Pirapantattiraṭṭu I
பிரபந்த வகை நூல்கள்
Back
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்
(திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம் ,
திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமி பதிகம்,
திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம் &
திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்)
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்
திருக்கைலாயபரம்பரைத் திருவாடுதுறையாதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, இது மேற்படி ஆதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்கள் உதவியைக்கொண்டு, மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கரும், சிதம்பரம் மீனாட்சி தமிழ்க்காலேஜ் பிரின்ஸ்பாலுமாகிய உ.வே. சாமிநாதையரால் சென்னை கமர்ஷியல் அச்சுக்கூடத்திற் பதிக்கப்பெற்றது. இரண்டாம் பதிப்பு, 1926.
உள்ளடக்கம்
1. | திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம் | (செய்யுள் 1- 10) |
2. | திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமி பதிகம் | (செய்யுள் 11 - 20) |
3. | திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம் | (செய்யுள் 21 - 30) |
4. | திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ் | (செய்யுள் 31 - 133) |
1. திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம்
(இது சோழநாட்டிற் காவிரிநதியின்தென்பாலுள்ள திருப்பதிகளுள் ஒன்று. குற்றாலமென இக்காலத்துவழங்கும்)1.
மாமேவு பவளா சலக்குவட் டுதயமெழு மழவிலங் கதிர்நிகர்த்து
பமேவு கருஞிமி றிரைப்பக் கபோலம் பருத்துவிடு தானமொழுகப்
தேமேவு மலரிறைத் தடியர்சய சயவென்று திசைதொரு முழக்கெடுப்பச்
காமேவு தண்ணளி யமையிந்தடையு நர்ப்பாது காத்தறம் வளர்த்திடுதலாற்
2.
குலவுதவ முனிவரர்க ளமருந் தவச்சாலை குவலயம் படிதராமே
நிலவுதழல் படுகுண்டம் வேதிமே கலையொடு நிதம்புதி தியற்றுறாமே
புலவுகம ழங்குசம் பாசனமை யேலியது போதுமென் றுவகைமலியப்
கலவுபல வண்டத் துலாவருந் திறலுடைக் கருணையா மறிய வலமோ
3.
ஏதியென வெவ்வள விருப்பன வவற்றா லிருத்தல்செய் யாதவரமுமி
நீதிதரு மட்டாங்க பஞ்சாஇங்க முதலிய நிகழ்த்துவந் தனைவிலக்கு
சோதிதரு கோடொன்று கொண்டுகய முகன்வலி தொலைத்துலிற லூர்தியாக்கியிச்
காதிநலமேயுதவு நினதுபெரு மாண்பெவர் கருத்தமைத் தொதவல்லார்
4.
ஏற்றமிகு மொருமினிவ னோம்பழற் குழிநாப்ப ணிரியாத கிரியைஞான
சாற்றவொளிர் புரவுமணி கைக்கொண்ட மாற்றலன் றன்வலி யடங்காப்பெருந்
தேற்றமத னால்வர லுணர்ந்தனைய தவனுஞ் சிறந்தமார் பிற்றரித்துச்
காற்றவெழு மருள்பொழிந் தினிதமரு மாடலைக் கண்டுவிண் டிடவல்லரார்
5.
தெள்ளமுத மயமாக வுமையம்மை நல்கிய திருந்துமோ தகந்ஞ்சமாய்த்
மெள்ளலரு மமுதமாய்த் தான்புரித றவறா தியற்றிடக் கண்டோ மினு
முள்ளபொரு ளிதுவென்று வாய்பேச வும்பிற வுஞற்றவு மியங்கல்செயவு
கள்ளமகன் மாதவர்க் கானந்த மாய்ப்பரவு கற்பனை கடந்தவாழ்வே
6.
எந்தவா னவரருள் பெறக்கருதி னாலுமுனை யேத்திவழி படுவரெழுவா
முந்தவார் வம்பெருகு மாறுநி னடிப்ப்பூசை முற்றும் புரிந்துபோற்றின்
பந்தமா மலகன்ம மாயையொரு மூன்றையும் பாற்றிநின் னறிவுதொழிலாம்
கந்தமா மலரிடுக ரெய்ப்பில்வைப் பேபுகழ்நர் களைகணே யமலவாழ்வே
7.
மருவுபல புவனத்து மெந்தவா னலர்வடிவு மண்சிலை வடுத்தாரமொண்
வெருவுமிக வாய்ந்த்ந்த வடிவருச் சனைசெயார் விடுவரவ் வாறுதேர்தல்
லொருவுதல் செயாதவர்கள் யாவரே யெனினுமவ ரும்பர்மக வான்மலரின்மே
கருவுதவிர் மாதவர் கசிந்தேத் தெடுக்கவொளிர் கருணையா னந்த்வாழ்வ்வே
8.
பொங்குங் கருங்கடல் பரந்ததென் னென்றுபல புவனமுமொ ரையமெய்தப்
தங்குந் திறற்கொடிய சதகோடி யொல்லைத் தடற்றுநின் றுருவல்செய்யச்
லெங்குங் கதிர்க்குமொரு பவளாச லம்பொர லிவர்ந்துபல படையொடுமெதி
கங்கும் பகழ்ந்தடை லிறற்படைகை தொட்டநின் காமர்விறல் யாவர் புகழ்வார்
9.
துதிகையோ டிருசெவியி னின்றுமொரு மூவரைத் தோற்றினா யண்டமணுவாத்
மதிக்கைகொ டவன்பணிய முப்பொருளி ணுண்மையை வகுத்தவற் குறநவின்றாய்
விதிக்கைபுரி வானுநிக ராதபுரு சுண்டிமுதன் மேலோர்கள் பலரிறைஞ்ச
இதிக்கையுறு மாறுபே ரருள்புரிவ தென்றுகலைகாணா வதீதமுதலே
10.
மலையுமொரு பொருளன் றெனக்கறிக் குந்திறல் வயங்குனின் னூர்திவாழ்க
நிலைமருவு ஞானமுங் கிரியையு மெனக்கலை நிரம்பின ரெடுத்துரைக்கு
வலைகட லுடுத்தபுவி முழுதுநின தருளடைந் தாதரம் பெருகிவாழ்க
கலைவழி நினைப்பரவு செங்குந்தர் மரபுங் கதித்துநீ டூழிவாழ்க
திருத்துருத்திக் கச்சிவிநாயகர்பதிகம் முற்றிற்று
2. திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமிபதிகம்
(இது சோழநாட்டிற் காவிரிநதியின்தென்பாலுள்ள திருப்பதிகளுள் ஒன்று. குற்றாலமென இக்காலத்துவழங்கும்)11.
பூமேவு சமயங்க ளோரா றினுக்கும் புலங்கொளுங் காட்சிநல்கப்
பாமேவு செங்கதி ரிராறுநிக ராமெனப் பகர்மணிக் குழையிராறும்
மாமேவு கானவர் குலக்கோதை யொடுமேலை வானவர் குலக்கோதையும்
தெம்மேவு சொலைபுடை குழுந் துருத்தித் திருத்தளியி லமரண்ணலே
12.
நீடுமக மேருவைத் திசைவரை யொடுங்கொண்டு நிலவுபந் தாடல்செயவுநேமிமால்
மோடுகதி ரைச்சிறு மதாணியென மார்பிடை யுறப்புனைய வுஞ்சலதிக
கூடுகளி றேட்டுத் துதிக்கைகண் முடிந்தொருகை கொண்டிழுத் திடவும்வல்ல
சேடுமலி காவிரித் தென்பாற் றுருத்தி திருத்தளியு ளமரண்ணலே
13.
பொருவரிய மாதவத் தொருநார தப்பெயர் புங்கமுனி புரிமகத்துப்
வெருவரிய செறிமயிர்த் திருகுகோட் டுத்தகரின் விறல்கண்டு நடுநடுங்கி
பருவமிகு தகரினை பற்றிவரு கென்னப் பணிப்பவவ நுதவவேறிப்
திருவமிகு கல்விச்சிறப்புயர் துருத்தி திருத்தளியு ளமரண்ணலே
14.
வெள்ளியங் கயிலையின் முதற்சிகரி வாய்தலின் விநோதப் பொருட்ட மருநாள்
துள்ளியிவ னைப்பற்றி வாவென வுரைக்கவாங் கொருகுறண்மு னுய்ப்பநோக்கி
வெள்ளியொ ரிருக்குரை யெனக்குடிலை முன்சொல வியம்பியதனுட்பொருளெவ
தெள்ளியரு மென்னுணர்வர் நின்புகழ் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
15.
பெருகுகொடு வஞ்சநவில் குருகுவரை நிலைதபப் பெருவான் காக்குமாறு
கருகுநிறம் வாய்ந்துகரை கொன்றிரங் கும்பெருங் கடன்முழுதும் வற்ற வனையார்
முருகுமலி மாலைப் புயத்தனையர் குடிகொண்ட முதுநகர மதுபாழ்பட
திருகுதவி ரயிறொடுநின் விறலென் றுருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
16.
பொருந்திய தமிழ்க்கெல்லை யாகும்வட வேங்கடப் பூதரமு மாதரவி னாற்-
மருந்திய நறும்பழ முதிர்க்கும் பொழிற்கிரியு மவிர்சந்த னாசலமுமெல்
மருந்தியவு ளார்மாந்தல் போற்பிரா னொருமொழி வயப்பொருண் மனங்கொள்ளுவான்
திருந்திய வளம்பல விராவுந் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
17.
கனிமருவு வேட்டுவர் குலக்கொடி படர்ந்துமகிழ் கலவத் தழைந்ததருவே
யளிமருவு மாதவ ருளக்கமல மலர்காப்ப ணள்ளூற வூறுதேனே
வளிமருவு புடவியி னயர்ந்தோதி லுங்கருணை மழைபொழி செழுங்கொண்டலே
தெளிமருவு நின்னடிக் கன்பரு டுருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
18.
மூவர்முத லாயபர சிவன்மேனி யிற்பாதி முனிவரிய தாக்கவர்ந்து
யாவரெது கருதினா ரதையப் படிக்கவர்த மிதயத் தமர்ந்தளித்து
பூவர்முத லோர்தொழிலனைத்துமொரு தன்றொழிற் பொலிவெனச் செய்துமின்னும்
தேவர்பல முனிவர்க டுதிக்குந் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
19.
அத்தரொரு மொழியுண்மை யிற்றெனத் தெளியுமா றருளுநின் குரவு புகழ்கோ
முத்தர்கரு நச்சூ செரிந்தமரர் சிறைமீட்ட முனிவினன் வாகைபுகழ்கோ
பத்தர்பல ரெண்ணிய படிக்கவர் முனஞ்சென்று பரிவனீயருளல்புகழ்கோ
சித்தர்பல முனிவர்க டுதிக்குந் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
20.
ஓங்குநின் பான்மருவு சத்திமா ரிருவரு முவந்துபொழி கருணைவாழ்க
வாம்குகடல் வைப்புமறை யச்சிறை விரிக்குநின் மாமயிற் றோகைவாழ்க
நீங்குபுக ழமைநிற் புகழ்ந்துபா டும்புலவர் வெற்றியின் விளங்கிவாழ்க
தேங்குபல் வளம்பொலி விருத்தித் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
திருத்துருதிச் சுப்பிரமணியஸ்வாமிபதிகம் முற்றிற்று
3. திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்
21. திருவார் நினது திருநீறே தீர்க்கு மார்க்கு முடற்பிணியுங்
கருவார் பிறந்தை யடற்பிணியு மெனல்கண் டடைந்த்தேன் கருதுருவோ
டருவார் கருணைப் பெருங்கடலே யடியார்க் கெய்ப்பில் வைப்பேநன்
மருவார் மலர்சா ரிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
22.
ஏழைத் திருமாலயனாதி யிமையோர் பலரு மிறவாது
பாழைக் கருதா லாலநுகர் பரமா பரம கருணையனே
யூழைப் புறங்காண் வலியர்நினை யுணருந் திறலி னாரன்றே
வாழைப் படப்பை யிடைமருதா வாணா வடியேற் கிரங்காயே.
23.
ஊன மளக்குந் திறந்தொழும்பி னொருப்பட் டார்பாற் சிறிதுமிலாஇய்
நான மளக்கும் பெருநலமா முலையோர் பாக நயந்தவனே
யேன மளக்கும் திறமரிதா யிசைப்பார்க் கெளிதாந் திருவடியாய்
வான மளக்கு மிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
24.
நீரு புனைவே னைந்தெழுத்து நெஞ்சங் கணிப்பே னின்னாமம்
பேரு பிறிதில் லெனப்புகல்வேன் பிணிக்காட் பட்டு வருந்துவனோ
சீறு பகைவர் புரம்வேவச் சிரித்தாய் தரித்தாய் சூலமழு
மாறு வளமி லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
25.
கூற்றஞ் சிதைய விறைநீண்ட கோக னகத்தா ளாயமர
ரேற்றஞ் சிதைய வெழுந்தவிடத் தேற்றஞ் சிதைய வெடுத்தயின்றாய்
தோற்றஞ் சிதையப் பல்லுயிருந் தொழுது போற்றித் துதிக்குமுயர்
மாற்றஞ் சிதையா விடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
26.
ஆயா நினையே சரணடைந்தார்க் கன்றி யவ்வா றடையார்க்கு
மேயா தோநின் னருள்பெருவா னிழிந்த களர்க்கும் பொழிதருமே
தாயா யளிசெய் தலைவாமுத் தலைவேல் பரித்தா யெஞ்ஞான்று
மாயா வங்கூ ரிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
27.
உணங்கன் மீனுக் குயிருதவி யுயர்நின் னுலகம் புகப்புரிந்தாய்
சுணங்க னரியா தியர்க்கரிய தூமுத் தியிற்சார் தரல்குறித்தா
யணங்கல் லவர்க்கு முறல்கருதா வண்ணா வமுத்தே யருட்கடலே
வணங்கல் புரிவே னிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
28.
அந்தோ நினக்கு வரகுணனி லன்பு புரிவா ரொருவரிலர்
முந்தோ தனையற் கருள்வதலான் முயலும் பிறருக் கருளாயோ
நந்தோ வருநீ ரெறும்பலையு நண்ணு நறுவா சனைப்பொதியில்
வந்தோ வரிய விடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
29.
அண்டர் பரவு நிராமயனி யதனாற் நரணி யெனுனாமங்
கொண்டதுனுகுத் தகுமெனலுட் குறித்த்தே நின்னைச் சரணடைந்த்தேன்
ரோண்டர் துயரஞ் சகியாத ட்டூயா ந்நேயா தாயானாய்
வண்டர் மர்க்கா லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
30.
ஆழி படைச்சூ ழுலகினினை யன்றித் தெய்வம் பிறிதுனத்தோ
பாழி யமைநின் நருட்ககலாப் படரு முளத்தோ பனிவரைவாய்
வீழி புரையும் பெருனலமா முலையாண் ம்மேய விடப்பாகா
வாழி வளஞ்சா லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.
4. திருபெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்
வழித்துணைவிநாயகர்வணக்கம்
31.
பொன்பூத்த முக்குணப் புத்தேளிர் முதலெனப் புவியகத் தெவரு முணரப்
கொன்பூத்த வெண்மையுஞ் செம்மையுங் கருமையுங் கொப்புளிக் கக்கருணையே
மென்பூத்த கொன்றைச் சடைப்பரன் வலத்துவிழி வெள்ளென விடத்துமருவும்
தென்பூத்த வதின்முழுகி மேற்பழுப் பொழியுந் திறங்கருதி முக்கணியெனத்
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் வணக்கம்
32. பாழிமிகு வைத்திகஞ் சைவந் தழைப்பப் பசித்தழுத பனவரேற்றைப்
காழிவரு மொருமுத் தமிழ்க்கடாம் பொழிமழ களிற்றைவே தக்கொழுந்தைக்
மாழியிறை வற்குவெவ் விடமுதவு தன்பிழை யகற்றியுய் வான்குறித்தாங்
வாழிநெடு வெண்டிரைக் கையேந்தி வந்துதூய் வழிபட விளங்குதெய்வ
1. காப்புப்பருவம்
திருமால்33. மாமேவு பல்லுயிரும் வாழவணை தற்குரிமை மந்தா கினிக்கில்லைநம்
பூமேவு மார்பினொண் முலைக்குறி யமைத்துமகிழ் புண்ணியக் கொம்பையெவரும்
காமேவு பேருலகி லாருயிர்ப் பயிரெலாங் கலிவெப் பொழிந்துதழைவான்
தேமேவு பங்கயச் செல்வியக லொண்கட் செழும் பரவை யுட்படிந்து
சிவலோகத்தியாகர்
34.
தேமலிக டுக்கைநதி யாரறுகு கொக்கிறகு சீறரவு பூமத்த மாமுடிச் சாத்தினர்
<><><> தேடுமிரு வர்க்கரிய ராகியுமு ரைக்கரிய சீர்கொண்முத னூல்பற்றி யாய்பொதுக் கூத்தினர்
<><><> தேரருநி ருத்தமக லாதுதரி சித்துவகை சேருமர வோடுற்று வாழ்புலிப் போத்தினர்,
நாமலிபு கழ்ச்சியைய வாவியடி யர்க்குறுதி நாடியவர் பாலுற்ற தீமையைப் பாற்றுவர்
<><><> நானெனதெனப்புகலு மூனமத றுத்துயரு ஞானநெறி யோர்பெற்ற பேறெனக் கேற்றுவர்
<><><> நாடுதிரி யக்கரரு ளாளர்மண வைக்கிறைவர் நாதர்சிவலோகத்தி யாகரைப் போற்றுவ,
மாமலிக துப்பினொளி மேயதர ளப்பிறைவிண் வாழுமுகின் மேலுற்ற வோர்பிறைக் கேய்ப்புற
<><><> வாளவிரு முத்தவட ஞானநிறை வுற்றமுலை மாறில்புக ழேயொத்து மீதுறப் போர்த்தெழ
<><><> வாரிசம லச்சரண நூபுரமொ லித்தெழநன் மாதவர்முன் மேவொப்பி லாவருட் பார்ப்பனி,
காமலிபொ ருப்பின்மக ளாயவனை முப்புவன காரணிக லாசத்தி பூரணக் கார்க்குயில்
<><><> காதலகல் பித்தர்குண மேததுசெய் பத்தர்பிழை காமருள மேவக்கொ ளாநலச் சூற்பிடி
<><><> காசில்கலை முற்றுமுணர் வோருமுண்ம திப்பரிய காரிகைவி பூதிக்கல் யாணியைக் காக்கவே.
பொய்யாதவிநாயகர்
35.
கலர்மல வாய்ப்படு பேயருட் சேற்றுமோ
யுலர்தலி னார்ப்பெரி யாருளக் காட்டிடை
மலரமர் சீர்த்திரு மாதர்கட் கார்க்குயி
மலர்மலி நீர்த்தடம் வாரியொப் பாப்பொலி
சுப்பிரமணியக்கடவுள்
36.
உணர்பெரும்புவன வுயிரெனுங்குகையு ளுறைதருங்குகனை வெள்ளிவெற்பாத்தனு
புணரலங்கலயில் வலனயந்துபகை பொருதுவென்ற விறன் மெய்யனைப்பூக்கமழ்
மிணர்படுங்கனக தருவெழுந்தமல ரிலகுகொம்பரென வள்ளிலைச்சூற்படை
வணர்நருங்குழலை மலைமருந்தையருள் வடிவையம்பிகையை விள்ளிசைப்பாட்டளி
நான்முகன். வேறு.
37.
வலமலியு மத்திரஞ் சத்திர முதற்பல வயப்படைக் குப்படையெனும்
நலமலியும் வெண்மணி வடங்கையிற் றூங்கவெண் ணகையனைய வுருவமேனி
வுலமலியு மெண்டோ ட் பிரானைப் புணர்ந்துசே யொன்றீன்ற மோகினியெனு
குலமலியுமனையநா யகனைநீங் காதுமகிழ் கூர்ந்தமர்ந் துலகம்வாழக்
இந்திரன்
38.
முன்னுசுப் பிரமணிய னோமென்று நன்றுமறை முக்கா லுரைக்கமேவு
மின்னுதன் பின்னெனப் பெற்றுவற் றாதகவுள் வெள்ளவெள் ளானையூர்ந்து
பன்னுதிருவுதரம் வருந்துதலிலாதண்ட பகிரண்ட முற்றுமீன்ற
மன்னுமருள் புரிபசுங் கொம்பைவம் பைப்பொரு மதர்த்தமுலை தாங்கியேங்கி
திருமகள். வேறு.
39.
பிறந்த மனையில் வாழ்க்கையிலர் பேதை மாத ரென்னுமொழி
முறந்த மனைவா யாய்ப்பாடி யுறிப்பால் கரவிற் கவர்சிறுமை
மறந்த வாத மழுப்படைக்கை வள்ளற் பெரியோன் றலைமதிதான்
சிறந்த சிறியேங் கடைமதிதான் றீராத் தெளிவு பெறவுவக்குந்
நாமகள்
40.
தன்னா யகன்றன் மேனிநிறந் தனையொப் பாய நிறமலர்மேற்
மன்னா நிறைவெள் ளறிவுடையேம் வாக்குங் குடிகொண் டமர்கருணை
முன்னா நின்ற கங்கைமக ளொடுங்கி யடங்கி யேமாற
முன்னா வனையன் றிருவுள்ள முழுதுங் கவர்ந்துதுள் ளிறுமாக்கு
துர்க்கை
41.
மலையா நிற்கும் வெள்விடையும் வான மறைக்குஞ் சிறைப்புள்ளு
முலையா வெனக்கு மெதிரோவென் றுரைக்கும் விறலோ ராண்சிங்க
மலையார் செறுவிற் கோட்டெருமை யங்கட் கருன்பு கறித்தருந்த
விலையா வல்குல் லிற்குமினார் மிளிர்வாயூற லுணும்விடரை
சத்தமாதர்
42.
பறயோ திமமு மறையுமிமிற் பாழி யேறும் பினாகமும்போர்
யுறைசீ யமும்வன் கலப்பையும்வெள் ளொருகை வரையும் வச்சிரமு
ரிறையோ னுள்ளத் தழகொழுக வெழுதி நோக்கு மோவியத்தை
மறையோ லிடும்பொற் றிருவடியென் மனத்தும் பதிக்கு மனத்தைநகு
முப்பத்துமுக்கோடி தேவர்
43.
சீதரன்மலர்த்தவி சிருக்கையனிவர்க்கரிய வொப்பற்றமெய்சோதி பாதியுருவிற்பொலி
காதரமறுத்தவர் பவக்கடல்சுவற்றிமகி ழப்பெற்றிமிக்காளை மூவிருமுகத்தொரு
யோதரதநச்செழு வடத்தொடொளிர்முத்தவட முற்றுச்சி றப்பெறு ஞானவமுதக்கட
யாதரமிகப்பெரு மணத்துமெமனத்துமமர் முத்திக்குவித்தாய தாளுடையசத்தியை -
காப்புப்பருவம் முற்றிற்று
-----------------------------
2. செங்கீரைப்பருவம்
44.நீர்பூத்த முப்பத் திரண்டறமு மோம்ஒஉபெரு நிறைவின்மே னோக்கிமலரா -
மேர்பூத்த புவியிற் பதித்தொரு முழந்தா ளிருத்தியொர் முழந்தாளெடுத் -
தார்பூத்த முச்சியிற் கட்டிவிடு நித்திலத் தண்மணிச் சுட்டியுநலந் -
சீர்பூத்த வெண்ணிலவு வீசியா டக்கவுரி செங்கீரை யாடியருளே -
45.
பேசும்புகழ் சால்பெரும் புவனத்தி லாண்மகப் பெறல்சிறப்பென்றுமற்றைப் -
மாசுபடு துன்பமே பெண்ணுருவ மாயெந்த வைப்பினும் வருவதென்று -
கூசுத லிலாதக மலர்ந்தாண் மகப்பெறுதி குறைவுதப வென்றாசிமுற் -
தேசுமலி பனிமலைக் கொருபுதல்வி யாயவுமை செங்கீரை யாடியருளே -
46.
தையலர மாதர்முதல் யாருமோ கித்துத் தழீஇக்கொளாத் தடைகருதியோ -
வையமிசை யவரிடைத் தான்கொண்ட வார்வத்தை மன்னுயிர்க் கறிவிக்கவோ -
வுய்யநெறி தருசைவ சித்தாந்த மோதுமுடி பொன்றியொன்றாமையிற்றென் -
செய்யதிரு மேனியொரு பாதியமர் பைங்கிள்ளை செங்கீரை யாடியருளே -
47.
நிறைசுகுண மருவுநம் மிருகண்மல ரிலமெண்று நினையாம லொன்றழிக்கு
மறைபுகலு நங்காமர் மெய்யிலொன் றிரவுபகன் மாறாத வெப்புறுத்து
மற்றொன்று மாற்றவ ளொடுங்கூடி மற்றதை வயக்குமிவை யன்றியின்யுஞ்
குறைவரிய வுவளகத் தும்புகூஉ நாணநாங் கொளவிரண்டுங் குடிகொளுங்
சிறைசெய்த தெனவிறை முகக்கண் புதைத்தபெண் செங்கீரை யாடியருளே
48.
பொருந்துபசி யால்விழி யிரண்டும் பிசைந்தழு புலிக்குருளை யொன்றுவப்பப் -
மருந்துநல் விருந்திஃ தருந்துக பொருந்தவென மறையுணர வரிய பெரிய -
குருந்துமழ களிறொளி விளக்கெனச் சண்பையிற் குலவுபர சமயசிங்கக் -
திருந்துந லருந்தவ ருளம்புகு விளக்கமே செங்கீரை யாடியருளே -
வேறு
49.
சூழியமுஞ்சிறு சுட்டியும் விட்டொளிர் சோதிவிரிந்தாடச்
வீழியவாவுசெவ் வாயினெழுங்குறு வெண்ணகை நிலவாட
வாழியவாழிய வென்றுமுனின்று வழுத்தும் பேரடியார்
மாழியவாழி சுவற்றுமடப்பிடி யாடுக செங்கீரை
50.
நிறைதருமம்பல வுறைதருகரமலர் நிகழ்சிறு வண்டாட
பொறைதரு கருணையின் முழுகியகயல்கள் பொலிந்து புரண்டாடப்
கறைதருகண்டர் கருப்புவின்மாரர் காய்ந்த துளத்தோர்ந்து
லறைதருசென்னி யசைந்தாடத்தனி யாடுக செங்கீரை
51.
விண்ணலைபிறையு நிறையுந்துறையும் மேவிய சடையாட
கண்ணலைநீரொடு நெக்குருகன்பர்கள் கைகள் குவித்தாடக்
பண்ணலையாம லெழுப்பிசைவல்லவர் பாடிசை யூடாடப்
வண்ணலைமன்றிடை யாட்டுஞ்சூட்டன மாடுக செஞ்கீரை
வேறு
52.
இகழ்தலிறவமுயல் பவர்வினைநினைமுனி கந்தேநின்றார்யா
யகழ்மலமெனவனு தினமுறையிடவடி யன்பானன்றேயா
புகழ்மிகுகவுணிய மதலைமுனழுகைத விர்ந்தார்வங்கூர்சீர்
திகழ்பவர்திருவுரு வொருபயலமர்மயில் செங்கோசெங்கீரை
வேறு
53.
வேலைமருட்டிய வாள்விழியற்புத நங்காய்சந்தாதி
பாலையினித்தெழு தேனையகற்றுசொல் கெண்டாய்வண்டாயும்
சோலைநலக்கிளி யேயமுதொத்தக ரும்பேசெம்பாகே
சேலையெடுத்தகை வேளைநிறுத்தினள் செங்கோசெங்கீரை
செஙக்ணரைப்பருவம் முற்றிற்று
-----------------------------
3. தாலப்பருவம்
54.வாங்குங் கொடி நுண் ணுசுப்பொசிய வார்க்குங் குமவன் முலைசுமந்த
தாங்கும் விரைமென் றுகள்வீழ்ந்து தவழ்ந்தம் மடவார் முலைகழித்த
தேங்குந் திருவீ தியிற்படிந்து செறியு மீரம் புலர்த்தலினத்
வோங்குந் திருவத் தமிழ்மணவை யுறைவாய் தாலோ தாலேலோ
55.
வண்கா லென்ன வாயென்ன வாய்க்கா லெனக்கால் வாயெனப்பேர்
னெண்கா நல்லூர்ப் பெருமணமே ரேய்பெ ருமண நல்லூரென்
தண்கா லறிஞர் பலர்குழுமித் தவாது சூழ்ந்து மருவுதலாற்
வொண்கால் பலசூழ் சிவலோகத் துறைவாய் தாலோ தாலேலோ
56.
காரார் கலிநீர் முகந்தெழுந்த கமஞ்சூற் கொண்டல் கருக்கலங்கக்
நீணரார் தடத்துத் தகட்டகட்டு நெடிய வாளை மேற்பாய
சீரார் நறுந்தா மரைகுதட்டிச் செங்கட் கரும்பு கறித்தருந்தித்
ளோரார் போலத் துயின்மணவை யுறைவாய் தாலோ தாலேலோ
57.
நிலவு தமைநன் கினிதுயிர்த்த நிலமா கியநற் றாய்மகிழ
குலவு பசிதீர் தரவுணவு கொள்ளுங் கலத்தி னுவர்விரவுங்
பலவு மினிய தேமாவும் படர்நெட் டிலைய கதலிகளும்
யுலவு புகழ்சால் வளமணவை யுறைவாய் தாலோ தாலேலோ
58.
கத்துந் தரங்கக் கடலெழுந்து கழியின் வழிவந் திழிவிலழல்
முத்தும் பரப்ப வதற்கெதிரே முகில்வந் துறங்கு முயர்பொழில்கண்
கொத்து மலியும் பைங்கமுகின் குலைச்செம் பழமும் வெண்முகையுங்
மொத்து நவிலும் புகழ்மணவை யுறைவாய் தாலோ தாலேலோ
வேறு
59.
கருணைததும்பி வழிந்துபரந்த சடைக்கட் செந்தேனே
மருமலிபைந்துள வத்தொடைமாமுகில் வந்தபின் வந்தமினே
பொருவருபைங்கிளி தாங்கியசெங்கைப் பொற்புயி ரோவியமே
தருணமடந்தையர் தாழுங்குயிலே தாலோ தாலேலோ
60.
உழைதருகையுடை யெந்தைபிரானுக் குடனொழி யாதமரா
குழந்தருசிந்தையி னெக்குருகிக்கசி கொண்டுகை கூப்பிடுவார்
மழைதருமுகிலும் விளர்ப்பவிருண்ட மலர்க்குழ லோதிமமே
தழைதருமறையெனு மாவிற்குயிலே தாலோ தாலேலோ
வேறு
61.
உணர்பவருட்பொலி மழகதிரொத்தொளிர் தாயே நாயேனா
புணர்முலையற்புத மகளிர்பழிச்சிடு தாளாய் வேளாயே
யிணர்மலரிற்குதி கொளுநறவொத்தமெய் வாழ்வே தாழ்வேக
வணர்கொண் முகிற்குழல் வதிபிறைமெய்க்கவு மாரீ தாலேலோ
வேறு
62.
வந்திப் பவர்பெரு வாழ்வேதாழ்வே யாழ்வேனாம்
முந்தித் திருவருள் சாராவோரா வேராரா
நந்திப் பொலிமலை மாதேசூதே யோதேர்சா
சிந்தித் திருவிழி யோராய்தாலோ தாலேலோ
வேறு
63.
கரிகணாயவை யேவாய் தாலோ தாலேலோ
வரியபெமானிட மோவாய் தாலோ தாலேலோ
வுரியரலாருயிர் காவாய் தாலோ தாலேலோ
பிரியமுறாருள மேவாய் தாலோ தாலேலோ
தாலப்பருவம் முற்றிற்று
-----------------------------
4. சப்பாணிப்பருவம்
64.பார்வளர் மதிக்குழ வெனக்கழு மலத்துற் பாவித்தென் பவந்துடைத்த
கார்வளரொ ராணவமு மிருவினையு மும்மலக்கட்டுமுட லாதிநான்குங்
றார்வமுற மூழ்கிப் புறத்தடையுமாசென வகத்தடையு மாசுமண்ணி
சார்வரிய வெண்ணீறு நல்குந் திருக்கைகொடு சப்பாணி கொட்டியருளே
65.
வேயெனப் பொலிபசுந் தோளுடைய மலர்மாதர் மென்கையங் காத்த டாங்கு -
மாயெனப் பொலிகருணை யம்மான் றிருக்கையொ டளாவுங் கெளிற்றுமூல -
சேயெனப் பொலிவரைக் கிழவன்விழி வளருந் திருந்தலர் படுத்தவமளி -
தாயெனப் பொலிநின்கை மலர்முகிழ்த் தம்மையொரு சப்பாணி கொட்டியருளே
66.
குழைதரச் சுவைமதுப் பொழிதண்டு வாங்கிக் குலாவுஞ் சுருப்புநாணுங்-
விழைதரப் பொலியுருவு முற்றுமழல் பற்றுமொரு வெவ்விழிக் குணவு செய்த-
னிழைதரத் தக்கவிடை யொசியவன முலைசுமந் திணர்மலர்க் கொம்பினிற்கு-
தழைதரப் பற்றுகைத் தாமரை முகிழ்த்தம்மை சப்பாணி கொட்டியருளே -
67.
செய்யகம லம்பொருவு மென்பது திறம்பச் செயற்கைச் சிவப்பெழுந்து
வையமிசை யிவர்முனஞ் சேர்வதோ வென்றுள மதித்திடா தண்டரண்ட-
மையவிரு மெங்கள்கண் மலரோடு வதனமு மலருமா றுளமிரங்கி -
றையலமர் கைம்மலர் முகிழ்த்தம்மை யம்மையொரு சப்பாணி கொட்டியருளே-
68.
உரவுமறை பாடுசிவ லோகத் தியாகரென் றுரைசெய்நின் கொழுநர்மகிழ -
கரவுதவிர் மூத்தநின் மகற்கினிய மோதகங் கைதொடப் பலபடைப்போங் -
பரவுமந் தாகினி நினக்கடிமை செய்யுமொரு பாவையென் றேநாட்டுவோம்-
தரவுபெருகக்கர முகிழ்த்தம்மை யம்மையொரு சப்பாணி கொட்டியெருளே
வேறு
69.
வேட்டுப் புயறவழ் சியமத் திமய விலங்க லிடைத்தோன்றி
பாட்டுப் பிரமர முளருங் கொன்றைப் பைந்தார் வேய்ந்துலவும்
மோட்டுத் திறல்கொ டுலாவிரு கோட்டொரு மூரிச் சினவேழ
கோட்டுக் களிரு பயந்த மடப்பிடி கொட்டுக சப்பாணி
70.
தமரத் திரைபடு தொடுகட லுலகிற் றண்ணிய பிரமபுரந்
யமரர்க் கதபதி முதலியர் திருவனை யார்புக ழொடுகூட்டுண்
பமரத் தொடைநெடு முடிவலி யினரும் பன்மைந் தருமிடையும்
குமரக் கடவுளை யீன்ற கருங்குயில் கொட்டுக சப்பாணி
71.
பிறைமதி நிறைபுன லுறைதரு சடிலப் பெருமா னொருமான்வாய்ப்
கறைதப மறைமுடி போதுமொர் கிள்ளை கலந்தமர் கைக்கிளியே
மறைமுழு வதுமே கலைசெய் தரையணி மாதே மாதரசே
குறையற வடியவர் பார்பொலி சுடரே கொட்டுக சப்பாணி
வேறு
72.
சிறுமதி நதிபொதி மிடைசடை யுடைய ரிடத்தும டப்பாவாய்
மறுவறு கதிரொடு மதியுற வூறுமிரு ளொத்தகு ழற்கோதாய்
கறுவொடு மொழுகொடு விடமமிர் துறவிடு கட்கடை நற்றோகாய்
குறுமுனி தொழுதெழு பனிமலை வருமயில் கொட்டுக சப்பாணி
வேறு
73.
படவர வச்சுமை முழுது முணப்பசி யுற்றவ னத்தாரர்
கடவுளர் மற்றையர் முனிவரர் பத்திசெ யப்படு மெய்த்தேவே
மடமை யறுத்தென திதயம லர்க்கணி ருக்கும னப்பேடே
குடவளை மொய்த்தசெய் மணவை மடப்பிடி கொட்டுக சப்பாணி
சப்பாணிப்பருவம் முற்றிற்று
-----------------------------
5. முத்தப்பருவம்
74.கொழுதும் வரிவண் டுழுதுழக்கிக் கொழுந்தே னிரம்ப வாய்மடுத்துக்
தொழுது மழுதும் புகழ்பாடித் துதித்து முருகி யுருகிநிகழ்
யெழுது முயிரோ வியக்கொழுந்தே யெழுதா வுருவத் திளங்கொடியே
முழுதுமிணையி னின்கனிவாய் முத்தந்தருக முத்தமே
75.
நனியா தரஞ்செய் துள்ளுருகி நைந்து குழைந்து நாத்தழும்ப
யினியா நிற்குஞ் சுவையமிழ்தே யேழைத் தொழும்பு பூண்டொழுகு
கனியா நின்ற பேரருளிற் கசிந்து நோக்கி மகிழ்விக்குங்
முனியா தவாவுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
76.
விளக்கு மரவிச் செங்கரும்பு விரும்பு சுரும்பு நாண்பூட்டி
திளைக்குங் கொடிநுண் மருங்குல்கவன் றேங்க வீங்கு மிளமுலையு
திளைக்குங் காதல் கொடுநோக்குஞ் செய்ய சடைவெண் பிறைமுடித்த
முளைக்கும் பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
77.
நத்தங் கமழும் குழற்கோதை நல்லா ரறுவர் திருமுலைப்பா
தத்தங் கமழும் படியெடுத்தாங் கணைத்து மார்பி னுச்சிமோந்
சித்தங் கமழுங் கிண்கிணிப்பொற் சிலம்பு புலம்பு சேயிதழ்த்தாட்
முத்தங் கமழு நின்கனிவாய் முத்தந் தருக முத்தமே
78.
இழியும் புவனச் சிடுவாழ்வு மமரர் புவனப் பெருவாழ்வு
விழிய மனமுங் குளிதூங்க விதிகா ணரிய திருவுருவ
மொழியும் படிசெய் நோக்காதி யொன்றப் புரிந்து சிவானந்த
மொழியும்பவளச் செங்கனிவாய் முத்தந்தருக முத்தமே
வேறு
79.
மதிமுத்தம் விரன்வயி ரக்கழற் காறேய்க்க மண்ணிடைத் தேய்ந்த துயர்வேய் -
பொதிமுத்தம் வன்பகடு காலுழக் கப்பிளவு பூண்டதா லிப்பிவளைமீன் -
துதிமுத்த மவர்மகிழ்நர் கைபட் டதுக்குண்டு தோன்றாது மறையுமிக்குச் -
பதிமுத்த மேற்றுமகிழ் நிதிமுத்த மன்னசெம் பவளமுத் தந்தருகவே
80.
அடரிருட் பொலிவழிய வாயிரங் கதிர்விரித் தாதித்த னுதயமெழுமோ -
சுடர்விரித் தெழுவசிச் சுதரிசன முந்தனித் தொல்வளையு மேந்து மொருவன் -
மிடர்கெடத் தகுவரொடு சதகோடி கொண்டுபொரு மேந்தலூர் மணியுமற்று
படர்சடை தரித்தபொல் லாமணி யவாவுநின் பவளமுத் தந்தருகவே
81.
கரவுதீர் பேரருள் விழிக்குடையு மீனுங் கலந்துபர ஞானமூறுங் -
விரவுபா கெனுமொழிக் குடையுங் கரும்புமெழின் மேயதோட் குடையும்வேயு-
புரவுசால் கைக்குடையு நளினமுநறுங்குழற் பொலிவினுக் குடையு முகிலும்-
பரவுமா ணிக்கமொரு பால்வைத்த மரகதம் பவளமுத் தந்தருகவே-
வேறு
82.
மறையின் முடியு மெனது ளகமு மனமு ளுருக நித்தமு
மறையு மழிவில் கருணை பெருகி யலைய தெறியு மக்கமு
நிறையு மழகு பொழியு முகமு மபய வரத வத்தமு
கறையில் சிமய விமய முதவு புதல்வி தருக முத்தமே
வேறு
83.
வஞ்ச மருவு நெஞ்ச மருவு வஞ்சி விலகு சத்தியே
கஞ்ச மருவு மஞ்சன் விறன்மு குந்தன் வெளிய வத்தியூர்
தஞ்ச மெனவு வந்த னையர்மு னின்ற வொளிரொ ருத்தியே
யஞ்ச முலவு நன்செய் மணவை யம்பை தருக முத்தமே
முத்தப்பருவம் முற்றிற்று.
-----------------------------
6. வாரானைப்பருவம்.
84.விற்கொண்ட வாணுதற் பட்டமுஞ் சுட்டியும் விளங்கொளி துளும்புசூட்டும்
சொற்கொண்டவள்ளைச் செவிக்கணமர் தோடுமிரு தோள்வருடி யாடுநீடு
கற்கொண்ட பணியுமுத் தாரமும் வெண்ணிலாக் கற்றைகால் சந்த்ரோதயங்
வெற்கொண்ட தளிரடி பெயர்த்துமண வைப்பதி யொழிற்பரா பரைவருகவே
85.
ஆறாறு தத்துவமும் வேதாந்த முங்கடந் தவிர்வனவிண் முழுதுமாளி
நாறாறு தங்குமுடி யொண்மதிப் பிறையஞ்சநகுவன களங்கமொழிமெய்ஞ்
கூறாறு காலுழக் காமல ரிடுந்தொறுங் கொண்டவப் பனவென்றுபல்
டேறாறு புண்ணியமு மணவுமண வைப்பதி யொழிற்பரா பரைவருகவே
86.
திங்களரவங்கண்மலிகொன்றைமலர் துன்றுசடைதேடிமுன்கண்டறிதராச்
தங்கள்பெரு கோலமிட் டுத்தொடர நறியசெந் தாமரை யுயிர்த்தமாதுந்
கங்கண்மலி வாலிகத் தயிராணி யும்பல கருங்குழ லரம்பைமாருங்
தெங்கண்மன முந்தொடரமெல்லடி பெயர்த்தினிதொழிற்பரா பரைவருகவே
87.
பன்மலர் முகந்திரு கரங்கொண்டு தூய்நெடும் பனிவிசும் பமருமடவார்
கன்மலர்மனத்தைவண்கருணை புரியாய் கொலென்காதற்கிதழகுகொலெனாக்
முன்மலர் தருஞ்சுவடு மேல்கீ ழுறப்பெற்று மோகநீத் தவருளத்தான்
மென்மலரு நின்மல ரடித்துணை பெயர்த்துந லெழிற்பராபரை வருகவே
88.
ஆலக் கருங்களத் திறைவருட னீங்கா தமர்ந்துபரை யாதியிச்சை
சாலக் கருங்கொண்ட லோமர கதங்கொலோ தக்கவிந் திரநீலமோ
நீலக் கருங்கட் டிருக்கோதை மாதொடு நிலாவுகலை மாதுநாளு
யேலக் கருங்குழற் செய்யவாய் வெண்ணகை யெழிற்பரா பரைவருகவே
வேறு
89.
மின்னிப் பொலியுங் கருங்கொண்மூ விளர்க்குங் குழலார் மைந்தரொடும்
றுன்னிப் பொலியும் படிபதித்த தொகுசெம் பதும ராகமணிச்
பண்ணிப் பொலியுஞ் சம்பந்தர் பரவு மணத்தி லெம்பெருமான்
மன்னிப் பொலியும் வளநல்லுர் வாழ்வே வருக வருகவே
90.
மோன மோங்குஞ் சிவயோக முத்த ருள்ள முமிழாத
கான மோங்கு மறைமுழங்கக் கங்கு லழிந்து கழிந்தோடக்
தான மோங்குங் கூகைதுயர்ச் சலதி மூழ்கக் கொடியுவப்பத்
வான மோங்கு மதினல்லூர் வாழ்வே வருக வருகவே
91.
சந்து தவழு முலையாருந் தாமந் தவழும் புயத்தாருந்
மிந்து தவழுஞ் செய்குன்று மொழில்கொப் புளிக்கு மரமியமு
நந்து தவழுந் தடம்படிந்து நறும்பூஞ் சோலை யகத்துறங்கி
வந்து தவழுந் திருநல்லூர் வாழ்வே வருக வருகவே
92.
மூரி யெருமைக் கரும்போதுத்து மோட்டுப் பியலி னுகங்கிடத்தி
வேரி கடைவாய் வழியிழிய விரும்பு முழுவ ரெறுழிடக்கை
டாரி தழியா ரடியும்வெளி யாமே யெனமண் பிளவுபட
வாரி யடங்கும் வளநல்லூர் வாழ்வே வருக வருகவே
93.
பணியே விரும்பு துணி பினர்தம் பற்றே வருக முற்றுணர்ந்த
மணியே வருக வவரினிய வமுதே வருக வவர்திருப்பே
கணியே வருக மெய்ஞ்ஞானக் கனியே வருக வானந்தக்
மணியே வருக திருநல்லுர் வாழ்வே வருக வருகவே
வாரானைப்பருவம் முற்றிற்று
-----------------------------
7. அம்புலிப்பருவம்
94.திகழ்தரு கடுக்கைமலர் சூடுசிவ லோகத்தியாகர்த முடிக்கலத்துட்
புகழ்தரு வலத்தவ ரியக்குமறை வாம்புரவி பூண்டதேர்க் காலு ளொன்றாய்ப்
யிகழ்தரு பவந்தவிர்த் தருளனை யரைப்பல விடத்தினும் போற்றல்செய்வா
றகழ்தரு திருப்பெரு மணத்தமரருட் பரையொ டம்புலீ யாட வாவே
95.
எண்ணுமதி யினர்மதிக் கடவுளென நுவலுதற் கேற்பவொண் கலையாளனு
நண்ணுமொரு பாந்தளொரு புடைகொளினு மொருபுடையி னானில விளக்காகுவாய்
மண்ணுலகி லளவில்பைங் கூழ்தழையுமாறருள் வழங்குவா யுனது செய்கை
லண்ணுவள மேவுந் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
96.
சுரும்புசெறி கழுநீர் மலர்த்துவாய் நறவமிகு தொகுகமல மலர்குவிப்பாய்
பெரும் புவிவிரும்பநிறை வாயது வெறுப்பநோய் பெற்றார் மெய்போன்று குறைவாய்
யிரும்புவன மேத்துநடு நிலையொடொரு தன்மையே யெஞ்ஞான்று மெய்தி நிலவு
லரும்புநல மார்பெரு மணத்தம ரருட்பரையொ டம்புலீ யாட வாவே
97.
சங்கநக வுரும்வெண் டிரையொரி தடங்கட றவாதே யெழுந்து பொங்கத்
பொங்கனக மாருநந் திருமுக மெனக்கருணை பூத்தினி தெழுந்த தென்றும்
மங்கனக வுருவின்றி மறைதரும் போதுந மருங்குலே யொத்த தென்று
வங்கனக மணிமாளிகைப்பெரு மணத்துமையோ டம்புலீ யாடவாவே
98.
பேராழி சூழ்திருக் காழியிற் பாலுண்ட பிள்ளையார் திருமணத்துப்
றேராழி யேழ்புரவி வையத் திவர்ந்திரு ளொருங்கற முருக்கு மொருவ
பாராழி வட்டம்வி ணுவப்பவின்றேனும்பரிந்திங்கு வந்தாயெனிற்
மாராழி சங்கங்கொள் கைப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
99.
உலகுபுகழ் பஞ்சாக்கரப்பெருந் தீர்த்தமென் றான்றுண்டு மூழ்கி னோருக்
லிலகுமிஃதன்றியுங் கூபவடி வாய்க்கங்கை யென்பதொன்றுண்டதன்சீ
விலகுகொடு வஞ்சமுடை நெஞ்சரல் லாரென்று மேவரிய வித்தலத்து
னலகுதவிர் பெருவளம் பொலிபெரு மணத்துமையொ டம்யுலீ யாடவாவே
100.
சிறந்தமா ணாக்கனீ யேயென்று பலருஞ் சிரிக்கவா சாரி யன்றன்
டுறந்தபே ரரியவெங் கவலையுந் தவலிலா வொருசாப மும்பூண்டுளா
யிறந்தமா மலமுடைய ரேயடையுமித்தலத் தெய்தியிக் கருணாம்பிகை
ரறந்தவா தோங்குந் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
101.
வையமுழு துய்யவொரு வாவியங் கரைநின்று வாய்மலர்ந் தழுத பிள்ளை
செய்யமலர் மீதனந் துஞ்சுபஞ் சாக்கரத் தீர்த்தக் கரைக்க ணின்று
ளூய்யவிவள் வாவென் றுரைத்தபடியேவிரைந் தொருவனீ வந்து சேரி
னையமன மோவித் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
102.
குறைவடிவி னோடுசிவ லோகத் தியாகர்தங் கோடீர மாமுடிக்கட்
நிறைவடிவினோடிங்கடைந்துகங் காகூப நிறைபுனலின் மூழ்கினினைய
பொறைவடிவம் வாய்ந்துவினை காய்ந்து மலமாய்ந்தொளிர் புகழ்த்தரும நெறியி னிற்போர்
ரறைவடிவ மேவிய திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
103.
வாவென்ற போதுவா ராதுபா ணித்ததெம் மதிகதி யுனக்குவேறென்
சோவென்ற நசையுண்டு தக்கன்வேள் விக்களந் தோய்ந்ததா ளுண்டுநின்னோர்
காவென்ற கைத்தலத் திவண்முனிவு செயினினைக் காப்பவரு மிலரிவையெலாங்
யாவென்ற வன்புகழ் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
அம்புலிப்பருவம் முற்றிற்று
----------------------------------------------------
8. அம்மானைப்பருவம்
104.செல்லூர் வயத்தசிவ லோகத் தியாகர்தந் தோட்டுணை குழைக்கநாளுந்
வில்லூர்நெடுஞ்சிகரமேருவென் றுரைசெய்வடவே தண்டமுற்றகொற்ற
யெல்லூர் மணிக்கங்க ணக்கரத் தேந்திமே லெறிவது கடுப்பவறமுற்
மல்லூர்பொழிற்பெரு மணத்தமர்பராபரை பொன்னம்மானை யாடியருளே
105.
மறமணக் குன்கனன் மழுப்படைத் தம்பிரான் மலர்பொரு திருக்கையுலகம்
நிறமணக் குந்தரும முப்பத் திரண்டுநனி நெடுநாளு மமரவைத்து
புறமணக் குந்தொழிற்கேதுநீயென்பது புலப்படுத் தியுமொளிருநின்
வறமணக்குந் திருப்பெருமணத்தம்மைமுத்தம்மானை யாடியருளே
106.
இறைதிருமுகத்தகத் துந்திரூ நுதற்கணு மிலங்குமிச் சுடருநோக்கி
கறைமருவுபூதவிருண்முழுதுங் கலங்கக் கலக்கித் துவைத் தவைத்துக்
நிறைyaவெளி யாயகா னுலவுகர மதமுமிழ் நெடுங்கதிர்க் குஞ்சரத்தி
யறைதருதிருப்பெரு மணத்தம்மை மாநீல வம்மானை யாடியருளே
107.
பன்னரிய திருமறைச் சிரமீது மருவும் பரம்பொரு டனைப்பகர்ந்து
நன்னய மிகுந்தத் திருக்கரத் துறைவதென நாட்டத் தெழுந்த பார்வை
வன்னமிகு வெண்டரள மணிவடஞ் சூழ்ந்தமணி மாமுலை குலுங்க நுழைநுண்
மன்னமரு வும்பெருமணத்தம்மைமரகதத் தம்மானை யாடியருளே
108.
கருகாத பத்திமை கொழுந்துகொண் டெழவுட் கசிந்துருகு மன்பர்நிதியே
பெருகாத காமத்தர் செல்வமே மாதவப் பெரியோர்கள் பெற்றபேறே
திருகாத சிந்தைகொடு சகமுழது நீயெனத் தேர்ந்துணர்ந் தாரின்பமே
மருகாத நற்பெரு மணத்தளி விளக்கமே யம்மானை யாடியருளே
வேறு
109.
அன்ன மலிதண் டுறையுமணங் கனையார் மொழியும் பானலமோட்
முன்ன வினிய பொழிலுமவர் முடிக்குங் கூந்தற் பகுப்புமஞ்சு
பன்ன முடியா மனையுமவர் பாதத் தணியுஞ் சிலம்புநெடும்
யென்ன வளங்கூர் பெருமணப்பெண் ணெடுத்தா டுகபொன் னம்மனையே
110.
காலா தரிக்குங் கழனிதொருங் கமஞ்சூ லுயிர்ப்ப வயிறுளைந்து
கோலா வொளிரவ் வெண்டரளக் குவையா லடைபட் டறறேங்கக்
மாலா வெழுவெள் ளோதிமந்தம் வயங்கு சினையென் றவைகவர்ந்தம்
தோலா வளமை நல்லூராய்தொட்டா டுகபொன் னம்மனையே
111.
மதிக்குங் கடவுட் பஞ்சதரு வயங்கு நிழவில் வீற்றிருந்து
துதிக்கு மருத நன்னிழலிற் றோலிற் கிடத்தி யிளங்குழவி
பதிக்கும் பயமுட் புகக்கொண்டு பலகா லிரிய மேலெழுந்து
குதிக்கும் புனனல் லூரமுதே கொண்டா டுகபொன் னம்மனையே
112.
ஆண்டா தரித்து நாயேனை யல்லற் பிறவி யறுத்தருளு
யீண்டார் கலிசூழ் புடவிமுத லெப்பு வனத்து முறையுயிர்க
வேண்டா நிற்கு மெய்யடியார் விரும்பு முள்ளக் கோயிலகம்
தூண்டா விளக்கே நல்லூராய் தொட்டா டுகபொன் னம்மனையே
113.
குணத்தே பொலியு மெய்யடியார் கோலம் பொலியுங் குளிர்சிந்தைக்
யணத்தேர் வரிய மறைமுயன்று மணுகற் கரிய பேரொளியே
கணத்தே மலர்செற் றியபொழிலிற் கனிந்த தேமாம் பழச்சாறு
மணத்தே யமர்வெண் ணீற்றுமையே மகிழ்ந்தாடுகபொன் னம்மனையே
அம்மானைப்பருவம் முற்றிற்று
---------------------------
9. ந்ணராடற்பருவம்
114.எள்ளுதற் கரியகுழல் சைவல மெனச்சுழல வினைவிழிகள் சேலினிலக -
வுள்ளுதற் கரியவிரு கொங்கையும் புற்புதத் தொளிரமல ருந்திசுழியி
கொள்ளுதற் கரியவொளி வயிரமுந் தரளமுங் குருமணியு மொலிதிரைக்கை
விள்ளுதற் கரியவொரு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே
115.
புள்ளாரு காலுழக் குங்குழ லனிந்திதை பெருங்கணை யனுக்கு மொண்கட்
ணுள்ளாறு பகையற வொழித்த்மா தவருளத் துள்ளொளிய தாகிநாளு
நள்ளாரு பழையாறு கஞ்சாறு கோட்டாறு நல்லாறு தருமையாறு
வெள்ளா றெனப்பரவு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே
116.
முண்ணாறு பங்கயச் சேக்கையம ரொருநான் முகப்பிரம னாவுமோவா
பண்ணாறு மொழிமாத ரிருபாலு நின்றுதம் பங்கயச் செங்கையுதவப்
கண்ணாறு கொன்றையுந் தும்பையும் பாசொளிக் காமாறு குங்கமழ்ந்து
விண்ணா றெனப்பரவு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே
117.
பாலைநிகர் சொற்பலமி னார்தகவடித்தவிரை பான்மையி னொருத்துதவநீள்
சோலைமயிலொத்தவிய லாயருள்விளக்கியெந்தொல்வினைக்கழிவுதோன்றச்
மாலைமதிவைத்தமுடியாரொடுபகைத்ததெனமதமலையெடுத்தடுத்து
வேலைய யுடைக்குமொரு கொள்ளிடத்திருநதியின் வெள்ளநீராடியருளே
118.
பற்றியர மாதர்முத லாயபல மாதரும் பன்மலர்க் கொடியினின்று
முற்றியறியாதமுலை முத்தமோடெதிர்வருவெண்முத்தமிக் குறவுகொள்ள
செற்றிய கடுக்கைமலர் சூடிமா னேந்தியெண் டிசைநடுங் கரவத்தொடு
வெற்றிவிடை யானில்வருகொள்ளிடத்திருநதியின் வெள்ளநீராடியருளே
வேறு
119.
உன்னு மனவாக் குடன்மூன்று மொன்றா துடற்ற லொழிதரவுள்
துன்னு முழுவற் பேரன்பிற் றுளைந்து துளந்தா டுதல்பொருவத்
மன்னுந் தனக்குத் துணையாகி வன்காப் பியற்றும் பெருங்குலைக்கு
பொன்னு மணியு மெறியும்வட பொன்னிப் புதுநீ ராடுகவெ
120.
சேலே பொருவப் பிறழ்கருங்கட் செவ்வாய் வெண்பற் றோழியருட்
காலே வருட வெளிசெய்தவர் கமல முகத்தின் முகந்ததுணைக்
பாலே புரைசொ லனையர்சிரம் பரவக் கவிழ்ப்ப வரையுதித்துப்
போலே சிறப்ப நிகழும்வட பொன்னிப் புதுநீ ராடுகவே
121.
தென்னங் குரும்பை யனையமுலைச் செவ்வாய்க் கருங்க ணரமாதர்
வன்னங் குலவு மொலிச்சிலம்பி னனிச்ச மருட்டு மடிகள்பெயர்த்
யின்னம் பிறவிக் கடலழுந்த வெங்கட் கியல்போ வருள்பொழிவா
பொன்னங் கொடியே நெடியவட பொன்னிப் புதிநீ ராடுகவே
வேறு
122.
நீடுந லாகம மோதிய வாறருள் புல்லா ராயினுநன்
பாடுன லோனுவ னாகுவ னோவென வெள்ளா தேயடியேன்
யாடுந லார்மதி யாள்சடை யார்மலை வில்லார் மேனியினே
நாடுந லூரமர் வாய்வட காவிரி நன்னீ ராடுகவே
123.
பூமக ணாமக ளாதிமி னார்தொழு பொன்னே கோகிலமே
தேமரு மாலைய ளாவிய வார்குழ னல்லாய் கார்மயிலே
காமரு சோலையு ணீர்நிறை வாவியி னெல்லே கூர்செறுவிற்
நாமந லூரமர் வாய்வட காவிரி நன்னீ ராடுகவே
நீராடற்பருவம் முற்றிற்று
-------------------------
10. பொன்னூசற்பருவம்
124.கொன்செய்த வயிரக் கொழுங்கா னிறுத்தியொளி கூர்பவள விட்டமிட்டுக் -
மின்செய்த சிற்றிடைப் பெருமுலைக் கோகனக மீதுமொண் புண்டரீக -
தென்செய்த தமிழ்முனியை யெண்ணாது மீட்டுஞ் சிலம்பெழுந்ததுகொலென்று -
பொன்செய்த மதில்சூழ் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடியருளே -
125.
தேமணக் குங்குழற் செய்யவாய் வெண்ணகைச் சேல்விழிப் பனுவலாட்டி -
பாமணக் கும்புகழ்ச் செஞ்சடைத் தம்பிரான் பார்த்துளத் துவகைபூப்பப் -
வாமணக் குங்கரு முகிற்படாங் கீண்டுமே லாயவுல கம்பு குந்தாங் -
பூமணக் கும்பொழில் வளப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே -
126.
கொங்குமலி தேமாந் தளிர்ப்பொழி னடுக்கணமர் கோகிலப்பேடு பொருவக் -
செங்குமுத வாயர மடந்தையர் விரைக்குமலர் செங்கைநிறை யக்கொண்டு நின் -
சங்கு பல வெங்குங் கரும்பரம் பைக்குலஞ் சாலியா யுறலு ணர்ந்து -
பொங்குபுனல் வாவித்திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே -
127.
மேலாயசத்துவ மெனப்பகர் குணத்துநடு வீற்றிருந்தருளலென்கோ -
நாலாய மறைபுகழும் வெள்ளிவெண் கயிலைவரை நாப்பணமர் தோகையென்கோ -
பாலாய வொள்வயிர முற்றுங் குயிற்றகன் பலகையி லிவர்ந்திருந்து -
போலாய வளமைத் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே -
128.
கயறங்கு நின்றிருக்கட்கடை யுதித்துமிசை காணப்பரந்தெழுந்து
மயறங்குவன்கரை யுடைந்தடி யறப்பொங்கும் வான்பெருங் கருணை வெள்ளம்
யயறங்கு மொருதிவலை யாகப்ரவாகமுற் றகிலநிகி லமும்விராவ
புயறங்கு சோலைத் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
129.
நன்னயம் விராவியுள நெக்குநெக்குருகுநர் நயக்குநின் றாமரைத்தா
பன்னயம் விராவுமச் சிற்றடிப் பெருமையுட் பதிதர வுணர்ந்து பூசை
மின்னியல் பிரான்சடை யழுக்காறு மேவநன் மேகமு முடுக்கூட்டமும்
புன்னையங் கானற்றிருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
130.
ஆதார பங்கயந் தொறும்வன்ன ரூபியா யமர்வதுங் கருணையே மெய்
பாதார விந்தம் பதித்திருங் கயிலைமுற் பஃறலத் தமர்வதும்விடார்
தோதாரம் வில்லிடக் குறுமூர னிலவெழ வுறுங்கருணை பொங்கச்சிறை
போதார வமருந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
131.
வலியவர னாலமரர் வானகங் கூட்டுண்டு மகிழ்முரட் சூரனிளவன்
கலியவவன் வாய்தற் பெரும்பறை முழக்கறக் காமர்சிறு பறை முழக்கங்
தொலியசிறு தேரினி துருட்டியும் விளையாடு மொண்சதங் கைச்சிறியதா
பொலியவினி தாட்டுந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
132.
ஆதரம்பெருக கசிந்துநெக் குருகுபழ வடியர்மன மாயதூய
காதரங்கடையேங் கழிந்துய்ய வெவ்வினை கழீஇப்பொங் கிடுங்கடைகட்
மீதரம்பையர மர ரொடுகீ ழிறங்கவன் மேதினியு ளாரவ்வாறு
பூதரம் பொருவுந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
133.
அற்புமலி யுள்ளம் புகும்பரி புரத்தாளு மறைவிலை யிலாதசெம்பட்
வற்புமலி பரஞான மூறுமிரு கொங்கையும் மங்கலம் பொலிகழுத்து
வெற்புமலி பசுவேய் சுவட்டுமிரு தோளுமிள வெண்மூரலுஞ் செவாயு
பொற்புமலி யப்பொலி திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொன்னுசற்பருவம் முற்றிற்று
திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ் முற்றிற்று
-------------------------
Comments
Post a Comment