Ramayana VIII


காப்பியங்கள்

Back

இராமாயணம் VIII
கவிச்சக்கரவர்த்தி கம்பர்



கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - காண்டம் 4
கிட்கிந்தா காண்டம் - இரண்டாம் பகுதி /படலங்கள் 8-16



கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - கிட்கிந்தா காண்டம் (இரண்டாம் பகுதி) /படலங்கள் 8-16

4.8 . அரசியற் படலம் (4219 - 4252)
4.9 . கார்காலப் படலம் (4253- 4371)
4.10 கிட்கிந்தைப் படலம் (4374 - 4514)
4.11 தானை காண் படலம் (4515- 4552)
4.12 நாட விட்ட படலம் (4553- 4626)
4.13 பிலம் புக்கு நீங்கு படலம் (4627 – 4699)
4.14. ஆறு செல் படலம் (4700 – 4754)
4.15 சம்பாதிப் படலம் (4755- 4817)
4.16 மயேந்திரப் படலம் (4818-4846)


4.8 . அரசியற் படலம் (4219 - 4252)


சூரியோதய வருணனை

புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்
முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான்
உதவும் பூமகள் சேர ஒள் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான்.         4.8.1

சுக்கிரீவனுக்கு முடிசூட்டும்படி இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிடுதல்

அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்
'கதிரோன் மைந்தனை ஐய! கைகளால்
விதியால் மௌலி மிலைச்சுவாய்'எனா.        4.8.2

முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன கொணர்க என
இலக்குவன் அனுமனுக்குக் கூறுதல்

அப்போதே அருள் நின்ற அண்ணலும்
மெய்ப்போர் மாருதி தன்னை'வீர! நீ
இப்போதே கொணர் இன்ன செய்வினைக்கு
ஒப்பு ஆம் யாவையும்'என்று உணர்த்தலும்.         4.8.3
அவ்வாறே அனுமன் கொணர்தல்

மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்
திண்ணம் செய்வன செய்து செம்மலை.        4.8.4

இலக்குவன் சுக்கிரீவனுக்கு முடிசூட்டுதல்

மறையோர் ஆசி வழங்க வான் உேளார்
நறை தோய் நாள் மலர் தூவ நல்நெறிக்கு
இறையோன்தன் இளையோன் அவ் ஏந்தலைத்
துறையோர் நூல்முறை மௌலி சூட்டினான்.         4.8.5

முடிசூடிய சுக்கிரீவன் இராமனை வணங்கிய நிலையில் இராமன், அவனுக்கு உறுதிபயக்கும் அறிவுரைகளைப் பகர்தல் (4224-4234)

பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்.         4.8.6

'ஈண்டு நின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி,
வேண்டுவ மரபின் எண்ணி,விதிமுறை இயற்றி, வீர!
பூண்ட பேர் அரசுக்கு ஏற்றயாவையும் புரிந்து, போரில்
மாண்டவன் மைந்தனோடும்வாழ்தி! நல்திருவின் வைகி.'         4.8.7

'வாய்மை சால் அறிவின் வாய்த்தமந்திர மாந்தரோடும்,
தீமை தீர் ஒழுக்கின் வந்ததிறத் தொழில் மறவரோடும்,
தூய்மை சால் புணர்ச்சி பேணித்துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மையோடு அணிமை இன்றித்தேவரின் தரெிய நிற்றி.'        4.8.8

'புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்வினையமும் வேண்டற் பாற்றே;
பகையுடைச் சிந்தை யார்க்கும்,பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி,இன் உரை நல்கு, நாவால்.'        4.8.9

'தேவரும் மருள்தற்கு ஒத்தசெயிர் அறு செல்வம், அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,அன்னது கருதிக் காண்டி;
ஏவரும், இனிய நண்பர்,அயலவர், விரவார் என்று
மூவகை இயலோர் ஆவர்,முனைவர்க்கும், உலகம் மூன்றின்.'        4.8.10

'செய்வன செய்தல், யாண்டும்,தீயன சிந்தியாமல்;
வைவன வந்த போதும்வசை இல இனிய கூறல்,
மெய் சொலல், வழங்கல் யாவும்,மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடுஉயர்வன உவந்து செய்வாய்.'         4.8.11

'சிறியர் என்று இகழ்ந்து நோவுசெய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமைஇழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆயகூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.        4.8.12

'மங்கையர் பொருட்டால் எய்தும்மாந்தர்க்கு மரணம், என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலிசெய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே,அல்லலும் பழியும் ஆதல்
எங்களில் காண்டி அன்றே;இதற்கு வேறு உவமை உண்டோ?'         4.8.13

"நாயகன் அல்லன், நம்மைநனி பயந்து எடுத்து நல்கும்
தாய்" என, இனிது பேணத்தாங்குதி தாங்கு வாரை;
ஆயது தன்மை யேனும்,அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்த போது,சுடுதியால் தீமையோரை.'        4.8.14

'இறத்தலும் பிறத்தல் தானும்என்பன இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்தவினைதரத் தரெிந்த அன்றே?
புறத்து இனி உரைப்பது என்னே?"பூவின்மேல் புனிதற் கேனும்,
அறத்தினிது இறுதி வாழ் நாட்குஇறுதி; அஃது உறுதி" என்ப.'        4.8.15

'ஆக்கமும், கேடும், தாம் செய்அறத்தொடு பாவம் ஆய
போக்கி, வேறு உண்மை தேறார்,பொரு அரும் புலமை நூலோர்;
தாக்கின ஒன்றோடு ஒன்றுதருக்கு உறும் செருவில், தக்கோய்!
பாக்கியம் அன்றி, என்றும்,பாவத்தைப் பற்றல் ஆமோ?'         4.8.16

'இன்னது தகைமை என்ப;இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி, என்கண்வருவுழி, மாரிக் காலம்
பின்னுற, முறையின், உன்தன்பெருங்கடற் சேனையோடும்
துன்னுதி, போதி'என்றான்சுந்தரன்; அவனும் சொல்வான்.        4.8.17

கிட்கிந்தை நகரத்தில் தம்முடன் வந்து சிலநாள் தங்கும்படி சுக்கிரீவன் இராமனை இறைஞ்சி வேண்டுதல் (4236-4237)

'குரங்கு உறை இருக்கை என்னும்குற்றமே குற்றம் அல்லால்,
அரங்கு உறு துறக்க நாட்டுக்குஅரசு எனல் ஆயது அன்றே,
மரம் கிளர் அருவிக் குன்றம்?வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய,இருத்தியால் சில நாள், எம்பால்.'         4.8.18

'அரிந்தம! நின்னை அண்மி,அருளுக்கும் உரியேம் ஆகிப்
பிரிந்து வேறு எய்தும் செல்வம்வெறுமையின் பிறிது ஒன்றாமோ?
கருந்தடங் கண்ணினாளைநாடல் ஆம் காலம் காறும்
இருந்து, அருள் தருதி எம்மோடு'என்று அடி இணையின் வீழ்ந்தான்.'         4.8.19

இராமன் தான் கிட்கிந்தை நகரில் தங்கியிருக்க ஒண்ணாமையைத் தரெிவித்தல் (4238-4242)

ஏந்தலும் இதனைக் கேளா,இன் இள முறுவல் நாற,
வேந்து அமை இருக்கை, எம்போல்விரதியர் விழைதற்கு ஒவ்வா;
போந்து அவண் இருப்பின், எம்மைப்போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து இனிது இயற்றும் உன்தன்அரசியல் தருமம் தீர்தி.         4.8.20

'ஏழ் இரண்டு ஆண்டு, யான் போந்துஎரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும்வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடம் தோள் வீர!பார்த்திலை போலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,யான் உறும் இன்பம் என்னோ?'         4.8.21

"தேவி வேறு அரக்கன் வைத்தசேமத்துள் இருப்பத் தான் தன்
ஆவி போல் துணைவரோடும்அளவிடற்கு அரிய இன்பம்
மேவினான் இராமன்" என்றால்,ஐய! இவ் வெய்ய மாற்றம்
மூவகை உலகம் முற்றும்காலத்தும் முற்ற வற்றோ?'         4.8.22

'இல் அறம் துறந்திலாதோர்இயற்கையை இழந்தும், போரின்
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு,இன்னன மேன்மை இல்லாச்
சில் அறம்; புரிந்து நின்றதீமைகள் தீருமாறு,
நல் அறம் தொடர்ந்த நோன்பின்,நவை அற நோற்பல் நாளும்.'         4.8.23

'அரசியற்கு உரிய யாவும்ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
திரைசெயற்கு உரிய சேனைக்கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக, என்பால்; நின்னைவேண்டினென், வீர!'என்றான்,
உரைசெயற்கு எளிதும் ஆகி,அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான்.        4.8.24

சுக்கிரீவன் இராமனது சொல்லுக்கு உடன்பட்டுச் செல்லுதல்

மறித்து ஒரு மாற்றம் கூறான்,'வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோகோது இலர் ஆதல்'என்னா,
நெறிப் படர் கண்கள் பொங்கிநீர்வர, நெடிது தாழ்ந்து
பொறிப்ப அருந் துன்பம் உன்னாக்கவிக் குலத்து அரசன் போனான்.         4.8.25

வணங்கிய அங்கதனுக்கு இராமன் அறிவு உரை பகர்தல்

வாலி காதலனும், ஆண்டு,மலர் அடி வணங்கினானை,
நீல மா மேகம் அன்னநெடியவன் அருளின் நோக்கி,
'சீலம் நீ உடையை ஆதல்,இவன் சிறு தாதை என்னா,
மூலமே தந்த நுந்தை ஆம் என,முறையின் நிற்றி.'        4.8.26

அங்கதன் சென்றபின் அனுமனையும் சுக்கிரீவனுடன் செல்லும்படி இராமன் பணித்தல்

என்ன, மற்று இனைய கூறி,'ஏகு அவன் தொடர'என்றான்;
பொன் அடி வணங்கி, மற்று அப்புகழ் உடைக் குரிசில் போனான்;
பின்னர், மாருதியை நோக்கிப்'பேர் எழில் வீர! நீயும்,
அன்னவன் அரசுக்கு ஏற்றதுஆற்றுதி, அறிவின்'என்றான்.        4.8.27

இங்கிருந்து நின்பணி செய்வேன்'என அனுமன் கூறுதல்

பொய்த்தல் இல் உள்ளத்து அன்புபொழிகின்ற புணர்ச்சியானும்
'இத்தலை இருந்து நாயேன்,ஏயின, எனக்குத் தக்க
கைத்தொழில் செய்வென்'என்று,கழல் இணை வணங்கும் காலை,
மெய்த்தலை நின்ற வீரன்இவ் உரை விளம்பி விட்டான்.        4.8.28

இராமன் அதனை மறுத்துரைத்தல் (4247-4248)

'நிரம்பினான் ஒருவன் காத்தநிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாது அதனை, மற்று ஓர்தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ நலனும் தீங்கும்;ஆகலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால்நிலையினைப் பெறுவது அம்மா!        4.8.29

'ஆன்றவற்கு உரியது ஆயஅரசினை நிறுவி, அப்பால்,
ஏன்று எனக்கு உரியது ஆயகருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை;ஆகலால், தருமம் தானே
போன்ற நீ, யானே வேண்ட,அத்தலை போதி'என்றான்.        4.8.30

அனுமன் கிட்கிந்தைக்குச் செல்ல, இராம இலக்குவர் வேறொரு மலையை அடைதல்

ஆழியான் அனைய கூற,'ஆணை ஈது ஆகின், அஃதே,
வாழி! யான் புரிவேன்'என்று,வணங்கி மாருதியும் போனான்;
சூழிமால் யானை அன்னதம்பியும் தானும், தொல்லை
ஊழி நாயகனும், வேறு ஓர்உயர்தடங் குன்றம் உற்றான்.        4.8.31

இராமனது அருள் பெற்றுச் சுக்கிரீவன் கிட்கிந்தையில் இருந்து அரசு புரிதல் (4250-4251)

ஆரியன் அருளின் போய் அவ்அகல்மலை அகத்தன் ஆய
சூரியன் மகனும், மானத்துணைவரும், கிளையும் சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள்தாய் என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன,செவ்விதின் அரசு செய்தான்.        4.8.32

வள அரசு எய்தி, மற்றைவானர வீரர் யாரும்
கிளைஞரின் உதவ, ஆணைகிளர் திசை அளப்ப, கேேளாடு,
அளவு இல ஆற்றல் ஆண்மைஅங்கதன், அறம் கொள் செல்வம் அத்து
இளவரசு இயற்ற ஏவி,இனிதினின் இருந்தான், இப்பால்.         4.8.33

இராமன் இலக்குவன் அமைத்த தவச் சாலையில் தங்கியிருத்தல்

வள்ளலும் அவண் நின்று ஏகி,மதங்கனது இருக்கை ஆய
வெள்ள வான் குடுமிக் குன்றத்துஒரு சிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பிஅன்பினால் அமைக்கப் பட்ட
எள்ளல் இல் சாலை எய்திஇனிதினின் இருந்த காலை.         4.8.34
---------------

4.9 . கார்காலப் படலம் (4253- 4371)


சூரியன் தனெ் திசையில் ஒதுங்கியது

மா இயல் வட திசை நின்று மானவன்
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய முந்தித் தனெ் திசைக்கு
ஏவிய தூது என இரவி ஏகினான்.         4.9.1

கருமுகில் பரவிய தோற்றம்

பை அணைப் பல தலை பாந்தள் ஏந்திய
மொய்ந் நிலத் தகளியில் முழங்கு நீர்நெயின்
வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி
மை அடுத் தொத்தது மழைத்த வானமே.        4.9.2

வானம் இருண்டு சூரிய ஒளி மறைதல்

நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய
கண் நுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண் அகம் இருண்டது; வெயிலின் வெம் கதிர்
தண்ணிய மெலிந்தன; தழைத்த மேகமே.        4.9.3

வானமிருண்டமைக்கு உவமை

நஞ்சினின் நளிர் நெடுங்கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்தம் வடிவின் செய்கையின்
நெஞ்சினின் இருண்டது நீல வானமே.         4.9.4

மின்னல்

நாட்களின் நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ
வாள் கைகள் மயங்கிய செருவின் வார்மதப்
பூட்கைகள் நிறைந்தபுண் திறப்ப போன்றவே.         4.9.5

நீல்நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல்நிற முகில் குலம் துவன்றி சூழ்திரை
மால்நிற நெடுங்கடல் வாரி மூரிவான்
மேல் நிறைந்துளது என முழக்க மிக்கதே.        4.9.6

அரிப்பெரும் பெயரவன் முதலினோர் அணி
விரிப்பவும் ஒத்தன; வெற்புமீது தீ
எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன; தரெிந்த மின் எலாம்.         4.9.7

மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.         4.9.8

சூடின மணிமுடித் துகளில் விஞ்சையர்
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்
ஆடுவ பெயர்தொறும் ஆசை யானையின்
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்தவே.        4.9.9

பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர்
அரிந்தன ஆம் என அசனி நா என
விரிந்தன திசைதொறும் மிசையின் மின் எலாம்.         4.9.10

எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக;
கண்ணன் மெய்வடிவு எனக் கருகு கார்விசும்பு
உள்நிறை உயிர்ப்பு என ஊதை ஊதின.         4.9.11

தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்
விலை நினைந்து உளவழி விலங்கும் வேசையர்
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே.         4.9.12

அழுங்குறு மகளிர் தம் அன்பர்த் தீர்ந்தவர்
புழுங்குறு புணர்முலை கொதிப்பப் புக்கு உலாய்
கொழுங்குறைத் தசை என ஈர்ந்து கொண்டு அது
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே.         4.9.13

ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின்
கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்
தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு தாவினும்
போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது உம்பரே.         4.9.14

மழை பொழிதல்

இன் நகைச் சனகியைப்பிரிந்த ஏந்தல்மேல்,
மன்மதன் மலர்க் கணைவழங்கினான் எனப்
பொன்நெடுங் குன்றின்மேல்பொழிந்த தாரைகள்
மின்னொடுந் துவன்றினமேக ராசியே.         4.9.15

கல் இடைப்படும் துளி திவலை கார் இடு
வில் இடைச்சரம் என விசையின் வீழ்ந்தன;
செல் இடைப்பிறந்த செங்கனல்கள் சிந்தின
அல் இடை மணி சிறந்து அழல் இயற்றல் போல்.         4.9.16

மள்ளர்கள் மறுபடை மான யானைமேல்
வெள்ளிவேல் எறிவன போன்ற மேகங்கள்;
தள்ளரும் துளிபடத் தகர்ந்து சாய்கிரி
புள்ளி வெங் கடகரி புரள்வ போன்றவே.         4.9.17

வானிடு தனு நெடுங் கருப்பு வில்; மழை
மீன் இடு கொடியவன்; பகழி வீழ்துளி;
தான் நெடுஞ் சார்துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம் உகுத்தது ஒத்ததே.         4.9.18

தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம்பகை
பேர்த்தனர் இனி எனப் பேசி வானவர்
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய்மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே.         4.9.19

வண்ண வில் கர தலத்து அரக்கன் மண்ணொடு
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அருங்கலம் அனைய பெய்வளை
கண் எனப் பொழிந்தது கால மாரியே.         4.9.20

பரஞ்சுடர்ப் பண்ணவன் பண்டு விண்தொடர்
புரம்சுட விடுசரம் புரையும் மின் இனம்
அரம் சுடப் பொறிநிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துேளார் எலாம்.         4.9.21

பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு
உருள்தரு தேர் மிசை உயிர்கொண்டு உய்த்தலால்
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெடக்
கருடனைப் பொருவின கால மாரியே.         4.9.22

முழங்கின முறை முறை மூரிமேகம் நீர்
வழங்கின மிடைவன மான யானைகள்.
தழங்கின பொழிமதத் திவலை தாழ்தரப்
புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே.         4.9.23

விசைகொடு மாருதம் மறித்து வீசலால்
அசைவுறு சிறுதுளி அப்பு மாரியின்
இசையுற எய்வன இயைவவாய் இருந்
திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே.         4.9.24

மரங்கள் பூத்தல்

விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம்.         4.9.25

பாடலம் வறுமை கூரப்,பகலவன் பசுமை கூரக்,
கோடல்கள் பெருமை கூரக்,குவலயம் சிறுமை கூர
ஆடின மயில்கள்; பேசாதுஅடங்கின குயில்கள்
கேடுறத் தளர்ந்தார் போன்றும்,திரு உறக் கிளர்ந்தார் போன்றும்.         4.9.26

செங்காந்தளின் மலர்ச்சி

நால் நிறச் சுரும்பும் வண்டும்நவமணி அணியின் சாரத்,
தேன் உற மலர்ந்து அசைந்தசேயிதழ்க் காந்தள் செ ம்பூ,
'வேனிலை வென்றது அம்மா,கார்'என வியந்து நோக்கி,
மா நிலக் கிழத்தி கைகள்மறித்தன போன்ற மன்னோ.         4.9.27

வெண் காந்தள்

வாள் எயிற்று அரவம், தம்போல்வான் தலை தோன்ற வார்ந்த
தாள் உடைக் கோடல் தம்மைத்தழீஇயன, காதல் தங்க
மீளல; அவையும் அன்னவிழைவின உணர்வு வீந்த
கோள் அரவு என்னப் பின்னிஅவற்றொடும் குழைந்து சாய்ந்த.         4.9.28

இந்திர கோபம்

எள் இட இடனும் இன்றிஎழுந்தன இலங்கு கோபம்
தள்ளுறத், தலைவர், தம்மைப்பிரிந்தவர் தழுவத் தூமக்
கள் உடை ஓதியார்தம்கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பைசிதர்ந்து என, விரிந்த மாதோ.         4.9.29

பொன்மலர் கொணரும் நல் மலை அருவி

தீங்கனி நாவல் ஓங்கும்சேண் உயர் குன்றின், செம்பொன்
வாங்கின கொண்டு, பாரில்மண்டும் மால் யாறு மான,
வேங்கையின் மலரும், கொன்றைவிரிந்தன வீயும், ஈர்த்து,
தாங்கின கலுழி, சென்றுதலைமயக் குறுவ தம்மில்.         4.9.30

காந்தளில் கொன்றையும் கோபமும்

நல்நெடுங் காந்தள் போதில்,நறை விரி கடுக்கை மென் பூ,
துன்னிய கோபத் தோடும்தோன்றிய தோற்றம் தும்பி
இன் இசை முரல்வ நோக்கி,இருநில மகள் கை ஏந்திப்,
பொன்னொடும் காசை நீட்டிக்கொடுப்பதே போன்றது அம்மா.         4.9.31

மலையில் நாடக அரங்கு

கிளைத்துளை மழலை வண்டுகின்னரம் நிகர்த்த, மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த்தூரியம் துவைப்ப போன்ற;
வளைக் கையர் போன்ற, மஞ்ஞை;தோன்றிகள் அரங்கின் மாடே
விளக்கு இனம் ஒத்த; காண்போர்விழி ஒத்த, விளையின் மென்பூ.         4.9.32

கூதாளம் மலர்தல்

பேடையும் ஞிமிறும் பாயப்பெயர்வுறப் பிறக்கும் ஓசை
ஊடுறத் தாக்கும் தோறும்ஒல் ஒலி பிறப்ப, நல்லார்
ஆடு இயல் பாணிக்கு ஏற்கும்அரிய அவ் அமிழ்தப் பாடல்
கோடியர் தாளம் கொட்டல்மலர்ந்த கூதாளம் ஒத்த.         4.9.33

கானயாறும் கொன்றையும்

வழைதுறு கான யாறு,மாநிலக் கிழத்தி மக்கட்கு
உழைதுறு மலைமாக் கொங்கைசுரந்த பால் ஒழுக்கை ஒத்த;
விழைவுறு வேட்கையோடும்வேண்டுநர்க்கு உதவ வேண்டிக்,
குழைதொறும் கனகம் தூங்கும்கற்பகம் நிகர்த்த, கொன்றை.         4.9.34

மான்கள்

பூ இயல் புறவம் எங்கும்பொறி வரி வண்டு போர்ப்பத்,
தீவிய களிய வாகிச்செருக்கிய, காமச் செவ்வி,
ஓவலில் மரங்கள் தோறும்உரைத்து அற உரிஞ்சி ஒண்கேழ்
நாவிய செவ்வி நாறக்,கலையொடும் புலந்த நவ்வி.         4.9.35

குவளை குவிய முல்லை அரும்பல்

தேரில் நல் நெடுந் திசை செலச்செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் எயிற்றியர் கண் எனக்குவிந்தன குவளை,
மாரன் அன்னவர் வரவு கண்டுஉவக்கின்ற மகளிர்
மூரல் மென்குறு முறுவல் ஒத்துஅரும்பின, முல்லை.        4.9.36

அருவி பெருகலும் தாமரை மலர்தலும

களிக்கும் மஞ்ஞை அக் கண்ணுளர்இனமெனக் கண்ணுற்று
அளிக்கு மன்னரின் பொன்மழைவழங்கின அருவி;
வெளிக்கண் வந்த கார் விருந்து என,விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் எனப்பொலிந்தன, கமலம்.         4.9.37

தேனீக்கள் தேனைச் சேர்த்தல்

சரத நாள் மலர் யாவையும்குடைந்தன, தடவிச்,
சுரத நூல் தரெி விடர் எனத்தேன் கொண்டு, தொகுப்பப்,
பரத நூல் முறை நாடகம்பயன் உறப் பகுப்பான்,
இரதம் ஈட்டுறும் கவிஞரைப்பொருவின தேனீ .         4.9.38

மான்களின் களிப்பு

"நோக்கினால் நமை நோக்குஅழிகண்ட நுண் மருங்குல்
தாக்கு அணங்கு அருஞ் சீதைக்குத்தாங்கருந் துன்பம்
ஆக்கினாம் உருவால்" எனும்அரும்பெறல் உவகை
வாக்கினால் உரையாம் எனக்களித்தன, மான்கள்.         4.9.39

அன்னங்கள்

நீடு நெஞ்சு உறு நேயத்தால்நெடிது உறப் பிரிந்து
வாடுகின்றன, மருள் உறுகாதலின் மயங்கிக்,
கூடு நல் நதித் தடம்தொறும்குடைந்தன, படிவுற்று
ஆடுகின்றன கொழுநரைப்பொருவின அன்னம்.        4.9.40

கொக்குகள்

கார் எனும் பெயர்க் கரியவன்மார்பினில் கதிர்முத்து
ஆரம் ஆம் எனப் பொலிந்தனஅளக்கரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின்அருகு உற நிரைத்துக்
கூரும் வெண் நிறத் திரையெனப்பறப்பன குரண்டம்.        4.9.41

நாரைகள்

மருவி நீங்கல் செல்லா நெடுமாலைய, வானில்
பருவ மேகத்தின் அருகு உறக்குருகினம் பறப்ப,
'திருவின் நாயகன் இவன்'எனத்தேமறை தரெிக்கும்
ஒருவன் மார்பினின்உத்தரியத்தினை ஒத்த.         4.9.42

பசும் புல்

உற வெதுப்புறும் கொடுந் தொழில்வேனிலான் ஒழிய,
திறம் நினைப்பருங் கார் எனும்செவ்வியோன் சேர,
நிறை மனத்து உறு குளிர்ப்பினின்நெடுநில மடந்தை
புற மயிர்த்தலம் பொடித்தனபோன்றன பசும்புல்.         4.9.43

மயில்கள் ஆடலும் அகவலும்

தேன் அவாம் மலர்த் திசைமுகன்முதலினர் தெளிந்தோர்
ஞான நாயகன் நவை உற,நோக்கின நல்கக்
கானம் யாவையும் பரப்பியகண்ணின் அச் சனகன்
மானை நாடி நின்று அழைப்பனபோன்றன மஞ்ஞை .         4.9.44

செந்தாமரையின் பொலிவும், கொடிகளின் அசைவும்

செஞ் செ(வ்) வேலவர், செறிசிலைக்குரிசிலர், இருண்ட
குஞ்சி சேயொளி கதுவுறப்புதுநிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி எனப்பொலிந்தன பதுமம்;
வஞ்சி போலியர் மருங்கு எனநுடங்கின, வல்லி.         4.9.45

குயில்கள் குரல் காட்டாமை

'நீயிர் அன்னவள் குதலையிர்ஆதலின் நேடிப்
போய தையலைத் தருதிர்'என்று,இராகவன் புகலத்
தேயம் எங்கணும் திரிந்தனபோந்து இடைத் தேடிக்,
கூய ஆய், குரல் குறைந்தகுறைந்தன - குயில்கள்.         4.9.46

ஆம்பியும் பிடவமும்

பொழிந்த மாநிலம் புல்தரக்குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின,செறிதயிர் ஏய்ந்த;
மொழிந்த தேன் உடை முகிழ்முலைஆய்ச்சியர் முழவில்
பிழிந்த பால்வழி நுரையினைப்பொருவின பிடவம்.         4.9.47

நானிலத்து மலர்களும் மலர்தல்

வேங்கை நாறின, கொடிச்சியர்வடிக் குழல், விரை வண்டு
ஏங்க; நாகமும் நாறின,நுளைச்சியர் ஐம்பால்;
ஆங்கு நாள் முல்லை நாறினஆய்ச்சியர் ஓதி;
ஞாங்கர் உற்பலம் உழத்தியர்பித்திகை நாற.         4.9.48

இராமன் கார்காலம் கண்டு கவலுதல் (4301-4303)

தேரைக் கொண்ட பேர் அல்குலாள்திரு முகம் காணான்
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல் ஆயிரம்மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்குஒருகரை காணான்.         4.9.49

அளவு இல் கார் எனும் அப்பெரும்பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்அது வருத்தோ?         4.9.50

காவியும், கருங்குவளையும்,நெய்தலும், காயாம்
பூவையும் பொருவான் அவன்,புலம்பினன் தளர்வான்,
'ஆவியும் சிறிது உண்டு கொலாம்'என அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்துஇவை இவை சொல்லும்.         4.9.51

இராமன் காரொடு கூறுதல் (4304-4305)

வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய்? அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ?         4.9.52

'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு
எப் பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர்கொண்டு அலது ஓவலையோ?         4.9.53

மயிலொடு மொழிதல்

'அயில் ஏய் விழியார் விளை ஆர் அமிழ்தின்
குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்!
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்;
மயிலே! எனைநீ வலி ஆடுதியோ?         4.9.54

கொடியொடு கூறியது

'மழை வாடையொடு ஆடி வலிந்து உயிர் மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் கொடியே!
இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?                4.9.55

உழையொடு உரைத்தல்

'விழையேன்; விழை வானருள் மெய்ம்மையின் நின்று
இழையேன்; உணர்வேன்; நவை இன்மையினால்
பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்
உழையே அவர் எவ் உழையார்? உரையாய்!         4.9.56

உயிரொடு கிளத்தல்

'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ?
அயிராது உடனே அகல்வாய் அலையோ?
உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையே!        4.9.57

கொன்றையொடு கூறல்

'ஒன்றைப் பகராய்! குழலுக்கு உடைவாய்
வன் தைப்புறு நீள் வயிரத் தினையோ?
கொன்றைக் கொடியாய்! கொணர்கிற்றிலையோ?
என்றைக்கு உறவாக இருந்தனையே?         4.9.58

முல்லையையும் இந்திர கோபத்தையுங் கண்டு மொழிதல்

குரா அரும்பு அனைய கூர்வாள்எயிற்று வெங் குருளை நாகம்,
விராவு வெங் கடுவின் கொல்லும்;மெல் இணர் முல்லை, வெய்தின்
உரா அருந் துயரம் ஊட்டிஉலைவு உற மலைவது ஒன்றோ?
இராவண கோபம் நிற்க,இந்திர கோபம் ஒன்றோ?         4.9.59

வாடைக்கு மெலிந்து கூறியது

'ஓடை வாள் நுதலினாளைஒளிக்கலாம் உபாயம் உன்னி,
நாடி, மாரீசனார் ஓர்ஆடகம் நவ்வி ஆனார்;
வாடையாய்க், கூற்றினாரும்,உருவினை மாற்றி வந்தார்;
கேடு சூழ்வார்க்கும் வேண்டும்உருக்கொளக் கிடைத்த         4.9.60

மேகத்தோடு மொழிதல்

'அருவினை அரக்கர் என்ன,அந்தரம் அதனில் யாரும்
வெருவர, முழங்குகின்றமேகமே! மின்னுகின்றாய்;
'தருவல்'என்று இரங்கினாயோ?தாமரை மறந்த தையல்
உருவினைக் காட்டிக் காட்டிஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்!'        4.9.61

மன்மதனோடு கூறியது (4314-4315)

உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மைஉயிர் சுட உலைவேன் உள்ளம்
புண் உற வாளி தூர்த்தல்பழுது இனிப், போதி; மார!
எண் உறு கல்வி உள்ளத்துஇளையவன், இன்னே, உன்னைக்
கண்ணுறும் ஆயின், பின்னை,யார், அவன் சீற்றம் காப்பார்?         4.9.62

'வில்லும், வெங்கணையும், வீரர்,வெஞ்சமத்து அஞ்சினார் மேல்
புல்லுந அல்ல; ஆற்றல்போற்றலர்க் குறித்தல் போலாம்;
அல்லும் நன் பகலும் நீங்காய்அனங்க! நீ அருளில் தீர்ந்தாய்
'செல்லும்'என்று எளிவந்தோர் மேல்செலுத்தலும் சீர்மைத்து ஆமோ?         4.9.63

இலக்குவன் தேறுதல் கூறல் (4316-4321)

என்ன இத்தகைய பன்னி,ஈடு அழிந்து, இரங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கித்,தகை அழிந்து அயர்ந்த தம்பி,
'நின்னை எத்தகையை ஆகநினைந்தனை? நெடியோய்! என்னாச்
சென்னியில் சுமந்த கையன்தேற்றுவான், செப்பல் உற்றான்.         4.9.64

"காலம் நீளிது காரும்; மாரியும்வந்தது; " என்ற கவற்சியோ?
நீல மேனி அரக்கர் வீரம்நினைந்து அழுங்கிய நீர்மையோ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்நாட வாரல் இலாமையோ?
சால நூல் உணர் கேள்வி வீர!தளர்ந்தது என்னை? தவத்தினோய்!        4.9.65

'மறை துளங்கினும், மதி துளங்கினும்;வானும், ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும், நிலை துளங்குறுநிலைமை நின் வயின் நிற்குமோ?
பிறை துளங்குவ அனைய பேர் எயிறுஉடைய பேதையர் பெருமை, நின்
இறை துளங்குறு புருவ மென்சிலைஇடை துளங்குற இசையுமோ?'         4.9.66

'அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்;அறிஞ! அங்கதன் ஆதியோர்
எனையர் என்பது ஓர் இறுதி கண்டிலம்;எழுபது என்று எணும் இயல்பினார்,
வினையின் வெந்துயர் விரவு திங்களும்,விரைவு சென்றன, எளிதின், நின்
தனு எனும் திரு நுதலி வந்தனள்;சரதம்; வன் துயர் தவிர்தியே.         4.9.67

'மறை அறிந்தவர் வரவு கண்டு, "உமைவலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று, இடர்களைவென்" என்றனை,குறை முடிந்தது; விதியினால்,
இறைவ! அங்கு அவர் இறுதி கண்டு, இனிதுஇசை புனைந்து, இமையவர்கள்தாம்,
உறையும் உம்பரும் உதவி நின்று அருள்;உணர்வு அழிந்திடல் உறுதியோ?'         4.9.68

'காது கொற்றம் நினக்கு அலாதுபிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
வேதனைக்கு இடம் ஆதல் வீரதைஅன்று; பேதைமை ஆம் அரோ;
போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள்அன்று; நின்று புணர்த்தியேல்
யாது உனக்கு இயலாதது? எந்தை!வருந்தல்'என்ன இயம்பினான்.         4.9.69

கூதிர் காலம் தொடங்குதல

சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர்சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்,
இற்ற இன்னல் இயக்கம் எய்திட,வைகல் பற்பல ஏக, மேல்
உற்று நின்ற வினைக் கொடும் பிணிஒன்றின்மேல் உடன் ஒன்று உராய்,
மற்று வெம் பிணி பற்றினாலென,வந்து எதிர்ந்தது மாரியே.         4.9.70

கூதிர்ப்பருவ வருணனை (4323-4325)

நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி.        4.9.71

பாசிழை மடந்தையர் பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வுற்றே
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ்
ஆசு இல் அயில் வாளி என ஆசை புரிவார்மேல்.         4.9.72

வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ.         4.9.73

மருதம் நெய்தல்களில் கூதிர்

நெல் கிழிய நெற் பொதி நிரம்பின நிரம்பாச்
சொற்கு இழிய நல்கிளிகள்; தோகையவர் தூய்மென்
பற்கு இழி மணிப்படர் திரைப் பரதர் முன்றில்
பொன் கிழி விரித்தன சினைப் பொதுளு புன்னை.         4.9.74

குறிஞ்சி நிலத்தில் கூதிர் (4327-4329)

நிறம் கருகு கங்குல், பகல்,நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனிஅந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளிபடப்,பெயர்வில் குன்றின்,
உறங்கல பிறங்கல் அயல்நின்ற உயர் வேழம்.         4.9.75

சந்தின் அடையின் படலை வேதிகை தடந்தோறு
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்;
மந்தி துயில் உற்ற முழை; வன் கடுவன் அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த.         4.9.76

ஆசு இல் சுனை, வால் அருவி,ஆய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இலஆன; மணி வன் கால்
ஊசல் வறிது ஆன; இதண்ஒள் மணிகள் விண்மேல்
வீசல் இலவான; நெடும்மாரி துளி வீச.         4.9.77

நெய்தலில் கூதிர்

கருந்தகைய தண்சினைய கைதை மடல் காதல்
தருந்தகைய போது கிளையின் புடை தயங்கப்
பெருந்தகைய பொன் சிறகு ஒடுக்கி உடல் பேராது
இருந்த குருகின் பெடை பிரிந்தவரக்ள் என்ன.         4.9.78

குறிஞ்சியில் கூதிர் (4331-4333)

பதங்கம் முழவு ஒத்த; இசை பல் ஞிமிறு பன்ன
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
மதங்கியரை ஒத்த மயில்; வைகும் மர மூலத்து
ஒதுங்கின உழைக்குலம்; மழைக்குலம் உழக்க.         4.9.79

விளக்கு ஒளி அகில் புகைவிழுங்கு அமளி, மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும்,மைந்தர்களும், ஏற,
தளத்தகும் மலர்த் தவிசு இகந்து,நகு சந்தின்
தொளைத் துயில் உவந்து,துயில்வுற்ற, குளிர் தும்பி.         4.9.80

தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம்
மாமரன் நிரைத் தொகு பொதும்பர் உழை வைக;
தேமரன் அடுக்கு இதண் இடைச் செறி குரம்பைத்
தூமருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார்.         4.9.81

முல்லை நிலத்துக் கூதிர் (4334-4335)

வள்ளி புடை சுற்றி உயர் சிறு இலை மரம் தோறு
எள்ளரு மறி்க் குருெளாடு அண்டர்கள் இருந்தார்;
கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த.         4.9.82

சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா
வரம்பு அகல் நெடும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பல முழைஞ்சு இடை நுழைந்த.        4.9.83

இராமன் இலக்குவனை நோக்கிக் கூறத் தொடங்கல்

இத்தகைய மாரி இடை துன்னி இருள் எய்த
மத்தக மணிக் குறுநகைச் சனகன் மான்மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பு இடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும்.         4.9.84

இராமன் சொல்லியவை (4337-4347)

'மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப (அ)ருங் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின்
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும்; ஒன்றினும்
பிழைப்பு அரிது எனக்கும்; ஈது என்ன பெற்றியோ?         4.9.85

'தூநிறச் சுடுசரம் தூணி தூங்கிட
வான் உறப் பிறங்கிய வயிரத் தோெளாடும்
யான் உறக் கடவதே இதுவும்? இந்நிலை
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன்.         4.9.86

'தரெி கணை மலரொடு திறந்த நெஞ்சொடும்
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்;
எரியும் மின்மினி மணிவிளக்கின் இன் துணை
குரீஇ இனம் பெடையொடும் துயிலக் கூட்டினுள்.        4.9.87

'வானகம் மின்னினும் மழை முழங்கினும்
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா எனக்;
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும்; கீழ் நகும்; இனி என் வேண்டுமால்?         4.9.88

'மறந்து இருந்து உய்கலேன்; மாரி ஈது எனின்
இறந்து விண் சேர்வது சரதம்; இப்பழி
பிறந்து பின் தீர்வலோ? பின்னர் அன்னது
துறந்து சென்று உறுவலோ? துயரின் வைகுவேன்!         4.9.89

'ஈண்டு நின்று அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்
காண்டலின் பற்பல காலம் காண்டுமால்;
வேண்டுவது அன்று இது; வீர! "நோய் தறெ
மாண்டனன் " என்றது மாட்சிப் பாலது ஆம்.         4.9.90

செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம்
வெப்பு உறப் புரம் சுட வெந்து வீவதோ
அப்பு உருக் கொண்ட வாள் நெடுங் கண் ஆய் இழை
துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்?         4.9.91

நெய் அடை தீ எதிர் நிறுவி "நிற்கு இவள்
கை அடை " என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு
மெய் அடையாது; இனி விளிதல் நன்று அரோ.        4.9.92

'தேற்றுவாய் நீ உளையாகத் தேறி நின்று
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்வளை
தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி
மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ?         4.9.93

'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது இமையவர் முதல தொல்லையோர்
பட்டபோது உலகமும் உயிரும் பற்று அறக்
கட்டபோது அல்லது மயிலைக் காண்குமோ?         4.9.94

'தருமம் என்றொரு பொருள் தன்னை அஞ்சி யான்
தரெுமருகின்றது; செறுநர் தேவரோடு
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்;
உரும் என ஒலி படும் உர விலோய்!'என்றான்.         4.9.95

இலக்குவன் ஆறுதல் கூறுதல்

இளவலும் உரை செய்வான் எண்ணும் நாள் இனும்
உள அல; கூதிரும் இறுதி உற்றதால்;
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது; அயர்வது என்? ஆணை ஆயியாய்!         4.9.96

திரை செய் அத் திண்கடல் அமிய்தம் செங்கணான்
உரை செயத் தரினும் அத்தொழில் உவந்திலன்;
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டித் தன்
குரை மலர்த் தடக்கையால் கடைந்து கொண்டனன்.         4.9.97

மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியான் நெடும்
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும்
வினைப் பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால்.         4.9.98

கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
விண் இடைப் புரம் சுட வெகுண்ட மேலைநாள்
எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டிக் கொண்டவும்
அண்ணலே! ஒருவரால் அறியற் பாலவோ?         4.9.99

ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப் பின்
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ
சேகு உறப் பல்முறை தரெுட்டிச் செய்தபின்
வாகை என்று ஒரு பொருள் வழுவற் பாலதோ?         4.9.100

அறம் துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்;
'மறத் துறை நமக்கு'என வலிக்கும் வன்மையோர்;
திறத் துறை நல் நெறி திறம்பல் உண்டு எனின்
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும்?         4.9.101

'பைந் தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்து உளது; இனி வருத்தம் நீங்குவாய்!
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆதுமோ?
சுந்தரத் தனு வலாய்! சொல்லு நீ'என்றான்.         4.9.102

கூதிர்ப்பருவம் தேய்ந்து மாய்ந்து போதல்

உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்
'இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு?'என்பது ஓர்
தறெு துயர் உழந்தனன் தேயத் தேய்வு சென்று
அறுதியை அடைந்தது அப் பருவம் ஆண்டு போய்.         4.9.103

மேகம் வெளுத்தல்

மள்கல் இல் பெரும் கொடை மருவி மண்ணுேளார்
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே.         4.9.104

மாரிப் பேரிருள் மாய்தல்

தீவினை நல்வினை என்னத் தேற்றிய
பேய் வினை பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய்வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது மாரிப் பேர் இருள்.         4.9.105

இடியும் மின்னலும் இலவாதல்

மூள் அமர் தொலைவுற முரசு அவிந்த போல்
கோள் அமை கணம் முகில் குமுறல் ஓவின;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்று என மறைந்த மின்னெலாம்.        4.9.106

தடுத்த தாள் நெடுந் தடம் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே.         4.9.107

ஆறு வாரியறல்

மேகம் மாமலைகளின் புறத்து வீதலால்
மாக யாறு யாவையும் வாரி அற்றன;
ஆகையால் தகவு இழந்து அழிவில் நல் பொருள்
போக ஆறு ஒழுகலான் செல்வம் போலவே.         4.9.108

மேகத்தின் மறைப்பு நீங்கச் சந்திரன் ஒளிவீசுதல்

கடம் திறந்து எழுகளிறுஅனைய கார்முகில்
இடம் திறந்து ஏகலின்பொலிந்தது இந்துவும்;
நடம் திறன் நவில்வுறுநங்கைமார் முகம்
படம் திறந்து ஒருவலின்பொலியும் பான்மைபோல்.         4.9.109

குளிர்காற்று நறுங்காற்றாதல்

பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
பூசிய சந்தனம் புழுகு குங்குமம்
மூசின முயங்கு சேறு உலா மொண்டு உற
வீசின நறும்பொடி விண்டு வாடையே.         4.9.110

அன்னங்கள் பறக்கத் தொடங்குதல்

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
நன்னெடும் பருவமும் நணுகிற்று ஆதலால்
"பொன்னினை நாடிய போதும் என்ப போல்
அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின் வாய்."         4.9.111

மயில்கள் ஒடுங்குதல்

தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிந்த மாமயில்
எஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே.         4.9.112

நீர் தெளிதலும் மீன் பிறழ்தலும்.

வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர்
நெஞ்சு எனத் தெளிந்தன நீரம் நீர்தொறும்
'பஞ்சு'எனச் சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன்.         4.9.113

தாமரை பொலிவிழத்தலும் செங்கிடை மலர்தலும்

ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன
தாள்தொறும் மலர்ந்தன முதிர்ந்த தாமரை;
கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை.         4.9.114

தவளை ஒலி அடங்கல்

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல்விதச் சிறார் எனப் பகர்வ பல்லரி
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம்.         4.9.115

கடலொடு கலக்கும் ஆறுகளில் முத்துகள் தோன்றல்

செறிபுனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து
உறுதுணைக் கால்மடுத்து ஓடி ஓத நீர்
எறுழ்வலிக் கணவனை எய்தி ஆறு எலாம்
முறுவலிக்கின்றன போன்ற முத்தினால்.         4.9.116

முன்பனியில் கமுகு முதிர்தல்

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இல் நிறம் பசலை உற்று இருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கித் தள்ளரும்
பொன் நிறம் பொருந்தின பூகத் தாறு எலாம்.         4.9.117

முதலைகள் கரையில் வந்து உறங்குதல்

பயின்று உடல் குளிர்ப்பவும் பழனம் நீத்து அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின
வயின்தொறும் வயின்தொறும் மடித்த வாயின
துயின்றன இடங்கர் மா தடங்கள் தோறுமே.         4.9.118

வஞ்சிக்கொடி

கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின
அம் சிறை அறுபத்து அளக ஓளிய
எஞ்சல் இல் குழையன இடை நுடங்குவ
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே.         4.9.119

நந்துகள் சேற்றில் குளித்தல்

அளித்தன முத்து இனம் தோற்ப மான் அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால்
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன
குளித்தன மண்ணிடை கூனல் நந்து எலாம்.         4.9.120

நண்டுகள் வளைக்குள் ஒடுங்குதல்

மழைபடப் பொதுளிய மருதத் தாமரை
தழைபடப் பேரிலைப் புரையில் தங்குவ
இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள்
புழை அடைத்து ஒடுங்கின பொச்சை மாக்கள் போல்.         4.9.121
-------------

4.10 கிட்கிந்தைப் படலம் 4374 - 4514


இராமன், தான்குறித்த கால எல்லையில் சுக்கிரீவன் வராமையால் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல் (4374-4381)

அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னம் வீரன் இளவலை'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினன்;
மன்னன் வந்திலன்; என் செய்த ஆறு அரோ?         4.10.1

'பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந்
திறன் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன் அன்புகிடக்க; நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.         4.10.2

'நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்து உளான்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்;
சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்.         4.10.3

"வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு; அரும் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு " என்று சொல்லு நம் ஆணையே.         4.10.4

'நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.         4.10.5

"ஊரும் ஆளும் அரசும் நும்சுற்றமும்
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும்; வாரலிராம் எனின் வானரப்
பேரும் மாளும் " எனும் பொருள் பேசுவாய்.         4.10.6

"இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை " எனத் துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும்
நின்னலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்.         4.10.7

'நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தரத்தக்கனை;
போதி ஆதி'என்றான் புகழ்ப் பூணினான்.         4.10.8

இராமனது ஆணையை மேற்கொண்டு இலக்குவன் செல்லுதல் (4382-4388)

ஆணைசூடி அடிதொழுது ஆண்டு இறை
பாணியாது படர்வெரிந் பாழ்படாத்
தூணி தூக்கி தொடுசிலை தொட்டு அருஞ்
சேணின் நீங்கினன் சிந்தையுள் நீங்கலான்.         4.10.9

மாறு நின்ற மரனும் மலைகளும்
நீறுசென்று நெடுநெறி நீங்கிட
வேறு சென்றனன்; மேன்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான்.         4.10.10

விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு அழுந்தின மாதிரம்;
கண் உறத் தரெிவுற்றது கட்செவி;
ஒண் நிறம் கழல் சேவடி ஊன்றலால்.         4.10.11

வெம்பு கான் இடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பு போன்றனன் அன்று அடல் வாலிதன்
தம்பிமேல் செலும் மானவன் தம்பியே.         4.10.12

மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று கெடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றது நண்ணிய கால்பிடித்து
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான்.         4.10.13

உருக் கொள் ஒண்கிரி ஒன்றின் நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான்
அருக்கன், மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்
பருப்பதத்தினை எய்திய பண்பினால்.         4.10.14

தன் துணைத் தமையன் தனி வாளியின்
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்
குன்றின் நின்று ஒரு குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன்.         4.10.15

இலக்குவன் வெகுண்டு வருதலைக் கண்டு அஞ்சிய வானரர், அங்கதனுக்கு அவனது வருகையைத் தரெிவித்தல்

கண்ட வானரம் காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின; வாலி மகற்கு'அமர்
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்
சண்ட வேகத்தினால்'என்று சாற்றுலும்.         4.10.16

அங்கதன், இலக்குவனது குறிப்புணர்ந்து சுக்கிரீவனது அரண்மனையை அடைதல்

அன்ன தோன்றலும் ஆண் தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான் மருங்கு எய்திலான்;
மன்னன் மைந்தன் மனம் கருத்து உட் கொளா
பொன்னின் வார்கழல் தாதை இல் போயினான்.         4.10.17

அரண்மனையின் உள்ளே சுக்கிரீவன் இருந்த நிலை (4391-4395)

நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
தள மலர்த்தகைப் பள்ளியில் தாழ்குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்;         4.10.18

தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மால்நெடும் பொன்வரை புக்கது ஓர்
வெள்ளி மால்வரை என்ன விளங்குவான்;         4.10.19

சிந்துவாரத் தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில்'சாயலர் தாழ் குழல்
கந்த மாமலர்க் காடுகள் தாவிய
மந்த மாருதம் வந்து உற வைகுவான்;         4.10.20

தித்தியா நின்ற செங்கிடை வாய்ச்சியர்
முத்த வாள்நகை முள்ளெயிறு ஊறுதேன்
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால்
மத்த வாரணம் என்ன மயங்குவான்;         4.10.21

மகுட குண்டலம் ஏய் முக மண்டலத்து
உகு நெடுஞ் சுடர்க்கற்றை உலாவலால்
பகலவன் சுடர் பாய் பனி மால்வரை
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான்;         4.10.22

அங்கதன், சுக்கிரீவனை அணுகித் துயில் எழுப்புதல் (4396-4398)

கிடந்தனன் கிடந்தானைக் கிடைத்து இரு
தடங்கை கூப்பினன்; தாரை முன்நாள் தந்த
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான்
தொடங்கினான் அவனைத் துயில் நீக்குவான்.         4.10.23

'எந்தை! கேள் : அவ் இராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திருமுகம்
தந்து அளிப்ப தடுப்ப அரும் வேகத்தன்
வந்தனன்; உன் மனக் கருத்து யாது?'என்றான்.        4.10.24

இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
நினைவு இலான் நெடுஞ் செல்வம் நெருக்கவும்
நனை நறுந்துளி நஞ்சு மயக்கவும்
தனை உணர்ந்திலன் மெல் அணைத் தங்கினான்.        4.10.25

அங்கதன் அநுமனிடம் செல்லுதல்

ஆதலால் அவ் அரசு இளம் கோளரி
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்
கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் போதகமே அனான்.         4.10.26

அங்கதன், அநுமனுடன் தாரையின் மாளிகையை அடைதல்

மந்திரத் தனி மாருதி தன்னொடும்
வெம் திறல் படைவீரர் விராய் வர
அந்தரத்தின் வந்து அன்னைதன் கோயிலை
இந்திரற்கு மகன்மகன் எய்தினான்.         4.10.27

மேல் செயத்தக்கது என்'என வினாவிய அங்கதன் முதலியோரை நோக்கித் தாரை, கூறுதல் (4401-4405)

எய்தி'மேல்செயத் தக்கது என்?'என்றலும்
'செய்திர் செய்தற்கு அருநெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும் உதவி கொன்றீர்?'எனா.        4.10.28

மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் : "படை
கூட்டும்'என்று உமைக் கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் நும்நாள் திறம்பும் " எனக்
கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால்.        4.10.29

'வாலியார் உயிர் காலனும் வாங்க வில்
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம்புறத்து இருப்பார்? இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.         4.10.30

'தேவி நீங்க அத்தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது பருகுதிர் போலும் நும்
காவி நாள்மலர்க் கண்ணியர் காதல்நீர்.         4.10.31

'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;
நிறம்பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்
மறம் செய்வான் உறின் மாளுதிர்; மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என்?'என்கின்ற போதின்வாய்        4.10.32

குரங்குகள், கிட்கிந்தை வாயிலின் கதவைத் தாளிட்டுப் பெரும் பாறைகளைப் பெயர்த்து அடுக்கிப் போர் செய்தற்கு ஆயத்தமாதல் (4406-4407)

கோள் உறுத்தற்கு அரிய குரங்கு இனம்
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
தாள் உறுத்தி தடவரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால்.         4.10.33

சிக்குறக் கடை சேமித்த செய்கைய
தொக்குறுத்த மரத்த; துவன்றின;
'புக்கு உறுக்கிப் புடைத்தும்'என புறம்
மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன.         4.10.34

இலக்குவன் சினந்து உதைக்க, காவல் மதிலும் கதவு முதலியனவும்
சிதைந்து அழிதல் (4408-4409)

'காக்கவோ கருத்து?'என்று கதத்தினால்
பூக்க மூரல் புரவலர் புங்கவன்
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
நூக்கினான் அக்கதவினை நொய்தினின்.        4.10.35

காவல் மாமதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால்.        4.10.36

குரங்குகள் அஞ்சிச் சிதறியோடுதல் (4410-4413)

நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
செய்த கல் மதிலும் திசை யோசனை
ஐ இரண்டின் அளவு அடி அற்று உக
வெய்தின் நின்ற குரக்கும் வெருக் கொளா.        4.10.37

பரிய மா மதிலும் படர் வாயிலும்
சரிய வீழ்ந்த தடித்தின் முடித்தலை
நெரிய நெஞ்சு பிளப்ப நெடுந்திசை
இரியல் உற்றன; இற்றில இன் உயிர்.        4.10.38

பகரவேயும் அரிது; பரிந்து எழு
புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்
சிகர மால்வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது மாநகர்.        4.10.39

வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
கான் ஒருங்கு படர அக் கார்வரை
மீன் நெருங்கிய வானகம் மீன் எலாம்
போனபின் பொலிவு அற்றது போன்றதே.         4.10.40

வாயிற் கதவினைத் தள்ளி நகரத்தினுள் இலக்குவன் வருதல் கண்டு அங்கு நின்றோர்,'இனி என் செய்வது?'எனத் தாரையை வினவுதல்


அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
"என்ன செய்குவது? எய்தினன் " என்றனர்.        4.10.41

அநுமன் தக்கதோர் உபாயம் கூறுதல்

'அனை! எதிர்ந்து இவண் ஆய் வளையாரொடும்
மனையின் வாயில் வழியினை மாற்றினால்
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலான்;
வினையம் ஈது'என்று அனுமன் விளம்பினான்.         4.10.42

தாரை, மகளிர் கூட்டத்துடன் இலக்குவனை நோக்கிச் சென்று, அவன் வரும் வழியினைத் தடை செய்து நிற்றல்

'நீர் எலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து யான்
வீரன் உள்ளம் வினவுவன்'என்றலும்
பேர நின்றனர் யாவரும்; பேர்கலாத்
தாரை சென்றனள் தாழ் குழலாரொடும்.        4.10.43

உரைசெய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து அகன் கோயிலைப்
புரசை யானை அ(ன்)னான் புகலோடும் அவ்
விரைசெய் வார்குழல் தாரை விலங்கினாள்.        4.10.44

விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள்.         4.10.45

இலக்குவனை நோக்கி வந்த மகளிர் குழாத்தின் தோற்றம்

வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட
மெல் அரிக்குரல் மேகலை ஆர்த்து எழ
பல்வகைப் புருவக் கொடி பம்பிட
வல்லி ஆயம் வலத்தினின் வந்ததே.        4.10.46

இலக்குவன், மகளிர் கூட்டத்தைப் பார்க்க அஞ்சித் திரும்பி நிற்றல்

ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப, மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர, முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப் பருவரை அனைய தோளான்.         4.10.47

நாணத்தால் தலை குனிந்து நின்ற இலக்குவனை நோக்கித் தாரை கூறுதல்

தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.        4.10.48

'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோர்க்கும் எய்தல் ஆம் இயல்பிற்று ஆமே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனைவரப் பெற்று வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதிவேறு இதனின் உண்டோ?         4.10.49

'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவி நின் சேனை வீரர்,
செய்திதான் உணர்கிலாது, "திருவுளம் தரெித்தி " என்றார்;
ஐய! நீ ஆழிவேந்தன் அடியிணை பிரிகலாதாய்
எய்தியது என்னை?'என்றாள் இசையினும் இனிய சொல்லாள்.         4.10.50

இலக்குவன் தாரையை நோக்குதலும் தாயரை நினைந்து வருந்தலும் (4424-4425)

'ஆர் கொலோ உரைசெய்தார்?'என்று அருள்வர, சீற்றம் அஃக,
பார்குலாம் முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை, இறைமுகம் எடுத்து நோக்கி,
தார்குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான்.        4.10.51

மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நின்றான்.        4.10.52

தாரைக்கு இலக்குவன் உரைத்த மாற்றம் (4426-4427)

'இனையராம், என்னை ஈன்ற இருவரும்'என்ன வந்த
நினைவினான், அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்;
'வினவினாட்கு எதிரொர் மாற்றம் விளம்பவும் வேண்டும்'என்று,
அப்புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்.        4.10.53

"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் " என்று,
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;
"ஆனவன் அமைதி வல்லை அறிக " என, அருளின் வந்தேன்;
மேல்நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக" என்றான்.         4.10.54

தாரையின் மறுமொழி (4428-4432)

'சீறுவாய் அல்லை ஐய! சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய், நீ அலால் மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அவ் எல்லை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ?        4.10.55

'ஆயிர கோடி தூதர், அரிகணம் அழைப்ப, ஆணை
போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் இனிய நீரே தணிதிரால்; தருமம் அஃதால்,
தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்?        4.10.56

'அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால், அதுவும்நும் தொழிலே அன்றோ?
மடந்தைதன் பொருட்டால் வந்து, வாள் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின், பின்னும் நிற்குமோ கேண்மை அம்மா?        4.10.57

'செம்மைசேர் உள்ளத் தீர்கள் செய்தபேர் உதவி தீர,
வெம்மைசேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருத்தி விட்ட
உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி, எழுமையும் இழப்பர் அன்றே.        4.10.58

'ஆண்டபோர் வாலி ஆற்றல் மாற்றியது, அம்பு ஒன்று ஆனால்,
வேண்டுமோ துணைவர்? நும்பால் வில்லினும் மிக்கது உண்டோ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டுநின்று உய்தற் பாலார், நும்கழல் புகுந்து உேளாரும்.         4.10.59

இலக்குவன் சினம் தணிந்தமை கண்டு அனுமன் அருகில் வருதல்

என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வி யாளன், அருள்வர, நாணுக் கொண்டான்,
நின்றனன்; நிற்றலோடும்,"நீத்தனன் முனிவு'என்று உன்னா,
வன் துணை வயிரத் திண்தோள் மாருதி மருங்கின் வந்தான்.        4.10.60

நீயும் மறந்தனையோ? என்று இலக்குவன் அனுமனை வினவ, அவன் மறுமொழி உரைத்தல் (4434-4440)

வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,
'அந்தமில் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?'என்றான்;'முனிவு இனும் முளைக்கும்'என்று அங்கு
'எந்தை! கேட்டு அருளுக'என்னா இயம்பினன், இயம்ப வல்லான்.        4.10.61

'சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தயெ்வப்
பதவி அந்தணரை, ஆவை, பாலரை, பாவைமாரை
வதை புரிகுநர்க்கும், உண்டாம் மாற்றலாம் மாற்றம்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும் ஒழிக்கல் ஆம் உபாயம் உண்டோ?         4.10.62

'ஐய! நும்மோடும் எங்கள் அரிக்குலத்து அரசனோடும்
மெய்யுறு கேண்மை ஆகி, மேலைநாள் விளைவது ஆன
செய்கை, என்செய்கை அன்றோ? அன்னது சிதையு மாயின்,
உய்வகை எனக்கும் உண்டோ? உணர்வு மாசு உண்டது அன்றோ?        4.10.63

'தேவரும், தவமும், செய்யும் நல் அறம் திறமும், மற்றும்
யாவரும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்!
ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ? அருள் உண்டு அன்றே
மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! முனிவு உண்டானால்?        4.10.64

'மறந்திலன், கவியின் வேந்தன்; வயம் படை வருவிப்பாரைத்
திறம்திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்து, தாழ்த்தான்;
அறம்துணை நுமக்கு உற்றான்தன் வாய்மை, இன்று அழியுமாகில்,
பிறந்திலன் அன்றே? ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால்.         4.10.65

'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஆக
மதம் யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ
சிதையாத செருவில் அன்னான் முன்சென்று, செறுநர் மார்பில்
உதையானேல், உதையுண்டு ஆவி உலையானேல், உலகில் மன்னோ?         4.10.66

'ஈண்டு, இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
வேண்டலர் அறிவரேல், நும் கேண்மைதீர் வினையிற்று ஆமால்;
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம்
காண்டியால் உன்முன் வந்த கவிகுலக் கோனொடு'என்றான்.         4.10.67

அநுமனது வாய்மொழி கேட்டு இலக்குவன் சீற்றம் தணிதல்

மாருதி மாற்றம் கேட்ட மலைபுரை வயிரம் தோளான்
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான்
'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிது ஆக செய்த சிறுமையான்'என்னும் பெற்றி.         4.10.68

இலக்குவன் அநுமனை நோக்கிக் கூறுதல் (4442-4447)

அனையது கருதி, பின்னர், அரி குலத்தவனை நோக்கி,
'நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது; நின்பால்
இனையன உரைத்தற்கு ஏற்ற; எண்ணுதி இவை நீ'என்னா,
வனைகழல்'வயிரத் திண்தோள் மன் இளம் குமரன் சொல்வான் :         4.10.69

தேவியைக் குறித்துச் செய்த சீற்றமும் மானத் தீயும்
ஆவியைக் குறித்து நின்ற ஐயனை; அதனைக் கண்டேன்,
கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடிப்
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன்.        4.10.70

'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று,
நாயகன்தனையும் தேற்ற நாள்பல கழிந்த; அன்றேல்,
தீயும், இவ் உலகம் மூன்றும்; தேவரும் வீவர்; ஒன்றோ?
வீயும், நல் அறமும்; போகா விதியை யார் விலக்கல் பாலார்?"        4.10.71

'உன்னைக் கண்டு, உம்கோன், தன்னை, உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னைக் கண்டனன் போல் கண்டு, இந்நாள் இடை நெடிது வைகி,
தன்னைக் கொண்டு இருந்தே தாழ்த்தான்; அன்று எனில், தனு ஒன்றாலே
மின்னைக் கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல் பாற்றோ?        4.10.72

'ஒன்றுமோ, வானம் அன்றி உலகமும் பதினால் உள்ள
வென்றி மாக் கடலும் ஏழ் ஏழ் மலை உள்ள என்னவேயாய்
நின்றது ஓர் அண்டத்து உள்ளே எனின், அது நெடியது ஒன்றோ?
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால்.        4.10.73

'தாழ்வித்தீர் அல்லீர்; பல்நாள் தருக்கிய அரக்கர் தம்மை
வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்; மரபின் தீராக்
கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர்; பாவம் தன்னை
மூள்வித்தீர்! முனியாதானை முனிவித்தீர்'முடிவின்'என்றான்.         4.10.74

அநுமன் இலக்குவனுக்கு ஆறுதலும் உறுதியும் கூறி அவனைச் சுக்கிரீவன்பால் வருமாறு அழைத்தல்

தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது,'தொல்லை
ஆன்ற நூல் அறிஞ! போய பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே; போந்து உன் தம்முனைச் சார்தி'என்றான்.        4.10.75

இலக்குவன், அநுமனது வார்த்தைக்கு இசைந்து அவனொடும் சுக்கிரீவன்பால் செல்லுதல்

'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது? முற்றுங் காலை
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம்'என்று கூறி,
அன்னது ஓர் அமைதியான்தன் அருள் சிறிது அறிவான் நோக்கி,
பொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான்.        4.10.76

தாரை, மகளிர்கூட்டத்துடன் திரும்பிச் செல்லுதல்

அயில் விழி, குமுதச் செவ்வாய், சிலைநுதல், அன்னப் போக்கின்,
மயில் இயல், கொடித்தேர் அல்குல், மணி நகை, திணிவேய் மென்தோள்,
குயில் மொழி, கலசக் கொங்கை மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,
புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள்.         4.10.77

அங்கதன் இலக்குவனை வணங்கி அவன் பணித்தவண்ணம் அவனது வருகையைச் சுக்கிரீவனுக்கு உணர்த்தச் செல்லுதல்

வல்ல மந்திரியரோடு வாலி காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி,'விரைவின் என் வரவு வீர!
சொல்லுதி நுந்தைக்கு'என்றான்;'நன்று'எனத் தொழுது போனான்.        4.10.78

இலக்குவன் சினத்துடன் வந்திருத்தலை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தரெிவித்தல்

போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம்கொள் பாதம்
தான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, தடக்கை வீரன்,
'மானவற்கு இளையோன் வந்து உன் வாயிலின் புறத்தான்; சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது; இது விளைந்தது'என்றான்.         4.10.79

இலக்குவன் வெகுண்டு வருதற்குரிய காரணம் யாது? எனச் சுக்கிரீவன் அங்கதனை வினவுதல்

அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
பிரிவுற்ற மயக்கத்தான், முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்,
'செறி பொன் தார் அலங்கல் வீர! செய்திலம் குற்றம்; நம்மைக்
கறு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது?'என்றான்.        4.10.80

அங்கதன், நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தல் (4454-4459)

"இயைந்த நாள் எந்தை நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை" என்ன வீங்கி
உயர்ந்தது சீற்றம்; மற்று ஈது உற்றது செய்கை; முற்றும்
நயம் தரெி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும்.        4.10.81

வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து, குன்றம்
அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும்
தரெிகின்ற சினத் தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார்.        4.10.82

'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டா முன்னம், தறெ்கொடு வடக்கும் தேய
நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே.        4.10.83

'அந்நிலை கண்ட திண்தோள் அரிக்குலத்து அனிகம், அம்மா!
எந்நிலை நின்றது என்கேன்? யாண்டு புக்கு ஒளித்தது என்கேன்?
இந்நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தோடு,
மின் நிலை வில்லினானை'வழி எதிர் விலக்கி நின்றாள்.        4.10.84

'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப் புகல்கிலன்; பொருமி நின்றான்;
நங்கையும் இனிது கூறி,'நாயக! நடந்தது என்னோ
எங்கள்பால்?'என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான்.        4.10.85

'அது பெரிது அறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,
"விதிமுறை மறந்தான் அல்லன்; வெம் சினச் சேனை வெள்ளம்
கதும் என கொணரும் தூது கல் அதர்ச் செல்ல ஏவி,
எதிர்முறை இருந்தான்" என்றாள்; இது இங்குப் புகுந்தது'என்றான்.         4.10.86

இலக்குவனது வருகையை எனக்குத் தரெிவியாதது என்'எனச் சுக்கிரீவன் அங்கதனை நோக்கி வினவுதல்

சொற்கு உரித்தான எல்லாம் சொல்லலும், அருக்கன் தோன்றல்,
'நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியான், இத்தன்மை வெகுளியின், விரைவின் எய்த,
எற்கு உரையாது நீர் இது இயற்றியது என்னை?'என்றான். 4.10.87

அங்கதன் மறுமொழி

'உணர்த்தினென் முன்னம்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைக்கப் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன்தார் எறுழ் வலித் தடந்தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்'என்றான். 4.10.88

சுக்கிரீவன், மதுவுண்டு மதி மயங்கித் தன் கடமையினை மறந்த குற்றத்தினை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டு கூறுதல் (4462-4470)

உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் :'ஒருவர்க்கு இன்னம்
பெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது
இறல் உண்டோ? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்
நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவன், மைந்த!'என்றான்.        4.10.89

'ஏயின இது அலால் மற்று ஏழமைப் பாலது என்னோ?
"தாய் இவள், மனைவி'என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று இது; அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்!        4.10.90

"தெளிந்து தீவினையைச் செற்றோர் பிறவியின் தீர்வர் " என்ன,
விளிந்து இலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால்
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.        4.10.91

"தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி " என்பது
என்னத்தான் மறையும் மற்றைத் துறைகளும் இசைத்த, எல்லாம்,
முன்னைத்தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின் மேலே,
பின்னைத்தான் பெறுவது, அம்மா' நறவு உண்டு திகைக்கும் பித்தோ?        4.10.92

'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம் குறைத்தவர், அன்றி, வேரி
ஒளித்தவர், உண்டு, மீண்டு, இவ் உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ?        4.10.93

'செற்றதும் பகைஞர், நட்டார் செய்த பேர் உதவிதானும்,
கற்றதும், கண் கூடாகக் கண்டதும், கலை வலாளர்
சொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும், படர்ந்த துன்பம்
உற்றதும் உணரார் ஆயின், இறுதி வேறு இதனின் உண்டோ?        4.10.94

'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
"தஞ்சம் " என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்;
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே?        4.10.95

'கேட்டனன்,'நறவால் கேடு வரும்'என; கிடைத்த அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்,
மீட்டு இனி உரைப்பது என்னே? விரைவின் வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் நான் முடிவதற்கு ஐயம் உண்டோ?        4.10.96

'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க'என்றான்.        4.10.97

சுக்கிரீவன், இலக்குவனை எதிர்கொண்டு அழைத்து வருமாறு அங்கதனை அனுப்பித் தான் சுற்றத்தொடும் அரண்மனை வாயிலில் வந்து நிற்றல்

என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு எதிர் கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு,'இன்னும் நீயே நணுகு'என அவனை ஏவி,
தன் துணைத் தேவிமாரும் தமரொடும் தழுவ, தானும்
நின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான்.        4.10.98

இலக்குவனை வரவேற்கும் நிலையில் கிட்கிந்தை நகரம் பெற்ற அணிநலம் (4472 - 4473)

உரைத்த செம் சாந்தும், பூவும், சுண்ணமும், புகையும், ஊழின்
நிரைத்த பொன்குடமும், தீப மாலையும், நிகர் இல் முத்தும்
குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும், கொடியும், சங்கும்,
இரைத்து இமிழ் முரசும், முற்றும் இயங்கின, வீதி எல்லாம்.        4.10.99

தூய திண் பளிங்கின் செய்த சுவர்களில், தலத்தில், சுற்றி
நாயக மணியிற் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண்,
சாயை புக்கு உறலால், கண்டோர் அயர்வுற,'கை விலோடும்
ஆயிர மைந்தர் வந்தார் உளர்'எனப் பொலிந்தது, அவ் ஊர்.        4.10.100

தன்னை நோக்கிவந்த அங்கதனைக் கண்ட இலக்குவன்'எங்கிருந்தான் நுங்கோமான்?'என வினவ, அவன் மறுமொழி பகர்தல்

அங்கதன், பெயர்த்தும் வந்து ஆண்டு அடிதொழுதானை, ஐயன்,
'எங்கு இருந்தான் நும் கோமான்?' என்றலும்,'எதிர்கோள் எண்ணி,
மங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான்
சிங்க ஏறு அனைய வீர! செய்தவச் செல்வன்' என்றான்.        4.10.101

சுக்கிரீவன் இலக்குவனை எதிர்கொள்ளுதல் (4475-4477)

சுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர்,
கண் அகன் கவரிக் கற்றைக் கால் உற, கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க, வீர
வண்ண வில் கரத்தான் முன்னர், கவிக் குலத்து அரசன் வந்தான்.        4.10.102

அருக்கியம் முதல ஆய அருச்சனைக்கு அமைந்த யாவும்
முருக்கு இதழ் மகளிர் ஏந்த, முரசு இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு இனம் முனிவர் ஓத, இசை திசை அளப்ப, யாணர்த்
திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்.        4.10.103

வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில்
சும்மைவால் மதியம் குன்றில் தோன்றியது எனவுந் தோன்றிச்
செம்மலை எதிர்கோள் எண்ணித் திருவொடு மலர்ந்த செல்வன்,
அம் மலை உதயஞ் செய்யும் தாதையும் அனையன் ஆனான்.        4.10.104

இலக்குவன் சுக்கிரீவனைக் கண்டவுடன் தன் மனத்து எழுந்த சீற்றத்தைத் தணித்துக் கொள்ளுதல்

தோற்றிய அரிக்குலத்து அரசை தோன்றலும்
ஏற்று எதிர் நோக்கினன்; எழுந்தது அவ் வழிச்
சீற்றம்; அங்கு அதுதனை தெளிந்த சிந்தையால்
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான்.        4.10.105

சுக்கிரீவனும் இலக்குவனும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு, பரிவாரங்களுடன் அரண்மனையை அடைதல்

எழு என மலை என எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும்; தழுவி தையலார்
குழுவொடும் வீரர்தம் குழாத்தினோடும் புக்கு
ஒழிவு இல் பொற் கோபுரத்து உறையுள் எய்தினார்.        4.10.106

இலக்குவனைச் சிங்காதனத்தில் அமரும்படி சுக்கிரீவன் வேண்ட, இலக்குவன் அதற்கு உடன்படாமை (4480-4481)

அரியணை அமைந்தது காட்டி'ஐய! ஈண்டு
இரு' எனக் கவிக்குலத்து அரசன் ஏவலும்
'திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு
உரியதோ இஃது?'என மனத்தின் உன்னுவான்.        4.10.107

'கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்
எல் அணை மணிமுடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக யான் பொன் செய் பூந்தொடர்
மெல் அணை வைகலும் வேண்டுமோ?'என்றான்.        4.10.108

அது கேட்டுச் சுக்கிரீவன் வருந்திநிற்க, இலக்குவன், தரையில் இருத்தல்

என்று அவன் உரைத்தலும் இரவி காதலன்
நின்றனன்; விம்மினன் மலர்க்கண் நீர் உக;
குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோமகன்.        4.10.109

கண்டோர் வருந்துதல்

மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும்
அந்தம் இல் நோக்கினர் அழுத கண்ணினர்
இந்தியம் அவித்தவர் என இருந்தனர்;
நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார்.        4.10.110

திருமஞ்சனம் ஆடி அமுது அருந்தும்படி இலக்குவனைச் சுக்கிரீவன் வேண்ட, இலக்குவன் அதற்கு உடன்படாது மறுத்துரைத்தல் (4484-4488)

'மஞ்சன விதிமுறை மரபின் ஆடினை
எஞ்சல் இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும்
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுமால்.        4.10.111

'வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ?
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇக்
கருத்து வேறு உற்றபின் அமிழ்தும் கைக்குமால்.         4.10.112

'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கைநீர் அரசன் தேவியைக்
காட்டினை எனின் எமைக் கடலின் ஆர் அமிழ்து
ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால்.        4.10.113

'பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறு நான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின் நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால்.        4.10.114

'அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
சென்றனன் கொணர்ந்து'அடைதிருத்தினால் அது
நுன் துணைக் கோமகன் நுகர்வது ஆதலான்
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம்'என்றான்.        4.10.115

சுக்கிரீவன் வருந்துதல்

வானர வேந்தனும்'இனிதின் வைகுதல்
மானவர் தலைமகன் இடரின் வைகவே
ஆனது; குரக்கு இனத்து எமர்கட்கு ஆம்'எனா
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான் அரோ.        4.10.116

வருந்திய சுக்கிரீவன் அநுமனை நோக்கி ஒரு வார்த்தை கூறி இராமன் இருக்கும் இடத்திற்கு விரைந்து புறப்படுதல் (4490-4491)

எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை;
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன்
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று
மொழிந்தனன் வரன்முறை போதல் முன்னுவான்.        4.10.117

'போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறிவலோய்!'எனா
ஏயினன் அனுமனை'இருத்தி ஈண்டு'எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான்.        4.10.118

சுக்கிரீவன், தன் பரிவாரங்கள் சூழச் சென்று இராமனை அடைதல் (4492-4497)

அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன்.        4.10.119

ஒன்பதினாயிர கோடி ஊகம் தன்
முன் செல பின் செல ஞாங்கர் மொய்ப்பு உற
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்று உற
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில்.        4.10.120

கொடி வனம் மிடைந்தன; குமிறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே.        4.10.121

பொன்னினின் முத்தினின் புனைமென் தூசினின்
மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின்
பின்னின; விசும்பினும் பெரிய; பெட்பு உறத்
துன்னின சிவிகை; வெண் கவிகை சுற்றின.        4.10.122

வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும்
தாரினின் பொலம் கழல் தழங்கத் தாரணித்
தேரினில் சென்றனன் சிவிகை பின்செல.        4.10.123

எய்தினன் மானவன் இருந்த மால்வரை
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல்
ஐய வில் குமரனும் தானும் அங்கதன்
கை துறந்து அயல் செல காதல் முன் செல.        4.10.124

சுக்கிரீவன், இராமனிடத்துக் கொண்ட பேரன்பினால் பரதனை ஒத்துத் தோன்றுதல்

கண்ணிய கணிப்பு அரும் செல்வக் காதல் விட்டு
அண்ணலை அடிதொழ அணையும் அன்பினால்
நண்ணிய கவிக்குலத்து அரசன் நாள்தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன்.        4.10.125

சுக்கிரீவன், இராமன் திருவடிகளை இறைஞ்சுதல்

பிறிவு அருந் தம்பியும் பிரிய பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை
அறைமணித் தாரினோடு ஆரம் பார் தொட
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான்.        4.10.126

இராமபிரான், சுக்கிரீவனை அன்பினால் தழுவித் தன்னருகில் அமர்த்தி நலம் வினாதல் (4500-4501)

தீண்டலும் மார்பு இடைத் திருவும் நோவுற
நீண்ட பொன் தடக்கையால் நெடிது புல்லினான்;
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே;        4.10.127

அயல் இனிது இருத்தி'நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே
புயல் பொரு தடைக்கைநீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே குடை?'என வினாயினான்.        4.10.128

சுக்கிரீவன் விடை பகர்தல்

பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து வான்
உருளுடைத் தேரினான் புதல்வன்'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ?'என்றான்.        4.10.129

சுக்கிரீவன் தன் பிழையினை எடுத்துரைத்து இரங்குதல் (4503-4505)

பின்னரும் விளம்புவான்'பெருமையோய்! நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;
மன்னவ நின்பணி மறுத்து வைகி என்
புன் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்'என்றான்.         4.10.130

பெருந்திசை அனைத்தையும் பிசைந்து நேடினேன்
தரும் தகை அமைந்தும் அத்தன்மை செய்திலேன்
திருந்து இழை திறத்தினால் தெளிந்த சிந்தை நீ
வருந்தினை இருக்க யான் வாழ்வின் வைகினேன்.         4.10.131

'இனையன யானுடை இயல்பும் எண்ணமும்
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும்
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ?
வனைகழல் வரிசிலை வள்ளியோய்!'என்றான்.        4.10.132

இராமபிரான், சுக்கிரீவனது குணம் கொண்டு குற்றம் நீக்கிப் பாராட்டுதல்

திரு உறை மார்பனும் தீர்ந்ததேயும் வந்து
ஒருவ அருங் காலம் உன் உரிமையோர் உரை
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ?
பரதன் நீ! இனையன பகர்தியோ?'என்றான்.        4.10.133

இராமன் சுக்கிரீவனை நோக்கி'அநுமன் எங்குள்ளான்'என வினவ, அவன், நாளை சேனையோடு வருவான்'எனச் சுக்கிரீவன் விடை கூறுதல் (4507-4508)

ஆரியன் பின்னரும்'ஐய! நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான்?'என
சூரியன் கான்முளை'தோன்றுமால் அவன்
நீர் இரும் பரவையின் நெடிய சேனையான்.        4.10.134

'கோடி ஓர் ஆயிரம் குறித்த தூதுவர்
ஓடினர்; நெடும்படை கொணர்தல் உற்றதால் :
நாள்தரக் குறித்ததும் இன்று நாளை; அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்.        4.10.135

சேனைகள் யாவும் வந்த பின்னர்ச் செய்யத்தக்கது இது என ஆணையிடலாம் எனச் சுக்கிரீவன் கூறுதல்

'ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதிநாள் நாளை; நண்ணிய
பின் செய தக்கது பேசல் பாற்று என்றான்.        4.10.136

மீண்டு சென்று சேனைகள் வந்தபின் வருக'என இராமன் சுக்கிரீவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல்

விரும்பிய இராமனும்'வீர நிற்கு இது ஓர்
அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று'எனா
'பெரும்பகல் இறந்தது; பெயர்தி; நின் படை
பொருந்துழி வா'என தொழுது போயினான்.        4.10.137

இராமன் அங்கதனுக்கு இன்மொழி கூறி அனுப்பிவிட்டுத் தம்பியும் தானும் அவ் விடத்தில் தங்குதல்

அங்கதற்கு இனியன அருளி'ஐய! போய்த்
தங்குதி உந்தையோடு'என்று தாமரைச்
செங்கணான் தம்பியும் தானும் சிந்தையின்
மங்கையும் அவ் வழி அன்று வைகினான். 4.10.138

இராமன் பணித்தவண்ணம், தான் கிட்கிந்தைக்குச் சென்றபோது அங்கு நிகழ்ந்தவற்றை இலக்குவன் எடுத்துரைத்தல்

சேய் உயர் கீர்த்தியான்'கதிரின் செம்மல் பால்
போயதும் அவ் வயின் புகுந்த யாவையும்
ஓய்வுறாது உணர்த்து'என உணர்த்தினான் அரோ
வாய்மையா உணர்வுறும் வலிய மொய்ம்பினான்.        4.10.139

கவிக்கூற்று

அன்று அவண் இறுத்தனன்; அலரி கீழ்த் திசைப்
பொன் திணி நெடுவரை பொலிவு உறாத முன்
வன் திறல் தூதுவர் கூவ வானரக்
குன்று உறழ் நெடும்படை அடைதல் கூறுவாம்.        4.10.140
---------------

4.11 தானை காண் படலம் 4514 - 4552


சதவலி வானர சேனையுடன் வந்து சேர்தல்

ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த
வானர அதிபர் ஆயிரர் உடன்வர வகுத்த
கூனல் மாக் குரங்கு ஐ இரண்டு ஆயிர கோடித்
தானையோடும் அச் சதவலி என்பவன் சார்ந்தான்.        4.11.1

சுடேணனன் வருகை

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தரெிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான் வந்து சுடேணனன் எனும் பெயர்த் தோன்றல்.        4.11.2

உருமையின் தந்தை தாரன் வருகை

ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
ஆறு எண் ஆயிர கோடியது உடன் வர, அமுதம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான்.        4.11.3

கேசரி வருகை

ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த
மொய்ம்பு மால்வரை புரை நெடு வானரம் மொய்ப்ப
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான்.         4.11.4

தூமிரன் வருகை

மண்கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியன, வயிரத்
திண் கொள் மால்வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண்கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, எறுழ்வலித் தூமிரன் இறுத்தான்.        4.11.5

கவாட்சன் வருகை

முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும் சலம்வரின் குமைக்கும்,
இனிய மாக்குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன்வர ஆன்பெயர்க் கண்ணன் வந்து அடைந்தான்.        4.11.6

பனசன் வருகை

தனிவரும் தடங்கிரி எனப் பெரியவன், சலத்தால்
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறு நிலையன்,
பனசன் என்பவன், பன்னிரண்டு ஆயிர கோடிப்
புனித வெஞ்சின வானரப் படைகொடு புகுந்தான்.        4.11.7

நீலன் வருகை

இடியும், மாக்கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் முழக்கு உடையன, விசையன, முரண,
கொடிய, கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படைகொண்டு புகுந்தனன் நீலன்.         4.11.8

தரீமுகன் வருகை
மா கரத்தன உரத்தன வலியன நிலைய
வேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்
ஆகரத்தினும் பெரியன ஆறு ஐந்து கோடி
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்.        4.11.9

கயன் வருகை

இளைத்து வேறு ஒரு மாநிலம் வேண்டும் என்று இரங்க,
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்,
விளைத்த வெஞ்சினத்து அரி இனம் வெருவுற விழிக்கும்
அளக்கரோடும் அக்கயன் எனும் பெயரன் வந்து அடைந்தான். 4.11.10

சாம்பவான் வருகை

ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
பாயிரப் பெரும்படை கொண்டு பரவையின் திரையின்
தாய், உருத்து உடனே வர தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான்.        4.11.11

துன்முகன் வருகை

வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள்
உகுத்தி நீயெனப் பொரு அரும் பெருவலி உடையான்,
பகுத்த பத்து நூறாயிரப் பத்தியின் இரட்டி
தொகுத்த கோடி வெம்படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான்.        4.11.12

துமிந்தன் வருகை

கோடி கோடி நூறாயிர எண் எனக் குவிந்த
நீடு வெஞ்சினத்து அரி இனம் இருபுடை நெருங்க
மூடும் உம்பரும், இம்பரும், பூழியில் மூழ்க
தோடு இவர்ந்த தார்க் கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான்.        4.11.13

மயிந்தன் வருகை

இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
உயர்ந்த வெஞ்சின வானரப் படையொடும் ஒருங்கே
சயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல்கொடு தழைத்த
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான்.        4.11.14

குமுதன் வருகை

கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய,
பிறங்கு தணெ் திரை கடல்புடை பெயர்ந்து எனப் பெயர்வ,
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த
திறம் கொள், வெஞ்சினப் படைகொடு குமுதனும் சேர்ந்தான்.         4.11.15

பதுமுகன் வருகை

ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த
பாழி நல் நெடுந் தோள்கிளர் படைகொண்டு பரவை
ஊழி பேரினும் உலைவு இல உலகினில் உயர்ந்த
பூழி விண்புகப் பதுமுகன் என்பவன் புகுந்தான்.        4.11.16

இடபன் வருகை

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும் தாழ்வு இலாத் தடவரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த, வலிகொள் தொள்ளாயிர கோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான்.        4.11.17

தீர்க்கபாதன் முதலியோர் வருகை

தீர்க்கபாதனும், வினதனும், சரபனும் திரைக்கும்
மால் கருங்கடற்கு உயர்ந்துள மைம்முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ணருங் கோடி கொண்டு, அண்டமும் புறமும்,
போர்க்கும் பூழியில் மறைதர, முறையினின் புகுந்தார்.        4.11.18

அனுமன் வருகை

கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் காண
மெய் அஞ்சாதன மாதிரம் சிறிது என விரிந்த,
வையம் சார்வரத் திரிதரு வானர சேனை
ஐ அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான்.         4.11.19

நளன் வருகை

நொய்தின் கூடிய சேனை, நூறாயிர கோடி
எய்த, தேவரும்,'என்கொலோ முடிவு?'என்பது என்ன
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க,
தயெ்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் சேர்ந்தான்.         4.11.20

கும்பன் சங்கன் முதலியோர் வருகை

கும்பனும் குலச் சங்கனும் முதலினர், குரங்கின்
தம் பெரும்படைத் தலைவர்கள் தர வந்த தானை,
இம்பர் நின்றவர்க்கு எண் அரிது; இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்ப அரிது அளவே         4.11.21

வானரப் படையின் சிறப்பு (4535-4537)

தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்
காயின் வெங்கனல் கடவுளும் இரவியும் கரியும்.        4.11.22

எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின் கண் நுதலானுக்கும் கதுவா;
மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே.        4.11.23

ஒடிக்குமேல், வடமேருவை வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல் பெருங்காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும்.        4.11.24

படைத் தலைவர் வருகை

ஆறு பத்து எழு கோடியாம், வானரர்க்கு அதிபர்,
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்,
மாறு இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர்,
ஊறும் இப்பெரும் சேனைகொண்டு எளிதின் வந்துற்றார்.        4.11.25

வந்த படைத் தலைவர் சுக்கிரீவனை வணங்குதல்

ஏழு மாகடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு, அவ் வீரரும் துவன்றி,
'ஆழி மாபரித் தேரவன் காதலன் அடிகள்
வாழி! வாழி!'என்று உரைத்து அலர் தூவினர், வணங்கி.        4.11.26

சுக்கிரீவன் சேனையைக் காணுமாறு இராமனை வேண்டுதல்

அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன்
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்;
'நினையும் முன்னம் வந்து அடைந்தது, நின்பெருஞ் சேனை;
வினையின் கூற்றுவ! கண்டருள் நீ'என விளம்ப.        4.11.27

வானரப் படை காண இராமன் மலைச் சிகரத்தை யடைதல்

ஐயனும் உவந்து, அகம் என முகம் மலர்ந்து அருளி,
தையலாள் வரக் கண்டனன் ஆம் எனத் தளிர்ப்பான்
எய்தினான் அங்கு ஒர் நெடுவரைச் சிகரத்தின் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும் அச்சேனையின் மீண்டான்.         4.11.28

சேனை இயங்குமாறு ஒழுங்குபடுத்திச் சுக்கிரீவன் படைத் தலைவரோடு மீளுதல்

அஞ்சொடு ஐ இரண்டு யோசனை அகலத்தது ஆகி,
செஞ்செவே வடதிசை நின்று தனெ்திசை செல்ல,
எஞ்சலில் பெருஞ்சேனையை'எழுக'என ஏவி,
வெஞ்சினப் படைவீரரை உடன் கொண்டு மீண்டான்.        4.11.29

சுக்கிரீவன் இராமனுக்கு வானரப் படையைக் காட்டுதல்

மீண்டு இராமனை அடைந்து'இகல் வென்றிவேல் வீர!
காண்டி நீ'என வரன்முறை தரெிவு உறக் காட்டி,
ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததை அன்றே,
ஈண்டு சேனை, பால் எறிகடல் நெறி படர்ந்து என்ன.        4.11.30

வானரப் படையின் இயக்கத்தால் புழுதி எழுதல்

எட்டுத் திக்கையும் இருநிலப் பரப்பையும், இமையோர்
வட்ட விண்ணையும், மறிகடல் அனைத்தையும், மறைப்பத்
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி,
இட்டுச் செம்மிய நிறைகுடம் ஒத்தது இவ் அண்டம்.         4.11.31

படையின் அளவின்மை

அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ?
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்,
எத் திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ?        4.11.32

படையைப் பற்றி இராம இலக்குவர் உரையாடல் (4446-4452)

விண்ணின், தீம் புனல் உலகத்தின், நாகரின், வெற்றி
எண்ணின், தான் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன்,
கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி,
அண்ணல் தம்பியை நோக்கினன் உரை செய்வதானான்.        4.11.33

'அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் : இனி முடியுறக் காணுமாறு உளதோ?
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! மண்ணிடை மாக்கள்
"கடல் கண்டோம் " என்பர், யாவரே முடிவுறக் கண்டார்?        4.11.34

'ஈசன் மேனியை ஈர் ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
ஆசு இல் சேனையை, ஐம்பெரும் பூதத்தை அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை,
வாசமாலையாய்! யாவரே முடிவு எண்ண வல்லார்?         4.11.35

'இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி,
பின்னைக் காரியம் புரிதுமேல், நாள்பல பெயரும்;
உன்னிச் செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி'
என்ன வீரனைக் கைதொழுது இளையவன் இயம்பும்.        4.11.36

யாவது எவ் உலகத்தினின் ஈங்கு இவர்க்கு இயலாது
ஆவது; ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே?
தேவ! தேவியைத் தேடுவது என்பது சிறிதால்;
பாவம் தோற்றது, தருமமே வென்றது, இப்படையால்.         4.11.37

தரங்க நீர் எழும் தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,
உரம் கொள் மால்வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு, உறை இடப் படைத்தன கொல்லாம்?         4.11.38

'ஈண்டு தாழ்க்கின்றது என், இனி எண் திசை மருங்கும்,
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்?
நீண்ட நூல்வலாய்!'என்றனன் இளையவன்; நெடியோன்,
பூண்ட தேரவன் காதலற்கு, ஒருமொழி புகலும்.        4.11.39
----------------

4.12 நாட விட்ட படலம் 4553- 4626


இராமன் சுக்கிரீவனை வினவுதல்

'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி, நிரந்து, பரந்து எழு
தகைவு இல் சேனைக்கு அவதி சமைந்தது ஓர்
தொகையும் உண்டு கொலோ?' எனச் சொல்லினான்.         4.12.1

சுக்கிரீவன் மறுமொழி (4554 - 4555)

'ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற'என்று
ஆற்றலாளர் அறிவின் அமைத்தது ஓர்
மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றும் ஓர்
தோற்றம் என்று இதற்கு எண்ணும் முன் சொல்லுமோ?         4.12.2

'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர் இவர்க்குமுன்
கூறு சேனைப் பதி கொடுங் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன்'என்று ஓதினான்.        4.12.3

இனிச் செய்வன சிந்திக்க என இராமன் கூறல்

என்று உரைத்த எரிகதிர் மைந்தனை
வென்றி வில் கை இராமன் விருப்பினால்
நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான்.        4.12.4

சுக்கிரீவன் அனுமனுக்குக் கூறுதல் (4557-4561)

அவனும் அண்ணல் அனுமனை'ஐய! நீ
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை; ஓர்கிலை தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ?        4.12.5

'ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
நாகம் நாடுக; நால் நிலம் நாடுக;
போக பூமி புகுந்திட வல்லநின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால்.         4.12.6

'தனெ் திசைக்கண் இராவணன் சேண்நகர்
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம்;
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்றிசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ?        4.12.7

'வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது
தெள்ளியோய்! "அது தனெ் திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு " என உன்னுவாய்.        4.12.8

'தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல்
வீரர் யாவரும் மேம்படும் மேன்மையால்
சேர்க நின்னொடும்' திண் திறல் சேனையும்
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால்.        4.12.9

பிற திசைகளில் சுடேணனன் முதலியோரை அனுப்புதல்

'குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண் சதவலி; வாசவன்
இட திசைக்கண் வினதன்; விறல் தரு
படையொடு'உற்றுப் படர்க எனப் பன்னினான்.        4.12.10

சுடேணனன் முதலியோர்க்கும் சுக்கிரீவன் கட்டளை

'வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒரு மதி
முற்று உறாத முன் முற்றுதிர் இவ் இடை;
கொற்ற வாகையினீர்!'எனக் கூறினான்.        4.12.11

சுக்கிரீவன் தனெ் திசையில் செல்வோர்க்கு வழி கூறல் (4564-4584)

விந்தமலை

'ஈண்டு நின்று எழுந்து ஈர் ஐந்து நூறு எழில்
தூண்டு சோதிக் கொடுமுடி தோன்றலால்
நீண்ட நேமி கொல் ஆம் என நேர் தொழ
வேண்டும் விந்த மலையினை மேவுவீர்.         4.12.12

நருமதையாறு

'தேடி அவ் வரை தீர்ந்தபின் தேவரும்
ஆடுகின்றது அறுபதம் ஐந்தினைப்
பாடுகின்றது பல மணி ஆல் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர்.        4.12.13

ஏமகூடமலை

'வாம மேகலை வானவர் மங்கையர்
காம ஊசல் களி இசைக் கள்ளினால்
தூம மேனி அசுணம் துயில்வு உறும்
ஏம கூடம் எனும் மலை எய்துவீர்.        4.12.14

வடபெண்ணை

'நொய்தின் அம்மலை நீங்கி நுமரொடும்
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
செய்ய பெண்ணைக் கரிய பெண்ணைச் சில
வைகல் தேடிக் கடிது வழிக் கொள்வீர்.        4.12.15

தண்டகம்

'தாங்கும் ஆர் அகில் தருவளர் சந்தனம்
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல் என
நீங்கி நாடு நெடியன பிற்படத்
தேங்கு வார்புனல் தண்டகம் சேர்திரால்.        4.12.16

முண்டகத்துறை (4569-4571)

பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
தண்டகத்தது தாபதர் தம்மை உள்
கண்டு அகத்துயர் தீர்வது காண்டிரால்
முண்டகத் துறை என்று ஒரு மொய் பொழில்.        4.12.17

ஞாலம் நுங்குற நல் அறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம்பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.        4.12.18

'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ்வழி;
சயன மாதர் கலவித் தலைத் தரும்
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால்.        4.12.19

பாண்டுவின் மலை

'ஆண்டு இறந்தபின் அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது; செங்கதிர்ச் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம்'என்பது
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம்.         4.12.20

கோதாவரி

முத்து ஈர்த்துப் பொன் திரட்டி மணி உருட்டி,
      முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து, மலை ஈர்த்து
      மான் ஈர்த்து வருவது; யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு
      உதவுவது; புனிதம் ஆன
அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்;
      அம்மலையின் அருகிற்று அம்மா!        4.12.21

சுவண நதி

அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே
      எனத் தெளிந்த அருளின் ஆறும்,
வெவ் ஆறு ஆம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா
      வகை இலங்கும் விரிபூஞ் சோலை,
எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட மணி
      இமைப்பது, இமையோர் வேண்ட,
தெவ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த
      சுவணத்தைச் சேர்திர் மாதோ.        4.12.22

சந்திரகாந்தம், கொங்கவை, குலிந்தம்

சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம்
      என்னத் தோன்றி, மாதர்
கவண் உமிழ்கல் வெயில் இயங்கும் கனவரையும்,
      சந்திர காந்தகமும், காண்டீர்
அவண் அவை நீத்து ஏகியபின், அகல்நாடு பல
      கடந்தால், அனந்தன் என்பான்
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும்,
      குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ.       4.12.23

அருந்ததி மலை

"அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன் "
      என்று உரைக்கும் அறிவு இலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
      புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த்
      தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம்
      நெடுமலையை வணங்கி அப்பால்.       4.12.24

அஞ்சுவரும் வெஞ் சுரனும், ஆறும், அகன்
      பெருஞ் சுனையும் அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வளநாடும்,
      பிற்படப் போய் வழிமேல் சென்றால்,
நஞ்சு வரும் மிடற்று அரவுக்கு, அமிழ்துநனி கொடுத்து
      ஆயைக் கலுழன் நண்ணும்
எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி,
      அதன் புறம் சார ஏகிர் மாதோ.       4.12.25

'வடசொற்கும் தனெ்சொற்கும் வரம்பிற்றாய்
      நான்மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லையதாய்
      நல் அறத்துக்கு ஈறாய் வேறு
புடை சுற்றுந் துணையின்றிப் புகழ் பொதிந்த
      மெய்யேபோல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில்
      சென்று அடைதிர் மாதோ.       4.12.26

'இருவினையும் இடைவிடா எவ் வினையும்,
      இயற்றாதே, இமையோர் ஏத்தும்
திருவினையும், இடுபதம் தேர் சிறுமையையும்,
      முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
"கருவினையது இப் பிறவிக்கு " என்று உணர்ந்து
      அங்கு அது களையும் கடை இல் ஞானத்து
அருவினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்;
      ஈண்டு இருந்தும் அடி வணங்கற் பாலார்.       4.12.27

'தோதவத்தித் தூய்மறையோர் துறை ஆடும்
      நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
மாதவத்தோர் உறைவிடனும், மழை உறங்கும்
      மணித்தடனும், வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு
      தொறும் கிளக்கும் ஓதை
போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும்
      உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா.       4.12.28

'கோடு உறு மால் வரையதனைக் குறுகுதிரேல்,
      உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப்புறத்து
      நீர் மேவு தொண்டை
நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர் அதன்
      பின்னை நளிநீர்ப் பொன்னிச்
சேடு உறு தண்புனல் தயெ்வத் திருநதியின்
      இருகரையும் தெரிதிர் மாதோ.       4.12.29

துறக்கம் உற்றார் மனம் என்னத் துறைகெழுநீர்
      சோணாடு புகுந்தோர், தொல்லை
மறக்கம் உற்றார் அகம் மலர்ந்து மறைந்து உறைவர்;
      அவ் வழி நீர் வல்லை ஏகி,
உறக்கம் உற்றார் கனவு உற்றார் என உணர்வினொடும்
      ஒதுங்கி, மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலைநாடு நாடி, அகன்
      தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ.       4.12.30

தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்
      தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்
என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினான்
      அம்மலையை இடத்திட்டு ஏகிப்,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
      திருநதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ்சாரல் மயேந்திர மா
      நெடுவரையும், கடலும், காண்டிர்.       4.12.31

'ஆண்டு கடந்து, அலை உவரிக்கு அப்புறத்தும்
      ஒரு திங்கள் அவதி ஆகத் தேண்டி,
இவண் வந்து அடைதிர்; விடை கோடிர்,
      கடிது 'என்னச் செப்பும் வேலை,
நீண்டவனும், மாருதியை நிறை அருளால்
      உற நோக்கி,'நீதி வல்லோய்!
காண்டி எனின், குறி கேட்டி!'என,
      வேறு கொண்டு இருந்து கழறல் உற்றான்.       4.12.32

இராமன் சீதையின் அடையாளங்களை அனுமனுக்குக் கூறியது (4585-4617)

அடியின் அமைப்பு

பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தைப் பஞ்சி ஊட்டி,
மேற்பட மதியம் சூட்டி, விரகுற நிரைத்த, வெய்ய;
கால் தகை விரல்கள் ஐய! கமலமும் பிறவும் எல்லாம்
ஏற்பில என்பது அன்றி, இணை அடிக்கு உவமை உண்டோ?       4.12.33

புறவடி

நீ மெய்யா உணர்தி ஐய! நிரைவளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமையாக மதியறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போதும், அல்லன சொல்லினாலும்
யாம யாழ் மழலையாள் தன் புறவடிக்கு இழுக்கு மன்னோ.       4.12.34

கணைக்கால்

வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக்கால், மெய்யே
நினைவரால் அரிய; இன்னும் நேர்படப் புலவர் போற்றும்
சினை வரால், பகழி ஆவம், நெல் சினை யேனும் செப்பம்;
எனைவரால் பகரும் ஈட்டம், யான் உரைத்து இன்பம் என்னோ?       4.12.35

தொடை

அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்த போது, மற்று உரை வகுக்கல் ஆமோ?
நரம்பையும், அமிழ்தம் நாறும் நறவையும், நல்நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய்.         4.12.36

அல்குல்

'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தார் ஆழிக் கலைசார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய்!
பார் ஆழி பிடரில் தங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வா உனக்கு நான் உரைப்பது என்னோ.'        4.12.37
இடை

'சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டிடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்,
கட்டுரைத்து உவமை காட்ட, கண் பொறி கதுவா; கையில்
தொட்ட எற்கு உணரலாம்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.'         4.12.38

வயிறு

'ஆல் இலை, படிவம் தீட்டும் ஐய நுண் பலகை, நொய்ய
பால் நிறத் தட்டம், வட்டக் கண்ணடி, பலவும் இன்ன,
போலும் என்று உரைத்த போதும், புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
ஏலும் என்று இசைக்கின், ஏலா; இது, வயிற்று இயற்கை; இன்னும்.'         4.12.39

உந்தி

'சிங்கல் இல் சிறு கூதாளி, நந்தியின் திரள் பூ சேர்ந்த
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொதுமைத்து ஆமால்;
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி எனக் கணித்தது உண்டால்;
கங்கையை நோக்கிச் சேறி கடலினும் நெடிது கற்றோய்!'        4.12.40

வயிற்றிடை மயிரொழுங்கு

மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்
உயிர் ஒழுக்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க வேண்டின்,
செயிர் இல் சிற்றிடையாய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீரக்
குயில் உறுத்து அமைய வைத்த கொள் கொம்பு என்று உணர்ந்து கோடி.        4.12.41

வயிற்று மடிப்பு

"அல்லி ஊன்றிடும் " என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம்பொன்
வல்லி மூன்று உளவால், கோல வயிற்றில்; மற்று அவையும், மார
வில்லி, மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை
சொல்லி ஊன்றிய வாம் வெற்றி வரையெனத் தோன்றும் அன்றே.'               4.12.42

கொங்கை

'செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இள நீரும் தேர்வென்;
துப்பு ஒன்று திரள் சூது என்பென்; சொல்லுவென் தும்பிக் கொம்பும்;
தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கர வாகம் என்பென்;
ஒப்பு ஒன்றும் முலைக்குக் காணேன், பல நினைந்து உலைவென் இன்னும்.'         4.12.43

தோள்

'கரும்பு கண்டாலும் மாலைக் காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர்வது அன்றி வேறு அறிவது உண்டோ?
கரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல
இரும்பு கண்டு அனைய நெஞ்சம், எனக்கு இலை; இசைப்பது என்னோ?'         4.12.44

முன்கை

"முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு, மூன்று உலகத்துள்ளும் "
என் கையே இழுக்கம் அன்றே? இயம்பினும், காந்தள் என்றல்,
வன் கை யாழ் மணிக் கை என்றல், மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி
நன் கையாள் தடக்கை ஆமோ? நலத்தின்மேல் நலமும் உண்டோ?'         4.12.45

அகங்கை

ஏலக் கொண்டு அமைந்த பிண்டி இளந்தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங் கமல மென்பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ?         4.12.46

நகம்

வெள்ளிய முறுவல், செவ்வாய், விளங்கு இழை இளம் பொன் கொம்பின்
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ?
"எள்ளுதிர் நீரே மூக்கை " என்று கொண்டு, இவறி, என்றும்,
கிள்ளைகள், முருக்கின் பூவைக் கிழிக்கு மேல், உரைக்கலாமோ?        4.12.47

கழுத்து

அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையு மாபோல்,
செங்களி சிதறி, நீலம் செருக்கிய தயெ்வ வாள் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கி, வளர் இளங் கமுகும், வாரிச்
சங்கமும், நினைதி யாயின், நவை என்று துணிதி தக்கோய்!        4.12.48

வாயிதழ் (4601-4602)

'பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் பூவும்,
துவள்வில இலவம், கோபம், முருக்கு என்று இத் தொடக்கம் சாலத்
தவளம்'என்று உரைக்கும் வண்ணம் சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
குவளை உண்கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே.        4.12.49

'சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை உள என்றாலும்,
கவர்ந்தபோது அன்றி, உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா;
பவர்ந்த வாள் நுதலினாள்தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்தபோது, உவந்த வண்ணம் உரைத்தபோது, உரைத்தது ஆமோ?'        4.12.50

பல்

'முல்லையும், முருந்தும், முத்தும் முறுவல் என்று உரைத்தபோது,
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்கத் தோன்றும்,
அல்லது ஒன்று ஆவது இல்லை; அமிழ்திற்கும் உவமை உண்டோ?
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய்!        4.12.51

மூக்கு

ஓதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
சோதிசெய் பொன்னும் மின்னும் மணியும்போல் துளங்கித் தோன்றா;
ஏதுவும் இல்லை; வல்லோர் எழுதுவோர்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி நீயே நினைதியால், நெடிது காண்பாய்!        4.12.52

காது

'வள்ளை கத்தரிகை வாம மயிர்வினைக் கருவி, என்ன,
பிள்ளைகள் உரைப்பது அல்லால் பெரியவர் உரைக்கின் பித்தாம்;
வெள்ளிவெண் தோடு செய்த விழுத்தவம் விளைந்தது என்றே
உள்ளுதி காதை; அல்லால், உவமைக்கும், உவமை உண்டோ?        4.12.53

கண்

பெரியவாய்ப் பரவை ஒவ்வா; பிறிது ஒன்று நினைந்து பேச
அரியவாய், ஒருவர் உள்ளத்து அடங்குவ அல்ல; உண்மை
தரெிய ஆயிரம் கால் நோக்கின் தரெிவில; தயெ்வம் என்னக்
கரிய ஆய், வெளிய ஆகும் வாள்தடங் கண்கள் அம்மா.        4.12.54

புருவம்

கேள் ஒக்கின் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமால்;
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒப்பக் கூறிற்று ஆமோ?
வாள் ஒக்கும் வடி கணாள் தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அநங்க சாபம்.        4.12.55

நல்நாளும் நளினம் நாணும் நளிர் அடி நுதலை நாடிப்,
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி,
முன்நாளின் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி,
எந் நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமால்.        4.12.56

அளகம்

வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னை?
அனையன எனினும் அந்த அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
வினை செயக் குழன்ற அல்ல; விதிசெய விளைந்த; நீலம்
புனைமணி அளகம் என்றும் புதுமையாம்; உவமை பூணா.        4.12.57

முகம்

'கொண்டலின் குழவி, ஆம்பல், குனிசிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மைய கிடந்த திங்கள்
மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ அப்
புண்டரீகத்தை உற்ற பொழுது அது பொருந்தி ஓர்வாய்'        4.12.58

கூந்தல்

'காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி ஊட்டி,
பேர் இருள் பிழம்பு தோய்த்து, நெறிவு உறீஇப் பிறங்குகற்றைச்
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா!
நேர்மையைப், பருமை செய்த நிறைநறுங் கூந்தல் நீத்தம்.         4.12.59

'புல் இதழ் கமலத் தயெ்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லையின் மதிக்கும் உண்டாம் களங்கம், என்று உரைக்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றிப் பிறிது உண்டு அன்றால்.'        4.12.60

'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாசப்
பங்கயத் தவட்கும் ஐயா! நிரம்பல; பற்றி நோக்கின்
செங்கயல் கருங்கண் செவ்வாய்த் தேவரும் வணங்கும் தயெ்வக்
கொங்கை அக்குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே.        4.12.61

சொல்

'குழல் படைத்து யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி,
மழலையும் பிறவும் தந்து வடித்த கைம்மலரின் மேலான்,
இழைபொரும் இடையினாள் தன் இன்சொற்கள் இயையச் செய்தான்;
பிழையிலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும் கொல் இன்னும்?'        4.12.62

'வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்த வேனும்,
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை;
மீன் நின்ற கண்ணினாள்தன் மென்மொழிக்கு உவமை வேண்டின்,
தேன் ஒன்றோ? அமிழ்தம் ஒன்றோ? அவை செவிக்கு இன்பம் செய்யா,'        4.12.63

நடை

'பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி, என்று இன்ன,
தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்;
பாவரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி
நாவரும் கிளவிச் செவ்வி நடைவரு நடையள் நல்லோய்!'        4.12.64

நிறம்

'எந்நிறம் உரைக்கேன்? மாவின் இளநிறம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால், மணிநிறம் உவமை போதா;
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்,
தன் நிறம் தானே ஒக்கும்; மலர்நிறம் சமழ்க்கும் அன்றே!'        4.12.65

உவமையற்றவளே சீதை

"மங்கையர் அவளை ஒப்பார் மற்று உளர் அல்லர் " என்னும்
சங்கையில் உள்ளந் தானே சான்று எனக் கொண்டு சான்றோய்!
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
திங்கள் வாள் முகத்தினாட்குச் செப்பு எனப் பின்னும் செப்பும்.         4.12.66

சீதைக்குக் கூறவேண்டிய அடையாளச் செய்திகள்

'முன்னை நாள் முனியொடும் முதிய நீர் மிதிலைவாய்ச்
சென்னிநீள் மாலையான் வேள்வி காணிய செல
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அக்
கன்னி மாடத்திடைக் கண்டதும் கழறுவாய்.        4.12.67

"வரை செய்தாள் வில் இறுத்தவன் அ மாமுனியொடும்
விரசினான் அல்லனேல் விடுவல்யான் உயிர்" எனக்
கரைசெயா வேலையிற் பெரிய கற்பினள் தரெிந்து
உரை செய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரை செய்வாய்.'        4.12.68

'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
கேழ் இலா வனமுலைக் கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று,
ஆழியான் அரச அவை கண்டதும் அறைகுவாய்.        4.12.69

"முன்புநான் அறிகிலா முனிநெடுங் கானிலே,
என்பினே போதுவான் நினைதியோ, ஏழை நீ?
இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு இனியை ஆயினை, இனித்
துன்பம் ஆய் முடிதியோ?" என்றதும், சொல்லுவாய்.'        4.12.70

"ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய்; உனக்கு
யான் அலாதன எலாம் இனியவோ? இனி" எனா
மீன் உலாம் நெடுமலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து,
ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும் உரை செய்வாய்.'        4.12.71

'மல்லல் மாநகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மாமதில் மணி கடை கடந்திடுதல் முன்,
"எல்லை தீர்வு அரிய வெங்கானம் யாதோ " எனச்
சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.'        4.12.72

இராமன் மோதிரம் அளிக்கப்பெற்று அனுமன் போதல

'இனையவாறு உரைசெயா,'இனிதின் ஏகுதி'எனா,
வனையும் மாமணி நல் மோதிரம் அளித்து,'அறிஞ! நின்
வினை எலாம் முடிக!'எனா விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான் அருெளாடும், போயினான்.'        4.12.73

அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவராம்
வெங்கதத் தலைவரும் விரிகடல் படையொடும்,
பொங்குவில் தலைவரைத் தொழுது, முன்போயினார்
செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார்.        4.12.74
-------------

4.13 பிலம் புக்கு நீங்கு படலம் 4627 - 4699


போயினார்; போயபின் புறந் நெடும் திசைகள்தோறு
ஏயினான் இரவி காதலனும்; ஏயின பொருட்கு
ஆயினார் அவரும்; அங்கு அன்னநாள் அவதியில்
தாயினார் உலகினைத் தகைநெடுந் தானையார்.        4.13.1

குன்று இசைத்தன எனக் குலவுதோள் வலியினார்
மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய்
வன்திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழ் உடைத்
தனெ் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரை செய்வாம்.         4.13.2

விந்திய மலையில் தேடுதல் (4629-4632)

சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு
இந்து யாறு எய்தலான் இறைவன் மா மௌலி நேர்
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால்.         4.13.3

அந் நெடுங் குன்றமோடு அவிர் மணிச் சிகரமும்
பொன்நெடுங் கொடுமுடிப் புரைகளும் புக்குமுன்
நல்நெடுந் தோகையை நாடினார் நவை இலார்
பல் நெடுங் காலம் ஆம் என்னா ஓர் பகல் இடை.         4.13.4

மல்லல் மாஞாலம் ஓர் மறு உறா வகையின் அச்
சில் அல் ஓதியை இருந் துறைவிடம் தேடினார்
புல்லினார் உலகினைப் பொது இலா வகையினால்
எல்லை மா கடல்களே ஆடுமாறு ஏகினார்.         4.13.5

விண்டு போய் இழிவ மேல் நிமிர்வ விண்படர்வ வேர்
உண்ட மாமரனின் அம்மலையின்வாய் உறையுநீர்
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினோர்
கண்டிலாதன அயன் கண்டிலாதன கொலாம்.        4.13.6

நருமதையாற்றை அடைந்து தேடுதல் (4633-4636)

ஏகினார் ஓசனை ஏழ் ஒடு ஏழு; பார்
சேகரத் தனெ்திசைக் கடிது செல்கின்றார்
மேக மாலையினொடும் விரவி மேதியின்
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார்.        4.13.7

அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர்
முன்னி ஆடு இடங்களும் சுரும்பு மூசுதேன்
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார்.        4.13.8

பெறல் அருந் தரெிவையை நாடும் பெற்றியார்
அறல் நறுங் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறைநறுந் தாமரை முகமும் நித்தில
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார்.         4.13.9

செருமத யாக்கையர் திருக்கு இல் சிந்தையர்
தரும தயாவினைத் தழுவும் தன்மையர்
பொரு மதயானையும் பிடியும் புக்கு உழல்
நருமதை ஆகிய நதியும் நீங்கினார்.        4.13.10

ஏமகூட மலை அடைதலும் அம்மலையின் சிறப்பும் (4637-4641)

தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம
நாம கூடப் பெருந்திசையை நல்கிய
வாம கூடச் சுடர்மணி வயங்குறும்
ஏமகூடத் தடம் கிரியை எய்தினார்.        4.13.11

மாடு உறு கிரிகளும் மறனும் மற்றவும்
சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப்
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது;
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது.         4.13.12

பறவையும் பல்வகை விலங்கும் பாடு அமைந்து
உறைவன கனகம் நுண் தூளி ஒட்டலால்
நிறைநெடு மேருவைச் சேர்ந்த நீர ஆய்ப்
புறம்நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது.        4.13.13

பரவிய கனகநுண் பராகம் பாடு உற
எரிசுடர்ச் செம்மணி ஈட்டத்து ஊடு வீழ்
அருவியும் நதிகளும் அலங்கு தீ இடை
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது.        4.13.14

விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள்வளைப்
பஞ்சின்மெல் அடியினார் ஆடல் பாணியும்
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின்
மஞ்சு இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது.        4.13.15

அம்மலையை வானரர் இராவணன் இடம் என அயிர்த்தல் (4642-4644)

அனையது நோக்கினார்'ஆம்; இது ஆம் அயில்
வினையினன் இராவணன் இருக்கும் வெற்பு'எனும்
நினைவினர் உவந்து உவந்து ஓங்கும் நெஞ்சினர்
சினம் மிகக் கனல்பொறி சிந்தும் செங்கணார்.        4.13.16

'இம்மலை காணுதும் ஏழை மானை அச்
செம்மலை நீக்குதும் சிந்தைத் தீது'என
விம்மல் உற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார்
அம்மலை ஏறினார் அச்சம் நீங்கினார்.        4.13.17

இரிந்தன கரிகளும் யாளி ஈட்டமும்
விரிந்த கோளரிகளும் வெருவி நீங்கின
திரிந்தனர் எங்கணும் திருவைக் காண்கிலார்
பரிந்தன சிந்தனை பரிகின்றாம் என.        4.13.18

சீதையைக் காணாராய் இறங்குதல்

ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
உம்பரைத் தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய
செம்பொன் நல்கிரியை ஓர் பகலில் தேடினார்;
கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார்.        4.13.19

அங்கதன் முதலியோர், சீதையைத் தேடுமாறு சேனையைத் தனியே அனுப்புதல்

வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையைத்
'தெள்ளுநீர் உலகு எலாம் திரிந்து தேடி நீர்
எள் அரும் மகேந்திரத்து எம்மில் கூடும்'என்று
உள்ளினார் உயர்நெடும் ஓங்கல் நீங்கினார்.        4.13.20

அனுமன் முதலியோர் ஒரு சுரத்தை அடைதல்

மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
போர்கெழு வீரரே குழுமிப் போகின்றார்;
நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால்
சூரியன் வெருவும் ஓர் சுரத்தைத் துன்னினார்.         4.13.21

சுரத்தின் வெம்மை

புள் அடையா; விலங்கு அரிது; புல்லொடும்
கள் உடை மரன் இல; கல்லும் தீந்து உகும்;
உள்ளிடை யாவும் நுண் பொடியொடு ஓடிய
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது        4.13.22

சுரத்தில் வானரர் படும் அல்லல் (4649-4650)

நல் புலன் நடுக்குற உணர்வு நாம் உறப்
பொன்பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார்
தனெ்புலம் தங்கு எரி நரகில் சிந்திய
என்பு இல்பல் உயிர் என வெம்மை எய்தினார்.         4.13.23

நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டு தோறு
ஊட்டிய வெம்மையால் உலையுங் காலினர்;
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால்
சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார்.         4.13.24

வானரர் பிலத்தில் புகுதல் (4651-4653)

ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவில் பீழையார்
பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார் பல
விதங்களால் நெடும்பில வழியின் மேவினார்.         4.13.25

'மீச் செலவு அரிது : இனி விளியின் அல்லது;
தீச் செலவு ஒழியவும் தடுக்கும் திண் பில
வாய்ச் செலல் நன்று'என மனத்தின் எண்ணினார்;
'போய்ச் சில அறிதும்'என்று அதனில் புக்கனர்.        4.13.26

அக்கணத்து அப் பிலத்து அகணி எய்தினார்
திக்கினோடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள்
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏம் உறப்
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார்.        4.13.27

வானரர் இருளில் வருந்துதல்

எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள்
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார்.        4.13.28

வானரர் தம்மைக் காக்குமாறு அனுமனை வேண்டல்

நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்
பொன்றினம் யாம் எனப் பொருமு புந்தியார்
'வன்திறல் மாருதி! வல்லையோ எமை
இன்று இது காக்க?'என்று இரந்து கூறினார்.        4.13.29

'உய்வுறுத்துவென் மனம் உலையிர்; ஊழின் வால்
மெய் உறப் பற்றுதிர்; விடுகிலீர்'ஏன
ஐயன் அக்கணத்தினில் அகலும் நீள்நெறி
கையினில் தடவி வெங்காலின் ஏகினான்.        4.13.30

பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்,
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இடத்,
துன் இருள் தொலைந்திடத் துரிதத்து ஏகினான்
பொன் நெடுங் கிரிகள் போல் பொலிந்த தோளினான்.         4.13.31

வானரர் அங்கு ஒரு நகரைக் காணுதல்

கண்டனர் கடிநகர் கமலத்து ஒண்கதிர்
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது;
விண்தலம் நாணுற விளங்குகின்றது;
புண்டரிகத்தவள் வதனம் போன்றது.        4.13.32

அந் நகரின் சிறப்பு (4659-68)

கற்பகக் கானது; கமலக் காடது;
பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது;
அற்புதம் அமரரும் எய்தலாவது;
சிற்பியாம் மயன் மனம் வருந்திச் செய்தது.         4.13.33

இந்திர நகரமும் இணை இலாதது;
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து எழுசுடர் அவை இன்று ஆயினும்
உந்தரும் இருள் துரந்து ஒளிர நிற்பது.        4.13.34

புவிபுகழ் சென்னி பேர் அமலன் தோள்புகழ்
கவிகள்தம் மனை எனக் கனக ராசியும்
சவி உடைத் தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர் இழைக் குப்பையும் அளவு இலாதது.         4.13.35

பயில்குரல் கிண்கிணி பதத்த பாவையர்
இயல்பு உடை மைந்தர்கள் இயக்கு இலாமையால்
துயிலவும் நோக்கவும் துணையது அன்றியே
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது.         4.13.36

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ்நிகர் நறவமும் தனித்தண் தேறலும்
இமிழ்கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வு உற துவன்றிய கணக்கு இல் கொட்பது.        4.13.37

வானரர் அந்நகரத்துப் புகுதல்

கன்னிநெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்;
'இந்நகரம் ஆம் இகல் இராவணனது ஊர்'என்று
உன்னி உரை ஆடினர் உவந்தனர் வியந்தார்
பொன்னின் நெடு வாயில் அதன் ஊடு இனிது புக்கார்.        4.13.38

அந்நகரத்தின் தன்மை (4665-4666)

புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்;
மக்கள்கடை தேவர்தலை வான் உலகின் வையத்து
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று
எக்குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார்.        4.13.39

வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும்
காவும் உள; காவி விழியார்கள்மொழி என்னக்
கூவும் இளமென் குயில்கள் பூவை கிளி கோலத்
தூவிமட அன்னம் இவை உள்ள சுவடு இல்லை.        4.13.40

அந்நகரைப் பற்றி வானரர் பல எண்ணித் திகைத்தல் (4667-4668)

ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்;
'மாயை கொல்'எனக் கருதி மற்றும் நினைவு உற்றார்
'தீய பிலனுள் பிறவி சென்ற இது அன்றோ
தூயது துறக்கம்?'என நெஞ்சு துணிவு உற்றார்.        4.13.41

"இறந்திலம்; இதற்குரியது எண்ணியிலம், ஏதும்
மறந்திலம்; அயிர்ப்பினொடு இமைப்பு உளம்; மயக்கம்
பிறந்தவர் செயற்கு உரிய செய்த பிழை இன்றால்;
திறம் தரெிவது என்?" என இசைத்தனர் திகைத்தார்.        4.13.42

சாம்பன் கலங்கிக் கூறுதல்

சாம்பன் அவன் ஒன்று உரை செய்வான்,'எழுசலத்தால்,
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன்,
நாம் புக அமைத்த பொறி நன்று; முடிவு இன்றால்;
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும்'என்றான்.        4.13.43

அனுமன் கூறும் ஆறுதல் மொழி

'இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும்;
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்கக்
கொன்று எழுதும்; அஞ்சல்'என மாருதி கொதித்தான்.        4.13.44

நகர நடுவில் சுயம்பிரபையைக் காணுதல்

மற்றவரும் மற்று அது மனக்கொள வலித்தார்;
உற்றனர் புரத்தின் இடை; ஒள் சுடரின் உள் ஓர்
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற
கற்றைவிரி பொன் சடையினாளை எதிர் கண்டார்.         4.13.45

சுயம்பிரபையின் தோற்றம் (4672-4676)

மருங்கு அலச வற்கலை வரிந்து வரிவாளம்
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசப்
பெருங் கலை மதித்திரு முகத்த பிறழ் செங்கேழ்
கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண.         4.13.46

தேர் அனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும்
ஊருவின் ஒடுங்கு உற ஒடுக்கி உற ஒல்கும்
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கைப்
பாரம் உள் ஒடுக்கு உற உயிர்ப்பு இடை பரிப்ப.        4.13.47

தாமரை மலர்க்கு உவமை சால்வுறு தளிர்க்கை
பூமருவு பொன் செறி குறங்கு இடை பொருந்த
காமம் முதல் உற்ற பகை கால்தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல.        4.13.48

நெறிந்துநிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றது தலத்தின் நெறி செல்லப்
பறிந்து வினை பற்று அற மனப் பெரிய பாசம்
பிறிந்து பெயரக் கருணை கண்வழி பிறங்க.        4.13.49

சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறல்

இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா
அருந்ததி எனத்தகைய சீதை அவள் ஆகப்
பரிந்தனர்; பதைத்தனர்; பணித்த குறி, பண்பின்
தரெிந்து உணர்தி; மற்று இவள் கொல் தேவி?'எனலோடும்.        4.13.50

அனுமன் கூறுகின்றான்

'எக்குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்?
இக் குறியுடைக் கொடி இராமன் மனையாேளா?
அக்கு வடம் முத்தம் மணி ஆரம் அதன் நேர் நின்று
ஒக்கும் எனின் ஒக்கும்'என மாருதி உரைத்தான்.        4.13.51

சுயம்பிரபை வானரரை யார் என வினவுதல்

அன்ன பொழுதின்கண் அவ் அணங்கும் அறிவுற்றாள்;
முன் அனையர் சேறல் முறை அன்று, என முனிந்தாள்;
'துன் அரிய பொன் நகரியின் உறைவிர் அல்லீர்;
என்ன வரவு? யாவர்? உரைசெய்க' என இசைத்தாள்.        4.13.52

வானரர் கூறுகின்றனர்

'வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்;
சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று
ஏதம் இல் அறத்துறை நிறுத்திய இராமன்
தூதர் உலகில் திரிதும்'என்னும் உரை சொன்னார்.        4.13.53

சுயம்பிரபையின் மகிழ்ச்சி

என்றலும்; இருந்தவள் எழுந்தனள் இரங்கிக்
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்;
'நன்று வரவு ஆக! நடனம்புரிவல்'என்னா
நின்றனள்; நெடுங்கண் இணை நீர் கலுழி கொள்ள.         4.13.54

சுயம்பிரபை வினாவும் அனுமன் விடையும்

'எவ் உழை இருந்தனன் இராமன்?' என, யாணர்ச்
செவ் உழை நெடுங் கண் அவள் செப்பிடுதலோடும்,
அவ் உழை நிகழ்ந்ததனை ஆதியினோடு அந்தம்,
வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான்.        4.13.55

சுயம்பிரபை வானரர்க்கு விருந்தளித்தல்

கேட்டு அவளும்,'என்னுடைய கேடு இல் தவம் இன்னே
காட்டியது வீடு!'என விரும்பி நனி கால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள்.        4.13.56

அனுமன் வினவச் சுயம்பிரபை தன் வரலாறு கூறுதல் (4683-4690)

மாருதியும் மற்று அவள் மலர்ச் சரண் வணங்கி
யார் இ(ந்) நகருக்கு இறைவர்? யாதுநின் இயல் பேர்?
'பார்புகழ் தவத்தினை! பணித்து அருளுக'என்றான்;
சோர்குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள்.        4.13.57

'நூல் முகம் நுனித்த நெறி நூறுவர நொய்தா
மேல் முகம் நிமிர்த்து வெயில் காலொடு விழுங்கா
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால்
நான்முகன் அளித்துளது இ(ம்) மாநகரம் நல்லோய்.        4.13.58

'அன்னது இது; தானவன் அரம்பையருள், ஆங்கு ஓர்,
நல் நுதலினாள் முலை நயந்தனன்; அ(ந்)நல்லாள்
என் உயிர் அனாள்; அவளை யான், அவன் இரப்ப,
பொன் உலகில் நின்று, ஒளிர் பிலத்திடை புணர்த்தேன்.'        4.13.59

'புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழைபோகத்து
உணர்ந்திலர், நெடும்பகல் இம் மாநகர் உறைந்தார்;
கணம் குழையினாெளாடு உயர்காதல் ஒருவாது உற்று,
இணங்கிவரு பாசம் உடையேன் உடன் இருந்தேன்.'        4.13.60

'இருந்து, பல நாள் கழியும் எல்லையினில், வல்லோய்!
திருந்து இழையை நாடிவரு தேவர் இறை சீறிப்,
பெருந் திறலினானை உயிர் உண்டு, "பிழை " என்று, அம்
முருந்து நிகர் மூரல் நகையாளையும், முனிந்தான்.'        4.13.61

'முனிந்து அவளை, "உற்ற செயல் முற்றும் மொழிக " என்ன,
கனிந்த துவர் வாயவளும் என்னை, இவள் கண்ணா
வனைந்து முடிவு உற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து'இவண் இருத்தி நகர் காவல் நினது'என்றான்.'        4.13.62

என்றலும்; வணங்கி,'இருள் ஏகும் நெறி எந்நாள்?
ஒன்று, உரை, எனக்கு முடிவு" என்று உரை செயாமுன்,
"வன்திறல வானரம் இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர்" என்று, அவன் அகன்றான்.        4.13.63

'உண்ண உள; பூச உள; சூட உள; ஒன்றோ?
வண்ண மணி ஆடை உள; மற்றும் உள பெற்றேன்;
அண்ணல்! அவை விட்டு உமை அடைந்திடுதல் வேண்டி
எண் அரிய பல்பகல் இருந்தவம் இழைத்தேன்.        4.13.64

'ஐ இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா!
மெய் உளது; மேல் உலகம் ஏறும் நெறி காணேன்;
உய்யும் நெறி உண்டு, உதவுவீர் எனின்; உபாயம்
செய்யும் வகை சிந்தையில் நினைத்திர், சிறிது'என்றாள்.        4.13.65

அனுமனின் மறுமொழி

அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும்
மன்னுபுலன் வென்றுவரும் மாது அவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி,'நனி வானவர்கள் சேரும்
பொன் உலகம் ஈகுவல், நினக்கு'எனல் புகன்றான்.         4.13.66

அவ்வாறே செய்ய அனுமனை வானரரும் வேண்டல்

'முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப்
பிழைத்து உயிர் உயிர்க்க அருள்செய்த பெரியோனே!
இழைத்தி செயலாய வினை'என்றனர் இரந்தார்;
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான்.        4.13.67

அனுமன் பேருருக் கொண்டு பிலத்தைப் பிளத்தல் (4694-4696)

'நடுங்கன்மின்'எனும் சொலை நவின்று, நகை நாற
மடங்கலின் எழுந்து, மழை ஏறு அரிய வானத்து
ஒடுங்கலில் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
நெடுங்கைகள் பெயர்த்து, நெடுவான் உற நிமிர்ந்தான்.        4.13.68

எருத்து உயர் சுடர்ப்புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இப்படி இடந்து உற வளர்ந்தான்;
கருத்து நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க
உருத்து உலகு எடுத்த கருமாவினையும் ஒத்தான்.         4.13.69

மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும்
தூ வடிவுடைச் சுடர் கொள் விண்தலை தொளைக்கும்
மூ அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான்
பூ வடிவுடைப் பொருவு இல் சேவடி புரைந்தான்.        4.13.70

அனுமன், பிலத்தின் மேற்பகுதியை மேல் கடலில் எறிதல்

ஏழ் இருபது ஓசனை இடந்து படியின் மேல்
ஊழ் உற எழுந்ததனை உம்பரும் ஒடுங்கப்
பாழிநெடு வன் பிலனுள் நின்று படர் மேல்பால்
ஆழியில் எறிந்து அனுமன் மேகம் என ஆர்த்தான்.        4.13.71

சுயம்பிரபை பொன்னுலகம் போதல்

இன்றும் அது மேல்கடல் இயக்கு இல் பில தீவா
நின்று நிலை பெற்று உளது; நீள் நுதலியோடும்
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார்;
பொன்திணி விசும்பின் இடை நல் நுதலி போனாள்.        4.13.72

வானரர் ஒரு பொய்கைக் கரையை அடைதல்

மாருதி வலித்தகையை பேசி மறவோரும்
பார் இடை நடந்து பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடை நெடுந்தகையும் மேலைமலை சென்றான்.        4.13.73
----------

4.14. ஆறு செல் படலம் 4700 - 4754


பொய்கையை அடைந்த வானரர் கனியும் காயும் தேனும் உண்டு உறங்கத் துமிரன் என்னும் அசுரன் அங்கே வருதல்

கண்டார் பொய்கைக் கண் அகல் நல் நீர்க்கரை; காமுற்று
உண்டார் தேனும் ஒண் கனி காயும், ஒரு சூழல்
கொண்டார் அன்றே இன் துயில்; கொண்ட குறி உன்னித்
தண்டா வென்றித் தானவன் வந்தான் தகவு இல்லான்.        4.14.1

துமிரன் உருவத் தோற்றமும் ஆற்றலும் (4701-4703)

மலையே போல்வான்; மா கடல் ஒப்பான்; மறம் முற்றக்
கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான், நீர்மை இலாதான்; நிமிர் திங்கள்
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான்.        4.14.2

கருவி மா மழை கைகள் தாவி மீது
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால்
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்
அருவி பாய்தரும் குன்றமே அனான்.        4.14..3

வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்;
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ?        4.14..4

துமிரன் உறங்குகின்ற வானரரை அடைதல்

பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான்
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான்.        4.14..5

துமிரன் அங்கதன் மார்பில் அடித்தல்

'பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர்
எய்தினார்கள் யார்? இது எனோ?'எனா
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்
கையின் மோதினான்; காலனே அனான்.         4.14..6

அங்கதன் மோதத் துமிரன் இறத்தல்

மற்று அம் மைந்தனும் உறக்கம் மாறினான்
'இற்று இவன் கொல் ஆம் இலங்கை வேந்து'எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர்க்கு அந்தம் முற்றினான்.        4.14..7

துமிரன் அலறி விழுதலும் வானரர் துயில் நீங்கி எழுதலும்

இடி உண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து
அடி உண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும்
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார்
பிடி உண்டார் எனத் துயிலும் பெற்றியார்.        4.14..8

அனுமன் வினாவும் அங்கதன் விடையும்

'யார்? கொல் ஆம் இவன்; இழைத்தது என்?'எனாத்
தாரை சேயினைத் தனி வினாயினான்
மாருதேயன்; மற்று அவனும்'வாய்மை சால்
ஆரியா! தரெிந்து அறிகிலேன்'என்றான்.         4.14..9

சாம்பவான் துமிரன் வரலாறு கூறல்

'யான் இவன் தனைத் தரெிய எண்ணினேன்
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே
ரான்; இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
தானவன்'எனச் சாம்பன் சாற்றினான்.        4.14..10

சூரியனுதித்தலும் வானரர் சீதையைத் தேடிச் செல்லுதலும்

'வேறும் எய்துவார் உளர்கொல்? ஆம் எனாத்
தேறி இன்துயில் செலவு தீர்ந்து உளார்
வீறு செஞ்சுடர்க் கடவுள் வேலைவாய்
நாற நாள் மலர்ப் பெண்ணை நாடுவார்.         4.14..11

வானரர் பெண்ணையாற்றை அடைதல்

புள் நை வெம் முலைப் புளினம் ஏய் தடம் அத்து
உண்ண ஆம்பல் இன் அமுதம் ஊறு வாய்
வண்ண வெள் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார்.         4.14.12


துறையும் தோகை நின்று ஆடு சூழலும்
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும் தெள்ளு பூந்தடமும் தணெ் பளிக்கு
அறையும் தேடினார் அறிவின் நீடினார்.        4.1413

வானர வீரர் பெண்ணையாற்றின் கரையில் தங்குதல்

அணி கொழித்து வந்து எவரும் ஆடினார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து அரும் சுழிகள்தோறும் நன்
மணி கொழிப்பதன் கரையின் வைகினார்.         4.14.14

வானரர் பெண்ணையாறு கடந்து காடும் மலையும் தேடித் தசார்ண நாடடைதல்

ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்
காடு நண்ணினார் மலை கடந்துளார்
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர்
நாடு நண்ணினார்; நவையின் நண்ணலார்.         4.14.15

வானரர் விதர்ப்ப நாடடைந்து சீதையைத் தேடுதல் (4715-4716)

தச நவப் பெயர்ச் சரள சண்பகத்து
அசந அப்புலத்து அகணி நாடு ஒரீஇ
உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
இசை விதர்ப்பநாடு எளிதின் எய்தினார்.        4.14.16

வைதருப்ப மண்டலனில் வந்து புக்கு
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்
பெய் தருப்பம் நூல் பிறழும் மேனியார்
செய் தவத்துளார் வடிவின் தேடினார்.        4.14..17

வானரர் தண்டகவனம் புகுதல்

அன்ன தன்மையால் அறிஞர் நாடி; அச்
செந்நெல் வேலி சூழ் திரு நல்நாடு ஒரீஇத்
தன்னை எண்ணும் அத்தகை புகுந்துளார்
துன்னு தண்டகம் கடிது துன்னினார்.        4.14..18

வானரர் தண்டக வனத்தில் தேடி முண்டகத்துறை யடைதல்

உண்டு அகத்துள் ஆய் உறையும் ஐம்பொறிக்
கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார்
தண்டகத்தையும் தடவி ஏகினார்
முண்டகத் துறை கடிது முற்றினார்.        4.14..19

முண்டகத்துறைப் பெருமை (4719-4721)

அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளைமா முலைக் கலவை கோதையில்
கள்ளும் நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீன் உணா; புலவு தீர்தலால்.         4.14..20

குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால்
விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்
நஞ்சு வீணையின் நடத்து பாடலால்
அஞ்சுவார் கண்நீர் அருவி ஆறு அரோ.         4.14..21

கமுக வார் நெடுங் கனக ஊசலில்
குமுத வாயினார் குயிலை ஏசுவார்
சமுக வாளியும் தனுவும வாழ் முகத்து
அமுத பாடலார் மருவி யாடுவார்.        4.14..22

வானர வீரர் முண்டகத்துறையில் சீதையைத் தேடி நீங்குதல்

இனைய ஆய ஒண் துறையை எய்தினார்
நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்
வினைய வார்குழல் திருவை மேவலார்
புனையும் நோயினார் கடிது போயினார்.        4.14..23

வானர வீரர் பாண்டு மலையினை அடைதல்

நீண்ட மேனியான் நெடிய தாளின் நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்
பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத்
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார்.         4.14..24

பாண்டு மலையின் தோற்றம்

இருள் உறுத்து மீது எழுந்த தெள்நிலா
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால்
அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல்
உருள் உறுத்து திண் கயிலை ஒத்ததால்.        4.14..25

பாண்டு மலையில் தேடிச் சீதையைக் காணாது வானர வீரர் வருந்துதல்

விண் உற நிவந்த சோதி வெள்ளி அம் குன்றம் மேவிக்
கண் உற நோக்கல் உற்றார், களி உறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ்வாய்ப் படை உறு நோக்கினாளை,
எண் உறு திறத்தும் காணார், இடர் உறும் மனத்தர் எய்த்தார்.        4.14..26

வானர வீரர் கோதாவரியாற்றை அடைதல்

ஊதை போல் விசையின் வெம் கண் உழுவைபோல் வயவர், ஓங்கல்
ஆதியை அகன்று செல்வார், அரக்கனால் வஞ்சிப்பு உண்ட
சீதை போகின்றாள் கூந்தல் வழீ இவந்து, புவனம் சேர்ந்த
கோதை போல் கிடந்த கோதாவரியினைக் குறுகிச் சென்றார்.         4.14..27

கோதாவரியாற்றின் தோற்றம் (4727-4728)

எழுகின்ற திரையிற்றாகி இழிகின்ற மணி நீர் யாறு,
தொழுகின்ற சனகன், வேள்வி தொடங்கிய, சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி, ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம் எனப் பொலிந்தது அன்றே.        4.14..28

ஆசு இல் பேர் உலகில், காண்போர் அளவை நூல் எனலும் ஆகிக்
காசொடு கனகம் தூவிக் கவின் உறக் கிடந்த கான் யாறு,
ஏசு போர் அரக்கன் மார்பின் இடைபறித்து, எருவை வேந்தன்
வீசிய வடக மீக்கோள் ஈது என விளங்கிற்று அன்றே.         4.14..29

கோதாவரிச் சூழலில் சீதாபிராட்டியைக் காணாமையால் வானர வீரர் சுவணகத் துறையில் புகுதல்

அந் நதி முழுதும் நாடி, ஆய் வளை மயிலை யாண்டும்
சந்நிதி உற்றிலாதார், நெடிது பின்தவிரச் சென்றார்
இன்னது ஈது, இலாதது ஈது என்று யாவையும் எண்ணும் கோளார்,
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார்.        4.14..30

சுவணகத் துறையிலும் குலிந்த தேசத்திலும் தேடி நீங்குதல்

சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்று புள்ளும்
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கிப்
பெரும் புனல் மருதம் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்கச் சென்றார்,
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும் புறத்துக் கொண்டார்.        4.14..31

கொங்கணம் முதலியவற்றைக் கடந்து அருந்ததி மலையினை அடைதல்

கொங்கணம் ஏழும் நீங்கிக் குடகடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல் தண்புனல் தவிர ஏகித்
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத் தேவர்
அம் கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார்.        4.14..32

அருந்ததி மலையையும் மரகத மலையையும் தேடிக் கடந்து வேங்கட மலை யடைதல்

அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார், ஏகினார், இடையர் மாதர்
பெருந் ததிக்கு அருந்தேன் மாறும் மரகதப் பெருங்குன்று எய்தி
இருந்து அதில் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை.        4.14..33

திருவேங்கட மலையின் பெருமை (4733-4735)

முனைவரும் மறை வ(ல்)லோரும் முந்நைநாட் சிந்தை மூண்ட
வினைவரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர்
எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர்
அனைவரும் அருவி நல்நீர் நாளும் வந்து ஆடுகின்றார்.        4.14..34

பெய்த ஐம்பொறியும் பெருங் காமமும்
வைத வெம் சொலின் மங்கையர் வாள்கணின்
எய்த வஞ்சக வாளியும் எண் அறச்
செய்தவம் பல செய்குநர் தேவரால்.        4.14..35

வலம் கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அ மலை
விலங்கும் வீடு உறுகின்றன; மெய் நெறி
புலம் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ?        4.14..36

வானர வீரர் வேங்கட மலையில் முனிவரை வணங்குதல்

ஆய குன்றினை எய்தி அருந்தவம்
மேய செல்வரை மேயினர் மெய்ந்நெறி
நாயகன்தனை நாளும் வணங்கிய
தூயர் நல் மலர்ப் பாதங்கள் சூடினார்.         4.14..37

வானர வீரர் வேங்கடம் நீங்கித் தொண்டை நாட்டிற் புகுதல்

சூடி ஆண்டு அச் சுரிகுழல் தோகையைத்
தேடி வார்புனல் தணெ் திரைத் தண்டக
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர்
வேடம் மேயினர்; வேண்டு உரு மேவுவார்.        4.14..38

தொண்டை நாட்டின் பெருமை (4738-4745)

குன்று சூழ்ந்த கடத்தொடும் கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும் மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும் தணெ் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம்.         4.14..39

சூல் அடிப் பலவின் தலை தூங்கு தேன்
கோல் அடிப்ப வெரீஇக் குல மள்ளர் ஏர்ச்
சால் அடித்தரும் சாலியின் வெண்முளை
தோல் அடிக் கிளை அன்னம் துவைப்பன.        4.14..40

செருகு உறும் கணில் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு; ஆய்ச்சியர்
இரு குறங்கும் பிறங்கின வாழையில்
குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால்.         4.14..41

தெருவின் ஆர்ப்பு உறும் பல்லியம் தேர் மயில்
கருவிமா மழை என்று களிப்பு உறா;
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா
மருவினார்க்கு மயக்கம் உண்டாகுமே?        4.14..42

தேரை வன் தலைத் தஙெ்கு இளம் பாளையை
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ
தாரை வன்தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று புலம்புவ தேரையே.        4.14..43

நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்
வெள்ளி வால் வளை வீசிய வெண்மணி
அள்ளி'நாரை சினை பொரியாத'என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால்.         4.14..44

சேட்டு இளங் கடுவன் சிறு புன்கையின்
கோட்ட தேம் பலவின் கனிக் கூன்சுளை
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்குதேன்
ஈட்டம் என்னச் சென்று ஈ இனம் மொய்ப்பன.        4.14..45

செல்வர் என்றும் வடக்கு கலை தறெ்கு தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுளி படக்
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அவ்
இல் வரம்பின் தகைத் தனெும் மீட்டதே.        4.14..46

வானர வீரர் தண்டகநாடு கடந்து சோழநாடு அடைதல்

அன்ன தண்டகநாடு கடந்து அகன்
பொன்னிநாடு பொரு இலர் எய்தினார்
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார்.        4.14..47

சோழநாட்டு வளம்

கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரைவாழ்
தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்பு உடைத் தீம் கனி
இடறுவார் நறுந்தேனின் இழுக்குவார்.        4.14..48

குழுவு மீன் வளர் குட்டம் எனக் கொளா
எழுவு பாடல் இமிழ் கருப்பேந்திரத்து
ஒழுகு சாற்று அகன் கூனையில் ஊழ்முறை
முழுகி நீர்க் கருங் காக்கை முளைக்குமே.         4.14..49

பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல
மீன் நெருங்குறும் வெள்ளம் என வெரீஇ
வானரங்கள் மரங்களின் வைகுமால்.        4.14..50

தாறு நாறுவ வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ; தூங்குறும் மாங்கனி
நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ.        4.14..51

சோழநாடும் மலைநாடுங் கடந்த வானர வீரர் பாண்டியநாடு அடைதல்

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ
மனையின் மாட்சி குலாம் மலைமண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தனெ் தமிழ்நாடு சென்று எய்தினார்.        4.14..52

பாண்டிய நாட்டுச் சிறப்பு

அத் திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ?
எத்திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ?        4.14..53

தனெ்றமிழ்நாட்டிற் சீதையைத் தேடிக் காணாது வருந்திய
வானர வீரர் மகேந்திரமலையை அடைதல் (4753-4754)

என்ற தனெ் தமிழ்நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து திருந்தினார்
பொன்றுவாரில் பொருந்தினர் போயினார்
துன்று அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்.        4.14..54

வன் திசைக் களிறு அன்ன மகேந்திரக்
குன்று இசைத்தது வல்லையிற் கூடினார்
தனெ் திசைக் கடல் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடுநெறி நீங்கினார்.         4.14..55
----------------------

4. 15 சம்பாதிப் படலம் 4755- 4817


வானர வீரர் தனெ்கடலைக் காணுதல்

மழைத்த விண்ணகம் என முழங்கி, வான் உற
இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து,'இலங்கையாள்
உழைத் தடம் கண்ணி'என்று, உரைத்திட்டு ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார்.        4.15.1

ஏமகூடத்திற் பிரிந்த படைகளும் வந்து அங்கதன் முதலிய வானர வீரரொடு சேர்தல்

விரிந்து'நீர் எண் திசை மேவி நாடினீர்
பொருந்துதிர் மயேந்திரத்து'என்று போக்கிய
அருந்துணைக் கவிகளாம் அளவு இல் சேனையும்
பெருந்திரைக் கடல் எனப் பெயர்த்தும் கூடிற்றே.        4.15.2

வானரர் சீதையைக் காணாமையால் வருந்திக் கூறுதல் (4757-4759)

யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்
பூ வரு புரி குழல் பொரு இல் கற்பு உடைத்
தேவியைக் காண்கிலார் செய்வது ஓர்கிலார்
நா உறக் குழறிட நவில்கின்றார் அரோ.        4.15.3

'அற்றது சொன்ன நாள் அவதி; காட்சியும்
உற்றிலம்; இராகவன் உயிரும் பொன்றுமால்;
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்;
இற்றது நம் செயல் இனி'என்று எண்ணினார்.        4.15.4

அருந்தவம் புரிதுமோ? அன்னது அன்று எனின்
மருந்து அரு நெடுங்கடு உண்டு மாய்துமோ?
திருந்தியது யாது? அது செய்து தீர்தும் என்று
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார்.         4.15.5

அங்கதன் உடன்வந்தவரிடம் கூறுதல் (4760-4763)

கரை பொரு கடல் அயல் கனகம் மால் வரை
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு
'உரை செயும் பொருள் உளது'என உணர்த்தினான்;
அரசிளங் கோளரி அயரும் சிந்தையான்.        4.15.6

'நாடினம் கொணருதும் நளினத்தாளை வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி'என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம் பழியின் மூழ்கினேம்.         4.15.7

"செய்தும்'என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம்
'எய்தும் வந்து'என்பது ஓர் இறையும் கண்டிலம்
'உய்தும்'என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ?"        4.15.8

'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச்செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்திர் ஆம்'என்றான்.        4.15.9

சாம்பவான் அங்கதனிடம் கூறுதல் (4764-4765)

'விழுமியது உரைத்தனை; விசயம் வீற்றிருந்து,
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்!
அழுதுமோ? இருந்து நம் அன்பு பாழ்படத்
தொழுதுமோ சென்று?'எனச் சாம்பன் சொல்லினான்.        4.15.10

'மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்?
மாண்டுறுவது நலம்'என மதித்தனம்;
ஆண் தகை அரசிளங்குமர! அன்னது
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால்.         4.15.11

சாம்பவான் மாற்றம் கேட்ட அங்கதன் மீட்டும் கூறுதல் (4766-4769)

என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய்
குன்று உறழ்ந்து என வளர் குவவுத் தோளினீர்!
பொன்றி நீர் மடிய யான் போவனேல் அது
நன்றதோ? உலகமும் நயக்கற் பாலதோ?         4.15.12

"சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்
போன்றவர் மடிதரப் போந்துளான் " என
ஆன்ற பேர் உலகு உேளார் அறைதல் முன்னம் யான்
வான் தொடர்குவென்'என மறித்தும் கூறுவான்.        4.15.13

எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும்
சொல்லவும் கூடும்; கேட்டால் துஞ்சவும் அடுக்கும்; கண்ட
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம்; அச்சொல்
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ? பரதன் மற்றோர்.         4.15.14

பரதனும் பின் உேளானும் பயந்து எடுத்தவரும் ஊரும்
சரதமே முடிவர், கெட்டேன்! சனகி என்று உலகம் சாற்றும்
விரத மாதவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும்
கரை தரெிவு இலாத துன்பம் விளைந்த; ஆ எனக் கலுழ்ந்தான்.        4.15.15

சாம்பவான் அங்கதனை நோக்கி மீட்டும் கூறல் (4770-4772)

பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்,
தரிப்பு இலாது உரைத்த மாற்றம், தடுப்பரும் தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல, நெஞ்சமும் மறுகக் கேட்டு,
விருப்பினால் அவனை நோக்கி, விளம்பினன் எண்கின் வேந்தன்.         4.15.16

நீயும் நின் தாதையும் நீங்க நின் குலத்
தாயம் வந்தவர்க்கு ஒரு தனையர் இல்லையால்;
ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்
நாயகர் இறுதியும் நவிலற் பாலதோ?        4.15.17

"ஏகு நீ; அவ் வழி எய்தி இவ்வழித்
தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி எம்
சாகையும் உணர்த்துதி; தவிர்தி சோகம்; போர்
வாகையாய்! " என்றனன் வரம்பு இல் ஆற்றலான்.        4.15.18

அனுமன் கூறுதல் (4773-4775)

அவன் அவை உரைத்தபின் அனுமன் செப்புவான்
'புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்
கவனம் மாண்டவர் எனக் கருத்து இலார் எனத்
தவன வேகத்தினீர்! சலித்திரோ? என்றான்.        4.15.19

பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில்
பொன் வரைக் குடுமியில் புறத்துள் அண்டத்தில்
நல் நுதல் தேவியைக் காண்டும் நாம் எனில்
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமோ.        4.15.20

'நாடுதலே நலம் இன்னும் நாடி அத்
தோடு அலர் குழலி தன் துயரில் சென்று அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம் அல்லது பழியிற்றாம்'என்றான்.        4.15.21

சம்பாதி வானர வீரரை நெருங்குதல்

என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன்
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன்
குன்று என நடந்து அவர்க் குறுகல் மேயினான்.        4.15.22

சடாயு இறந்தமை தரெிந்த சம்பாதியின் நிலை (4777-4780)

முறை உடை எம்பியார் முடிந்தவாறு எனாப்
பறையிடும் நெஞ்சினன் பதைக்கும் மேனியன்
இறை உடைக் குலிச வேல் எறிதலால் முனம்
சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்.        4.15.23

'மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சினப்
படை உளர் ஆயினார் பாரில் யார்?'எனா
உடலினை வழிந்து போய் உவரி நீர் உகக்
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்.         4.15.24

உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினால்
மழுங்கிய நெடுங்கணின் வழங்கும் மாரியான்
அழும் குரல் முழக்கினான் அவனி ஆறு என
முழங்கிவந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்.        4.15.25

வள்ளியும் மரங்களும் மலையும் மண் உறத்
தெள்ளும் நுண் பொடி படக் கடிது செல்கின்றான்
தள்ளுவன் கால் பொரத் தரணியில் தவழ்
வெள்ளி அம் பெருமலை பொருவும் மேனியான்.        4.15.26

சம்பாதி நெருங்கக் கண்ட அனுமன் செயல்

எய்தினன்; இருந்தவர் இரியல் போயினார்;
ஐயன் அம் மாருதி அழலும் கண்ணினான்
'கைதவ நிசிசர கள்ள வேடத்தை
உய்தி கொல் இனி'என உருத்து முன் நின்றான்.        4.15.27

அனுமான் சம்பாதியைக் குற்றமற்றவனென்று குறிகளால் அறிதல்

வெம் கதம் வீசிய மனத்தன் விம்மலன்
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்
சங்கையிற் சழக்கு இலன் என்னும் தன்மையை
இங்கித வகையினால் எய்த நோக்கினான்.        4.15.28

சம்பாதி, சடாயுவைக் கொன்றவர் யார்? என வினவுதல்

நோக்கினன் நின்றனன்; நுணங்கு கேள்வியான்
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன்
'தாக்க அரும் சடாயுவைத் தருக்கினால் உயிர்
நீக்கினர் யார்? அது நிரப்புவீர்'என்றான்.        4.15.29

அனுமான் வினவச் சம்பாதி தன்னை அறிவித்தல் (4784-4785)

'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றது
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்று ஆகுமால்'
என்ன மாருதி எதிர் எருவை வேந்தனும்
தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேயினான்.        4.15.30

மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய்!
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத? என்
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன்பு இறந்தேன் என முடியக் கூறினான்.        4.15.31

அனுமான் சடாயு இறந்தவாறு கூறுதல்

கூறிய வாசகம் கேட்ட கோது இலான்
ஊறிய துன்பத்தின் உவரி உள் புகா
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன்
வீறிய வாள் இடை விளிந்த ஆறு எலாம்.         4.15.32

சடாயு இறந்தது அறிந்து சம்பாதி இரங்குதல் (4787-4791)

அவ்வுரை கேட்டலும் அசனி ஏற்றினால்
தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்
வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான்
இவ் உரை இவ் உரை எடுத்து இயம்பினான்.        4.15.33

இளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால்
வளையா நேமியன் வன்மைசால் வலிக்கு
இளையானே! இது என்ன மாயமோ?        4.15.34

மலரோன் நின்றுளன்; மண்ணும் விண்ணும் உண்டு;
உலையா நீடு அறம் இன்னும் உண்டு; அரோ
நிலையார் கற்பமும் நின்றது; இன்று நீ
இலையானாய்; இது என்ன தன்மையோ?        4.15.35

உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்
திடு அந் நாள்வந்து இருவோம் உேளாம் எனை
விட நீயே தனி சென்ற வீரமும்
கடனோ எம் கலுழற்கும் மேன்மையாய்.        4.15.36

ஒன்றா மூன்று உலகத்துேளாரையும்
வென்றான் என்னினும் வீர! நிற்கு நேர்
நின்றானே? அவ் அரக்கன் நின்னையும்
கொன்றானே? இது என்ன கொள்கையோ?        4.15.37

அனுமான் சம்பாதியைத் தேற்றுதல் சம்பாதி வினவுதலும் அனுமன் பதிலும் (4792-4796)

என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால்
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு
ஒன்றும் சொல்கொடு உணர்ச்சி நல்கினான்;
வன் திண் தோள் வரை அன்ன மாருதி.        4.15.38

சம்பாதி வினவுதலும் அனுமன் பதிலும் (4793-4796)

தேற்றத் தேறி இருந்த செங்கணான்
'கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு
ஏற்றுப் போர் செய்தது என் நிமித்து'என
காற்றின் சேய் அது கட்டுரைக்குமால்.        4.15.39

எம் கோமான் அவ் இராமன் இல் உளாள்
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள்
வெம்கோல் வஞ்சன் விளைத்த மாயையால்
தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்.        4.15.40

கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
கண்டான் உம்பி அறம் கடக்கலான்
'வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு'எனாத்
திண் தேரானொடு எதிர்ந்து சீறினான்.        4.15.41

'சீறித் தீயவன் ஏறு தேரையும்
கீறித் தோள்கள் கிழித்து அழித்தபின்
தேறித் தேவர்கள் தேவன் தயெ்வ வாள்
வீறப் பொன்றினன் மெய்ம்மையோன்'என்றான்.         4.15.42

சம்பாதி சடாயுவைப் பாராட்டுதல் (4797-4799)

விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய்!
தெளித்து ஆடத்தகு தீர்த்தன்மாட்டு உயிர்
அளித்தானே! அது நன்று! நன்று!! எனாக்
களித்தான்; வாரி கரந்த கண்ணினான்.         4.15.43

பைந் தார் எங்கள் இராமன் பத்தினி
செந்தாள் வஞ்சி திறத்து இறந்தவன்
மைந்து ஆர் எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான்; அல்லது உலந்தது உண்மையோ?        4.15.44

அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான்;
பெற ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவற்கு
இறவு என்னாம்? அதின் இன்பம் யாவதோ?        4.15.45

சம்பாதி சடாயுவுக்கு நீர்க்கடன் செய்து வானர வீரரை நோக்கிக் கூறுதல் (4800-4802)

என்று என்று ஏங்கி இரங்கி ஈர்ம்புனல்
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்
வன் திண் தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தார் அவர்க்கு இன்ன சொல்லினான்.        4.15.46

வாழ்வித்தீர் எனை மைந்தர்! வந்து நீர்
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்க்
கேள்வித் தீவினை கீறினீர் இருள்
போழ்வித்தீர்; உரை பொய்யின் நீங்கினீர்.        4.15.47

'எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; சொல்ல எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்        4.15.48

வானரர் இராமநாமம் சொல்லச் சம்பாதி சிறை வளர்தல் (4803-4804)

என்றான்;'அன்னது காண்டும் யாம்'எனா
நின்றார் நின்றுழி நீல மேனியான்
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்;
வன் தோளான் சிறை வானம் தாயவே.        4.15.49

சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான்
முறைபெற்று ஆம் உலகு எங்கும் மூடினான்;
நிறைபெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனலாம் உறுப்பினான்.        4.15.50

இராமநாமத்தால் சம்பாதிக்குச் சிறகு முளைக்கக் கண்ட வானரர் வியத்தல்

தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார்
வெருண்டார் சிந்தை வியந்து விம்முவார்.         4.15.51

வானரர் வேண்டச் சம்பாதி தன் முன்னை வரலாறு கூறுதல் (4806-4811)

அன்னானைக் கடிது அஞ்சலித்து'நீ
முன்னாள் உற்றது முற்றும் ஓது'எனச்
சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வு உற
தன்னால் உற்றது தான் விளம்புவான்.        4.15.52

தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி சடாயு என்பேம்,
சேய் ஒளிச் சேண் செல் நோக்கின் கழுகினுக்கு அரசு செய்வேம்
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்.        4.15.53

ஆய் உயர்'உம்பர் நாடு காண்டும்'என்று அறிவு தள்ள
மீ உயர் விசும்பின் ஊடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்
தீயையும் தீக்கும் தயெ்வச் செங்கதிர்ச் செல்வன் சீற,        4.15.54

முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
'எந்தை! நீ காத்தி'என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென், மறைத்தலோடும் மற்று அவன் மறையப் போனான்
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிந்திலாதேன்.        4.15.55

மண்ணிடை விழுந்த என்னை வான் இடை வயங்கும் வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையன்,'சனகன் காதல்
பெண் இடை ஈட்டின் வந்த வானரர், இராமன் பேரை
எண் இடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி'என்றான்.        4.15.56

'எம்பியும் இடரின் வீழ்ந்தான், ஏயது மறுக்க அஞ்சி
அம்பரத்து இயங்கும் யாணர்க் கழுகினுக்கு அரசன் ஆனான்;
நம்பிமீர்! ஈது எம் தன்மை; நீர் இவண் நடந்த வாற்றை
உம்பரும் உவக்கத் தக்கீர்! உணர்த்துமின் உணர'என்றான்.        4.15.57

வானரர் சீதையைத் தேடிவந்தமை சொல்லச் சம்பாதி கூறுதல் (4812-4817)

என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, "எந்தாய்!
புன் தொழில் அரக்கன், மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான்,
தனெ் திசை" என்ன உன்னித் தேடி நாம் வருதும்'என்றார்;
'நன்று; நீர் வருந்தல் வேண்டா; நான் அது நவில்வன்'என்றான்.        4.15.58

பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன், பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை, புக்கு
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறை அகத்து வைத்தான்;
ஏகுமின், காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும்.        4.15.59

ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அவ் ஊர்,
பாச வெம் கரத்துக் கூற்றும் கண் புலம் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்
ஏசு அறு குணத்தீர்! சேறல் எப் பரிசு இயைவது? என்றான்.        4.15.60

நால் முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகம் அத்து அண்ணல்
பால் முகப் பரவைப் பள்ளிப் பாம்பு அணை பரன் என்றாலும்,
காலினுக் கேயும் சேறல் அரிது; இது காவல் தன்மை
மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின் விளிவு இலாதீர்.        4.15.61

எல்லீரும் சேறல் என்பது எளிதன்று அவ் இலங்கை மூதூர்
வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து அவண் ஒழுகி, வாய்மைச்
சொல்லீரே! துயரை நீக்கித் தோகையைத் தரெுட்டி, மீடிர்;
அல்லீரேல், என் சொல் தேறி உணர்த்துமின் அழகற்கு அம்மா.        4.15.62

'காக்குநர் இன்மையால் அக் கழுகு இனம் முழுதும் கன்றிச்
சேக்கை விட்டு இரியல் போகித் தரெுமரும்; அதனைத் தீர்க்கப்
போக்கு எனக்கு அடுத்த; நண்பீர்! நல்லது புரிமின்; என்னா
மேக்கு உற விசையின் சென்றான்; சிறையினால் விசும்பு போர்ப்பான்.        4.15.63
-------------

4.16 மயேந்திரப் படலம் (4818- 4846)


'பொய் உரை செய்யான் புள் அரசு' என்றே புகலுற்றார்,
'கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரை கண்டாம்,
உய் உரை பெற்றாம், நல்லவை எல்லாம் உற எண்ணிச்
செய்யுமின் ஒன்றோ, செய்வதை நொய்தின் செயவல்லீர்.'        4.16.1

'மாள வலித்தேம்; என்றும் இம் மாளா வசையோடும்
மீளவும் உற்றேம்; அன்னவை தீரும் வெளி பெற்றேம்;
காள நிறத்தோடு ஒப்பவர் மாயக் கடல் தாவுற்று
ஆளும் நலத்தீர்! ஆளுமின் எம் ஆர் உயிர் அம்மா!'        4.16.2

'சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் வில் கை
ஆரியனைச் சென்றே தொழுது; உற்றது அறைகிற்பின்
சீரியது அன்று; தேருதல் கொற்றச் செயல் அம்மா!
வாரி கடப்போர் யாவர்?'எனத் தம் வலி சொல்வார்.        4.16.3

'வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன்
பூதலம் முற்றும் ஓர் அடி வைத்துப் பொலிபோழ்து, யான்
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர, மேரு
மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர்!'        4.16.4

'ஆதலின், இப்பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி
மீது கடந்து, அத் தீயவர் உட்கும் வினையோடும்
சீதை தனைத் தேர்ந்து, இங்கு உடன் மீளும் திறன் இன்று'என்று
ஓதி இறுத்தான், நாலு முகத்தான் உதவுற்றான்.        4.16.5

நீலன் முதல் பேர் போர்கெழு கொற்ற நெடுவீரர்
சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை;
'வேலை கடப்பென், மீளமிடுக்கு இன்று'என விட்டான்,
வாலி அளிக்கும் வீர வயப்போர் வசை இல்லான்.         4.16.6

'யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு இனி யாரைப்
போம் என வைப்போம் என்பது புன்மை; புகழ் அன்றே;
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்றக் குமரா! நம்
நாமம் நிறுத்திப் பேர் இசை தைக்கும் நவை இல்லோன்."        4.16.7

'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனானும்,
காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனானும்
மாருதி ஒப்பார் வேறு இலை' என்னா, அயன் மைந்தன்,
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும்.        4.16.8

'மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர்; நுவல்தக்கீர்;
காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர்; கடன் நின்றீர்;
ஆலம் நுகர்ந்தான் ஆம் என வெம்போர் அடர்கிற்பீர்.'        4.16.9

'வெப்புறு செந்தீ நீர் வளியாலும் விளியாதீர்;
செப்புறு தயெ்வப் பல் படையாலும் சிதையாதீர்;
ஒப்பு உறின், ஒப்பார் நும் அலது இல்லீர்; ஒருகாலே
குப்புறின், அண்டத்து அப்புறமேயும் குதிகொள்வீர்.'         4.16.10

'நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி, நவைதீரச்
சொல்லவும் வல்லீர்; காரியம் நீரே துணிகிற்பீர்;
வெல்லவும் வல்லீர், மீளவும் வல்லீர்; மிடல் உண்டேல்
கொல்லவும் வல்லீர்; தோள்வலி என்றும் குறையாதீர்.'        4.16.11

'மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்;
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்;
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர்; பழி அற்றீர்;
சூரியனைச் சென்று ஒண் கை அகத்தும் தொடவல்லீர்.'        4.16.12

'அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதிவல்லீர்;
பொறிந்து இமையாக்கோன் வச்சிர பாணம் புகமூழ்க
எறிந்துழி, இற்று ஓர் புன்மயிரேனும் இழவாதீர்.'        4.16.13

'போர் முன் எதிர்ந்தால் மூ உல கேனும் பொருள் ஆகா;
ஓர்வு இல் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்;
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன்,
தேர் முன் நடந்தே, ஆரிய நூலும் தரெிவுற்றீர்.'        4.16.14

'நீதியின் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவானும்
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம்
ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும்
ஆதி அயன் தானே என யாதும் அறைகின்றீர்.'         4.16.15

'அண்ணல் அமைந்தாற்கு அன்பு சிறந்தீர்; அதனானே
கண்ணி உணர்ந்தீர் கருமம்; நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர்; செய்து முடிப்பீர்; சிதைவு இன்றால்;
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்.'        4.16.16

'அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல்; அமர் வந்தால்
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர்; மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ, முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ்வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர்.'        4.16.17

.'ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறை யாலும்
பாண்டிதர் நீரே; பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்;
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்.'        4.16.18

'ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் உய்யும்படி செய்யீர்;
சாகரம் முற்றும தாவிடும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர்'என்று விரிஞ்சன் மகன் விட்டான்.        4.16.19

சாம்பன் இயம்பத் தாழ் வதனத் தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பான், அறிவாளன்,
கூம்பலொடும் சேர் கைக்கமலத்தன், குலம் எல்லாம்
ஏம்பல் வரத் தன் சிந்தை தரெிப்பான், இவை சொன்னான்.         4.16.20

'நீயிரே நினைவின் முன்னே நெடுந்திரைப் பரவை ஏழும்
தாய், உலகு அனைத்தும் வென்று, தையலைத் தருதற்கு ஒத்தீர்;
"போய் இது புரிதி " என்று புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினிர் என்னின், என்னின் பிறந்தவர் யாவர் இன்னும்?'        4.16.21

'இலங்கையை இடந்து வேரோடு இவ் வயின் தருக " என்றாலும்,
"விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறிப்
பொலங் குழை மயிலைக் கொண்டு போது" எனப் புகன்றிட்டாலும்,
கலங்கலிர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது, காண்டிர்.'        4.16.22

'ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளதாக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப, இருங் கடல் இனிது தாவி,
வாசவன் முதலோர் வந்து மலையினும், இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல், பின்னும்.'        4.16.23

'முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி, முந்நீர்
உற்றதே எனினும், அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்,
இற்றை நும் அருளும், எம் கோன் ஏவலும், இரண்டு பாலும்
கற்றைவார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டிர்.'        4.16.24

'ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி,
மீண்டு இவண் வருதல் காறும்; விடை தம்மின், விரைவின்'என்னா,
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த, அலர் மழை அமரர் தூவச்
சேண் தொடர் சிமயத் தயெ்வ மயேந்திரத்து உம்பர் சென்றான்.        4.16.25

பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல்,
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன், உவமை யாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தரெிய நின்றான்.         4.16.26

பார்நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன்
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்குத்
தார் நிழல் பரப்பும் தோளான், தடங்கடல் தாவா முன்னம்,
நீர் நிழல் உவரி தாவி இலங்கை மேல் செல்ல நின்றான்.        4.16.27

பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி, ஊழின்
நெகு வாய சிகர கோடி நெரிவன தரெிய நின்றான்,
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்.         4.16.28

மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்பத்
தன் நெடும் தோற்றம் வானோர் கண் புலத்து எல்லை தாவ,
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம், அண்டம் தாங்கும்
பொன் நெடும் தூணின் பாத சிலை எனப் பொலிந்து நின்றான்.        4.16.29
-------------------

கிட்கிந்தா காண்டம் முற்றிற்று


Comments