Pirapantattiraṭṭu XV


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XV
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 15 (1709 - 1810)
திருத்தில்லையமகவந்தாதி.




கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.

கற்பகவிநாயகர் துதி.


1709. - கற்பகப்பாவடிவாரணம்பாற்கடந்தோன்செந்தமிழ்க்
கற்பகப்பாவடிவாரணங்கண்டவர்கோனருள்வி
கற்பகப்பாவடிவாரணங்கார்மலர்க்காமொய்தில்லைக்
கற்பகப்பாவடிவாரணம்யான்பெறக்காட்டிடுமே.

நூல்.



1710. - திருவம்பலவமருந்தடையுந்தபச்சேர்தரும்பி
திருவம்பலவமருந்தநெஞ்சேசிவஞானத்தின்மு
திருவம்பலவமருந்தடஞ்சோலைதிகழுந்தில்லைத்
திருவம்பலவமருந்தனையாற்றுதிசெய்தினமே. - 1


1711. - தினந்தினமேவரியாரம்பலஞ்சிந்தியோஞ்செழுமுத்
தினந்தினமேவரியாரம்பணைத்தில்லைசேர்ந்திலம்பத்
தினந்தினமேவரியாரம்படாமுலைசேர்விருப்பத்
தினந்தினமேவரியாரம்பனீயென்றுதேர்வரின்றே. - 2


1712. - இன்னம்பரம்பரனேகதங்காவதத்தீசர்தில்லை
இன்னம்பரம்பரனேர்விழிபாகரென்பார்க்கிறையே
இன்னம்பரம்பரனேபிறைதோணிகொலென்னமுடி
இன்னம்பரம்பரனேதுயராதருளின்னருளே. - 3


1713. - அருகாதவத்தலைவாதில்லையம்பலத்தாடியடி
அருகாதவத்தலைவாரொடுறாதருள்வாயெனக்கும்
அருகாதவத்தலைவாசிகையாயென்றறைவல்புத்தா
அருகாதவத்தலைவாவென்பிரேலுமையாட்டுவனே. - 4


1714. - வனசங்குவளையலர்பணைசூழ்தில்லைவாணவென்செய்
வனசங்குவளையலர்படராவகைமாற்றுங்கழல்
வனசங்குவளையலர்பயிலேநலம்வாடுறப்பாய்
வனசங்குவளையலர்படுவீரையும்வாய்விடுமே. - 5


1715. - வாய்ப்பணியாகமஞ்சாரருணெக்குமனநனிநை
வாய்ப்பணியாகமஞ்சாற்றியவாசெய்வர்மாண்பினரை
வாய்ப்பணியாகமஞ்சார்பொழில்சூழ்தில்லைவாணநின்றாள்
வாய்ப்பணியாகமஞ்சாலாச்சிலர்கருவன்றலையே. - 6


1716. - தலைமாலையாவம்பதிதில்லையாய்வளியைத்தழன்மு
தலைமாலையாவம்பயிலேச்செய்தாய்சந்தக்கால்கொடுமு
தலைமாலையாவம்பலர்மொழியாதழலம்புவிம்மு
தலைமாலையாவம்பலையென்றுநீங்குமென்றார்க்குழலே. - 7


1717. - தாராதரிக்குமழும்விழுஞ்சோருந்தனிமதிதண்
தாராதரிக்குமழுவமுஞ்சீறுந்தமியுணர்போர்த்
தாராதரிக்குமழுங்கச்செயுமெங்கடையலைக்கே
தாராதரிக்குமழுவாவருடில்லைத்தற்பரனே. - 8


1718. - பரமாதவர்பணிநாடர்பொன்னாடர்பதுமர்பொன்னம்
பரமாதவர்பணிநாதபொல்லார்கரும்பாரிடையம்
பரமாதவர்பணிநாவடையாவகைபாலிப்பதோர்
பரமாதவர்பணிநாகமென்பாதில்லைப்பண்ணவனே. - 9


1719. - வனவலங்கற்புயமாயோனெஞ்ஞான்றும்வணங்குதில்லை
வனவலங்கற்புயர்மாதுறையாதிடம்வைத்தவயவ்
வனவலங்கற்புயனேர்குழற்பேதைக்குமன்மதன்செய்
வனவலங்கற்புயங்கத்துயிர்ப்பாய்த்தென்வளிநந்துமே. - 10


1720. - நந்தாதரத்தகரவித்தையோசெயுநாடகத்தால்
நந்தாதரத்தகரவித்தையற்கஞர்நன்கருள்வாய்
நந்தாதரத்தகரவித்தையார்கணயக்கவென்றா
நந்தாதரத்தகரவித்தைமன்றுணடிப்பவனே. - 11


1721. - பவளங்கருமையனேரெனுமேனிப்பயல்வரையுற்
பவளங்கருமையனேயெனநல்குபண்பாமகளென்
பவளங்கருமையனேயகறில்லைப்பதிநிகரின்
பவளங்கருமையனேகங்கொன்றாலும்பயத்தலின்றே. - 12


1722. - இன்றாதரங்கம்புரைபவமுற்றதினுமொழிந்தது
இன்றாதரங்கம்புரைபடையம்பவிரும்பொழிற்பூவ்
இன்றாதரங்கம்புரைவானதிச்செயுமேர்கொடில்லை
இன்றாதரங்கம்புரைதீர்மன்றாவருளெற்கடிக்கே. - 13


1723. - கடவாரணங்கடையார்ப்பமண்ணாள்வரொண்கட்டிரும
கடவாரணங்கடையார்பின்கலப்பர்கதிபரியாக்
கடவாரணங்கடையார்புரந்தீத்தகணைமெய்முலைக்
கடவாரணங்கடையார்ச்சடையார்தில்லைகண்டவரே. - 14


1724. - கண்டங்கரியன்றுவர்மேனியன்றில்லைக்கட்பொலிவோன்
கண்டங்கரியன்றுசாராதபாதன்கரிசறுத்தென்
கண்டங்கரியன்றுதிவெற்பர்பொய்த்தனர்கட்டுரைய
கண்டங்கரியன்றுகொல்லோவித்தெய்வமுங்கார்க்குழலே. - 15


1725. - காக்கைக்குளவிடைமாறின்றிவருங்கதியெனவங்
காக்கைக்குளவிடைமாறும்பவமன்றுகைதொழின்மண்
காக்கைக்குளவிடைமாவாய்கழுமலங்காசிகச்சி
காக்கைக்குளவிடைமாமருதூருங்கலந்தவனே. - 16


1726. - கலங்காமரிக்குமயற்குமெட்டான்கொன்றைகண்ணுறினி
கலங்காமரிக்குமயற்குணநிற்குங்கரத்துவளைக்
கலங்காமரிக்குமயற்குலப்பேச்சுங்கழியுமயங்
கலங்காமரிக்குமயற்குதவிற்றில்லைக்காரிகையே. - 17


1727. - காரிகையாதவவியாக்கியதில்லைக்கண்ணிருவி
காரிகையாதவன்பல்லுகநீட்டியைக்காமுற்றெங்கள்
காரிகையாதவநோமேயுயிர்த்தென்னைக்காய்வதுசங்
காரிகையாதவமோவென்றுவேண்முன்கரைதருமே. - 18


1728. - கரவரைக்கொன்றடியார்க்கருடில்லைக்கடவுட்குநீள்
கரவரைக்கொன்றடியாரதள்போர்வையொண்காம்பினைநி
கரவரைக்கொன்றடியார்நகத்தோலுடைகண்டுமா
கரவரைக்கொன்றடியாவுலேர்மகள்காமுறுமே. - 19


1729. - காமாவடுவனவம்பகத்தாள்பங்கன்கஞ்சம்வில
காமாவடுவனவம்பகலற்கருங்கண்ணிதருங்
காமாவடுவனவம்பகமன்றணுகாரின்மயங்
காமாவடுவனவம்பகலாயிக்கடையைவிட்டே. - 20


1730. - கடையாவஞ்சாவரும்பப்புரிவாரிகரியவன்வென்
கடையாவஞ்சாவருமேவானைக்காலிற்கடுங்கண்டகங்
கடையாவஞ்சாவருந்தாவுழல்வேன்மன்றிற்கண்டுதொழேன்
கடையாவஞ்சாவருகென்றுவெங்கூற்றங்கடுகுமுன்னே. - 21


1731. - கடுகத்தனையன்புரிகடும்போர்கணிறைத்திடவ
கடுகத்தனையன்புலையேன்விண்ணோர்கழியாதயின்றான்
கடுகத்தனையன்புலியூரன்குஞ்சிதக்கான்மலர்க்குக்
கடுகத்தனையன்புமில்லேனெவ்வாறுகதியுறலே. - 22


1732. - கதங்காமநந்தியங்காமம்மர்தீர்ந்தருட்காப்பிடையே
கதங்காமநந்தியங்காதுமுண்டோவினைகாலைச்சுற்றங்
கதங்காமநந்தியங்காவறடாதுமெய்காட்டொழியங்
கதங்காமநந்தியங்காவிமன்றாகறைக்கண்டத்தனே. - 23


1733. - தனக்கோங்கரும்புமடவார்முயக்கிற்றலைப்பட்டுநந்
தனக்கோங்கரும்புவிலானிலென்பீரத்தருக்கதெனுந்
தனக்கொங்கரும்புகர்தீர்வதென்றோசிற்சபைநடிப்பான்
தனக்கோங்கரும்புகழ்வாசிகையாற்குச்சரண்புகுமே. - 24


1734. - சரம்பலவாணன்றென்றிக்கிறையென்னவெய்தார்வெஞ்சித்த
சரம்பலவாணன்றென்கார்தாங்குகூடற்றலைவனுயிர்ச்
சரம்பலவாணன்றென்கான்முழவாபடைகங்களம
சரம்பலவாணன்றென்றேத்துபொற்பாதன்றரான்கொன்றையே. - 25


1735. - தரையாவிரதந்தடவரையாதவர்தாபதமா
தரையாவிரதந்தபுத்ததென்பாவணிதாரெனும்பந்
தரையாவிரதந்தவிர்முத்தர்வம்மின்சபைக்கென்றுகந்
தரையாவிரதந்தரநடிப்பாய்மகடற்கிரங்கே. - 26


1736. - இரங்காதமரவடியார்பணிசெய்திலமென்றொராய்
இரங்காதமரவடியார்கொலென்னவெங்குந்திரிந்தெய்த்து
இரங்காதமரவடியார்மலர்தருமீர்ந்தில்லைசேர்ந்து
இரங்காதமரவடியார்வெஞ்சூலவென்னேமென்னிரே. - 27


1737. - ஏதாயினுமினியாயறநல்கென்றிரப்பநல்க
ஏதாயினுமினியாயமென்பாரிலையென்பரிறை
ஏதாயினுமினியாயம்புயலிவரிற்றில்லையைய்
ஏதாயினுமினியாயகற்றப்புல்லிணக்கமதே. - 28


1738. - தேவாரமாதிருவாசகமாயைசெறேனடைந்தேன்
தேவாரமாதிருவாசகமாசெயுஞ்செய்யுள்குயத்
தேவாரமாதிருவாசகமாறெழுந்தில்லையமு
தேவாரமாதிருவாசகமாற்றிச்சிற்றம்பலத்தே. - 29


1739. - அம்பலவவம்பலவாகதிர்க்கழித்தாயெனுநேய்
அம்பலவாவம்பலவாகுளிரெனுமாய்மணமீது
அம்பலவாவம்பலவாவெனவிண்ணறைபொழில்சூழ்
அம்பலவாவம்பலவாவெனுமெம்மருமணியே. - 30


1740. - மணக்கோலஞ்செய்யதிருமேனியார்செய்யவந்திலர்வேண்
மணக்கோலஞ்செய்யவருமேபவமெனுமைக்குழம்பு
மணக்கோலஞ்செய்யமருமனஞ்சூழ்தில்லைவாழ்த்திலராய்
மணக்கோலஞ்செய்யநல்கூர்ந்திருப்பாரின்மதித்தெனையே. - 31


1741. - மதியாதவனங்கிவாள்விழியாய்நல்வழிச்செலச்சம்
மதியாதவனங்கிநீயங்கம்யானெனும்வாய்மையையுண்
மதியாதவனங்கிரிக்கீழுறமன்றவாணவருண்
மதியாதவனங்கிளர்மறையோன்றெழுமாநடனே. - 32


1742. - மானநந்தாதவிரகர்கள்வாழ்தில்லைவாணவிழி
மானநந்தாதவிரகவிதழ்க்குழல்வாமவிலா
மானநந்தாதவிரகருண்மேயமன்னாகுழைச்சு
மானநந்தாதவிரகம்பிரமவழியெனக்கே. - 33


1743. - என்றாமதியாதவன்சுடக்காரணமெற்குநலம்
என்றாமதியாதவன்மதன்பூங்கணையீருமினி
என்றாமதியாதவன்மணிகண்டனிங்கெய்தத்தடை
என்றாமதியாதவன்றாழ்மன்றன்னளிரங்குறுமே. - 34


1744. - இரங்கத்தனித்தனியாயமென்னோவென்னிடத்தினும்வய்
இரங்கத்தனித்தனியாயதன்முற்குறிலேய்பவனுய்
இரங்கத்தனித்தனியாயமன்றெண்ணலரிற்பதியாய்
இரங்கத்தனித்தனியாயமிலான்பின்மினேகினளே. - 35


1745. - நள்ளாறுதிக்குமகிழ்பதியார்தில்லைநாடகமால்
நள்ளாறுதிக்குமயிர்மாலைத்துத்தநகைமுத்தநீர்
நள்ளாறுதிக்குமறல்குழல்வேல்கணகுநலத்தி
நள்ளாறுதிக்குமரிக்கோடுகொங்கைநண்பாநங்கைக்கே. - 36


1746. - நங்கைக்கரியவரமார்பன்றாழ்தில்லைநன்னகர்ம
நங்கைக்கரியவரதனம்போலுநடநவில்வோன்
நங்கைக்கரியவரநேர்கட்கொங்கைநன்றென்றுவந்தூர்
நங்கைக்கரியவரஞ்செய்யுமாலையுநன்குதந்தே. - 37


1747. - தந்தவரைவரையாருமையைச்செய்தகுமறைவி
தந்தவரைவரையானனர்வாரித்தடஞ்சிலைமி
தந்தவரைவரையாதாண்டவர்தில்லைத்தாண்டவர்தோந்
தந்தவரைவரையாம்வெலநல்குவர்தாம்வரமே. - 38


1748. - வரநகரம்பதம்வன்னிமப்பூதம்வயிறுவநல்
வரநகரம்பதம்பூண்டோள்சிதுடிவதனமிந்தீ
வரநகரம்பதம்பாலிக்குந்தில்லைவண்கைமுடிய
வரநகரம்பதம்போல்வானில்லான்மன்றவாணனுக்கே. - 39


1749. - வாளாவிருந்தவர்தூற்றுவராமுண்மடலுமுடை
வாளாவிருந்தவர்வாங்குவனாமதன்வைதுமுனி
வாளாவிருந்தவர்கேட்பவுமன்னைநின்மாலைமணி
வாளாவிருந்தவர்காளெனுந்தில்லைமன்னாதரினே. - 40


1750. - தருக்கம்பலவிடவாய்கொடுபேசுவந்தாழ்குழன்மா
தருக்கம்பலவிடவாண்மைவிழியென்றுசாற்றுவமுத்
தருக்கம்பலவிடவார்முலையாய்மறைதன்முடியில்
தருக்கம்பலவிடவாவெங்ஙனேகதிசாருதுமே. - 41


1751. - சாரம்பலமுறைநூலுமிதேயெனச்சாற்றுமென்வி
சாரம்பலமுறைவேடரிற்கூடித்தளர்மனமா
சாரம்பலமுறையார்சிவகங்கைத்தடம்படிதி
சாரம்பலமுறைசாங்காறுங்கூத்துத்தரிசித்திடே. - 42


1752. - சிற்றம்பலங்கண்டுபோற்றேன்மின்னார்கள்செவ்வாய்தருமெச்
சிற்றம்பலங்கண்டுபோலக்கொள்வேன்சிந்தையுந்திகைத்தெஞ்
சிற்றம்பலங்கண்டுமுன்னாண்டுகோடிசிலைச்சிலைக்கோர்
சிற்றம்பலங்கண்டுயர்படையாற்செய்தசேவகனே. - 43


1753. - கனக்கந்தரத்தனமலைபங்காளன்களிமயில்வா
கனக்கந்தரத்தனமலைக்குநீர்த்தில்லைக்கண்விடைப்பா
கனக்கந்தரத்தனமலைநதியற்கைத்தார்புனன்மு
கனக்கந்தரத்தனமலைபுன்காடிக்கலைபவரே. - 44


1754. - கலையாவனவளவாத்தில்லையாய்கமழ்குங்குலியக்
கலையாவனவளவாழ்மனைச்செல்கைதொடுவெனப்பு
கலையாவனவளவாவுதியாகைதவாவிடவுள்
கலையாவனவளவானினைச்சார்ந்தெனைக்காத்தருளே. - 45


1755. - காதரங்காதரமாயமின்னார்கண்புரியமயங்
காதரங்காதரமாதர்கள்சூழ்தில்லைக்கண்டிசைமு
காதரங்காதரமாநிலமாக்குதிகாவென்வளைக்
காதரங்காதரமாய்நமையாள்வர்கருதுநெஞ்சே. - 46


1756. - கருமங்கருமங்கணம்பரமாககழியக்கழுவுங்
கருமங்கருமங்கணம்பரமாகடிந்தாண்முகினி
கருமங்கருமங்கணம்பரமாகலைமான்றிசைமு
கருமங்கருமங்கணம்பரமாகம்பலக்கனியே. - 47


1757. - கனியக்கனியமனந்துதியாங்கைதொழாமெங்ஙன்றீக்
கனியக்கனியமனந்தும்பதன்றில்லைக்கண்ணமர்நக்
கனியக்கனியமனந்துயிர்யாவையுங்காமரிடக்
கனியக்கனியமனந்துடியான்கடுங்கோதெமக்கே. - 48


1758. - கோவாகுளத்துமுழுமுதலேபொறிக்கூட்டநலங்
கோவாகுளத்துமுழுவயற்சோற்றுங்குழையுமைய
கோவாகுளத்துமுழுவலன்பீந்துகைக்கொண்டருள்வேட்
கோவாகுளத்துமுழுகென்றதில்லைக்குணமலையே. - 49


1759. - மலையானிலங்கம்பலவுடைப்பாம்பின்வருமெவரோ
மலையானிலங்கம்பலராயென்றேவினர்வாடும்வெண்க
மலையானிலங்கம்பலமில்படையான்வணங்கிடத்த
மலையானிலங்கம்பலநடங்கண்டமடமயிலே. - 50


1760. - மடங்கலையாதரியாநிறப்பூண்பன்றிவன்கொம்புக
மடங்கலையாதரியாப்புலித்தோலிடமன்றுகண்டு
மடங்கலையாதரியானானைமேவுவள்வன்னியின்மும்
மடங்கலையாதரியாதேகுமோமதன்வாளிகளே. - 51


1761. - வாளம்பரவையகிலம்பணிமன்றவள்ளுகிர்தோல்
வாளம்பரவையகிலம்படாதுவன்றொண்டர்முனி
வாளம்பரவையகிலம்படாமுலைவாழ்வித்தவா
வாளம்பரவையகிலம்பராவுமெய்வாழ்வருளே. - 52


1762. - அருத்தமருத்தமென்றேயுழல்வேந்துப்பொரைம்பொறிக்கும்
அருத்தமருத்தமென்றேரிற்புரியுமென்னாமுதனூல்
அருத்தமருத்தமென்றேங்குழல்பாகரடியர்க்கெளிய
அருத்தமருத்தமென்றேய்மன்றிற்கூத்தென்றருளுவரே. - 53


1763. - வருந்தவருந்தநமன்செறுமென்னமலத்துவெய்ய
வருந்தவருந்தநமன்றதுவாமுன்மண்ணீர்கொண்மின்றே
வருந்தவருந்தநமன்றோழமன்றும்வட்காருயிர்க
வருந்தவருந்தநமன்னாப்பொன்னாவெனெம்மான்றுணையே. - 54


1764. - மானம்பரம்பரமென்றொழிப்பார்கண்மருங்குன்முலை
மானம்பரம்பரவோங்கலொப்பார்பொதுமாதரில்வா
மானம்பரம்பரவாயொருவாதுறைமாட்சியினம்
மானம்பரம்பரன்வான்றில்லையோவவர்தம்மதிக்கே. - 55


1765. - தமனியமன்றமலரோன்முனோர்தொழத்தானிற்குமுத்
தமனியமன்றமர்வ்ந்தெனைப்பற்றத்தடுத்திவன
தமனியமன்றமச்செய்கையிலாளில்ற்றாழையுமங்க
தமனியமன்றமற்றென்னாதுதான்செயும்பேரருளே. - 56


1766. - பேரம்பலம்பலகாற்சூழ்தரேம்பித்தடிமையென்றும்
பேரம்பலம்பலங்கோதியிவணின்றுபேரெனினும்
பேரம்பலம்பலமாவிச்சித்தேமுதற்பின்னடைநாப்
பேரம்பலம்பலவீன்பொழிலூர்தில்லைபெற்றபொன்னே. - 57


1767. - பொன்னம்பலவன்மலக்கருங்குன்றைப்பொடித்திநிறப்
பொன்னம்பலவன்மலர்கதிராழிப்புவியிரத
பொன்னம்பலவன்மலர்க்குழல்பாகவென்னாம்புலியூர்ப்
பொன்னம்பலவன்மலங்கொழித்தீயுங்கொல்பொற்பதமே. - 58


1768. - பதஞ்சலியாதவனேர்விளங்கும்புலிப்பாதர்தொழப்
பதஞ்சலியாதவனேநடித்தற்குன்பதமென்றுவாய்ப்
பதஞ்சலியாதவனேராக்கைதீயதுபாழ்மனமென்
பதஞ்சலியாதவனேசிப்பவென்றுகண்பார்த்தருளே. - 59


1769. - பாரத்தனமலைபாகனசொற்கமையாசைபற்றென்
பாரத்தனமலைபாகனல்லேன்முதற்பாற்சுவடை
பாரத்தனமலைபாகனடாவுடபரியிரதப்
பாரத்தனமலைபாகனமன்றன்பரிவதென்றே. - 60


1770. - பரவரியக்கவணங்கேமுகில்கற்பறையரியம்
பரவரியக்கவணங்கேசெயலெழும்பற்றுடைப்பொற்
பரவரியக்கவணங்கேள்வரெய்தப்பகழிகலம்
பரவரியக்கவணங்கேடின்மன்றற்பரவுதுமே. - 61


1771. - பரமானந்தத்தையனாக்கொண்டெல்லாம்படைப்பானுமற்றம்
பரமானந்தத்தையநடுக்கட்சொற்றிருப்பண்பனுந்தா
பரமானந்தத்தையயர்வானென்பானும்பற்றாவெனக்கும்
பரமானந்தத்தையருள்வானுந்தில்லைப்பதிப்பரனே. - 62


1772. - பரவம்பரவத்தவரோடுறவும்பண்ணேங்கடுவெப்
பரவம்பரவத்தவறடைவார்ப்பற்றுவாமன்றநம்
பரவம்பரவத்தவத்தலைவாவம்பலவபொன்னம்
பரவம்பரவத்தவர்சிலையாயென்றும்பாடிலமே. - 63


1773. - பாடகந்தண்டையலையுணவென்னுட்பதிபதம்பூண்
பாடகந்தண்டையலைவாமம்வைத்தவன்பல்புலவோர்
பாடகந்தண்டையலைமோதிண்டைத்தடம்பாவுதில்லைப்
பாடகந்தண்டையலைநமன்றோன்றுமுன்பற்றினனே. - 64


1774. - பற்றினகரனுக்குத்தகரப்புரிபண்பற்குமான்
பற்றினகரனுக்குத்தகரய்யனப்பற்குத்தில்லைப்
பற்றினகரனுக்குத்தகரக்குழல்பாகற்கெனம்
பற்றினகரனுக்குத்தகரற்கிதப்பட்டனனே. - 65


1775. - பட்டவம்போருகந்தானங்கொடில்லைப்பரமநுதற்
பட்டவம்போருகந்தானடக்காக்கயம்பைத்தவிழும்
பட்டவம்போருகந்தானடல்வேளென்படுமயிலூர்
பட்டவம்போருகந்தானறைந்தாலும்படுதலின்றே. - 66


1776. - தலத்ததிகம்பரஞானமயசிற்சபையென்றுநு
தலத்ததிகம்பரவூண்படைபள்ளியன்றாழுங்கண்ணு
தலத்ததிகம்பரவோரேனுயவிவ்வுயிர்தழற்பா
தலத்ததிகம்பரமில்லதென்றாளத்தகுநினக்கே. - 67


1777. - தகரானனந்தக்கனுக்கியைத்தான்கலர்தம்மலக்கல்
தகரானனந்தக்கவின்மன்றன்வெற்பிற்றவர்கழைப்பா
தகரானனந்தக்கடுமாவழங்குந்தனிவழிப்போ
தகரானனந்தக்கவர்வருவாரென்கொல்சாற்றுவதே. - 68


1778. - சாதனமாயவைநன்றினிலேனைச்சமனடவஞ்
சாதனமாயவைவேல்விழியார்மயற்றாழ்தருநெஞ்
சாதனமாயவைதாநரகென்னுமுனஞ்சத்தியோ
சாதனமாயவைதென்புலியூரநின்றண்ணருளே. - 69


1779. - தண்டாதரித்தநமனென்னையாண்முன்றடவரைக்கோ
தண்டாதரித்தநமப்பவுண்ணென்றளித்தாய்வெள்ளிவே
தண்டாதரித்தநமன்பணைசூழ்தில்லைச்சங்கரவோ
தண்டாதரித்தநமக்களைந்தாளுகைதக்கதுவே. - 70


1780. - வேதப்பரியவிலங்கஞ்சப்பாகன்விடுவையஞ்சு
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்சொன்மின்விடைத்தே
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகண்டபுண்ணிலருள்
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்செய்மன்றத்தனே. - 71


1781. - மன்றலங்காரப்புரிசடையாரிமவான்மகளை
மன்றலங்காரப்புரிபரனாரிருண்மாய்தரவ
மன்றலங்காரப்புரிதில்லையாரெனைவைப்பரிய
மன்றலங்காரப்புரிதலந்தீர்த்தருள்வான்றலமே. - 72


1782. - வானம்பவனந்தனஞ்சயனீர்குவலயமுமா
வானம்பவனந்தனஞ்சயன்மான்மடியாமலயில்
வானம்பவனந்தனஞ்சயஞ்சூழ்தில்லைமன்னிவளர்
வானம்பவனந்தனஞ்சயற்போய்வைப்பன்மன்னருளே. - 73


1783. - மனம்பாலனையமடமொழியாரிடைமாழ்குறக்கா
மனம்பாலனையமடங்காத்துயரின்மன்னாமலிய
மனம்பாலனையமடங்கலிற்சீறிவருமுனைங்கை
மனம்பாலனையமடற்கொன்றையாயென்பமன்றஞ்சென்றே. - 74


1784. - மனம்பாவரியம்புயங்கநின்றாளிற்பொன்மாதரிற்க
மனம்பாவரியம்புயங்கறைகேட்பமுய்வாங்கொல்பொறி
மனம்பாவரியம்புயங்கடுக்கைப்பரமன்றப்பெரு
மனம்பாவரியம்புயங்கலந்தாற்கருமாமணியே. - 75


1785. - மாதங்கமடங்கல்சேர்வழிநள்ளிருள்வாய்ப்பொறைமண்
மாதங்கமடங்கல்வாயரவொப்பர்வருவர்கொல்பூ
மாதங்கமடங்கல்விச்சாலையார்தில்லைமன்சுரர்த
மாதங்கமடங்கல்பூண்பவன்காளத்திமால்வரைக்கே. - 76


1786. - வரைவனஞ்செய்யுந்தடமுஞ்சுலாங்கமலைவன்குற
வரைவனஞ்செய்யுந்தடங்கழுக்குன்றுறைமன்றுடையான்
வரைவனஞ்செய்யுந்தடவுவில்லாயினிமாழ்கவுனை
வரைவனஞ்செய்யுந்தடக்கெனையுவ்வுமொய்வார்முரசே. - 77


1787. - வாரிக்குவளையும்வண்ணம்பயின்றுமதன்பன்மலர்
வாரிக்குவளையும்வண்ணம்படப்பெய்வதுசொல்வரு
வாரிக்குவளையும்வண்ணம்பதமென்வன்மூரியருள்
வாரிக்குவளையும்வண்ணம்பயின்மறைமன்றடைந்தே. - 78


1788. - அடையம்புயங்கலந்தானச்சுதற்குமரியநின்றாள்
அடையம்புயங்கலந்தானரவாய்பவவாரழல்வாய்
அடையம்புயங்கலந்தானஞ்சலென்றருளையநின்கை
அடையம்புயங்கலந்தானங்கொளிங்கென்றருண்மன்றனே. - 79


1789. - அரும்பாவருந்தனமாகமுளைத்திலவம்பன்முல்லை
அரும்பாவருந்தனமாகண்டிலாளயலான்பின்புதீய்
அரும்பாவருந்தனமாகக்கொள்ளாமன்றத்தாடியமர்
அரும்பாவருந்தனமாகவினூரடைந்தாள்சுரத்தே. - 80


1790. - தேயம்பலதிரியாக்கவன்றாட்டியர்சேற்கணரந்
தேயம்பலதிரியாக்கடிவேலென்றுதேடிப்புனைந்
தேயம்பலதிரியாக்கடையேஞ்செல்லற்செல்வமமு
தேயம்பலதிரியக்கவைதோங்கோறிருத்துவையே. - 81


1791. - திருத்தாதடிமைதவத்தேம்புதலுந்திருவருளோ
திருத்தாதடிமைதவச்சிரஞ்சூட்டுசிறப்புறுமெய்த்
திருத்தாதடிமைதவமாக்குதிசிவகங்கையெனுந்
திருத்தாதடிமைதவழ்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தே. - 82


1792. - சிவசிவசங்கரவைம்முகவென்றன்பர்சேர்தில்லைவ
சிவசிவசங்கரவைம்பொறியாமுருடீரக்கொல்வ
சிவசிவசங்கரவைப்பூணியததுசேர்தரநே
சிவசிவசங்கரவையவென்முன்னாந்தெளிமனமே. - 83


1793. - நம்பனையன்றினகரன்பல்வீழ்த்தகைநாயகன்வா
நம்பனையன்ரினரூரெரித்தானடமன்றிற்கண்டாள்
நம்பனையன்றினல்லார்கள்பல்லோரலர்நாட்டுறத்தி
நம்பனையன்றினகக்கூவவாடுமிந்நன்னுதலே. - 84


1794. - தலையரியக்கவலார் தனக்கில்லவன்றாம்பெறும
தலையரியக்கவலார்கோன்மன்றன்சரம்பூண்பொன்முடித்
தலையரியக்கவலார்புனலாற்கிணர்த்தாழ்குழல்கா
தலையரியக்கவலார்முலையாய்சென்றுசாற்றுகவே. - 85


1795 - கவியமகந்திரிவாப்பிறவாக்கழறாநரர்பாற்
கவியமகந்திரிவாச்சிறுதெய்வங்கருதமுழங்
கவியமகந்திரிவாரழலார்புகைகாண்மயில
கவியமகந்திரிவான்பொழிற்றில்லைமன்காதலமே. - 86


1796. - காதற்பரவையகம்படிவேமறங்காய்ந்திலநீங்
காதற்பரவையகம்பயில்வேமெங்ஙன்கார்க்குழல்பங்
காதற்பரவையகம்பணிதில்லைக்கண்மேயகுழைக்
காதற்பரவையகம்பங்கொல்வேங்கடுங்காலன்முன்னே. - 87


1797. - முனிவருமானந்தக்கூத்தம்பலத்தன்புமுற்றுமிரு
முனிவருமானந்தக்கூப்பிக்கையேத்தச்செய்முத்தகுழை
முனிவருமானந்தக்கூர்விழிபாகமொய்க்கூற்றமெனை
முனிவருமானந்தக்கூடன்றியாவர்க்குமூத்தவனே. - 88


1798. - மூவாயிரவருந்தானவன்வாழ்முடியாய்முன்கைசேர்
மூவாயிரவருந்தாழ்வில்சொற்பேசச்செய்மொய்யன்புக்கொண்
மூவாயிரவருந்தாவுணவீரென்முதல்வமன்றுண்
மூவாயிரவருந்தாழநின்றாயருண்முத்தியின்பே. - 89


1799. - முத்தரும்பாவருமந்தண்டுறைத்தில்லைமுன்னவபன்
முத்தரும்பாவருமந்தநிற்கொப்புமுளரிமின்வாய்
முத்தரும்பாவருமந்தமினாவருமோமுந்தவி
முத்தரும்பாவருமந்தருங்கூறார்முனி்ந்தொப்பென்றே. - 90


1800. - முதலைப்பரவைத்திருக்காழியார்சொன்முதல்வர்செவ்வாய்
முதலைப்பரவைத்திருக்காமுறன்பர்சொன்மொய்த்ததில்லை
முதலைப்பரவைத்திருக்காற்றுந்தாளவென்பாமுழுவிம்
முதலைப்பரவைத்திருக்காற்றைமாயமுருக்குவமே. - 91


1801. - குவலையவம்பரமானந்தவாதவர்கோவரவா
குவலையவம்பரமானந்தவாதவர்கோமன்றகட்
குவலையவம்பரமானந்தவாதவர்கோள்புரிதீங்
குவலையவம்பரமானந்தவாதவர்கோவத்தனே. - 92


1802. - அத்தவெற்பாதவர்வெள்ளிவெற்பாவிலயனரிகாய்
அத்தவெற்பாதவர்சொல்பூணெனுமிரப்பார்க்கருள்சீல்
அத்தவெற்பாதவர்தேவர்மன்றார்தம்மகலத்துநேய்
அத்தவெற்பாதவர்தாமவரேயெனுமாயிழையே. - 93


1803. - ஆயங்கவலவருந்துபுயானுமலறவென்னள்
ஆயங்கவலவருந்துயராற்றியடையுமின்கான்
ஆயங்கவலவருந்துறவோரும்பனப்பனுள்ளென்
ஆயங்கவலவருந்துமன்றம்பணியாரினைந்தே. - 94


1804. - ஆரம்பரவியவானந்தமர்துறையம்பலவம்பு
ஆரம்பரவியவானந்தவைக்குமமரவெண்டிக்கு
ஆரம்பரவியவானந்தமாதுக்களித்திநின்மார்பு
ஆரம்பரவியவானந்தமாமணியார்க்குமுன்னே. - 95


1805. - ஆரம்பரந்தடிவாள்விழியாய்நென்னலாரிரவென்
ஆரம்பரந்தடிவாய்முலைமேற்கைவைத்தாரொருவர்
ஆரம்பரந்தடிவாய்ப்புலித்தோலரருட்புலியூர்
ஆரம்பரந்தடிவார்சடையாரென்பராயெனக்கே. - 96


1806. - என்னத்தனையடிதேடவிட்டானையிருண்மவொடும்
என்னத்தனையடியாய்திருவம்பலத்தெம்மிறையே
என்னத்தனையடியென்றன்பருக்கெளிதாத்தெரிக்கும்
என்னத்தனையடியேன்மறப்பேன்கொலெழுமையுமே. - 97


1807. - மையலங்காரகலம்மதியென்னுமதிவிளங்க
மையலங்காரகலமாக்கொள்கண்ணியர்மாலறச்செம்
மையலங்காரகலப்பரவம்பலவாதடிதி
மையலங்காரகலப்புகழாயருமாணிக்கமே. - 98


1808. - மாணிக்கவாசகர்காணவைத்தீந்தனைமாலைமுன்வின்
மாணிக்கவாசகர்தெவ்வேயளபொன்றில்வாய்ந்தமுன்பின்
மாணிக்கவாசகர்சூழ்தில்லையாயென்சொன்மாலையுங்கொண்
மாணிக்கவாசகர்வாய்மலர்கோவைவரைந்தவனே. - 99


1809. - அவலங்களைவம்பலர்நீர்ப்புலியூரணைவமுரிய்
அவலங்களைவம்பரும்புரியாதடர்ப்பாமழுமேய்
அவலங்களைவம்பலர்முலைவாமனருள்பெறுவாம்
அவலங்களைவம்பணிந்தெழுவாந்திருவம்பலமே. - 100
திருத்தில்லையமகவந்தாதி முற்றிற்று.



சிவமயம்.
சிறப்புப்பாயிரம்.

இந்நூலாசிரியர் மாணாக்கராகிய சோடசாவதானம்
சுப்பராயசெட்டியாரவர்களியற்றிய நேரிசையாசிரியப்பா.



1810. - திருவளர் செங்கேழ்க் குருமணி கொழிக்கும்
பொருதிரை யுடுத்த விருநில வரைப்பிற்
றாவாத் துன்பந் தருபவ மறவொழித்
தோவா வின்பத் துறுதலை வேட்கு
மன்னிய வுயிர்காள் பன்னெறிச் செல்குவ - 5

- தொருவுமின் பெருமான் றிருநடங் காண
வுள்ளகத் தன்பொடு பொள்ளென வம்மி
னெனவிளித் திடல்போற் கனகத் தியன்று
மணிகால் யாத்த லணிகிளர் மாடத்
தும்பர்த் தயங்கு செம்பொற் கேதன - 10

- மாடுறுந் தெய்வப் பீடுசான் றோங்குந்
தொல்லைமா வளஞ்சேர் தில்லைமா நகரி
லிரசத வரைபிராற் கிடமா யெவரும்
பரசிடப் பெறுபெரும் பயனை நினைந்து
தானுமப் பயன்பெறத் தமனியக் குன்றம் - 15

- வானுயர் முடியொடு வந்தது மானக்
களங்கமற வோங்கி விளங்குபொற் பொதுவிற்
கலைமக டீம்பா லலைமகள் வணங்குந்
தலைமக ளென்னு மலைமக ளாய
வுலகுபல பயந்த வொருதா யொழியா - 20

- திலகருள் சுரக்கு மிருவிழி களிப்ப
வண்டுழு துழக்குந் தண்டுழா யலங்கற்
றிண்டடம் புயத்துக் கொண்டல் வண்ணனு
முதுமறை தெரிந்த சதுமுகக் கிழவனுங்
கற்பக நீழலிற் பொற்புறு கோவு - 25

- மற்றவிண் ணவரும் பொற்றமண் ணவருங்
கரஞ்சிரங் குவியக் கண்ணருவி பொழிய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதாப் பெய்தி
யரகர வெனுமொலி பரவையை விழுங்க
வின்புறப் புரிபே ரன்புரு வாய - 30

- பொருவரு முனிவர ரிருவரும் பொங்கித்
ததும்பு மானந்தச் சலதியுள் எழுந்த
முயலகன் வெரிநிடை யியலநின் றருளித்
துயர்பழுத் தனைய வவிர்சடை யாடத்
தழைதிருச் செவியிற் குழையசைந் தாட - 35

- வருள்விழிக் கடையுமை தெருண்முகத் துலவ
வுறுதிரு வாயிற் குறுநகை யரும்ப
வடவரை குழைத்த தடநெடும் புயத்திற்
பாம்பொடு கடுக்கைத் தேம்பினை மயங்கத்
திருவிடை யிற்புலி தருமுடை தயங்கத் - 40

- தாமரை மருட்டிய காமர்சே வடியிற்
செம்பொற் சிலம்பு பம்பிப் புலம்பத்
துடிமுத லாக நொடியுமைந் திடத்துந்
தோற்றமுன் னாகச் சாற்றுமைந் தொழிலும்
வயங்குற வென்றுந் தயங்குமா னந்தத் - 45

- தாண்டவம் புரிந்தரு ளாண்டவன் கழற்கண்
ணுலகிடை யுதித்து நிலவுபல் லுயிர்க்குந்
தந்தையே யன்றித் தாயு மாவா
னிவனே யென்றிப் புவனியோர்ந் துய்ய
நலமலி வணிகக் குலமகள் பொறையுயிர்த் - 50

- திலகுறு மளவும் விலகுற லின்றி
யன்னையா யளித்த மன்னுறு மப்ப
னெழுந்தரு ளப்பெறு செழும்புகழ் நிறைந்த
வொள்ளிய திரிசிராப் பள்ளிக் கேபினும்
பெரும்பொரு ளுளார்க்கே யரும்பொரு ளுறல்போ - 55

- லீண்டுபுகழ் செறிய வாண்டுவரு பெரியோன்
பிறைமுடிப் பெருமா னுறைதரப் பெற்ற
நறையூர் பொழில்சூ ழுறையூர்ப் புராணமுஞ்
சுரும்புபடிந் துண்ண வரும்புக டோறு
மட்டவிழ் குறுக்கைவீ ரட்டப் புராணமு - 60

- முற்ற பவஞ்சப் பற்றகன் றவர்பலர்
துற்றொளிர் வாளொளி புற்றூர்ப் புராணமு
முடைத்தெழும் வயன்மடை யடைத்திடக் கருப்புக்
கட்டி யிடும்விளத் தொட்டிப் புராணமுஞ்
சேற்றூர் வளைவய லாற்றூர்ப் புராணமு - 65

- மெயிலை யுடுத்தொளிர் மயிலைப் புராணமுங்
கமலைத் தியாக ரமல லீலையு
மூழியும் பெயராக் காழிக் கோவையு
மெருதூர் பரனிடை மருதூ ருலாவு
மேவு புகழானைக் காவி னிடத்தருள் - 70

- பூண்டமர்ந் தருளகி லாண்டநா யகிக்கு
முருத்தவத் துறைதெறுந் திருத்தவத் துறைவளர்
கருப்புகல் கடிபெருந் திருப்பிராட் டிக்கு
முன்னவி லுறையூர் மன்னிய வடியவ
ரேந்திமதி யமைக்குங் காந்திமதி யுமைக்குந் - 75

- தருப்பெரு மணந்தரு திருப்பெரு மணத்துறை
போற்றுவார்க் கருடிரு நீற்றுமை யவட்கும்
பெருவிடைப் பரனரு டிருவிடைக் கழியமர்
தருமரு கனுக்கு மொருமுரு கனுக்குங்
காவடுத் துறைதிரு வாவடு துறையி - 80

- னம்பல மாக நயந்தெழுந் தருளு
மம்பல வாண வருட்குரு பரற்கும்
பெருநயந் துவன்றிய பிள்ளைத் தமிழு
மரதனா சலத்துறை வரதனுக் கும்மேற்
சொன்ன குருபரற்கும் பன்னு கலம்பகமும் - 85

- விற்குடி கொளுமுடிக் கற்குடிப் பரற்கு
மிதம்புகல் கலசைச் சிதம்பரேச் சுரற்குஞ்
சொற்றவா னைக்கா வுற்றவன் னைக்குந்
தருமையில் வளர்தருஞ் சச்சிதா னந்த
குருபர னுக்குமேர் தருதமிழ் மாலையு - 90

- மறைதுறை சையுமரு ணிறைசிராப் பள்ளியு
மமரம லற்குநல் யமகவந் தாதியு
நீலி வனத்துறை நிமலனுக் கும்முரற்
காலிப வனத்துமுக் கட்பரஞ் சுடர்க்கும்
விரிபொருள் கிடந்த திரிபந் தாதியுஞ் - 95

- சீருறை பூவா ளூருறை யரற்கு
நாருறை யூறை நண்ணிய பரற்குந்
தண்டபா ணிக்கும் வண்டமிழ் மதுரை
ஞானசம் பந்த நற்றே சிகற்கு
முத்தமப் பதிற்றுப் பத்தந் தாதியு - 100

- நறும்பலாச் சோலை யெறும்பி யூரின்
மேவுசோ திக்குவெண் பாவந் தாதியு
நவின்றமா மதுரையிற் கவின்றருண் ஞானசம்
பந்த தேசிகற்கா னந்தக் களிப்பு
மொருகவி யேனு மொழிதர லின்றி - 105

- யிருளகன் றொளிரு மெல்லாக் கவிகளுஞ்
சொன்னலம் பொருணலஞ் சுவைமிகு பத்திமை
நன்னலம் பல்லணி நலங்கள் செறிந்து
முழங்குற வெளிதின் மொழிந்தபெரு நாவலன்
குலத்திற் குடியிற் குணத்திற் குறையா - 110

- நலத்தின் மாண்பி னகுசிவ பத்தியெல்
வாய்மையிற் பொறையின் மலிதரு நிறையிற்
றூய்மையிற் கொடையிற் றுகளரு நீதியின்
மயங்குறு பிறப்பி லுயங்கெனை யாண்ட
தயங்குபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்தோன் - 115

- சந்த மலிந்த செந்தமிழ்க் கரசாய்
வந்த மீனாட்சி சுந்தர வாரியன்
புல்லிய வென்னாற் சொல்லி யடங்கா
நன்னல மமைத்துப் பன்னிப் புனைந்த
வமலமலி தில்லை யமகவந் தாதியைக் - 120

- கதித்திடு மச்சிற் பதித்துத் தருகென
நல்லோர் பல்லோர் நயந்துறை யிடனெனத்
தொல்லொர் சொல்லிய தொண்டைமண் டலத்தி
லுலமலி திண்டோ ளுபேந்திர னாய
கலமலி கொங்கைக் கமலைவாழ் மார்பன் - 125

- றன்னுறு காவலின் மன்னுறு முல்லையிற்
கோதார் தராத சேதா வினங்களைச்
சேர்ந்துற வைத்ததை யோர்ந்து நின்றே
யன்னோன் முன்னோ னாகிய விந்திரன்
மின்னுதன் காவலிற் றுன்னு நிலத்திற் - 130

- பயிலுற வைத்த செயலே மானக்
கவையடிக் கயவாய்க் காரா வினங்கள்
செவையுறு மிடனெலாஞ் சேர்ந்துகிடந் துறங்கும்
பெருவளஞ் சிறந்த மருதஞ் சூழ்ந்து
மருவுபூ விருந்த வல்லிநன் னாட - 135

- னுருவிற் பொலிந்த திருவினுஞ் சிறந்த
சிறுகிய மருங்குற் பெருமுலை மடவா
ராடகத் தியன்ற மாடத் தும்பர்க்
குழுமி யிருந்து செழுமலர்க் கரத்தா
னகைமுக மதியொடு பகையுறு மதியினைப் - 140

- பிடித்துப் பிடித்து விடுத்தெறி தரல்போற்
றரளங் குயிற்றிய திரண்மணி யம்மனை
யாடன் மலிந்த பீடமர் செல்வ
மோவாப்பம்ம லூராள் செம்மல்
வலம்புரி யுதித்த நலம்புரி முத்தென - 145

- மிளிர்தர் புகழுயர் துளுவவே ளாளர்
குலத்தி லுதித்த நலத்தின் மிக்கோன்
வாகா ரறஞ்சே ரேகாம் பரவேள்
செய்தவந் தெரிக்கு மெய்யுறு சீலன்
புண்ணியம் பழுத்த தண்ணளித் தாரு - 150

- வொற்கமில் சத்துவ நற்குண வாரிதி
யிரப்பவர்க் கின்பஞ் சுரக்குமா நிதியம்
புல்வரம் பகன்ற கல்வியின் மேரு
வுவமை யிலாப்பா சிவனடி யருச்சனை
பத்தியிற் புரியு முத்தம குணத்தோன் - 155

- பொங்குசீர் விசய ரங்கபூ பால
னுளந்தழை விழைவொடு விளம்பின னாக
வள்ளலிற் சிறந்த வள்ளலிவ னாதலிற்
றலங்களிற் சிறந்தமா தலமாந் தில்லையுட்
டேவரிற் சிறந்தமா தேவன் றாளிற் - 160

- புலவரிற் சிறந்த புலவனா விளங்கிய
நம்மா சிரிய னவின்றணி யமகவந்
தாதியுட் சிறந்தவந் தாதியை யோர்ந்துநின்
றேவுத னன்றுநன் றென்றுள முவந்து
மதித்திட யாரும் பதித்து முடித்தனன் - 165

- மன்னுறு மிந்நூல் சொன்னபெரி யோன்பா
லென்னொடு கற்ற துன்னுறு மறிஞன்
கவ்கை* நீர் சூழ்ந்த கண்ணகன் ஞாலத்
திடம்படு மன்பதை மடங்கெடப் பன்னூல்
விரித்துரை புலப்படத் தெரித்திடும் வல்லோன் - 170

- கனியினு மமுதினுங் கண்டினும் பாகினு
மினியதமிழ்க் கவிதை யியம்பத் தெரிந்தோன்
பவமறுத் தின்பப் பயனளித் தருளுஞ்
சிவபிரா னடிக்கீழ்ச் சிந்தைவைத் திருப்போன்
சுதந்தவிர் பெருஞ்சீர்ச் சிதம்பர மகிபன் - 175

- பண்ணிய தவத்தாற் பயந்தசூ ளாமணி
நண்ணிய புலமை நலஞ்சேர்ந் தொளிரு
மேசுத லில்லா வெவரும்
பேசுபுகழ்த் தியாக ராசநா வலனே.


சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

Comments