்
    குரியரவிந்தமடவாள்பொருட்டிங்ஙனுற்றுச்சொல்லும்
    பெரியரவிந்தமுயலூனுந்தேனும்பெறுகைநன்றே. - 26



    2265 - பெற்றங்குலவவிடைமருதீசர்பிறங்குமறு
    குற்றங்குலவக்கரங்குவித்தாளிவ்வொருபிழைக்காச்
    சுற்றங்குலவமடமாதரம்பறுணியப்பொன்செ
    யிற்றங்குலவவெளிப்பட்டுளாளென்னிளங்கொடியே. - 27



    2266 - இளங்கொடியானவுமைபாகன்வாழுமிடைமருத
    வளங்கொடியானஞ்செயேன்பூசநீர்த்துறைவாஞ்சைவையேன்
    களங்கொடியானலைவேனையையோவென்னகன்மந்திரு
    வுளங்கொடியானனினைத்ததென்னோவொன்றுமோர்கிலனே. - 28



    2267 - ஓராதவனையிருட்புகுத்தானையுணர்தலில்லார்ச்
    சாராதவனையொருபாகனைத்தங்கிடைமருதம்
    பேராதவனைப்பெயருகென்றாலுமென்பேதைநெஞ்சந்
    தீராதவனைமயிலொடுவாழுந்திறனெவனே. - 29



    2268 - திறப்பாவனையமனமோரணுத்துணைசெப்பலென்ன
    மறப்பாவனையமனமிலையோவிடைமாமருதுஞ்
    சிறப்பாவனையமருதருந்தேவியுந்தேவிடையு
    மறப்பாவனையக்கொடுவைகலென்னுளடக்கியதே. - 30



    2269 - அடத்தருமன்றண்டங்கொண்டமராற்றியலக்கணைந்தும்
    விடத்தருமன்றண்டங்கொண்டாடவந்துவிலக்குதுயில்
    வடத்தருமன்றண்டமென்னிடைமாமருதூரவின்னு
    நடத்தருமன்றண்டவுஞ்செய்யவேண்டுமிந்நாயினையே. - 31



    2270 - நாயகத்தன்மைகொளச்சிலர்நாணிலர்ஞாலமுற்று
    மேயகத்தன்மைவிழியொருபாகனிடைமருத
    னாயகத்தன்மைவிளக்கவிரங்கியரியகண்ட
    வாயகத்தன்மையுறநஞ்சங்கொண்டவலிகண்டுமே. - 32



    2271 - கண்டனங்கோலம்வருமாமுயல்வுங்கண்டங்கறுப்பும்
    பெண்டனங்கோலமெய்வாழ்வுந்தலைப்பெருக்கத்தொடையு
    முண்டனங்கோலமடமாரிடைமருதூருறையு
    மண்டனங்கோலமலையானுமூவருளண்டனன்றே. - 33



    2272 - அண்டத்திருப்புநரலையிலாகியடர்ந்தவிடங்
    கண்டத்திருப்புமண்ணாதியபூதங்கலங்கிலய
    மண்டத்திருப்புவதுசூலமேனண்மருதர்மதித்
    துண்டத்திருப்புவனமான்றவனைத்துணைபவரே. - 34



    2273 - துணைத்ததனத்தியொருபாகர்மாண்டுதொலைந்ததன்னோ
    பணைத்ததனத்தியெனான்வாள்கொடுத்தவன்பால்விருப்ப
    ரணைத்ததனத்திரளென்னாவியார்நண்மருதரவா
    வுணைத்ததனத்தினுழலாதருளெற்குதவுவரே. - 35



    2274 - உதவாதவரையுபகாரரொன்றுங்கல்லாதவரு
    சிதவாதவரைவெலுங்குரவோரெனவேத்திறந்த
    புதவாதவரைப்புகழாநும்வாயிதுபோக்கியொரீஇ
    மதவாதவரையிடைமருதூரரைவாழ்த்துமினே. - 36



    2275 - வாழ்த்தாதவாயுமிடைமருதூரர்மலரடிப்பாற்
    றாழ்த்தாதவாயுந்தலையுமுன்னாத்தனிநெஞ்சுந்தள்ளு
    மூழ்த்தாதவாயுமறுப்பாங்குணமுமுலகத்தில்லாப்
    பாழ்த்தாதவாயுமெனக்கேபிரமன்படைத்தனனே. - 37



    2276 - படைப்பருந்தானையிடைமருதூரர்பதம்பணியார்
    கிடைப்பருந்தானைசிதராகக்கொண்டுகெழுமுசெல்வப்
    புடைப்பருந்தானையர்வீடுகடோறும்புக்குண்டுபுலான்
    முடைப்பருந்தானையுடம்போம்பிநிந்தைமொழிகுவரே. - 38



    2277 - மொழிவருங்கூற்றநல்லார்தமைப்பேசிமுனிந்துசினங்
    கொழிவருங்கூற்றமுமெண்ணார்பரரிற்குறுகியுண்டே
    யிழிவருங்கூற்றமுமில்லாரிடைமருதீசனெந்தைக்
    கொழிவருங்கூற்றமுதனீள்கருணைபெற்றுய்வதென்றே. - 39



    2278 - என்றுவருந்துமதுதீர்ந்தின்பெய்தியிருப்பன்மிளிர்
    மின்றுவருந்துதிவேணியிடைமருதூரன்விடைக்
    குன்றுவருந்துகளிலானடியர்குழாங்குறுகி
    நன்றுவருந்துபணியாற்றியுள்ளநலமடைந்தே. - 40



    2279 - நல்லங்கமலைசிராப்பள்ளிகாஞ்சிநணாகுடந்தை
    வல்லங்கமலைவயற்றில்லைவாழிடைமாமருதூர்
    சொல்லங்கமலைபவரெற்றுறைசையிலாண்டிலரே
    லொல்லங்கமலைவறக்கோடிகொள்ளினுமுய்தியுண்டே. - 41



    2280 - உய்தியவாயகுணமேலிடைமருதூர்ப்பரனை
    எய்தியவாயவொருநானடைந்தனனென்றிருத்தல்
    செய்தியவாயடையாத்தெருச்சூழ்ந்துதெரிசிமலர்
    கொய்தியவாயமலன்றாள்புனைந்துகொண்டாடுநெஞ்சே. - 42



    2281 - ஆட்டிற்குவந்தவிதியெவனோவன்றியானைகொன்றான்
    றோட்டிற்குவந்தமுறினுமறாநசைதோன்றவெறி
    நாட்டிற்குவந்தமையும்மன்றிலேறனகைதருமென்
    பாட்டிற்குவந்தவிடைமருதூரன்பனிவரைக்கே. - 43



    2282 - வரையாதவரைமகட்பேசல்வேட்டுவருகுநருக்
    குரையாதவரைமறுத்தலொல்லாதின்னுமுத்தமர்க்குக்
    கரையாதவரையிருட்கரவொத்திடுங்காவலபொன்
    னரையாதவரையிடைமருதூரரணிவரைக்கே. - 44



    2283 - அணியாமருவியிடைமருதீசரமர்ந்தருளு
    மணியாமருவிவழங்குங்குற்றாலவரைக்கணன்றித்
    தணியாமருவியனாரமெங்குண்டுதரிற்கவரேங்
    கணியாமருவியவாமருதாயிற்கவருதுமே. - 45



    2284 - கவராததில்லைகடவுளரேனுமென்கையதிதற்
    குவராததில்லையுளாருட்டுறவுளைலைகுறிகொள்
    ளவராததில்லையுளேன்கொளல்வேண்டுமென்னாரணங்கே
    யுவராததில்லையிடைமருதீசனொருவரைக்கே. - 46



    2285 - ஒருவரையூழியங்காதுசெய்வான்கொலுளங்குறித்தல்
    மருவரையூழியலர்தரச்சூழிடைமாமருதூ
    ரிருவரையூழியராக்கொளுமீசனிறையவன
    கருவரையூழியளவும்வசைக்கதிர்வேலருக்கே. - 47



    2286 - வேலவன்றந்தையிடைமருதீசன்விரிந்தமறை
    நாலவன்றந்தையுறழிடைபாகன்வெந்நஞ்சங்கண்டு
    மாலவன்றந்தையறவுண்டுமாலவன்வாழச்செய்தான்
    மூலவன்றந்தையெனக்குபதேசமொழிந்தனனே. - 48



    2287 - மொழிமனங்காயமைதீர்தரநண்ணுபுமொய்த்தவலஞ்
    சுழிமனங்காயமைமெய்பாதியென்றவன்சொற்றநன்னூல்
    வழிமனங்காயமைதுஞ்சில்லிடைமருதூர்வசிப்பாங்
    கழிமனங்காயமைசாராதுமுத்திகலப்புறுமே. - 49



    2288 - கலந்தநலாரையிகழ்வார்வெம்போலிக்கவிபுகழ்வார்
    குலந்தநலாரைப்பரர்கொளவேங்கிமெய்திகூசிச்சில
    ரலந்தநலாரையிடைமருதூரிலடைந்திறைஞ்சா
    துலந்தநலாரையவிப்பாரிலுண்டுண்டுழலுவரே. - 50



    2289 - வரந்தந்தவரைபெறநாவல்வாய்வழங்கிச்சிலம்பிக்
    குரந்தந்தவரையிடைமருதீசரையுன்னினர்போற்
    சுரந்தந்தவரைவனந்தந்தமாந்தழைதூமொழிக்கா
    யிரந்தந்தவரைதெனவரைகாறுமிலங்கியதே. - 51



    2290 - இலங்கியவேதமுதனடுவீற்றுமிடைமருதுந்
    துலங்கியவேதம்பலத்தொளிமுத்தலைத்தூக்கிரிவாய்க்
    கலங்கியவேதநடுவந்தயானைகடிந்தவர்க்கோ
    மலங்கியவேதமுகிலினின்றார்க்குமணமுரசே. - 52



    2291 - 2291.
    மணமதலையுமரவுமுள்ளானிடைமாமருதூர்க்
    கணமதலையும்பவந்தீர்க்கவைகுமுக்கட்கடவுள்
    குணமதலையும்பலுஞ்சேயுமாகக்கொண்டான்மிடற்று
    வணமதலையுந்தலின்றேலின்றாகுவர்மாலயனே. - 53



    2292 - அயனாகமஞ்சுநிகர்மேனிமாயவனாகமற்று
    மியனாகமஞ்சுபடையானுமாகவிடைமருது
    தயனாகமஞ்சுபெறத்துதித்துப்பணிந்தேதழைந்தார்
    வியனாகமஞ்சுகுணத்தாய்ந்துவேண்டிலர்வீணர்களே. - 54



    2293 - வீணாவுடலமெடுத்தனன்யான்பெருவிண்ணவர்த
    மேணாவுடலமிடைமருதீசரிகலினர்போற்
    கோணாவுடலமதன்வருவான்மணிகொண்டலைக்கும்
    பூணாவுடலமளியிற்றுயிலும்பொருந்திலதே. - 55



    2294 - பொருந்தாதவரைதெனவாழ்புரமடுபுண்ணியர்நன்
    கிருந்தாதவரைப்புரப்பாரிடைமருதூரிலிரு
    ளருந்தாதவரைநிகர்வார்நந்துன்பமறிந்திலரால்
    திருந்தாதவரைகொல்லோவவர்திண்ணியசிந்தனையே. - 56



    2295 - சிந்தனையாதும்வறிதுசெலாமற்செலுத்திநமன்
    வந்தனையாதுநரகதுதானென்முன்வாய்நிரம்பக்
    கந்தனையாதுதிநண்மருதூரவெனக்கலப்பிற்
    பந்தனையாதுவிடுமோவிடாதவிப்பாரகத்தே. - 57



    2296 - பாராதரித்தவிடைமருதூரற்குப்பாரகமே
    தேராதரித்தகலமரவாசெழுந்திங்களொடு
    நீராதரித்தசடைமேலிருப்பென்றுநெட்டுயிர்ப்பாள்
    பேராதரித்ததுயரமெஞ்ஞான்றிவள்பேர்ப்பதுவே. - 58



    2297 - பேர்ப்பதுமத்தவிடைமருதூர்நல்குபெற்றியும்வெள்
    ளேர்ப்பதுமத்தவருக்குமலமருளேனுமையர்
    போர்ப்பதுமத்தகரித்தோலுடைபுலித்தோறெரிந்தும்
    வார்ப்பதுமத்தவளைநிகர்வாள்பெருமால்கொளுமே. - 59



    2298 - பெருமாலையனையிடைமருதூர்க்குடிபேணுங்கொன்றைத்
    திருமாலையனையெண்ணாதவர்செல்லுஞ்செலவிற்செல்வி
    கருமாலையனைவருநீப்பவேதிலொர்காளைபின்செ
    றருமாலையனைவிலையைகொள்வெய்யதனியிடமே. - 60



    2299 - இடந்தந்தவளைநெடுமான்முயன்றுமெய்தாக்கழற்கீழ்க்
    கிடந்தந்தவளையிடைமருதூர்கெழுமிற்கிடைக்கு
    நடந்தந்தவளைவுடனேயணுகுநமனகலு
    மடந்தந்தவளையனமுண்டெம்மானைவழுத்துதுமே. - 61



    2300 - வழுத்துப்படருமிடைமருதூர்வதிவான்முளைமேற்
    கொழுத்துப்படரும்வரலருங்கூற்றங்கொன்றானருளாம்
    விழுத்துப்படரும்பெரியானவன்புகழ்மெய்யன் றியோர்
    எழுத்துப்படருமதிப்புமுண்டாகுங்கொலெங்களுக்கே. - 62



    2301 - எங்கடந்தேயவனிதாழிடைமருதெவ்வகைத்தன்
    மங்கடந்தேயவழிமல்கவைகும்வல்லானணிற்கோ
    பங்கடந்தேயவ்வினுண்மையுமோர்ந்துபகருமலச்
    சங்கடந்தேயவொன்றாதொன்றுமுத்திதலைப்படுமே. - 63



    2302 - படமாசுணத்தையணிவாரிடைமருதிற்பயில்வார்
    திடமாசுணத்தையலர்பாற்பயிக்கஞ்சென்றார்தயிர்பாற்
    குடமாசுணத்தையெடுத்தாட்டவாடுங்குழகருணா
    விடமாசுணத்தையமைகுழையேலிவர்மேன்மையென்னே. - 64



    2303 - என்னாயகனையிடைமருதானையிமையவர்க்கு
    முன்னாயகனைகடனஞ்சமுண்டமுதலவனை
    மன்னாயகனையவாங்கியவாவென்றுன்மாண்புதபத்
    துன்னாயகனைதருமலமாசுந்துணிதருமே. - 65



    2304 - துணிந்தாரையன்றிகழுங்கூடற்சோதிபொற்றூயமுடிக்
    கணிந்தாரையன்றினரூரெரித்தான்கஞ்சக்கண்ணிற்றம்மை
    யணிந்தாரையன்றிகிரியான்றெழுநண்மருதடைந்து
    பணிந்தாரையன்றியெவர்காணுயர்வுபடைத்தவரே. - 66



    2305 - படைத்தவராகமுழுதும்பசலைபகலருங்கே
    ளுடைத்தவராகமுடையவராகவுஞற்றுங்கொலோ
    புடைத்தவராகந்தொழுமிடைமாமருதூரர்பொற்றா
    ளிடைத்தவராகப்பணிந்தேத்தெடுப்பினல்வேத்தலொன்றே. - 67



    2306 - ஒன்றியம்பக்கவர்பாங்கவிடைமருதூரர்வெற்பே
    நன்றியம்பக்கமயிலிடமாமியனஞ்சநமன்
    வென்றியம்பக்கமனைதுறவேகொங்கைமென்மருங்கு
    லென்றியம்பக்ககுடும்பசந்நியாசமிருட்கதிரே. - 68



    2307 - கதிரங்கதிர்க்கும்பருப்பதத்தான்றிருக்காளத்தியா
    னதிரங்கதிர்க்குமிடைமருதூரனடிகட்கன்பு
    பிதிரங்கதிர்க்குமுனமிருளாநம்பிணியைச்செய்தா
    முதிரங்கதிர்க்குமுடம்பிலினிக்குறையொன்றிலையே. - 69



    2308 - இலைமலருமிடைமருதூரரையெய்தியங்கைத்
    தலையுமலரும்பணியென்றுகொண்டுதவாதிறைப்பா
    முலையுமலருநலராவர்கூற்றமுடன்றுவிடு
    நிலையுமலருமுறலாவரியாவுநிரம்பிடுமே. - 70



    2309 - நிரம்பாசமன்றுகுறுமூரலான்மதினீறுசெய்தார்
    திரம்பாசமன்றுபெற்றாயென்றுதீர்த்தருள்செல்வர்வறுங்
    கரம்பாசமன்றுகொளாவிடைமாமருதூரிடையா
    யிரம்பாசமன்றுகளிலாநின்மெய்யுறுப்பியாவையுமே. - 71



    2310 - யாவருமங்கைகுவிக்கவிடைமருதின்னமர்வார்
    தேவருமங்கையருமாடுகாளத்தித்தெண்சுனைவாய்
    மேவருமங்கைதெனத்தோன்றியீர்த்துவெளிவிடுத்தார்
    தாவருமங்கைத்தவராயிவளுய்தரற்பொருட்டே. - 72



    2311 - தரங்கந்தரங்கவெழுவிடமூண்சலசத்தவன்மா
    லிரங்கந்தரங்கப்பெருந்தானந்தில்லையிடைமருதே
    புரங்கந்தரங்கற்றமாதவர்வாழ்பொருப்புக்கயிலை
    திரங்கந்தரங்கடுப்பாள்பாதியாளெங்கள்செல்வனுக்கே. - 73



    2312 - செல்லத்தனையுமிவர்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தை
    வில்லத்தனையுமணியரவத்துவிளங்கியைமால்
    பல்லத்தனையுந்திடைமருதப்பைங்கிளியையன்றி
    நல்லத்தனையுமனையையுந்தேர்கிலநானிலத்தே. - 74



    2313 - நிலாவையரவைமுடிக்கணிந்தார்நிகழ்சேரரரு
    ளுலாவையரவைவியக்கும்புலமையரொண்மைவிழாக்
    குலாவையரவைகிடைமருதூர்க்குறியைக்குணம
    கலாவையரவையமாதேவகாவெனக்கற்றனமே. - 75



    2314 - கற்றவருக்கங்கலவேனென்புன்சொலுங்கைக்கொளுவா
    னற்றவருக்கங்கமோதியிடைமருதூரைநண்ண
    லுற்றவருக்கங்குமுன்னிற்பவனிமையோர்க்கிறைவன்
    வெற்றவருக்கமதலையிற்சூடும்விதியெண்ணினே. - 76



    2315 - எண்ணத்திருந்தவிடைமருதூரெய்தியெல்லைதொழா
    வெண்ணத்திருந்தகரத்தேக்கரனைவிரிந்தமனங்
    கண்ணத்திருந்தவடியேன்பெற்றேன்கைவிடினுடனே
    நண்ணத்திருந்தவறேலென்பன்யானுநலமுறவே. - 77



    2316 - உறவனிகலனெனறவக்கூறதையுள்ளங்கொள்ளேன்
    மறவனிகலனென்றோதுவரேயிடைமாமருத
    லறவனிகலனரிசெய்தகோனடிக்கன்புறினப்
    புலவனிகலனெனநினையாள்வன்பொறுப்புவைத்தே. - 78



    2317 - பொறுத்தவளகத்தடமாரிடைமருதிற்புலிடை
    சிறுத்தவளகத்திற்றேசாஞ்சிவன்பொற்சிலம்பிலிலா
    மறுத்தவளகலைமாமதியுப்பக்கமன்னவென்பாற்
    கறுத்தவளகத்திருள்வந்துகூடலென்காரிகையே. - 79



    2318 - காரம்பரந்தவழாநிற்குங்கொன்றைகஞலியபூ
    ணாரம்பரந்தமுலையாயினும்வந்தடைந்திலரே
    சீரம்பரந்தவிடைமருதூருறைசெல்வரெங்க
    ளேரம்பரந்தமுறாத்தந்தையார்வெற்பிறையவரே. - 80



    2319 - இறையவனையிடைமாமருதூரனையேய்ந்தசெம்பட்
    டுறையவனையிடையாளொருபாகனையொண்முழக்க
    நிறையவனையிடையாரணமார்தில்லைநேயனைநான்
    மறையவனையிடையாதேழ்பிறப்பும்வணங்குதுமே. - 81



    2320 - வண்டாரவாயைந்தருநிதிதேனுவுமானுங்கொல்லோ
    வண்டாரவாயைதெனவடையாத்தில்லையாளியின்சொ
    லொண்டாரவாயைமணந்திடைமாமருதூரினல்கும்
    பண்டாரவாயைத்தகர்த்தானதுவுநம்பாக்கியமே. - 82



    2321 - 2321.
    பாக்கியமாவதுவேறிலையென்றுபகரச்சொற்றேன்
    வாக்கியமாவதுவையாள்பெருநலமாமுலையே
    தேக்கியமாவதுசூழ்மத்தியார்ச்சுனஞ்சேருமிடம்
    யோக்கியமாவதுலாவென்றுசேர்மினொருவனையே. - 83



    2322 - ஒருவனையாறுவிழைவான்பிறரையுறாதபெருந்
    திருவனையாறுதவிர்மத்தியார்க்கனத்தேனனுரு
    வருளனையாறுமையாறுமெட்டானனைத்துக்கொள்பெருங்
    கருவனையாறுசெயக்காப்பிவனன்றிக்காப்பிலையே. - 84



    2323 - காமாவகலவரிநீயினிதென்றுங்கஞ்சனெனு
    நாமாவகலப்புவியளப்பாயென்றுநல்கியபூந்
    தேமாவகலவிடைமருதாவென்றுசிந்தைசெயி
    னாமாவகலறுணிவன்றிக்கூற்றமடைவதற்கே. - 85



    2324 - அடையம்புயனைத்திருமாலைப்பாங்கரமைத்தகொன்றை
    மிடையம்புயனையிடைமருதூரனைமேவுகிலா
    ருடையம்புயனைகருமேனிக்கூற்றமுற்றாலதற்குக்
    கடையம்புயனைதருமானமானிற்கலங்குவரே. - 86



    2325 - கலங்கச்சினந்துநமன்றூதர்வந்தெனைக்கைக்கொளுங்கால்
    விலங்கச்சினந்துமுதலியமார்ப்பவிடையில்வம்மோ
    பலங்கச்சினந்துவர்முற்பூண்முலையொருபாகவலி
    வலங்கச்சினந்துதியாரிடைமாமருதூர்வள்ளலே. - 87



    2326 - வள்ளலைக்குங்குமக்கொங்கையள்பாகனைவாவியன்னப்
    புள்ளலைக்குங்குலநீரிடைமாமருதூர்புகுந்தே
    யுள்ளலைக்குங்குலுவொப்பப்புகையொழியாவின்பென
    விள்ளலைக்குங்குவலாற்றருமோரிடம்வேறிலையே. - 88



    2327 - வேறாகவந்தநமன்கூற்றுவாவில்லவாவளவா
    வாறாகவந்தமடித்தான்றொழுமிடைமாமருதூர்ப்
    பேறாகவந்தமுழுதும்பசுபதிபேணொருநீ
    கூறாகவந்தவிரார்சிலமூடக்குருடர்களே. - 89



    2328 - குருக்கத்திமாலைக்குழலாளிடைமருதூர்குறுகி
    வெருக்கத்திமாலையுறநீள்விழியுறக்கண்டனளாந்
    திருக்கத்திமாலையிராவதமஞ்சச்செயிர்த்தவரைப்
    பெருக்கத்திமாலைவருமுனமார்த்துப்பிறங்கிடுமே. - 90



    2329 - பிறங்கும்பரவையனலினுந்தோன்றுபெருவிடத்தா
    லுறங்கும்பரவைபுரந்தானிடைமருதூரன்கலாத்
    திறங்கும்பரவைமனைநடந்தானருளேய்ந்திலமேற்
    கறங்கும்பரவையமேற்போஞ்சகடமுங்காண்பிறப்பே. - 91



    2330 - பிறவானவரையிடைமருதூர்க்கன்புபேணலின்றி
    யுறவானவரைவெண்ணீற்றினிலாசையொருங்கவிக்குந்
    துறவானவரைமறந்தொழியாதுள்ளஞ்சூழுவனே
    லறவானவரையுகைப்பார்க்கடிமையலனலனே. - 92



    2331 - அல்லையப்பகமற்றோர்நான்குமற்றுனையாருணர்வார்
    நெல்லய்ப்பாகமழ்முல்லையப்பாதில்லைநேயவப்பா
    சொல்லையப்பாகமுறாவெனுலாவுங்கொடூயவகல்
    வில்லையப்பாகவமாலாவிடைமருதூர்விளக்கே. - 93



    2332 - விளங்கவிதனையுணர்நெஞ்சமேசற்றுமெய்ம்மையிலே
    னிளங்கவிதனையுமேற்றபிரானிடைமாமருதத்
    துளங்கவிதனையுமீவானவன்பாலுமைமலத்து
    களங்கவிதனையுநீங்காதுகாக்குங்கருணையளே. - 94



    2333 - கரியவரையைச்சுவணவரையைமெய்க்கண்ணிருத்தும்
    பெரியவரையையொருபாகர்பேணுமிடைமருதந்
    தெரியவரையைமுறிநமன்சேர்கிலன்செய்சினமும்
    பொரியவரையைக்கடவானுமாவனிப்பூதலத்தே. - 95



    2334 - பூத்தமருந்துதிசாலிடைமாமருதம்புகழேஞ்
    சோத்தமருந்துதியென்னுமைபாதந்தொழுதுருகி
    யேத்தமருந்துதிவாவுமிரவுமென்றெம்பரன்சீர்
    யாத்தமருந்துதியென்னாமற்கூற்றமறைந்திலமே. - 96



    2335 - அறையாகமனமமைந்ததெனக்கதனாலருளு
    மறையாகமனந்தவோராதுபின்னும்வயங்குபத்தி
    முறையாகமனல்லறிவாமுளைத்திடுமாவடுதண்
    டுறையாகமனவிடைமருதூருறைசுந்தரனே. - 97



    2336 - 2336.
    சுந்தரநந்தமிடைமருதார்தந்தைதூயரென்று
    கந்தரநந்தந்தரஞ்சொலப்பெற்றகருணையினா
    ரந்தரநந்தவிடமுண்டுளாரருள்வார்மலமா
    செந்தரநந்தவுயர்சிவலோகமதெய்துவமே. - 98



    2337 - துவரவலஞ்சுழியேரகமாப்பாடிசூதத்துறை
    யிவரவலஞ்சுழிகோமுத்திகாழியிலங்குதில்லை
    கவரவலஞ்சுழியாரூருடனிரும்பூளைகண்டீர்
    குவரவலஞ்சுழிகொள்ளிடைமாமருதன்கொளலே. - 99



    2338 - கொள்ளவரையும்படருறுத்தாதின்பங்கூட்டியதா
    னள்ளவரையும்பர்மேறசெய்மகாலிங்கநாதருல
    கெள்ளவரையும்பழிபாவஞ்சறறிலிடைமருதர்
    தெள்ளவரையுமொண்குஞ்சிதமாயதிருவடியே. - 100


    திருவிடைமருதூர்த்திரிபந்தாதி முற்றிற்று.

    --------

Comments