Pirapantattiraṭṭu XVII


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XVII
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 17 (2129 - 2236)
திருக்குடந்தைத்திரிபந்தாதி.




கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
திருக்குடந்தைத்திரிபந்தாதி.
-----------------------
    காப்பு.




    2129 - ஆதிவிநாயகர்துதி.
    சோதிக்களிற்றையலோடுறுமாறுதுதிசெயற்கா
    நீதிக்களிற்றைவரையருந்தாப்பிழைநீங்கவரால்
    சாதிக்களிற்றையளாநீர்க்குடந்தையந்தாதிசொல்வா
    னாதிக்களிற்றையடுத்தாமடுத்தவனைத்தும்வந்தே.. - 1




    2130 - அவையடக்கம்.
    குடந்தையந்தாதிதிரிபாவொருசதங்கூறிடுவ
    னடந்தையந்தாதிகழுமாவலியென்றநாதனிற
    மடந்தையந்தாதிவினைசெயவாழ்மங்களைமகிழ்ந
    னிடந்தையந்தாதிவருந்தாடருமெனுமெண்ணங்கொண்டே. - 2

    நூல்.




    2131 - பூந்தாமரையில்வதிவானுமாயனும்போற்றிடப்பொன்
    னாந்தாமரையில்வளக்குடமூக்கமரண்ணற்கடி
    யேந்தாமரையில்வனத்துழலாந்தவமெய்தவஞர்
    மாந்தாமரையில்வன்னாருமுடாமுள்ளிவாழ்குதுமே. . - 1




    2132 - வாழும்பரவைபுகழ்குடமூக்கமர்வள்ளலுல
    கேழும்பரவையமுதகும்பேசனிருந்தளியைச்
    சூழும்பரவைவிடமயின்றாயென்றுசொல்லுமெதிர்
    தாழும்பரவைமனைக்கேகவன்செயுந்தண்ணளியே. - 2




    2133 - தண்ணஞ்சுமந்ததிருக்கரத்தானைச்சலதிசுற்று
    மண்ணஞ்சுமந்தகனையுதைத்தானைவிண்மாய்க்குமென்று
    கண்ணஞ்சுமந்தமுறுத்தவொண்ணாநங்கடேசற்றொழா
    ரெண்ணஞ்சுமந்தவறிவினராயளற்றெய்துவரே. - 3




    2134 - வரசங்கைமங்கையுதித்தார்கல்லேற்றவரதகலைப்
    பிரசங்கமங்கையுறுநாவரேத்தும்பெருங்குடந்தை
    யரசங்கமங்கையுடைக்கணையாய்நின்னடிக்கமலம்
    பரசங்கமங்கையுறுமாறுண்டோவெம்படரொழிந்தே. - 4




    2135 - படவரவத்தையணிவார்கும்பேசர்படியளந்த
    விடவரவத்தையறுப்பார்நகர்விலையேந்திழையார்
    நடவரவத்தையுகப்பாரெனினுநமக்கருளக்
    கடவரவத்தையடையவிடார்பொற்கனங்குழையே. - 5




    2136 - கனகச்சிலம்புவளைத்தார்கும்பேசர்கனமறையா
    மனகச்சிலம்புபுனைவார்மறுகிலணிவிடைமீ
    துனகச்சிலம்புமுரசோடணையத்தொழுதவர்பான்
    முனகச்சிலம்புதொடுப்பான்கொலோமதன்முற்றிழையே. - 6




    2137 - முற்றத்துவந்தனைசெய்தேனுனக்குமுழுமதியே
    சொற்றத்துவந்தனையாய்குடமூக்கமர்சுந்தரர்வெண்
    பெற்றத்துவந்தனையார்மார்புறயான்பெறுந்துணைதீர்
    செற்றத்துவந்தனையாய்ப்பயில்வாயச்செழுவிசும்பே. - 7




    2138 - செழுங்கமலத்துவெடிவாளைபாய்தரத்தேனெனக்கீழ்
    விழுங்கமலத்துவழிசார்குடந்தைவிமலர்பொற்றா
    ளழுங்கமலத்துநிலங்கரையக்கரைந்தன்பினுள்வாம்
    புழுங்கமலத்துவிழுந்துயர்தீர்ந்தின்பம்புல்லுதற்கே. - 8




    2139 - புல்லாவரையுடைநல்குங்குடந்தைப்புகழ்ப்பதியா
    வல்லாவரையுடைசார்கயிலாயவரைவிடையேழ்
    வெல்லாவரையுடையாரெனக்கூறும்விதமென்னெனு
    மொல்லாவரையுடைகொங்கையிம்மங்கையுணர்ச்சிநன்றே. - 9




    2140 - நன்றாதரித்தகுடந்தைப்பிரானைநயந்துவெள்ளிக்
    குன்றாதரித்தமழுவாவெனத்துதிகூறக்கற்றோம்
    பொன்றாதரித்தவினைகாளெமைவிட்டுப்போய்விரைவி
    னன்றாதரித்தகையோராரவரையடைமின்களே. - 10




    2141 - அடைந்தவராகமளவாப்பசப்பினமையச்சுற்றந்
    தடைந்தவராகமளித்தருள்வார்கொறவாதவலி
    மிடைந்தவராகமருப்பணிந்தார்விண்ணர்மேவிமல
    முடைந்தவராகமரூஉங்குடமூக்கமருத்தமரே. - 11




    2142 - உத்தமனத்தனவிர்மழுவோடுழையுற்றமரு
    மத்தமனத்தனடிதேடநீண்டவனாய்மலர்தூய்
    நித்தமனத்தனவாங்குடமூக்கமாநின்மலனிப்
    பித்தமனத்தனமன்றானென்றென்னையும்பேணுவனே. - 12




    2143 - பேணாததென்னைதமைப்பேணுவாரைப்பிறைமதிய
    மாணாததென்னைவருத்துதற்கேயெழும்வானளவு
    கோணாததென்னையடர்குடமூக்கிற்குலாங்குழகர்
    நாணாததென்னையுறுபுகழார்கனனாட்டத்தரே. - 13




    2144 - நாட்டஞ்சிவந்தனையென்செயலாநமனேகுடந்தைக்
    கோட்டஞ்சிவந்தனைநேர்ந்தேயுறுமங்குக்கூடிமலப்
    பூட்டஞ்சிவந்தனைசெய்தோங்கருணைபுரிந்ததிலை
    வாட்டஞ்சிவந்தனைப்பொன்சொரிந்தாலுமதிக்கலமே. - 14




    2145 - மதிக்கலமாலயனாதியர்வாழ்க்கையைமற்றுமொன்றைத்
    துதிக்கலமாலயமாமறையானென்புந்தொண்டர்நெஞ்சு
    நிதிக்கலமாலயமாகக்கொண்டான்பதநெஞ்சுள்வைத்தா
    முதிக்கலமாலயனீத்தாங்குடந்தையுவந்தனமே. - 15




    2146 - உவமையிலாடுபலவரிந்தாலுமொழிவதுண்டோ
    வவமையிலாடுகரத்தனத்தாகும்பத்தற்புதனே
    தவமையிலாடுதுறையாயலருந்தவாதுநெருங்
    குவமையிலாடுதையுந்துயர்நீங்கக்குறித்தருளே. - 16




    2147 - அரும்பாவலருமுலையென்பதென்பல்லுமத்தன்மைத்தே
    விரும்பாவலருமகள்சுரம்போதல்விழைந்ததென்னோ
    வரும்பாவலரும்புகழ்குடமூக்கமர்வள்ளல்வெற்பிற்
    றிரும்பாவலருமுலகெங்குமாகுந்திறந்துணிந்தே. - 17




    2148 - திறம்பாவமென்றுகுறிப்பார்மனைதொறுஞ்சென்றுழன்ற
    மறம்பாவமென்றுமறிதருமேதிமரைபலர்வாய்
    நிறம்பாவமென்றுதிரிகுடமூக்கமர்நித்தசிலை
    பறம்பாவமென்றுகடலூருளாக்கொண்டபண்ணவனே. - 18




    2149 - பண்ணப்பணைத்ததிருவுமுருவும்பலமகவுங்
    கண்ணப்பணைத்தமொழியார்கலப்புங்கலப்புறுதோ
    மண்ணப்பணைத்தவளவளையூரும்வளக்குடந்தை
    விண்ணப்பணைத்தசடையானைமேவினமேவினமே. - 19




    2150 - மேவியகல்லும்படியென்னைத்தென்றலும்வெண்மதியு
    மோவியகல்லும்புனைதலெமையென்றொலிவளைமேற்
    றூவியகல்லும்பொறுத்தார்கும்பேசர்துனைந்தருளா
    ராவியகல்லும்படியுற்றதாலினியாரணங்கே. - 20




    2151 - ஆரம்பரந்தமுலையாய்பங்கேருகத்தண்ணலும்பொற்
    பேரம்பரந்தகையிற்புனைவானுமுட்பேணிவளங்
    கூரம்பரந்தமிலாநல்லமேவிகுடந்தைவெற்பிற்
    காரம்பரந்தவழுஞ்சென்றுளார்வரக்கண்டிலமே. - 21




    2152 - கண்டத்திருப்புவயவிடமாவுட்கலங்குபுமா
    றண்டத்திருப்புவதுமழுவாதண்டமிழ்க்குடந்தை
    யண்டத்திருப்புவளைஞாலமேத்தவமர்பதியா
    மண்டத்திருப்புவனச்சடையார்க்கெனுமாமயிலே. - 22




    2153 - மாமையிலங்கையரிவிழிபால்வண்குடந்தையனை
    நாமையிலங்கைநகத்தரிப்பாற்றருநம்பனைவெந்
    தீமையிலங்கையறச்செற்றவாளிச்சிவனையெண்ணார்
    தாமையிலங்கையையோவென்செய்வார்வெஞ்சமன்வலிக்கே. - 23




    2154 - வல்லியம்பாயும்வனங்குடமூக்குள்வையாரினுயிர்
    கொல்லியம்பாயும்வன்மீனாற்றின்வாய்க்குலவேதந்துழாய்
    புல்லியம்பாயும்ப்ராரிறையோயென்புராணர்வெற்பி
    வல்லியம்பாயும்பலைநேர்பவரிங்கடைதனன்றே. - 24




    2155 - அடைக்கலமாலைவளக்குடமூக்கமர்வாய்தலைப்பன்
    முடைக்கலமாலையணிவாய்மறையின்முழுமுதலே
    யுடைக்கலமாலைவகைப்பொறியாற்றலுன்றாளுக்கன்பு
    படைக்கலமாலையறோமெங்ஙன்வாழும்பரிசுளதே. - 25




    2156 - உளத்துக்கலந்தகடுந்துயர்யாவுமொழிவதென்றோ
    களத்துக்கலந்தகவில்லாநஞ்சாகிக்கனலில்விழுந்
    தளத்துக்கலந்தகமலைமுன்னோரைத்தழைவித்தவா
    வளத்துக்கலந்தகராக்குடமூக்கமர்மாமுதலே. - 26




    2157 - மாமனுக்காட்டுமுகங்கொடுத்தாற்குமதுப்பெய்கொன்றைத்
    தாமனுக்காட்டுவளப்பதத்தாற்குத்தவாதநல்லோர்
    நாமனுக்காட்டுகுடந்தைப்பிராற்குநகுதழனீர்
    காமனுக்காட்டுகண்ணாற்கடியோமுட்கலங்கலமே. - 27




    2158 - கலங்கலந்தாரையறியாரினின்றுகைகூப்பினல்கு
    நலங்கலந்தாரைவளக்குடமூக்கமர்நம்பரைக்கண்
    டலங்க்லந்தாரையருண்மினென்றேயிவ்வணங்குவிழிக்
    குதங்கலந்தாரைகவிழ்ப்பநின்றாளென்னகோலமிதே. - 28




    2159 - கோலமருப்புமுறித்தார்குடந்தைக்குழகரிந்தக்
    காலமருப்புமுலையார்க்கருளக்கடவரல
    ரேலமருப்புகுதும்போதிழிக்குமிருங்குழன்மிக்
    கோலமருப்புவனஞ்செவிதீத்திடுமொண்டொடியே. - 29




    2160 - தொடிக்கமலங்குவித்தேன்குடமூக்கிற்சுடர்மறுகி
    னடிக்கமலங்குபயில்பண்ணைத்தில்லைநயந்தவர்க்கு
    முடிக்கமலங்குலவப்புனைந்தார்க்கிம்முதுபிழைக்காத்
    துடிக்கமலங்குமனமமர்ப்பானொருதுட்டனென்னே. - 30




    2161 - என்னையப்பாவலர்தூற்றுநர்தூற்றவெண்ணாதெறிந்து
    நன்னையப்பாவலர்சூழுங்குடந்தைநகுமுதலே
    யன்னையப்பாவலர்செஞ்சடைமேலென்றுரைத்தடைந்தேன்
    பின்னையப்பாவலர்கூட்டத்துச்சேர்த்துப்பிறக்குகவே. - 31




    2162 - பிறப்பாலனந்தமஞராமவற்றினும்பேணுதலி
    லிறப்பாலனந்தமடுப்பதுநேருமென்செய்துமுற்றார்க்
    குறப்பாலனந்தமகிழ்விற்றருமொண்குடந்தையுள்ளா
    யறப்பாலனந்தமரசேயின்பெய்தவருள்புரியே. - 32




    2163 - புரிந்தவரங்கம்வெதுப்புதலால்வரல்புண்ணியமோ
    பரிந்தவரங்கம்வணக்கிடுமுன்னம்பரிந்துவந்து
    விரிந்தவரங்கம்பலையருள்கும்பவிமலரென்று
    தெரிந்தவரங்கம்புகலவுள்ளார்க்கிதுசீர்த்தியன்றே. - 33




    2164 - அன்றலைவாரியெனக்கொடுபோகவழுங்குபுயான்
    பொன்றலைவாரியெடுத்தொழித்தார்க்கன்றிப்புன்மைபுகல்
    வன்றலைவாரிசனுக்கொழித்தான்கும்பவள்ளல்வெற்பி
    லின்றலைவாரிவரியாருறுவர்கொலென்மணமே. - 34




    2165 - என்னப்பனாகம்பவளமொப்பான்மின்னிருஞ்சடைமேன்
    மின்னப்பனாகம்பகர்குடமூக்கமர்வித்தகன்பேர்
    பன்னப்பனாகம்படுவிடந்தீர்ந்தோர்பனவன்மகன்
    மன்னப்பனாகம்பலைக்கவுய்ந்தானொர்வணிகனுமே. - 35




    2166 - வண்ணக்குவளைவிழியாளிவளென்றுமாழ்கிமண்ணோ
    ருண்ணக்குவளைமுதுகாயினீரென்றுரையளவு
    மெண்ணக்குவளையிலக்காக்குவீர்பயனென்குடந்தை
    யண்ணக்குவளையணிபெருமானையடுத்துய்ம்மினே. - 36




    2167 - உய்யாதபாதகனாமெனையாருணர்வார்குடந்தை
    மெய்யாதபாதபுகழாய்துறைசைவெளிப்பட்டுநீ
    யெய்யாதபாதரசம்போறலையற்றிருவென்றுநோய்
    செய்யாதபாதமலர்தலைச்சூட்டல்செய்யாவிடினே. - 37




    2168 - விடக்கந்தரத்தருமாபாகர்கும்பவிமலர்பைம்புற்
    றடக்கந்தரத்தருவாவுரித்தார்பொற்றடவரைவா
    யடக்கந்தரத்தருமம்புரிவார்நமதன்பர்வினை
    மடக்கந்தரத்தருமஞ்சுமிவ்வாற்றுவரல்கொடிதே. - 38




    2169 - வரந்தந்தவரைபெறநாவன்மேயவர்வாழ்த்துநரைப்
    புரந்தந்தவரையுயர்த்துங்கும்பேசர்பொருப்பிலருள்
    சுரந்தந்தவரைசெயவந்தயானைதொலைத்தென்னுயிர்
    திரந்தந்தவரைவிடுத்தெவர்க்கார்க்குமித்திண்முரசே. - 39




    2170 - முரசம்பலவனிதஞ்சிலைக்குங்குடமூக்கமர்வா
    னரசம்பலவனிகமஞ்சொற்றானெளியானரியான்
    பரசம்பலவனியுள்ளார்க்கரன்வெற்பிற்பங்கயத்து
    விரசம்பலவனிதாய்கொடுங்கூற்றுநின்மெய்ம்முற்றுமே. - 40




    2171 - மெய்யாதரித்தமழுவாசெந்தாமரைவெள்ளையன்னஞ்
    செய்யாதரித்தகுடமூக்குளாயென்றுதேர்ந்துரைப்போ
    மெய்யாதரித்தவினைகாள்விரைந்தினியெம்மைவிட்டுப்
    பொய்யாதரித்தகவில்லார்கட்சென்றுபுகுந்துய்ம்மினே. - 41




    2172 - புக்கவரிக்குமயனுக்குமுய்தல்பொருந்தநஞ்சுண்
    டக்கவரிக்குவயற்குடமூக்கமர்சங்கரர்நீர்
    மிக்கவரிக்குவியன்றேரர்சீரன்றிவெவ்வியகா
    னக்கவரிக்குநிகர்வாரைப்பாடுதனன்றலவே. - 42




    2173 - அலவானினக்குமொழிகுவதொன்றுண்டதுகுடந்தை
    வவலானினக்குமிளிரவருமொருவள்ளல்வெற்பிற்
    குலவானினக்குநலனாந்தவனெற்குறித்துறுங்கா
    னலவானினக்குவெளிப்படலோவுநலமுணரே. - 43




    2174 - நலப்பரியாயமறையான்குடந்தைநகர்புரப்பான்
    கலப்பரியாயவளியாதொளிக்குங்கடவுள்பெயர்
    சொலப்பரியாயமனந்தமுண்டேத்தித்தொழுதுருகி
    யுலப்பரியாயமுதேயெனிலாடலொருதலையே. - 44




    2175 - ஒருதலையாகவமோவிப்பொழிலிலுதையத்தொன்னார்
    விருதலையாகவவேடர்செறிவர்வெய்யோன்மறையுங்
    கருதலையாகவலாமலின்றேகுகழியயன்மா
    றருதலையாகவமான்கும்பநாதன்றமிழ்வரைக்கே. - 45




    2176 - வரைதலையாற்றுவருவானிரவென்றுமாழ்குமங்கை
    கரைதலையாற்றுவிடாவின்பந்துய்த்தியெங்காவல்வெண்
    டிரைதலையாற்றுவரைநேர்சடைக்கணிசெய்துமிலான்
    புரைதலையாற்றுமகிழ்வான்கும்பேசன்பொருப்பகத்தே. - 46




    2177 - அகத்திருப்பாரைமுகத்தாயெனினவரைப்பவத்து
    நகத்திருப்பாரையரிக்கண்ணிபாகர்நடுங்குபுர
    முகத்திருப்பாரைமுன்னூர்ந்தார்கும்பேசரையுற்றுத்தொழாச்
    சகத்திருப்பாரையிரந்தும்பெறீர்மிடிதாக்கப்பட்டே. - 47




    2178 - பட்டாதிசைவரகங்கணமாபணிபாயும்விடை
    முட்டாதிசைவரவேயூதியாகுடமூக்கிடமா
    தொட்டாதிசைவரவாய்ப்போற்றமேவுநந்தோன்றற்கெனுந்
    தட்டாதிசையவரனாமேலின்பாமெனுந்தாழ்குழலே. - 48




    2179 - குழக்கன்றியங்கமுலைபசுவாய்க்கொடுத்தாயெழுமா
    முழக்கன்றியங்கநகைபுடைத்தாய்குடமூக்கமர்வாய்
    சழக்கன்றியங்கம்மலிகடலானம்புதைப்பத்தென்ற
    லுழக்கன்றியங்கமெலிதலுற்றாளென்னொருமகளே. - 49




    2180 - ஒருத்தலரிக்குக்கரும்பொன்செம்பொன்னிற்குடுவொளியே
    திருத்தலரிக்குக்கடுப்பாய்வரினும்வெந்தீயவிடம்
    வருத்தலரிக்குக்கழித்தாய்சுதைக்கும்பவாணமயக்
    கிருத்தலரிக்குக்கரனைச்செற்றாய்நினக்கில்லையொப்பே. - 50




    2181 - ஒத்தவராகவருவாரிலாய்மலரொண்டொடிவாய்
    முத்தவராகவலனழித்தாய்குடமூக்கமருஞ்
    சித்தவராகவனமுலைமாதுசினந்தகரும்
    புத்தவராகவந்தீர்வதெஞ்ஞான்றுபுகலுதியே. - 51




    2182 - புகவெளிதாயமனுமஞ்சதரிருள்போந்ததிங்கல்
    குகவெளிதாயபதமூனருந்திக்குறியிடம்வா
    னகவெளிதாயதுணர்ந்தேகலாமன்பநப்பொருணூன்
    மிகவெளிதாயமையென்றீகும்பேச்சுரர்வெற்பகத்தே. - 52




    2183 - வெற்புக்குமரியவாங்கும்பநாதர்விலங்கலிலென்
    பொற்புக்குமரியதோர்மகள்காதற்புணர்ப்பென்றிபோ
    ரிற்புக்குமரியவாள்விதிர்போய்நின்னிசைப்பருந்தோள்
    வற்புக்குமரியகற்புக்குமீதுவனப்பல்லவே. - 53




    2184 - வனத்தையவாயமலப்பாண்டம்வீழ்முனமால்விடைவா
    கனத்தையவாயவினிப்பாய்குடந்தைக்கண்ணாய்மறைவ
    சனத்தையவாயவுனையேயுணருந்தவாதவன்ப
    ரினத்தையவாயவியான்சேரச்சேர்ப்பித்தினிதருளே. - 54




    2185 - அருளாகரனைமலமாயைகன்மமகழ்ந்தவர்க்கே
    பொருளாகரனைவிடுத்தயலேயென்புலன்கள்சென்று
    மருளாகரனையடரேவக்கும்பவரதனையே
    தெருளாகரனைவரும்வாழ்கவிச்சேணிலத்தே. - 55




    2186 - நிலங்கமலங்கனல்கால்வெளியென்றுநிலாவுயிரென்
    றிலங்கமலங்கனல்குங்குடமூக்கினிறையவனை
    யலங்கமலங்கனல்காரருளென்னினவ்வாணவநோய்
    கலங்கமலங்கனல்கூர்தரவாளுங்கருணையென்னே. - 56




    2187 - கருங்கலசத்தையுவந்தார்குடந்தைக்கண்ணார்சிலம்பி
    வருங்கலசத்தையுடையாரின்வேலரடைந்ததொன்றா
    மருங்கலசத்தையலையிழந்தாடுயர்மாற்றுதற்கோ
    பெருங்கலசத்தைவதைப்பதற்கோவன்னைபேசுகவே. - 57




    2188 - பேசவந்தானலமார்க்கமுள்ளாரினோர்பேதையுள்ளா
    ரேசவந்தானலமோநிற்கெனவேகினான்விடம்பூ
    வாசவந்தானலமார்குடமூக்கர்வயக்கிடினை
    யோசவந்தானலவோவவன்றாழ்புருடோத்தமனே. - 58




    2189 - மனவருத்தத்தையடைந்தோம்புவியைமடந்தையரைக்
    கனவருத்தத்தைவிழைந்தேயொழிவதெக்காலமறை
    யினவருத்தத்தைமுனிவருக்கோதுகும்பேசரின்பா
    கனவருத்தத்தையொருபாகர்தாண்மலர்க்காணம்வைத்தே. - 59




    2190 - ஆணவமாயமலம்பலநாளுமலைக்கப்பட்டேன்
    பூணவமாயவிரங்கலெஞ்ஞான்றுபுவனமெல்லாங்
    காணவமாயவனையேச்செய்தாய்கும்பக்கண்ணுதலே
    யேணவமாயவிவனாவுறுமெனவெண்ணலற்றே. - 60




    2191 - எண்ணம்பலவன்குடமூக்கிறைவனிசைப்பரிய
    வண்ணம்பலவன்மனுப்பீடமங்களமாதுபங்கன்
    விண்ணம்பலவன்முடியாளன்வெற்பினின்மேனியலாற்
    கண்ணம்பலவன்மலர்க்குழலாயுயிர்காற்றுவதே. - 61




    2192 - காற்றருந்தும்பையராப்பூண்கும்பேசர்கடல்கிடக்கு
    மேற்றருந்தும்பைதிரப்புவியார்கொன்றையீயுமெனப்
    பாற்றருந்தும்பைமதற்கீந்தனர்பயினாணமெனு
    மாற்றருந்தும்பையறுத்தெழுமாலென்மனப்பசுவே. - 62




    2193 - மனவிடையாமைமவனையுங்கும்பேசர்வனம்பயிலுஞ்
    சினவிடையாமைதவிரெனவாண்டருள்செல்வர்வெற்பி
    னனவிடையாமைவரக்கண்டிலஞ்சுற்றிநள்ளிருள்கூர்
    கனவிடையாமையனைக்கண்டுங்கண்டிலங்கண்விழித்தே. - 63




    2194 - கண்ணப்பரைவரையாதாண்டவர்கும்பக்கண்ணுதலார்
    வண்ணப்பரைவரைமாதொருபாகர்வனச்சடைமேல்
    விண்ணப்பரைவரைவெல்லாமெனினும்விழைந்தருளே
    பண்ணப்பரைவரைநீழலில்வாழெங்கள்பண்ணவரே. - 64




    2195 - பண்ணஞ்சுமாறுபடச்செயுமாற்றம்பதுமமுகங்
    கண்ணஞ்சுமாறுவராகுங்குழலிதழ்கன்னியிய
    லெண்ணஞ்சுமாறுமொருநான்கிரண்டொன்றுமெய்தெழுத்தார்
    மண்ணஞ்சுமாறுபுனைந்தார்கும்பேசர்வரையிடமே. - 65




    2196 - வரையாரணியமகிழ்வார்கும்பேசர்மதலையொடு
    விரையாரணியமலர்கலர்காணரும்வித்தகரா
    திரையாரணியவர்க்கேயினிப்பார்தந்திருவருட்டேன்
    றரையாரணியமமருவுவரவர்தாங்கொள்வரே. - 66




    2197 - கொள்ளப்படாதுசிறுகாமமுமதுகொள்ளின்மத
    னள்ளப்படாதுவிடுமோகம்பேசரணிமலர்த்தார்
    கள்ளப்படாதுகதிரெனுமிந்துகைக்கும்மெனுங்கண்
    டள்ளப்படாதுமலர்க்குழல்சோரத்தரைவிழுமே. - 67




    2198 - தரங்கப்ப்ரவையெழுவிடநோக்கிச்சதுமுகன்மால்
    குரங்கப்பரவையருளாலஃதுண்குழகர்புவி
    யரங்கப்பரவைமுடித்தார்குடந்தையமலரன்பர்க்
    கிரங்கப்பரவைபுகுத்தியுயாத்தியெமைவைப்பரே. - 68




    2199 - வையம்படைத்தவரன்றாழ்கும்பேசன்மடங்கருமோ
    தையம்படைத்ததிருமால்வடவரைத்தாதுமலர்க்
    கையம்படைத்தகைவாகைவில்லான்பொற்கழறொழுவே
    நையம்படைத்தகராச்சினக்கூற்றுவனண்ணினுமே. - 69




    2200 - நண்ணாதவரைநணுகாய்குடந்தைநகர்த்தளிவா
    ழண்ணாதவரையகலாய்மெய்ப்பாதியணங்குடையாய்
    விண்ணாதவரைவிழிபறித்தாயுனைவிட்டுமற்றொன்
    றெண்ணாதவரைநிழற்பாற்பயிலினுமென்மனமே. - 70




    2201 - மனமடங்காதுபொறிவழிபோம்பத்திமார்க்கமியங்
    கினமடங்காதுநெறிகாட்டவுங்கண்டிலமென்செய்வோ
    மனமடங்காதுகுடைமுரசார்ப்பவரம்பையெலாங்
    கனமடங்காதுகிழிக்குங்குடந்தையிற்கண்ணுதலே. - 71




    2202 - கண்ணுதலத்தனைவண்குடமூக்கிற்கடவுளைநீர்
    மண்ணுதலத்தனையீவானையாழின்வளம்புகழ்வீர்
    பண்ணுதலத்தனையும்பழுதென்னுஞ்சொற்பாகனைப்ப
    லெண்ணுதலத்தனையேத்தார்பிறப்புமற்றெப்பிறப்பே. - 72




    2203 - பிறவியலைக்கவருந்துகென்றேனிற்பெறுவதற்கா
    மறவியலைக்கவலாதுணரேனினையன்றியெவ
    னுறவியலைக்கவரிசெய்குடந்தையொருவவண்டு
    நறவியலைக்கவருங்கொன்றையாயிந்தஞான்றருளே. - 73




    2204 - அரும்பாதகன்மத்தன்மாறாவெங்கோபத்தனாகமநூல்
    விரும்பாதகன்மத்தன்யான்கும்பமேயவவிற்கழல
    திரும்பாதகன்மத்தன்மானத்தருவிடஞ்சேர்களத்தே
    வரும்பாதகன்மத்தன்பித்தனென்பேர்க்கொப்பவந்தருளே. - 74




    2205 - வந்தித்தலையுந்துதித்தலையும்முளம்வைத்தலையு
    நிந்தித்தலையுந்துகில்லேனுறுப்பொடுநீண்மகத்து
    முந்தித்தலையுந்துமித்தார்தென்காற்றின்முறுக்கவிழ்பூக்
    கந்தித்தலையுந்துநீர்க்குடமூக்கரென்கற்பிப்பரே. - 75




    2206 - கற்பனையத்தனையாதிகும்பேசனைக்காய்மலமா
    மற்பனையத்தனையீயும்பிரானையடியவர்க்கே
    பற்பனையத்தனைமாமயிலானைப்பண்பார்முகத்தோர்
    பொற்பனையத்தனையீன்றானையன்றிப்புகழ்கிலமே. - 76




    2207 - புகழுமலத்தையெடுத்தொன்னலார்நிறம்போழ்தருமா
    லகழுமலத்தையுடையவனாகவடிதொழுநா
    தகழுமலத்தையனேத்துங்குடந்தைத்தலத்தவின்றே
    திகழுமலத்தையுடையானெனவெற்சிறப்பிப்பையே. - 77




    2208 - சிறந்தவருக்கன்மதியழனாட்டச்சிவன்றெளிய
    வறந்தவருக்கன்றமையச்சொற்றானறமாயதனை
    மறந்தவருக்கன்பிலார்சேர்குடந்தைவரதன்முடி
    யுறாந்தவருக்கன்பரிந்தெனையாண்டனனுண்மைசொற்றே. - 78




    2209 - உண்மையறுக்கமிகச்செயுமன்னையரோர்கிலராய்
    வண்மையறுக்கமுயல்வார்கும்பேசமகிழ்ந்தெனைவந்
    தண்மையறுக்கவுகரநள்ளுற்றாதநங்கனறுந்
    திண்மையறுக்கவலாதின்பெனாமைநின்சீரருட்கே. - 79




    2210 - அருகாதவன்பகத்தைத்தெறுமென்றறிந்தாருக்கென்றுந்
    திருகாதவன்பகத்தைத்தடிந்தானென்சிறுசொற்குந்தேந்
    தருகாதவன்பகத்தைக்கும்வெஞ்சூலன்றண்கும்பத்தைச்சார்ந்
    துருகாதவன்பகத்தைப்பெற்றுளாரிடருற்றவரே. - 80




    2211 - உற்றவரையரைவண்கும்பநாதரையொண்புலித்தோல்
    சுற்றவரையரையெண்ணாரினங்கைத்துணரொடலை
    வற்றவரையரைசூழிப்புனத்திலலைத்தனன்றோ
    கற்றவரையரையிந்துவொப்பாநுதற்காரிகையே. - 81




    2212 - காரியங்காதுசுடலஞ்சியத்தகுகானின்று
    வேரியங்காதுவலைசெயமேற்றவழ்விண்ணைமக
    தூரியங்காதுகுடந்தைப்பிரானைத்தொழாரினிள
    நாரியங்காதுமென்றோரேதிலன்பினடந்தனளே. - 82




    2213 - நடலையகற்றிநமைப்புகழ்கல்விநயப்பலென்றா
    சடலையகற்றியெனையாண்டுகும்பத்தருளினமர்
    விடலையகற்றியறான்புனிற்றாவெனமேவவுந்த
    முடலையகற்றியுழல்வார்பரமத்தூமர்களே. (அங) - 83




    2214 - ஊமரும்பாவலராவார்வறியருமுத்தரநற்
    றேமரும்பாவலராவாவினிச்செப்பவேண்டுவதேன்
    னாமரும்பாவலராவாசவன்றொழுநற்குடந்தைக்
    காமரும்பாவலராவாரடிநினைக்கைதொழினே. (அச) - 84




    2215 - தொழுதனையேற்றாமருங்கும்பநாதனைச்சொன்மயல்பூண்
    டழுதனையேற்றமருகத்தவனருள்வான்கொலெங்குங்
    கெழுதனையேற்றமருவினரேகெழுமக்கொடுப்பான்
    பழுதனையேற்றாமருவந்தவேள்செயல்பண்ணலென்னே. (அரு) - 85




    2216 - என்னாயகனைமகராலயநஞ்சிறுத்தகண்ட
    பொன்னாயகனையமுன்னங்குழைத்தபுராணமலர்
    மின்னாயகனைவிடைசெய்தகும்பவிமலவென்று
    பன்னாயகனையறுத்தின்பவீடுபடரநெஞ்சே. - 86




    2217 - படப்பாயலையம்பரம்விரித்தோன்றெழும்பண்ணவர்தோம்
    விடப்பாயலையம்பரவேற்றுக்கும்பவிமலர்வெற்பி
    னடப்பாயலையம்பரம்புவிபோர்த்தனநண்ணருங்கான்
    கடப்பாயலையம்பரக்கண்ணோடும்வைகிக்காலையிலே. - 87




    2218 - காலையம்போருகமேகமுகங்குழல்கண்கடுவா
    ழாலையம்போருகமேவாரைநோக்கபயன்பைதிரஞ்
    சோலையம்போருகமேயதென்பாய்துயர்நீர்நொடியும்
    வேலையம்போருகமேகும்பநாதனைமேவிலர்க்கே. - 88




    2219 - மேவாதவரைவிழையார்கும்பேசவிமலர்வலி
    தாவாதவரைவளைத்தாருருக்கண்டுதண்மதிகண்
    டோவாதவரைவிடுத்தாரெவரெனுமோர்மதன
    னாவாதாவரைவளைப்பதென்னோவெனுமாயிழையே. - 89




    2220 - ஆயத்தவரைமறந்தாளெனையுமறமறந்தாள்
    சேயத்தவரையறையில்வெப்புந்தெளியாள்புரங்கண்
    மாயத்தவரைவளைத்தகும்பேசர்வரையிலய
    னேயத்தவரைமதித்தேகினாளென்னிரைவளையே. - 90




    2221 - வளையவளையவரம்பார்செய்வேழம்வளைத்தனன்வே
    ளிளையவளையவமேகொல்லுவானெவன்செய்வளின்பம்
    விளையவளையவருளுங்கும்பேசவிரும்புமன்ப
    ருளையவளையவயவிடையாயெங்களுத்தமனே. - 91




    2222 - மன்னவராகமதாணிவலாரிமலரயன்மான்
    முன்னவராகமதித்துழலாங்குடமூக்கின்மணி
    யன்னவராகமநூல்கொண்டறிவதறிந்தடங்கி
    நன்னவராகமலரடிக்காட்செய்நசையினமே. - 92




    2223 - இன்னம்பரம்பரவாயவர்நேயவிருங்குடந்தை
    நன்னம்பரம்பரவாயவனியைநடாத்தினவ
    ருன்னம்பரம்பரவாயமன்சேர்முனென்றோதுறின்வை
    மன்னம்பரம்பரவாயகண்ணோடும்வந்தாளுவரே. - 93




    2224 - ஆளாயமைதலையெண்ணாவிருவரடிமுடிதேர்
    கோளாயமைதலைவென்றுழல்வேங்கும்பகோணமமர்
    காளாயமைதலைசாயப்பொலிகவின்றோட்கருங்கண்
    வாளாயமைதலையாகாதிடங்கொண்டவானவனே. - 94




    2225 - வானவரம்பரையாண்டாருலாக்கொண்டுமாண்டபத்தி
    யானவரம்பரைதாங்குடமூக்கரடிமையுறின்
    மோனவரம்பரை யோடும்வந்தீபவர்மூன்றுதலைத்
    தான்வரம்பரையேத்தாரிருத்தலிற்சாதனன்றே. - 95




    2226 - சாத்திரமோதியளவுணர்ந்தேமிருதன்மைபடப்
    பாத்திரமோதியமென்பதனாலெவன்பன்னிரண்டு
    சூத்திரமோதியமைந்துகும்பேசற்றொழுதுருகி
    யேத்திரமோதியமண்ணீரிடரிரியீருண்மையே. - 96




    2227 - உண்மையவாவியநாயேனுறும்வகையுற்றமலத்
    திண்மையவாவியவென்றாளுநாளென்றுதேர்வரிய
    நுண்மையவாவியசெவ்வியன்மேனிநுவலொருபாற்
    பெண்மையவாவியதென்குடமூக்கிற்பெருந்தகையே. - 97




    2228 - தகைத்தலையாற்றுதிநேர்மலநாளுந்தகச்செயுந்தோ
    முகைத்தலையாற்றுதியார்தொழவாழ்குடச்மூக்கிறைவா
    நகைத்தலையாற்றுதிதாராக்கினாயென்னலிபிறவி
    யகைத்தலையாற்றுதிநின்வசத்தாக்கென்னறிவினையே. - 98




    2229 - வினையகலாமதியாப்பரமார்க்கவிழைவகற்று
    மனையகலாமதியாதாங்குடந்தையனையிடத்தங்
    கனையகலாமதியார்முடியாள*மூக்கண்ணவென்ற்றேத்
    தினையகலாமதியார்க்குஞ்சமார்கஞ்செறிப்பதற்கே. - 99




    2230 - பத்திக்கணங்கணமேனும்விடாதுபடர்குடமூக்
    குத்திக்கணங்கணந்தோமறநோக்கியுங்கும்பிட்டுய்வாங்
    கத்திக்கணங்கணவென்னவொர்பானல்குகாரணனெம்
    புத்திக்கணங்கணவப்பதித்தான்றன்பொற்பூவடியே. - 100


திருக்குடந்தைத்திரிபந்தாதி முற்றிற்று.
----
சிறப்புப்பாயிரங்கள்.


இந்நூலாசிரியர் மாணாக்கராகிய
சி. தியாகராசசெட்டியாரவர்களியற்றியது.
கட்டளைக்கலித்துறை.



2231 - தண்ணிய வெண்மதி சூடுகும் பேசன் றமிழ்க்குடந்தை
பண்ணிய புண்ணியம் போலமர் வானடிப் பத்திமையே
நண்ணிய தீஞ்சுவை யந்தாதி யொன்று நவின்றணிந்தா
னண்ணிய வான்புகழ் மீனாட்சி சுந்தர வாரியனே. - 101


இந்நூலாசிரியர் மாணாக்கரும் திருவனந்தபுரம், மகாராஜா காலேஜில்
தமிழ்ப்பண்டிதராக இருந்தவருமாகிய கொட்டையூர்,
சி. சாமிநாததேசிகரவர்களியற்றிவை.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.



2232 - சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின்
      மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்
பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை
      யெனப்போர்த்த பண்பின் மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்
      குடந்தைநக ரிறைவர்க் கீந்தான்
பேர்கொண்ட கவிஞரெலா மதித்தேத்தந்
      தாதிப்ர பந்த மாதோ. - 102




2233 - அப்பலந்தங் கருத்துரையோ டம்புவியோர்
      மகிழ்ந்திடவச் சமைத்திட் டானால்
ஒப்புயர்வி லாப்புலமை யப்புலவ
      ரேறுணர்த்த வுணர்ந்தவ் வாறே.
திப்பியநன் னடைதெளிந்தோன் றிரிசிரா
      மலையுடையோன் செப்ப மிக்கோன்
இப்புவியிற் புகழ்ப்பெரிய பெரியண்ணப்
      புலவனெனு மியைபு ளோனே. - 103

------------
*இவை பழையபதிப்பைச் சார்ந்தவை;
பதிப்பித்தகாலம் சென்ற விஷுவருஷம் ஆடிமாதம்.
-------------------

இந்நூலாசிரியர் மாணாக்கரும், கும்பகோணதிலிருந்தவருமாகிய
திரிசிரபுரம் தி.க. பெரியண்ணபிள்ளையியற்றியர்து.

கட்டளைக்கலித்துறை.



2234 - பூவிற் சிறந்த வளக்குட மூக்கமர் புங்கவனற்
றேவிற் சிறந்த வமுதகும் பேசன் றிருவடிக்கீழ்ப்
பாவிற் சிறந்த வந்தாதிச் சொன்மாலை பரிந்தணிந்தான்
நாவிற் சிறந்தவன் மீனாட்சி சுந்தர நங்குருவே. - 104


இந்நூலாசிரியர் மாணாக்கராகிய காரைக்கால்
அ. சவேரிநாதபிள்ளையியற்றியவை.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.



2235 - கோமேவு பொன்னகரை யின்னகராக்
      கிடுவளஞ்சால் குடந்தை யீசற்
கேமேவு மந்தாதி நந்தாத
      வணியெனநன் கிசைத்திட் டானால்
காமேவு கலைச்சலதி நிலையுணர்ந்தான்
      புகழ்க்கலைமேற் கலையாக் கொண்டான்
றேமேவு சிரகிரிவாழ் மீனாட்சி
      சுந்தரதே சிகனா மன்னோ. - 104




2236 - அத்தகைய வாரியன்பால் வித்தைபயின்
      றிடுதீர னளவில் சீரன்
உத்தமவண் புகழுடையான் றிரிசிரா
      மலையுடையா னுவக்கு ஞான
தத்துவஞ்சால் பெரியண்ணச் சற்குணவா
      னப்பவந்தத் தமிழ்க்கு மோலி
பத்தியுறச் சூட்டலெனக் கருத்தொடுநின்
      றொளில்ரவச்சிற் பதிப்பித் தானால். - 105

சிறப்புப்பாயிரங்கள் முற்றுப்பெற்றன.
-----------------

Comments