Pāṇṭiyaṉ paricu
நாட்டுப் பாடல்கள்
Back
புரட்சி கவிஞர் பாரதிதாசன் (கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்
VII: பாண்டியன் பரிசு
புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "பாண்டியன் பரிசு"
பாவேந்தர் முன்னுரை
-
உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த
- "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
- சிலசொல்லல் தேற்றா தவர்"
என்றார் வள்ளுவர்.
முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்;
மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும்எனத் தோன்றவே,
ஏறக்குறைய நானுாறு எண் சீர் விருத்தங்களால்
எழுதி முடித்தேன்.
தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள்
இச்செய்யுளின் பொருளை எனின் - அதுதான்
எனக்குமகிழ்ச்சி யூட்டுவது!
எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத்
தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது
என் அசைக்க முடியாத நம்பிக்கை.
பாரதிதாசன்.
சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம்.
இவர்கள் யார்?
வேலன் | கதைத் தலைவன் |
அன்னம் | கதைத் தலைவி |
வீரப்பன் | வேலனின் தந்தை; திருடர் தலைவன் |
ஆத்தாக் கிழவி | வீரப்பன் மனைவி |
கதிரைவேல் | அன்னத்தின் தந்தை; கதிர் நாட்டரசன் |
கண்ணுக்கினியாள் | கதிர் நாட்டரசி |
வேழமன்னன் | வேழ நாட்டரசன் |
நரிக்கண்ணன் | அன்னத்தின் தாய்மாமன்; வேழநாட்டுப் படைத்தலைவன் |
பொன்னப்பன் | நரிக்கண்ணன் மகன் |
சீனி | கணக்காயர்; வேலனின் ஆசிரியர் |
நீலன் | கதிர் நாட்டமைச்சன் மகன் |
நீலி | நீலனின் காதலி; அன்னத்தின் தோழி |
பாண்டியன் பரிசு
இயல் 1
சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத்
போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே!
கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள்,
நேர்மிகுத்த வில், வேல், வாள் துாக்கி வந்த
மண்ணதிர விரைந்தனவாம்! முரசு, "வெற்றி
பண்ணதிரும் கருவிபலப் பலவும் கூடிப்
விண்ணதிரப் பறந்தனவாம்! ஆயு தங்கள்
கண்ணதிரும் கனல்சிந்திப் படைந டத்தக்
கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது
புதுமைபோல் கொடிபறக்கக் கண்டார் அன்னோர்!
அதோபாரீர்!" எனஉரைத்தார் படைத்த லைவர்;
அதிரும்நடை யாற்புழுதி விண்ணில் ஏற
இயல் 2
அழகிய அக்கதிர்நாட்டுக் கோர்கா தத்தில்
விழிஇமைத்தல் இல்லாமல் வேவு பார்ப்போர்
மொழிஅதிர்த்தார், பறை அதிர்த்தார்; "வேழ நாட்டான்
பழியற்ற தாய்நாட்டார் அறியச் செய்தார்.
அமைதிகுடி கொண்டிருந்த கதிர்நா டந்தோ
தமக்காக அன்றித் தம் கணவர், மக்கள்
"நமக்குரிய நாட்டினிலே பகைவர் கால்கள்
சிமிழ்க்காத விழியினராய் வாளைத் துாக்கிச்
இயல் 3
கதிர்நாட்டின் கதிரைவேல் மன்னன் தானும்,
சதிராடு கூடத்தில் தவிச மர்ந்து
"அதிர்படைகள் கூட்டிவந்தான் வேழ நாட்டான்
"எதிர்த்தானா வேழமன்னன்? நரிகண் ணன்தான்
என்கண்ணுக் கினியாளே, அன்பே! உன்றன்
வன்மையுறு படைத்தலைவ னாய்இ ருந்தும்
முன்னமே சொல்லவில்லை? வேழ நாட்டான்
சொன்னான்?இந் நாட்டினிலே நம்ப டைகள்
இந்நாட்டை உன்அண்ணன் பெறநி னைத்தான்!
பின்எவரும் அறியாரே! உடன்பி றந்தான்
என்ஆவி போன்றவள்நீ! என்ன செய்வேன்?
மன்னவன்நான் எனைநம்பி வாழு கின்ற
என்றுபல வாறுரைத்து நின்றான்! அங்கே
நின்றிருந்தான் படைத்தலைவன்; அமைச்சன் நின்றான்!
"முன்ஒருநாள் என்அண்ணன் இங்கு வந்தான்
அன்னவற்றின் பொருள்இந்நாள் அறியலானேன்;
திட்டமிட்டான்! மணவாளா உன்றன் ஆணை!
மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழு கின்ற
விட்டேனா அன்னவனை! அண்ணன் அல்லன்!
வட்டத்தில் அவனுண்டோ அங்கன் னோனை
என்அண்ணன் இந்நாட்டில் நுழைவ தாயின்
அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ்
என்கால்வைப் பேன்உறுதி" என்றாள். ஒடி
என்அண்ணன் எங்குள்ளான் அங்கே செல்க
துணையாக ஒருபடையும் அவளின் தேரைத்
தணல்சிந்தும் விழியாலே நாற்பு றத்தும்
மணிவாயில் தனையடைந்தான் சிங்கத் தைப்போல்!
அணிமலர்ச்சோ லைவிட்டே அரண்ம னைக்குள்
இயல் 4
கோட்டைவா யிற்புறத்தே வாள்அ திர்ப்பும்
கூட்டத்தின் மோதுதலும், தேர்அ திர்ப்பும்,
கேட்டிருந்தாள் இளமங்கை வள்ளைக் காதில்.
வாட்போரை விரும்பும்அவள் தமிழ நெஞ்சம்
என்ஆத்தா என்செய்வேன் என்றாள் மங்கை!
"உன்மாமன் படைகூட்டி வந்தான் பெண்ணே
இந்நிலையில் இறக்கைமுளைக் காத அன்னம்
கன்னலின்சா றேஇங்கு வந்த மர்வாய்!
இயல் 5
வடக்கிருந்த வாயிலிலே கதிரை வேலன்
அடுத்துநின்ற வேழமன்னன் வாள்வீச் சுக்கள்
கொடுத்தவிடை பெற்றபடி இருந்தான்! சாவு
நொடிக்குநொடி நெருங்கிற்று! வெற்றி மங்கை
கனல்நிகர்த்த வேழவனின் பெரும்ப டைமேல்
சினங்கொண்டு பாய்ந்தார்கள். வேழ நாட்டுத்
தனியொருவன் விழுக்காடு தோள்கொ டுத்துத்
பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும்
என்செய்வார் கதிர்நாட்டார்? வேழ வர்க்கோ
பின்னுதவி செய்தனமேல் வந்து வந்து!
முன்னிலும்பன் மடங்குவிரைந் தனஎன் றாலும்
இந்நிலைமை தனையுணர்ந்து வேழன் தன்னைத்
ஏறிவந்தான் வேழத்தான். கோட்டைக் குள்ளே
சீறினஅங் கிருவாள்கள்; மோத லாலே
கூறிடவும் வழியின்றி வலம்இ டம்போய்க்
மாறிப்பின் வாங்குங்கால் பலகை துாக்கி
இயல் 6
"அண்ணன்எங்கே! அன்பில்லாக் கொடிய னெங்கே
பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து
கண்ணெதிரில் வாரானோ?" என்று கூறிக்
புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில்,
பகைப்படையின் உட்புகுந்து தேடிக் கண்ணிற்
நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி
மிகப்பெரிய குதிரைமேல் கரிய ஆடை
புகப்பார்த்தான் வடக்கிருந்த வாயில் நோக்கி!
இயல் 7
மன்னனைப் பின்னிருந்து கொன்றான் நரிக்கண்ணன்.
போர்செய்து கொண்டிருந்த கதிரை வேலன்
ஓர்ஈட்டி பாய்ந்தது போய்! கருந்தி ரைக்குள்
பேர்மறைக்க எண்ணியே தான் அணிந்த
நேர்நின்ற தன்ஆளை அணியச் செய்து
நின்றிருந்த நரிக்கண்ணன், உடன்பிறந்த
"அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்;
அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும்;
என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்?"
இயல் 8
கொலைவாளும் கையுமாய் அரசி வந்தாள்;
நிலைகலங்கி நின்றிட்டாள். "வீழ்ந்த தோநின்
இலைநீதான் எனஅறிந்தால்அஞ்சி வாடும்
கலைந்ததுவோ என்காதல் ஓவியந்தான்!"
அணைத்திட்டாள்! மலர்க்கையால் கன்னம் உச்சி
தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்;
இணைபிரியா மானமதும் எம்மை விட்டே
துணிந்ததுவோ தமிழாநின் தமிழ நெஞ்சம்!
அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை
தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற
எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற
"மனைவிளக்கே! நின்துணைவன் கதிரை வேலன்
முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே
திகைத்தேன் நான்! சாய்ந்தான்அம் மறவோர் மன்னன்!
புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம்
அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன்
இயல் 9
வேழவனின் படை வீரர் அரண்ம னைக்குள்
சூழலுற்றார் பொன்னிருப்புச் சாலைக் குள்ளும்,
ஏழடுக்கும் படைவீரர் கைப்பற் றுங்கால்
கீழைவழி நிலவறையால் அன்னந் தன்னைக்
நிலவறையால் வௌிப்புறத்தில் சென்ற ஆத்தா
சிலர்கண்டார் காணாத கதவு தன்னை!
சிலர்நெடிது சென்றுமே அரண்ம னைக்குள்
அலைவதைக்கண் டையோஎன் றுரைத்து மீண்டார்.
எப்புறத்தும் திரிகின்றான்; ஓர்அ றைக்குள்
அப்படியே துாக்கினான்; அடுத்தி ருந்த
குப்பனெனும் தேரோட்டி இடம்சேர்" என்று
அப்போதே தொடங்கினான், பொய்ப்பால் வாழ்வான்.
அரசர்தமைக் குடிகள்எலாம் காணு கின்ற
சரசரெனப் புரண்டபடி "எனக்கேன் வாழ்வு?
அரசியென வாழ்கின்றாள் எனஇ ருந்தேன்.
பெருமைகொள் என் மைத்துனனைக் கொலைபு ரிந்து
இயல் 10
வாள்தொங்க, வாள்பெற்ற வலக்கை தொங்க,
ஆட,எடுத் துான்றும்அடி இடறக் கண்ணில்
"நாடிழந்தேன் நலமிழந்தேன் கண்ணில் வைத்து
வாடுகின்றேன்" எனக்கதறி நெஞ்சம் சோர
" மைத்துனனை நானிழந்தேன் தங்கை யே! என்
செத்தானை இனிக்காண முடிவதுண்டோ?
கைத்துாண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற
வைத்திருந்தான் படைத்தலைவ னாக என்னை;
கதிர்நாட்டைப் பிடிப்பதென வேழன் சொன்னான்
புதுத்தலைமை தந்தேபின் படையெ ழுப்பிப்
எதிர்பாராப் படைஎடுப்பை அறியீர் அன்றோ?
சிதைத்தானே கதிர்நாட்டின் உரிமை தன்னைத்
உயிர்போன்றாய்! உடன்பிறப்பே! என்றன் ஆவி
துயர்தாங்க அட்டியில்லை; எனைஇ கழ்ந்து
முயல்போன்றான் நரிக்கண்ணன் என்றா லுந்தன்,
வயவேந்தன் கதிர்நாட்டான், நரிக்கண் ணற்கு
இயல் 11
உடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை எதிர்க்கிறாள். அவன், மன்னனைக் கொன்றவன் இவனே என்று
நரிக்கண்ணனைக் காட்டி விடுகிறான். அதற்குள் நரிக்கண்ணன் அரசியைக் கொன்றான்.
எனஉரைத்தான்; துடித்தழுதான். மேலும் பேச்சை
"இனிஎன்ன செய்வ" தென நரியைக் கேட்டே
"புனையுந்தார் மன்னனின்பின் புறத்தில் ஈட்டி
எனக்கிந்தக் கரியஉடை இவரே தந்தார்
என்றுரைத்தான்! அதேநொடியில் நரிக்கண்ணன்தான்
நின்றிருந்த உடன்பிறப்பை, அரசி தன்னை
"ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நாள்
நின்றுபெரு முச்சுவிட்டான்! எங்கே அந்த
இயல் 12
கரியஉடை போர்த்துவந்த காலாள் சென்று
பெருவாளால், தன்கையால் உடன்பி றந்த
உருகினான். மக்களிடை மகனாய் வாழ
தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்ம னைக்குள்!
அரசனிது கூறுங்கால் அங்கி ருந்த
இரக்கமுற லானார்கள்! நரைத்த தாடி
கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்?
நரிக்கண்ணர் இலைஎனில்நும் அருமை தன்னை
இயல் 13
அன்னத்தை அரண்மனையில் காண வில்லை!
என்னத்தைச் செய்வதென ஏங்கி நின்றான்;
"பொன்னான பேழையினைப் பெற்றா யோ?என்
உன்னிடத்தில் தந்துள்ளேன்; அதனைக் காப்பாய்
"நானறியேன் பேழையினை!" எனறான் குப்பன்.
போனதோ? இங்கிருந்த ஆளி டத்தில்
ஊனமிலா நம்மறவர் போலே அன்றோ
ஏனிந்தப் பிழைசெய்தேன்? என்வாழ் வுக்கே
அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்;
என்னுமொரு கருத்தோடும் அரண்ம னைக்குள்
மன்னவனை ஏமாற்றிக் கதிர்நாட் டாட்சி
அன்னத்தை ஆத்தாவைத் தேட வேண்டும்;
இயல் 14
அவனிடம் தொடங்குகிறான் பொய்மூட்டைகளை நரிக்கண்ணன்.
ஆத்தாவை, அன்னத்தைப் பேழை தன்னை
போய்த்தேட வகைசெய்து கொண்டி ருந்த
கோத்தான முத்துலவு மார்பி னோடு
சாய்த்தானே நரிக்கண்ணன் மன்ன வன்பால்
"நாளும்எனைக் காப்பாற்றி ஆளாக் கிப்பின்
கோளும்பொய் சூதுமிலான் எனஉணர்ந்து
நீளிஎனும் மன்னனைநான் போரில் வென்ற
தோளைஇகழ்ந் தாளிவள்;என் வாளால் வெட்டித்
'வஞ்சகத்தால் கதிரைவேல் மன்னன் தன்னை
நெஞ்சத்தால் நினைத்தாளே! 'நின்தோள், மானம்
கொஞ்சத்தால் மாண்டாளே, நாள டைவில்
கெஞ்சத்தான் வைத்தேனா! உன்பால் அன்பு
'உடன்பிறந்தேன்' என்றுரைத்தாள். ஆமாம் என்றேன்
மடியும்வகை செய்துவிடு; முடியும் உன்னால்!
கடல்நிகர்த்த கதிர்நாட்டை ஆள்' என் றாள்என்
கொடியாளின் உடன்பிறந்த பழியுந் தாளேன்
நல்லாரின்பெருநிலையும் இந்த வையம்!
எல்லாரும் போலேநான் இன்னும் இங்கே
சொல்லுவேன் நானண்டி வாழ்ந்தி ருந்த
முல்லைமுனை அளவென்னால் பழிநேராமல்
நான்செத்த பின்அடையும் வானாட் டின்கண்
தேனுாறும் சோலைசூழ் அப்பே ருரில்
பால்நேரில் காய்ச்சி, அதில் சீனி இட்டுப்
ஊனின்பம் நுகர்கின்ற அறைஇ ருந்தால்
இயல் 15
அரசனுரைத் திடுகின்றான் "அப்ப னேஉன்
ஒருகுலையில் ஒருகாயில் தீமை காணில்
அரசியவள் தீயவள்தான்; உடன்பி றந்த
நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன்
அதுவிருந்தால் காட்டுகநீ! இந்த நாட்டின்
"பதிவிருந்தால் ஏனுனைநான் நத்த வேண்டும்?
குதிரைதிரை கொண்டநெடு முடியான் என்னும்
பதினா யிரம்பேரை வென்ற தாலே
அந்நாளில் மன்னவனால் கொடுக்கப் பெற்ற
முன்னோனாம் முத்தப்பன் மறைத்த தோடு
தன்னிடத்தில் படையிருந்த தாலே அன்றோ
என்னையுமிக் கதிர்நாட்டான் விட்ட தில்லை;
இந்நாட்டை நானாள வேண்டு மென்ற
அந்நாளில் சாகுங்கால் எனைஅ ழைத்தே
உன்னைநான் ஓருறுதி கேட்கின் றேன்நீ
மன்னவரின் அருள்பெற்றுக் கதிர்நாட் டுக்கு
எனக்கூறி உயிர்நீத்தான்; அதனா லன்றோ
தனிப்பெருமை, தனிமகிழ்ச்சி இவற்றை யெல்லாம்
எனைத்தமிழில் 'படைத்தலைவா' என்ற ழைக்கும்
தனைத்தரினும் ஒப்பேனே! ஒருசொல் சொல்க;
வணங்குகின்றேன் எனக்கூறி வணங்கி நிற்க
இணங்ககின்றேன். நீ ஆள்க" எனஉ ரைத்தான்
பிணங்குவித்தும் மைத்துனனை உடன் பிறப்பைப்
அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண் ணன்தான்
இயல் 16
கதிர்நாடு சார்ந்திருக்கும் தென்ம லைமேல்
மிதியடிக்கால் மீதிலோர் காலைப் போட்டு
எதிர்நிற்கும் தோழர்கள்பால் இதனைச் சொன்னான்:
"முதுமையினை அடைந்துவிட்டேன். வாழ்நாள் எல்லாம்
ஒருபிள்ளை கொடிவேங்கை போல்வான்; கண்போல்
இருபதுஆ யினஎன்றன் தீயொ ழுக்கம்
திருடுவதைவிடவேண்டும்!அன்றி என்னைத்
வரவேண்டாம் இவ்விடத்தில் என்றாள்; என்றன்
ஒருவனிடம் ஏற்பட்ட தீயொ ழுக்கம்
பெருநோயாய் மாறுவது மெய்யே; நானும்
ஒருநாளும் தீத்தொழிலை விடுவ தென்றே
அருமையுறு பெண்டுபிள்ளை நினைவே யாக
நானும்என் மனையாளும் வாழ்ந்தி ருந்த
தானங்குக் கைப்பாடு பட்டாள்; சின்னத்
தேனடையும் ஈயும்போல் மகனும் தானும்
சீனி எனும் கணக்காயர் இடத்தில் அன்பின்
கணக்காயர் முயற்சியினால் அரண்ம னைக்குள்
துணையானாள் கதிர்நாட்டின் அரசி யார்க்கே!
இணக்கமுறக் கலைபலவும் பயில்கின்றான். நான்
அணுகினேன் இல்லை. எனை அவள்கண் டாலும்
'அப்பையன் வேலனுக்கு நான்தான் தந்தை
இப்பெரிய நாட்டினிலே இந்த நாளில்
செப்பினேன் இன்றுதான் உம்மி டத்தில்!
எப்பாடும் படவில்லை; காலாள் போலே
இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே
படைவீரர் உலாவினார்! எலிகள் ஓடிப்
தடதடென உருட்டினார். அவர வர்கள்
இடையிடையே நரிக்கண்ணன் செல்வான், மீள்வான்;
இயல் 17
என்னும் பேழையைத் திருடர்களிடம் காட்டினான்.
ஓர்அறையில் பேழையினை அரிதிற் கண்டான்
யாருக்கும் தெரியாமல், அதைத்தே ரோட்டி
நேரினிலே நின்றிருந்தேன். தன்ஆள் என்றே
பாராட்டினேன் அவனை! எடுத்து வந்தேன்
சிரித்திட்ட திருடர்களில் ஒருவன் சொல்வான்:
இருக்கின்ற பேழையினைத் தேடித் துாக்கி
ஒருபேச்சும் பேசார்கள்; சும்மா நின்ற
பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
என்றுரைத்தான். மற்றொருவன் இயம்பு கின்றான்
பொன்னையோ காசினையோ நாமெ டுத்துப்
வன்சிறையில் அடைப்பார்கள். திருட ரென்று
மன்னர்,பழம் புலவர், வணி கர்கட் கெல்லாம்
வீரப்பன் கூறுகின்றான் "என்தோ ழர்காள்!
ஆர்அப்பன் என்பதையும் அறியான் வேலன்!
நேரிற்போய் இருவரையும் காணு தற்கும்
சீரில்லை என்னுடம்பின் நிலையில்; என்ன
நான்திறந்து பார்த்ததிலே விலையு யர்ந்த
வான்திறந்த உடுக்கள்போல் கதிர்போல் கண்டேன்!
ஈன்றானின் சொத்தாக அதனை என்றன்
தோன்றாத இடத்தினிலே புதைப்பேன். பின்பு
"ஆண்டவரே, நும்மனைவி எங்க ளன்னை
ஈண்டுள்ள இருவரையும் அறியோம் யாமும்!
பூண்டுள்ள உறுதியோ பெரிது! தாங்கள்
ஊன்தளர்ந்தீர், உடல்தளர்ந்தீர், இனியும் செல்ல
"நீங்களெலாம் இங்கிருப்பீர், பேழை தன்னை
தாங்காத ஆவலினைத் தணிப்ப தற்குத்
வாங்கியதோர் வில்லைப்போல் வளைந்த மேனி
ஓங்கியதோள் மீதினிலே பேழை தன்னை
இயல் 18
சீனியெனும் கணக்காயர் வீற்றி ருந்தார்
போனிமிர்ந்த பார்வையினான் வேலன், மற்றும்
தேனிகர்த்த தமிழாலே புதிய செய்தி
ஏனிந்த நாட்டின்மேல் வேழ நாட்டான்
பெருமைமிகு கதிரைவேல் மன்னன் மீது
அரசியினைக் கொன்றவன்யார்? அரசர் பெற்ற
திருநிறைந்த கதிர்நாட்டின் அரச னென்று
அரண்மனையின் நடுவினிலே வேழ நாட்டின்
கதிர்நாட்டின் மேலந்த வேழ நாட்டான்
முதுகினிலே பின்னின்று ஈட்டி எய்தோன்,
எதிர்ப்பட்டால் கொலைசெய்ய இருப்போன் அன்னோன்
மதியுடையாய் வேலனே, உன்அன் னைக்கும்
இயல் 19
நீ உடனே போ என்றார் கணக்காயர்.
உன்அன்னை ஆத்தாவைக் காப்பதற்கோ
என்கலைகள் உன்னுயிரைக் காக்க! நாட்டின்
பின்உனக்கு வேண்டுமெனில் இங்கி ருக்கும்
என்றுரைத்தார். வாள்எடுத்துக் குதிரை ஏறி
ஐயாவே வேலனுக்குத் துணையாய்ச் செல்ல
கையாலே இவைஎன்று காட்டி விட்டால்
நெய்யாலே முண்டெழுந்த நெருப்பைப் போலே
வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம்
இருகைகூப் பிச்சொன்னான் ஒருசேய். அங்கே
"வருகைக்குக் காத்திருப்பான் ஐயா; வேலன்
பருகைக்கு நஞ்சளித்த பழிக்கை ஏற்பேன்;
பதைக்கையிலே தடுப்பீரோ? இதைக்கை விட்டால்
அருள்கைக்கு நாளெதுதான்? என்மேல் வேலன்
போமாறு தலையசைப்பீர்!" என்று சொன்னான்.
"ஆமாறு நாமுணர்ந்தோம். வேலன் அங்கே
ஏமாறு தலையடைந்த இந்த நாட்டின்
நாம்ஆறு தலையடைய நரியின் நோக்கம்
"பொறுத்திருப்பார் வாழ்ந்திருப்பார்! இந்த நாட்டில்
நிறுத்திருப்பார்; இலேசென்று நினைத்தி ருப்போர்
குறித்திருப்பார் ஆத்தாவைத் தீயோள் என்று
மறந்திருப்பார் வைகாணா திருப்பார்; காண்பார்
இயல் 20
புல்லுாரிற் சிறுகுடிசை தனில்இ ரண்டு
நல்லுரையில் தேற்றியிருந் தன.அ வற்றில்
வல்லுாறு குறிவைத்த புறாப்போல் வாழும்
சொல்லிஅழு தாள்ஆத்தா; ஆற்றாள் கண்ணீர்
"அன்னத்தின் கண்ணி னிக்கும் மகனைத் தேடி
மன்னியசிங் கஞ்சுமந்த தவிசில் ஏற்றிக்
என்கண்ணால் பார்த்துள்ளம் மகிழ்வே னென்ற
அன்னவனின் திருத்தோளும் அகன்ற மார்பும்
அருமைமகள் தனக்கேற்ற அன்ப னோடும்
எருமைஎனக் கிடந்தின்பம் நுகரு கின்ற
பெருமாட்டி மொழிஎண்ணி அழுவே னாநான்?
நரிக்கண்ணன் வஞ்சித்துக் கொன்ற போது
எதிரெதிரே இருதழற்பந் துகள் சுழன்றே
அதிர்கின்ற மெய்ப்பாடும் சுழற்றும் வாளும்
முதியஓர் காலாள்போல் தாடி மீசை
பதுங்குகறுப் புடைபூண்டு வேந்தை மாய்த்தான்
நானிருந்தேன் காலாட்கள் பலரி ருந்தார்
மேனிமிர்ந்த கரியஉடைக் காலாள் வந்து
ஊன்நடுங்கும் செய்தியினைச் சொன்னான். மன்னன்
நானிருந்து மன்னவனைத் தேற்றுங் கால்என்
பழநாள்பாண் டியன்உன்றன் மூதா தைக்குப்
முழுநீளப் பட்டயமும் உடைபூண் வாளும்
இழந்ததனால் பேழையினை, அழகு மிக்க
ஒழிந்திடுமே! அதைஎண்ணி அழுவே னோநான்?"
இயல் 21
வௌியினிலே பேழையொடு நின்றி ருந்த
களிகொண்டான்! தன்முதுகில் உள்ள பேழை
வௌிப்படுத்தத் தக்கதோர் பேழை என்று
கிளிமொழியாள் அன்னத்தைக் காப்ப தற்கும்
நிலையாவும் விளங்கிற்று! வீரப் பன்தான்
குலையாமல் தந்திடவும் நினைத்தான். நாட்டின்
வலிஏது? பொறுத்திருப்பேன் எனமு டித்து
தலைமீது கைவைத்துத் "தாயே! அப்பா!
இயல் 22
ஐயகோ என்ஆத்தா! வைய கத்தில்
தையலென துளம்பொறுத்த துண்டு;பின்பு
துய்யகதிர் நாட்டுரிமை பேழை யோடு
செய்துவந்தான் என்மாமன் எனறால் இந்தச்
உடன்பிறந்தா ளைவெட்டி, அன்னோள் ஆவி
தொடர்ந்தழிக்க எண்ணினவன் மாமன் என்றால்,
நெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும்
கிடந்துதவம் புரிகின்ற உலகில் இந்நாள்
ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்
மைப்புருவ விழிமீது விழிய மைத்து
செப்பிமுத்த மிட்டாளே! அன்புள் ளாளின்
இம்மாநி லம்புகழும் தந்தை, முந்தை
கைம்மாரி யாய்ப்பொழிந்து கணக்கா யர்பால்
அம்மாஎ னக்கூவிக் கைம்மே லேந்தி
'அ'ம்முதல் எழுத்தளித்தான்; அறிவோ அன்னோன்
ஊராளும் தலைவனின்குற் றேவல் செய்வோன்
ஓர்ஆளின்மகள் தன்னை உவந்து பெற்றோர்
பாராளப் பெற்றாரை என்பெற் றோரைப்
யாருமில்லை யான்பெற்ற பேறு பெற்றோர்;
இயல் 23
நரிக்கண்ணனுக்கு முடி சூட்டுவதை முரசறைகிறான் ஒருவன்!
எனத்துடித்தாள். வீரப்பன் எடுத்தான் ஓட்டம்!
சினத்தீயில் வெந்திடுதல் அன்றி, பேழை
நினைத்தானாய், யாருமிலா இடம்பு குந்தான்.
இனிக்கதிர்நாட் டுக்கரசாய் முடிபூண் கின்றார்
அடிவைத்தான் கதிர்நாட்டில்! நெஞ்சில் வைத்தான்
குடிவைத்தான் ஒடிவைத்தான் நாட்டில்! எங்கும்
வெடிவைத்தான் அறம்வளர்த்த இவ்வீட் டுக்கும்!
'முடி'வைத்தான்; முழக்குகின்றான்; அன்னோன் வாழ்வின்
இந்நேரம் நரிக்கண்ணன் நன்னீ ராடி,
மன்னவனை எதிர்பார்த்துப் பொன்னில் மின்னும்
இந்நேரம், தான் இருக்கும் இடத்தி னின்றே
பின்எவரும் சூழ்ந்துவர வருவான் வேழன்!
இயல் 24
சூழ்ந்தார்கள்; அதேநேரத்தில் வேலனும் பகைவரை எதிர்த்தான்.
என்றுரைத்தே ஆத்தாதன் எரிவை இல்லாம்
'அன்னம்அதில் தான்இருப்பாள், ஆத்தா என்னும்
முன்வந்தார் சிலபகைவர் குடிசை நோக்கி!
பின்னொருவன் வருகின்றான் அவன்பேர் வேலன்!
பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப்
கலங்கினர்வே ழவர் பத்துப் பேர்மாண் டார்கள்!
குலைநடுங்க வைத்தன! ஆத்தா, தன் வேலன்
நிலையுணர்ந்தாள். அன்னத்தை நோக்கி அங்கு
இயல் 25
ஆத்தா உருமாறி வௌிச் சென்றார்கள்.
அன்னத்தை ஆடவனாய் உருமாற் றிட்டாள்;
கன்னமறைக் குந்தாடி யுடைய தாத்தா,
தன்மகனின் கணக்காயர் சீனி வாழும்
"உன்மகனின் நிலைஎன்ன" என்றாள் அன்னம்;
"கண்ணெடுத்தும் பார்த்தோமா கைவா ளோடு
பெண்ணெடுத்து வளர்த்திட்டாள்; அதனா லேதன்
எண்ணவில்லை என்றுலகம் உனைப் பழிக்கும்;
மண்ணெடுத்துச் சுட்டிடுசெங் கல்லோ, அன்றி
இயல் 26
எதிரில் வேலனின் துணைவர் குதிரைமேல் ஏறிக் குடிசை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.
"வேலவனைக் காப்பதற்கு நம்மா லாமா?
ஞாலத்தில் என்பிள்ளை யின்தி றத்தை
சோலைஅதோ! அதையடுத்த சிற்றுார் காண்பாய்!
நாலைந்து குதிரைகளில் வாள் பிடித்த
"எங்கிருந்து வருகின்றீர்?" என்றான் ஓர்சேய்.
வெங்குருதிப் போர்செய்து கொண்டி ருக்கும்
தங்குதடை இல்லாமல் ஆத்தா சொன்னாள்.
மங்கையிரு கைகொட்டி மகிழ்ந்தாள் "உன்றன்
இயல் 27
பின் அனைவரும் மாற்றுருவத்தோடு அரண்மனை நோக்கி நடந்தார்கள்.
ஆலடியில் அமர்ந்திருந்த கணக்கா யர்பால்
மேலுடையும் தாம்விலக்கி நின்று செய்தி
"வேலவனோ உமைக்காக்க அங்கு வந்தான்
நாலைந்து பேர்இளைஞர் துணைக்கும் சென்றார்;
என்னையவன் சிறைப்படுத்த எண்ணு முன்னம்
மன்னவனாம் வேழவனைத் தனியே கண்டு
நன்றென்றார் இருவருமே! உருவம் மாற்றி
தென்புறத்தே வேழவனார் தங்கி யுள்ள
இயல் 28
என்று மகிழ்ந்தான். அதை ஒரு முதியோன் மறுத்தான்.
ஒளிவிளக்குப் பத்தாயி ரத்தின் நாப்பண்
தௌிவிளக்கும் அறிவுடைய அமைச்சன் தானும்,
களிமிகுக்க வேழத்தான் உரைக்க லுற்றான்
"குளிர்புனல்சேர் கதிர்நாட்டை நரிக்கண் ணற்குக்
என்னருமைப் படைத்தலைவன் மகிழும் வண்ணம்
தன்னருமை உழைப்பாலே என்னி டத்தில்
பொன்முடியை அவன்தலையிற் சூட்டும் போது
துன்பத்தை நான்கண்டேன் ஏனோ?" என்றான்
"நரிக்கண்ணன் கதிர்நாட்டை அடைவ தற்கு
எரிவுதனைக் கதிரைவேல் மன்னன் மேலே
ஒருநாளும் தங்களைஅக் கதிரை வேலன்
பெரும்படையும் கொண்டுவந்தீர்! நடந்த போரில்
இருவேந்தர் வாட்போரை நிகழ்த்தும் போதே
நரிக்கண்ணன்செலுத்தினான்; நானும் கண்டேன்
இருக்கட்டும்; பெருவேந்தே, அரசி யாரை
பெருங்கொலைசெய் தான்அந்தோ! இப்பெண் ணாளைப்
இவ்விளைய பூங்கொடியின் வேர றுக்க
ஒவ்வாத முறையெல்லாம் சூழு கின்றான்;
செவ்விதழாள் அன்னத்தை முகிலின் மீண்ட
அவ்வகையே தானும்தன் உண்மை காட்டி
இயல் 29
வியப்புற்றதோடு, பழி என் மேலல்ல என்றான்.
வியப்புற்றான்; முகநிறையக் கண்தி றந்து
துயருற்றான். "ஒருநாட்டைப் பிடித்த பின்னர்
செயப்பட்ட போர்நடுவில் பகையை நானோ
வியர்த்திட்டான் உடலெல்லாம்! "அந்தத் தீயன்
"அப்போதே நானினைத்தேன்; கேள்வி யுற்றேன்.
தப்பேதும் இல்லான்போல் ஆடல் செய்தான்.
இப்போது தான்முடியைச் சூட்டி வந்தேன்;
எப்போதும் உமக்கேஓர் தீமை யின்றி
இயல் 30
பின்னும்அவன் அமைச்சனையே நோக்கி, "இந்தப்
சின்னநடை நரிக்கண்ணன் இடம்வி டுத்தால்
அன்னையினைக் கொலைசெய்தான்; தந்தை தன்னை
முன்னின்று காத்தாளை ஆத்தா என்னும்
கூறுகநின் கருத்"தென்றான். அமைச்சன் சொல்வான்:
சீறுகின்ற பாம்புக்குத் தவளை யூரில்
வீறுடைய கதிரைவேல் மன்னன் ஈன்ற
வேறுநாட் டிளவரசை மணக்கச் செய்து
இயல் 31
ஒருவரை அனுப்பிக் கதிர்நாட்டை ஆண்டு வரச்செய்க" என்றான் அமைச்சன்.
கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி
பொதுநாட்டம் உடையஓர் அறிஞன் தன்னைப்
"எதுநாட்டம்? அன்னமே சொல்வாய்" என்றான்.
"சதுர்நாட்டிப் பகைமுடிமேல் தாளை நாட்டும்
பழநாளிற் பாண்டியனின் படைந டத்திப்
அழல்வேலான் என்னருமை மூதா தைக்கே
எழிலான பேழையிலே ஞாலம் மெச்சும்
அழகான கதிர்நாட்டின் வரலா றெல்லாம்
இயல் 32
இருக்கும்; அதைக் காட்டச் செய்வீர் மன்னரே!
வேழமா நாடுடைய வேந்தே! என்றன்
பேழைமா றாமல்அதைக் காட்டும் வண்ணம்
ஏழையரின் குறைதீர்த்தல் கடமை யன்றோ?"
பேழைமாற் றம்சிறிதும் இன்றி இங்கே
ஆளியெனும் படைத்தலைவா செல்க என்றான்
நாளில் இதே நேரத்தில் அரண்ம னைக்கு
ஆளிருவர் மூவர்விழுக் காடு நீடும்
கேளிர்இதை; அப்பேழை அடையா ளத்தைக்
இயல் 33
இளவஞ்சி அன்னம்உரைத் திடுவாள்: "ஐயா
உள்அகலம் மூன்றுசாண்! உயரம் நாற்சாண்!
வௌிப்புறமும், பொதிகைமலைச் சந்த னத்தின்
உளிஅழுந்தும் எழுத்தாலே உள்ளி ருக்கும்
வாள், நகைகள், ஆடைவகை முழுநீ ளத்தில்
காணுகநீர்" என்றுரைத்துத் தான ணிந்த
ஆணிப்பொற் பேழையதன் அடையா ளத்தை
சேணுயர்ந்த அரண்மனைக்குள் ஆடற் கட்டின்
இயல் 34
அரண்மனையில் பேழையைத் தேடச் செய்தான் மன்னன்.
ஓடுக,பாண் டியன்பரிசை நோக்கி நீவீர்!
தேடுக வென் றான்மன்னன்! சென்றிட் டார்கள்!
நாடுதனை உடையவர்க்கே நான ளித்து
பீடுடைய அறமாகும்! இந்த நாட்டின்
அந்நேரம் எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்த
"மன்னவரே ஆளியினைப் போகச் சொன்னீர்
சின்னவனே ஆதலினால் பேழை தேடும்
இந்நிலையில் பொறுப்புள்ள ஆள னுப்பி
ஆத்தாவும் உரைத்திடுவாள்: " ஆம்ஆம் நானே
தீத்தாவும் கண்ணாலே நரிக்கண் ணன்தான்
காத்தாளும் அரண்மனையில் பேழை தன்னைக்
"தாத்தாவைப் போலுருவை மாற்றிக் கொள்க,
இயல் 35
ஆளி அரண்மனையில் தேடியதில் பேழை இல்லை என்றான்.
முன்போல ஆணுருவம் பூண்டாள் ஆத்தா,
பின்தொடர்ந்தார் கணக்காயர்; வாளும் ஏந்திப்
முன்வாயில் தனையடைந்தார்; மேலும் உள்ளே
சின்னதொரு படைத்தலைவன் ஆளி என்பான்
திடுக்கிட்டார் கணக்காயர்! நரிக்கண் ணையா
படைமறவர் யாவருமே வௌிச்செல் லாதீர்!
அடுக்களையோ ஆடரங்கோ எவ்வி டத்தும்
நடுவிலுள்ள உமையும் ஆராய வேண்டும்
இயல் 36
வௌியிற்செல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால் ஒருவன் மட்டும் வௌியில் ஓடுகிறான்.
ஆத்தா பின்தொடர்கின்றாள்.
கணக்காயர் எவ்விடத்தும் துணைவ ரோடு
இணைப்பாக நின்றிருக்கும் ஒருவன் கண்ணை
அணித்தான தெருவாயில் நோக்கி மெல்ல
"கணுக்காலை வெட்டுவேன். செல்லேல்" என்றாள்;
இயல் 37
அவன் அவளின் இடது கையை வெட்ட, இருவரும் ஓரிடத்தில் வீழ்ந்தார்கள்.
அரசநெடுந் தெருநீங்கிப் பல்க லைகள்
பெருநிலையம் நீங்கிப்பின், குறுக்கே ஓடிப்
தருகினிலோர் இருள்கிடக்கும் பொதுமன் றத்தில்
அரிதான இடக்கையை இழந்தாள் ஆத்தா
செந்நீரில் புரளுகின்ற இரண்டு டம்பும்
இந்நிலையில் ஆயிற்றா என்னும் வாய்கள்!
எந்நினைவும் இல்லாமல் துன்ப மேயாம்!
சின்னேரம் சின்னேரம் என்ப தெண்ணத்
தனக்குந்தன் கணவனுக்கும் இடையில் வாய்த்த
புனத்திலுறும் புதல்போலே வளர்ந்த தாலே
அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில்
நினைத்தவளாய்த் தாழ்குரலில் "அத்தான்" என்றாள்;
இயல் 38
ஆண்என்று வாள்சுமந்தும் எனைத்தொ டர்ந்தும்
காண்என்று கணுக்காலைத் தீர்த்தாய் என்உள்
வீண்என்று கருதுகிலேன்! என்செய் கைக்கு
பூண்என்று புகன்றாலும் மகிழ்வேன் என்று
படையாளிற் பகைஆள்போல் இருந்தாய் அத்தான்!
குடையாளின் பணியாள்நான்! நரிக்கண் ணற்கே
றடையாளம் தெரியாமல் இழைத்த குற்றம்
உடைவாளாய் இருகையால் அணைத்த மெய்யை
பிள்ளையெங்கே எனக்கேட்டான் வீரப் பன்தான்!
கிள்ளையையும் சிறைசெய்ய நரிக்கண் தீயன்
கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்; அன்னம் என்னும்
முள்ளையிட்டாற் போல்அச்ச மேமே லிட்டு
மண்காண முகில்கிழித்து நிலவு வந்து
புண்காண இடருற்றுக் கிடக்கின் றோமே!
பண்காணும் மொழிஅன்னம் தனையும், பெற்ற
கண்காணு மோஎன்றான்! துன்பத் துக்கோர்
இயல் 39
திகழ்வேழ மன்னனுடன் அமைச்சன், அன்னம்,
அகம்வேறு பட்டநரிக் கண்ணன் அங்கே
"இகழ்ச்சிமுடி பூண்டவனே என்செய் தாய்நீ?
நகைபுரியக் கொலைசெய்தாய்; அடடே நாட்டின்
நாடிழந்தாள்; நற்றந்தை, தாயி ழந்தாள்.
வீடிழந்தாள்; புகழ்இழந்தாள்; மணமி ழந்த
பேடிழந்த அனைத்துக்கும் நீஆ ளாகிப்
தேடுகின்றாய்; ஆத்தாவைத் தீர்த்திட் டாயோ?
பின்னறிவாய் என்தோளின் வாளின் சீற்றம்!
"முன்னறியும் அறிஞர்க்கு முதல்வரான
என்னறிவால் வானொடுவிண் ணறிய நாயேன்
கன்னலிடைக் கணுக்கண்டு பொறாரோ? தங்கள்
இயல் 40
கொண்டு இந்நாட்டை இவளே ஆளட்டும் என்றான் நரிக்கண்ணன்.
அன்னத்தைக் கொலைபுரிதல் இல்லை; அந்தோ
பொன்னொத்த பேழையினைக் கண்ட தில்லை
கன்னத்தைத் தன்நகமே கீறிடாது
தன்அத்தை மகனைஇவள் மணந்து கொண்டு
நரிஇவ்வா றுரைத்தஉடன், அரசன், ஆம்ஆம்
கருத்தென்ன? அதுதானே! என்று கேட்டான்.
திருச்சின்னம் ஊத,நறுந் தென்றல் வீசச்
ஒருத்தன்எனை மணப்பதெனில் அன்னோன், என்றன்
இயல் 41
முன்பாண்டு வையத்தில் முறைந டாத்தி
தென்பாண்டி நாட்டான்பால் என்மூ தாதை
என்பாண்டி யன்பரிசை எனக்க ளிப்போன்
அன்பாண்டா ரே, இதுஎன் உறுதி யாகும்;
"காற்றுக்கும் ஆடாமல், கனல்த னக்கும்
சாற்றுக்கு நிகரான மொழியா ளே! நீ
நுாற்றுக்கொன் றேஅன்றோ மானே! உன்றன்
ஏற்றுக்கொண் டேனது போல் ஆகட் டும், தீர்ப்
இயல் 42
இம்முடிவை முரசறைவிக்கக் கேட்டுக் கொண்டாள் அன்ணம்.
"இம்முடிவை நாட்டார்க்கு முரச றைந்தே
செம்முடியை அசைத்திட்டான் மன்னன்; ஆங்கே
"அம்முடிவால் தீமைபல நேர்தல் கூடும்.
தம்முடிமேல் பேழையினைத் தூக்கி வந்த
எனக்கேட்டான் நரிக்கண்ணன். அன்னம் சொன்னாள்:
நினைப்பாரோ? நினைப்பரெனில் கிழவ ரல்லர்
எனஉரைக்கப் பின்னும்நரிக் கண்ணன்: "நோயால்
"தனியரசு போக்காத நோயை நானே
"பகையாளி யாயிருந்தால் தீமை" என்றான்.
மிகஉறவும் பகையாளி ஆதல் உண்டு
நகையாரோ" என்றுரைத்தான். "அவ்வ ரும்பு
"இகழ்சாதி ஒப்புவதோ!" என்று கேட்டான்.
"கூழையே னுங்கொண்டு காட்டு மேட்டுக்
ஏழையே னும்கண்ணுக் கினியான் இன்றேல்
கோழையே னும்பெண்டிர் இவ்வா றோதும்
பேழைஏன்? சீர்த்திஏன்? பெற்றி ருக்கும்
"ஒத்தஅன்பால் ஒருத்திபெறும் காத லின்பம்
செத்தவன்பால் ஒருத்திபெறும் இன்பம் உண்டு
மெத்தவன்பால் வஞ்சத்தால் மான மின்றி
சொத்தவன்பால் பெற்றவனை மாற்றி அங்தத்
இன்பம்வரும் வழிகள்பல உண்டு மண்ணில்!
அன்பமைய உறவாடித் தன்கை வாளால்
பின்பவன்பால் பொன்னாட்டை மீட்கப் போக்கும்
வன்பகையால் துடிக்கையிலும் தொண்டு செய்வோன்
என்றுபல கூறியபின் எழில்வேந் தன்பால்,
இன்றுமுதல் நீவிர்நடு நின்று நோக்கி
"நன்றுமட மயிலேநீ செல்க" என்றான்.
ஒன்றுபிழை என்றாலும் ஒப்பேன்! அன்னம்
அன்னத்தின் அன்புடையார்; நரிக்கண் ணற்கே
தன்னைநம் படைமறவர், உளவு காண்போர்
சின்னநரிக் கண்ணனவன் வஞ்சம், சூழ்ச்சி,
மன்னுகவே சரிநீதி" என்று மன்னன்
இயல் 43
கதிர்நாட்டின் வீதியெலாம் யானை மீது
கதிரைவேல் மன்னன்மகள் இழந்து போன
அதுபோதே அவனையோ, அவன் குறிக்கும்
எதிர்ப்பில்லை; எவராலும் இடரும் இல்லை.
இயல் 44
முழக்கத்தை கேட்டவர்கள் பல உரைப்பார்:
கொழுக்கட்டை அன்னத்தை மணந்து கொள்வான்;
வழக்கத்தை விடுவானோ? வஞ்சம் சூழ்ச்சி
இழக்கத்தான் செய்தானே! இருக்கும் பெண்ணை
கள்ளர்பலர் இருக்கின்றார் தென்ம லைக்குள்
உள்ளபொருள் அகப்படுமே என்பார்; ஆனால்
பிள்ளைகள்போய் அரண்மனையில் விளையா டுங்கால்
கொள்ளையடித் துக்கொள்வான் அன்ன மென்னும்
அவ்வமைச்சன் பொல்லாத திருட னன்றோ?
செவ்வையாய் இந்நாளில் அன்னத் திற்குத்
கவ்விடுவான் அள்ளூறக் கசக்க 'எட்டிக்
இவ்வால மரத்தடியில் என்பார் சில்லோர்;
இயல் 45
நிலவெரிக்கும் இரவினிலே அரச அன்னம்
"குலையெரிந்து போனதடி! ஆத்தா வின்கை
நிலைகலங்கக் கணுக்காலை இழந்து போனார்!
மலைநிகர்த்த தோளுடையான் வேல னுக்கு
வீரப்பக் கிழவரைநான் கண்டேன்; அன்னார்
ஆரப்பன் நாட்டுக்கு நரிபி றந்தான்?
நேரப்போ வதையெல்லாம் அறிவார் யாவர்?
தீரட்டும் என்நோயும்; ஆத்தா நோயும்!
இயல் 46
பொன்னப்பன் வந்தான்.
"பெரியார்வாய்ச் சொற்பலிக்கும்" என்றாள் அன்னம்;
உரியார்க்கே தாயகமும் உரிய தாகும்
நரியாரின் மகன்வந்தான் அங்கப் போது
"தெரியாதா? நான்நேற்றுக் காலை வீட்டுத்
"என்அப்பன் உன்மாமன் ஆத லாலே
பொன்னப்பன் என்று பெயர் எனக்கு! நான்மேல்
உன்னைப்போல் நான்அழகன்; அழகி நீயும்!
தின்னப்பல் பண்டங்கள் வீட்டி லுண்டு
தேனாலும் பாலாலும் என்றன் மேனி
மானாலும் கிளியாலும் இளைத்துப் போனேன்,
ஆனாலும் ஒருபேச்சுக் கேட்பாய். நானோ
போனாலும் போகட்டும் அன்ன மென்னும்
எவ்வளவோ வேலையுண்டு முடிக்க வேண்டும்;
எவ்வூர்க்கும் திருமணத்தை முழக்கச் சொல்லி
ஒவ்வொரு வீடும்சிறப்புச் செய்யச் சொல்லி
செவ்வையுறப் பிறநாட்டு மன்னர்க் கெல்லாம்
மணந்துகொண்டால் என்னிடமே இருக்க வேண்டும்!
பிணம்போல எப்போதும் தூங்க வேண்டாம்!
பணம்போடு; குறைந்துவிடப் போவ தில்லை!
துணிந்துநிற்பாய் என்னோடு திருடர் வந்தால்!
மனைவிஎன்றும் கணவனென்றும் இருந்தால் ஏதோ
அனைவர்க்கும் உள்ளதுதான்; ஆனால் நாட்டின்
எனைவந்து தொந்தரவு செய்ய லாமா?
மனிதனுக்குத் தொல்லையுண்டு பண்ணு கின்றாய்;
இவ்வகையாய்ப் பொன்னப்பன் அடுக்கு கின்றான்
செவ்விதழின் கதவுடைத்து வரும்சி ரிப்பைத்
எவ்வளவோ சொல்லிவிட்டான், இன்னும் சொல்வான் ;
அவ்வளவாய் மதிக்கவில்லை என்று சொன்னால்
மாமியார் ஒன்றுசொன்னால் மறுக்கின் றாயே
நாமியார் அவரைவிடச் சிறியோ மன்றோ?
மீமீஎன் றழும்ஒன்று, மற்றும் ஒன்று
ஆமிந்த வேலையெலாம் அவர்பார்க் கட்டும்;
மணவீட்டின் வாயிலிலே கமுகும் தெங்கும்
கணகணென இசைக்கருவி முழங்க வேண்டும்;
மணியரங்கில் அணிசெய்ய வேண்டும்! அங்கு
வணக்கத்தைச் சொல்லியனுப் புதலும் வேண்டும்
இவையெல்லாம் ஒருபுறமி ருக்க, நானோ
கவலையிலா திருக்கும்வகை செய்வ தென்று
தவிலடிப்போன் காதெல்லாம் கிழிப்பான்; அந்தச்
உவகையுடன் தாலியினைக் கட்டு கின்றேன்
ஏன்வெட்கப் படவேண்டும்? கட்டு வோன்நான்
கூன்என்ன? நிமிர்ந்திருந்தால் நல்ல தன்றோ?
ஏனத்தில் பசுப்பாலை ஏந்தி வந்தே
மானத்தைக் கெடுக்காதே சொன்னேன் சொன்னேன்;
பிள்ளைகளைத் தூங்கவைத்த பிறகு தானே
சொள்ளொழுக நீமுன்பு தூங்க லாமா?
பள்ளிக்குப் போகையிலே பிள்ளை கட்குப்
வெள்ளைவிழி காட்டிஉடல் துவண்டு குந்தி
சிரிக்கின்ற நீலியினை நோக்கி அன்னம்
"இருக்குமென நான்நினைத்தேன் அந்தப் பேழை
சிரிக்கஉடல் எடுத்தவனை மணக்கத் தக்க
பொருத்தமில்லான் பேழையினைக் கொண்டு வந்தால்
இயல் 47
அதே இரவில் நரிக்கண்ணனும் அமைச்சனும் தனித்துப் பேசியிருந்தார்கள்.
சிரித்திருந்த நீலியவள் இரக்க முற்றாள்.
விரித்திருந்த மெத்தையிலே தனிய றைக்குள்
கிரிச்சென்னும் சுவர்க்கோழி வாய டங்கிக்
நரிக்கண்ணன் தனக்குரிய அமைச்ச னோடு
"தேன்வெறுக்கும் வண்டுண்டோ! நல்அறப்போர்ச்
மீன்வெறுத்த துண்டோ? இவ் வன்ன மென்னும்
ஏன்வெறுத்தாள்? பேரின்பம் விரும்பு கின்றாள்!
தான்வெறுத்தும், என்குடியை வேர றுத்தும்
பேழையினை, அதிலிருக்கும் பட்ட யத்தைப்
வேழத்தா னிடம்காட்டி ஆட்சி பெற்று
ஆழத்தில் உழுகின்றாள்? என்ன செய்வேன்!
"பேழைகிடைக் காதபடி செய்ய வேண்டும்
"நமைச்சேர்ந்த படைமறவர் போலு டுத்து
சுமந்துபோய்த் தேரோட்டி யிடம்கொ டுப்பாய்
இமைக்குள்ளே கருவிழியைக் கொண்டு போகும்
கமழாத புதர்ப்பூப்போல் திருடர் யாரும்
பெரும்பாலும் பேழையங்கே இருத்தல் கூடும்.
ஒருவரையும் மலைப்பக்கம் விடுதல் வேண்டாம்.
நரிக்கண்ணன்உரைத்திட்டான். அமைச்சன் சொல்வான்:
தெரிவித்தல் முறையல்ல, வேழ மன்னர்
"ஆம்! இதற்கோர் சூழ்ச்சியினை நான்உ ரைப்பேன்
நாம்அனுப்பி அஞ்சும்வகை செய்யச் சொல்லி
போம்மக்கள் போவதற்கு நடுங்கு வார்கள்
நீமாறு பேசாமல் இதனைச் செய்க
இயல் 48
பூதம்போல் மலைமேல் ஏறிக் கூச்சலிட்டான்.
'எட்டி' எனும் ஓர்ஆளை அழைத்துவந்தே
குட்டைமயிர் விரிதலையும் கொடுவாள் கையும்
கட்டியதோர் காருடையும் ஆக மாற்றிக்
விட்டார்கள் மலையின்மேல்! 'எட்டி' நின்று
இயல் 49
ஒளிவிளைக்கும் கதிரவனும் தோன்றாக் காலை
களிவிளைக்கும் தமிழாலே பண்டி தர்க்குக்
குளிர்விளைக்கும் மலைசார்ந்த நன்செய் நாடிக்
வௌிவிளைத்த கூச்சலினை! மலைமேற் கண்டார்
ஆழ்ந்தடிக்கும் ஏரடியும் தாற்றுக் கோலும்
வீழ்ந்தடித்துக் கொண்டோடி நகர டைந்து
சூழ்ந்தடித்துத் தின்னஒரு கரிய பூதம்
தாழ்ந்தடிமேல் அடிவைத்து வருங்கால் அந்தச்
இதுமட்டும் சிலருரைக்கக் கேட்கு மட்டும்
அதுமட்டும் தனியல்ல வான மட்டும்
குதிமட்டும் நிலத்தினிலே தோன்றா வாகிக்
எதுமட்டும் வருவேன் என் றெனையே பார்க்கும்
வாலிருந்த தா? என்றே ஒருசேய் கேட்டான்
கோலிருந்ததோ என்றும் கொடியோ என்றும்
மேலிருந்து வந்திடுமோ என்றான், அந்த
காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக்
அவனோடக் கண்டொருவன் ஓட அங்கே
இவணோடி வந்ததெனக் கூச்ச லிட்டார்!
கவணோடும் கல்லைப்போல் விரைந்தா ரேனும்
கவலைஎரு துகள்போல மக்கள் யாரும்
அத்தெருவில் அவ்வீட்டில் பூத மென்றும்
தொத்துகின்ற வௌவால்போல் மரத்தின் மீதும்
முத்தெடுக்கும் மனிதர்போல் கிணற்றி னுள்ளும்
மொய்த்திருக்க லானார்கள்! கருத்தின் பூதம்
முன்நடப்போர் பின்வருவோர் தம்மை எல்லாம்
என்றலறி எதிர்வருவோர் தமைஅ ணைக்க
நின்றிருக்கும் குதிரையையோ எதையோ தொட்டு
முன்றிலிலே பிள்ளைகளின் கண்கெ டுத்து
இயல் 50
நாடுமுழு தும்பூத நடுக்கம் கொள்ள
தேடுவதில் இருந்தார்கள் தென்ம லைமேல்!
கேடுபல சூழ்ந்திடுவான் புதிய மன்னன்
பாடுபட்டுப் பார்ப்போமே எனநி னைத்தே
சீனிஎனும் கணக்காயர் தம்பால் கற்கும்
தானினைக்கும் இடமெல்லாம் தேடச் சொல்லித்
தேனிதழாள் வானிமிர்ந்த சோலை தன்னில்
ஏனடியே நீலியே பேழை தன்னை
இயல் 51
நினைக்கையிலே என்நெஞ்சம் எரியு தேடி
பனைக்கைஉறும் களிறுபோல் தந்தை யாரும்
எனைக்கையிலே ஏந்திவளர்த் தார்கள் ஐயோ!
உனைக்கையில்வைத் தோம்இப்போ துளத்தில் வைத்தோம்
நன்செய்வாய்ச் செந்நெலெலாம் பொன்ம லைபோல்
பின்செய்வாய் அருஞ்செயல்கள், அறச்செ யல்கள்
முன்செய்வாய் என்றுரைத்த என்பெற் றோர்கள்
என்செய்வாய் என்செய்வாய் என்றன் பெண்ணே
இயல் 52
விழிப்புனலில் குளிப்பவளாய்த் துன்ப ஆற்றின்
கொழிப்பாள்நெஞ் சிளகுமொழி! அன்ன மேபூங்
செழிப்பினிலே நிழல்சாய்ந்த செய்யாற் றோரம்
கழிப்போமே நேரத்தை! என்றாள் நீலி
நீர்தேங்கும் செய்யாற்றின் ஓடம், துன்பம்
தார்தாங்கும் தட்டம்போல் தன்பால் தாங்கத்
ஆர்தாங்கள் எனக்கேட்டும் இன்பம் ஊட்டும்
சீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந்தி டாது
தேங்கிநிற்கும் புனல்மீது செல்லா நிற்கும்
பாங்கிநிற்கப் பார்த்துநின்ற அன்னம் சொல்வாள்:
தேங்கிநிற்கும் பொன்னாற்றில் செழுமா ணிக்கச்
வாங்கிநிற்கும் ஒளியைப்பார்! காட்சித் தேனில்
இயல் 53
கிழக்கினைநோக் கிப்படகு செல்லும் போதில்
வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து
மழைக்கண்ணீர் உகுத்ததுவான்! மேற்கி னின்று
பழக்குலைமேல் எறிந்தகுறுந் தடியே போலப்
தம்மாலா காதென்று கைவிட் டார்கள்
இம்மாநி லத்தின்வாழ் விதுவோ என்றே
கைம்மீது தலைசாய்த்துக் கதற லானாள்!
செம்மானூர்க் கரையினிலோர் குடிசைக் குள்ளே
இயல் 54
இருவரையும் தன் குடிசைக்குக் கொணர்ந்தான்.
"விடை"யென்று கேட்டான்சேய்! "நட"என் றாள்தாய்!
நெடுமுனையை ஒருகையாற் பற்றி நீந்தி,
கடிதினிலே ஓடத்தைக் கரையிற் சேர்த்தான்;
துடியிடைக்கும், நீலிக்கும் தோள்கொ டுத்துச்
கண்ணேஎன் அன்னமே! நீயோ? நீயோ?
மண்ணாள நீபிறந்தி ருக்க ஆற்றில்
ஒண்ணுமோ? என்றுரைத்துக் களைப்பு நீக்கி
தண்ணென்று தரையிருக்கும் என்று சென்று
நனைந்தகுழ லுக்குச்சந் தனம்பு கைத்து
பனம்பழத்தின் சாறட்ட பனாட்டும் தேனும்
நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன் செங்க ரும்பை
புனைந்துவைத்தேன் முல்லையிலே கண்ணி ஒன்று
இயல் 55
ஆத்தாவே இவர்யார் என் றன்னம் கேட்டாள்!
தீத்தாவும் கண்ணுடையார் வேழ நாட்டார்
காத்தாரும் இவர்தாமோ? என்றாள் அன்னம்.
வாய்த்தீரே மானத்தை உயிரைக் காக்க
"ஒருசற்றும் பயனில்லா உடம்பை, வாழ்வோ
நரிசற்றும் விலகாத கூட்டைச் சான்றோர்
முரசுக்கு வாய்ஓயாக் குறட்டில் மன்னர்
ணரசுக்கோ ஆட்படுத்தா திருத்தல் வேண்டும்?
எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
பனையளவு நலமேனும் தன்ன லத்தைப்
உனைஒன்று வேண்டுகிறேன் என்னால் ஆவ
"இழந்தபாண் டியன்பரிசைத் தருவார்க் கென்னை
முழங்கியஓர் சேதியினை அறயீீர் போலும்!
பழம்பெரிய பாண்டியனார் பேழைக் குள்ளே
கொழுத்தபுகழ் உமக்குண்டு கொண்டு வந்தால்!
பேழையின தடையாளம், பறிபோய் விட்ட
ஆழஉரைத் திடலானாள் அன்னம்! வேலன்
ஏழைமகன்; நரிக்கண்ணர் ஆணை எங்கே
பேழையினைக் கொண்டுவந்து தருவேன்; அன்றிப்
மாத்தீயன் நரிக்கண்ணன், காணா வண்ணம்
காத்தவளும், நேர்நின்றே இன்றும் அன்றும்
காத்தவளும், இனிக்காப்பா ளும்,பெண் ணாளின்
ஆத்தாவின் இடதுகை நோக்கி நோக்கி
இயல் 56
இருக்கிறான்.தோழன் ஒருவன் வருகிறான்.
செய்யாற்றின் கரையினிலே, செம்மா னூரில்
கொய்யாக்கு டிக்குச்சென் றான்வீ ரப்பன்,
எய்துமோர் கால்நோயால் அவ்வி டத்தில்
ஐயாஎன் றொருதோழன் அழைத்தான்; "இந்த
"மாட்சியுறும் மன்னவனைப் பின்னால் குத்தி
காட்சிக்கோர் ஓவியமாய், வாழ்ந்து வந்த
வாட்சுழலால் உயிர்சுழலக் கணக்கில் லாத
ஆட்சிக்குப்புறம்பாய்நான் இருக்கும் போதே
இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே!
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்ப தான
கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
இல்லாரும் அங்கில்லை; பிறன் நலத்தை
நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில்
என்றுரைத்தான் வீரப்பன்! தோழன் சொல்வான்:
தென்மலையிற் பிறர்அணுகா திருக்கும் வண்ணம்
தின்னவரும் பூதமிது என்று சொல்லித்
அன்னவரே பேழையினைத் தேட லானார்
வீடெல்லாம் தரைமட்டம், ஆல்இ ருந்த
காடகழ்ந்த நீரூற்றின் ஆழங் காணில்
ஈடற்ற கலைப்பொருள்கள் இருக்கும் மன்றம்,
நாடழிய ஆளுகின்ற நரிக்கண்ணற்கோ
மூட்டையொடு கழுதைநடந் திருக்கும், பின்னே
பாட்டையிலே பஞ்சுநிறை கூடை போகும்
கூட்டுநீ லச்சாயம் கொண்டு செல்வார்,
காட்டாளோ பூதமென்பான், அஞ்சி வீழ்வார்!
அரண்மனையின் யானைவரப் பூதம் என்றே
எருதின்மேல் வீழ்ந்தான்! சாய்ந் ததுவைக் கோலும்
இருந்தகொல் லூற்றூக்கா ரன்கு தித்தான்!
தெருப்பற்றி எரிகையிலே, பூதம் அங்கே
அஞ்சவைக்கும் பூதத்தை அஞ்ச வைக்க
கொஞ்சிவிளை யாடவிட்டால் நல்ல தாகும்
நெஞ்சில்வைத்தே வீரப்பன், "வேண்டு மானால்
வஞ்சமுற்ற நரிக்கண்ணன் ஆட்கள், எந்த
"கொண்டுவந்த பேைழையினை மகனி டத்தில்
பண்டெனது செயலைஅவன் அறிய நேரும்;
தொண்டுகிழ வன்புகன்றான்! "மகனி டத்தில்
அண்டையிலே இருந்தஅவன் சொல்ல; ஆம்ஆம்
இயல் 57
அமைச்சன்மக னானஓர் நீலன் என்பான்
இமைக்கின்ற நேரமதும், வீணாக் காமல்
நமக்குவரு மோஎன்று நினைத்தா னாகி
சிமிழ்க்காத கண்ணோடு தெருக்கள்தோறும்
அன்னத்தைத் தேடுகையில், நீலி அங்கே
இன்னவளை ஆராய்வேன் எனநெ ருங்கி
கன்னலொன்று காலடியிற் கிடைத்த தைப்போல்
உன்னிடத்தில் சொல்லிவிட வேண்டும்; என்னை
என்தந்தை என்னிடத்தில் இன்று வந்தார்;
என்றுரைத்தார். யானுரைத்தேன் இவ்வை யத்தில்
பொன்வேலி தனில்உண்டு! நீலி என்று
இன்னுயிரைப் போன்றுள்ளாள்! அவளை யன்றி
மாந்தளிரால் மெல்லுடலும், மணக்கும் செந்தா
சாய்ந்துதிடீர் எனவிழுந்தார் என்றன் தந்தை!
வாய்ந்திருக்கும் பிள்ளைநீ பாங்கி யைப்போய்
தீர்ந்ததினி அவளிடத்தில் சென்ற உள்ளம்
என்னநீ நினைக்கின்றாய்? அன்னத் திற்கே
அன்னத்தை ஏன்மணக்க லாகா தென்றால்,
பொன்னுக்குப் பித்தளையோ ஒத்த தாகும்?
மின்னலிடை, கன்னல் மொழி, இன்னும் சொன்னால்
ஒளியேனும் வானத்தை மறத்தல் கூடும்
எளியேனும் உனைமறத்தல் உண்டோ? அன்றி
கிளியேனும், குயிலேனும் கேட்டால் நாணக்
துளியேனும் அறிவதுகூ டாது; சின்னச்
விழிபார்க்க எண்ணிடுமே உன்னை! யாரும்
வழிபார்த்து நிற்குமிடம் சொன்னால் நீயோ
ஒழிபார்த்துப் பார்த்துநீ! என்கின் றாயோ,
குழிபார்க்கத் தான்வருதல் முன்னே சொன்னால்
"மன்றிரண்டு தெரியுமன்றோ? அவற்றில் நெல்லி
இன்றிரண்டு நாட்களிலே வருவேன்! வந்தால்
ஒன்றிரண்டு பேசியபின் சுப்பல் ஒன்றை
பொன்திரண்டு வந்தாலும் சரிதான் என்னைப்
"எத்தடையும் இல்லையடி மாம ரத்தை
சொத்தடையக் கவர்ந்ததன்றி அன்னத் துக்கும்
இத்தடைகள் நீங்குதற்கு முயல்கின் றாளா?
கொத்தடையும் மலர்க்குழலே என்னி டத்தில்
"கூடுவிட்டுத் தாயைவிட்டுப் பறந்து விட்ட
வீடுவிட்டு வேலைவிட்ட ஆத்தா, வேலன்,
தேடிவிட்டால் கிடைத்துவிடு மோஅப் பேழை?
மூடிவிட்டார் பேழையினை! அவர்கள் கொஞ்சம்
இடக்கையோ ஆத்தாவுக் கில்லை! இவ்வா
நடக்கையிலே ஊன்றுதற்கோ கணுக்கா லில்லை!
எடுக்கையிலே அமைவுற்ற மேனி யாட்கோ
படுக்கையிலும் விழிக்கையிலும் பலகை ஓலைப்
எதுமுடியும் அவராலே?" என்றாள் நீலி!
புதுமுடிவேந் தன்விட்ட மறவர் தம்மைப்
முதுமுடியான் கதிர்வேலன் பெற்றெ டுத்த
'இதுமுடிய இதுசெய்வாய்' என்று கூறி
ஆத்தாவின் துணைவர்யார்? அறியேன்" என்றான்
கூத்தாடிப் பிழைப்பார்போல் தோன்று கின்றார்,
பார்த்தாயா என்னென்ன உடைகள் என்றான்,
நீத்தாரின் உடை,பலவும் கண்டேன் என்றாள்.
"போவிரைவில்" என்றுரைத்தாள் ஆத்தா! அன்னோர்
வாவிரைவில் என்றுரைத்தால் வருவார் போலும்!
தீவிரைவில் கொல்லுதல்போல் பூதம் வந்து
நீ விரைவில் போஉன்றன் குடிசைக் கென்றான்.
"ஊருக்குள் பூதமெனப் புளுகி னோரின்
நேருக்கு நேரடையும் தீமை தன்னை
சீருக்கு வாய்த்திருக்கும் அன்பே, பூதச்
தேருக்குச் செப்பனிட்ட முட்டுக் கட்டை
"உன்னகத்தை யறிவதற்கே இதனைச் சொன்னேன்
தன்னகத்தில் வளர்ந்துவரும் மடமை யின்பேர்
சொன்னகற்றோர் மொழியினைநான் ஒப்பு கின்றேன்.
பொன்னகத்தில் தமிழகத்தில் தாய கத்தில்
"திங்களிடம் குளிர்போலும் கதிர வன்பால்
உங்களிடம் எனக்குள்ள அன்பின் மீதில்
தங்களிடம் நோக்கியே செல்ல வேண்டும்
இங்குவரக் கூடுமன்றோ?" என்றாள் நீலி!
"என்பொருட்டு நின்னழகை அன்பை ஈந்தாய்
நின்பொருட்டு அவளுக்கோர் நன்மை செய்ய
யின்பொருட்டுப் பொருள், ஆவி உடல்வேண் டாமல்
தன்பொருட்டு வாழ்வானோர் ஏழை! மக்கள்
"மின்னையும்பன் மலர்களையும் கொண்டி யாக்கை
தன்னையும்நான் அறியேனே! வேழ நாடு
என்னையுந்தன் தொண்டரொடு சேர்த்துக் கொள்ள
பொன்னையும்வார்ப் படநுண்மை தனையும் வையப்
நலங்கெடவே கதிர்நாட்டை ஏப்ப மிட்ட
குலுங்குநகை முத்தாகக் கொழிக்கும் பெண்ணே!
விலங்குபழக் கிடுவானின் வெள்ளா டொன்று
தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை
கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக்
வேப்பங்காய்! அவனுமெனை விதைபற் றாத
தீப்பொங்கும் மலையடியில் வாழு கின்றேன்
தோப்பிங்கே காணுகின்றேன்! குடியி ருப்பேன்
கரும்பல்ல; அதுபிழிந்த சாறே போலும்
இரும்பல்ல! நான்சொல்வேன் ஏற்றுக் கொள்வாள்!
அரும்பல்ல; கண்ணல்ல அவ்வா றேசெய்!
திரும்பல்லல் தீரென்று செப்பிச் சென்றான்.
இயல் 58
இத்தனைநாள் ஆயிற்றே பேழை எங்கே?
முத்தன்ன வெண்ணகையாள் திரும ணந்தான்
வைத்தவர்கண் ஏமாறக் கவர்ந்து சென்றோர்
எத்தனவன் தானெடுத்துப் பேழை தன்னை
நற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்கு
பொற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்குப்
சொற்பலவும் விரிப்பார்கள் சிலர்! இப் பூதத்
தெற்குமலை காடுநகர் நாடு யாவும்
இயல் 59
வேழவனும் அமைச்சனொடு வீற்றி ருந்தான்
பாழைடைந்த இருள்வீட்டில் விளக்கு, வானப்
வாழஒரு பாண்டியனார் பரிசு வேண்டி
பேழையினை நரிக்கண்ணன் தானும் தேடிப்
அப்பேழை நரிக்கண்ண னிடத்தே யில்லை,
ஒப்பேதும் இல்லாத மங்கை யன்னம்
செப்பினாள்! அதிலென்ன ஐயப் பாடு?
கைப்பேழை தனிலுண்டு! கிடைத்தால் நெஞ்சக்
இயல் 60
தென்மலையில் தேடுகின்ற கூட்டம், காட்டில்
இன்னல்விளைத் திடுங்கூட்டம், வீடு தோறும்
பன்னுமிவை அனைத்துக்கும் மேற்பார் வைக்குப்
சென்றுசென்று நிலையறிவான் எவ்வி டத்தும்
தட்டுப்பட் டதுவோடா பேழை என்று
வெட்டுப்ப டாதிருக்க வேண்டும் பேழை
முட்டுப்ப டாதுழைப்பீர்! கிடைத்தால் பேழை
சிட்டுப்ப றந்ததுபோல் தெருவில் ஓடித்
தெருத்தோறும் வாழ்வாரை ஒருங்க ழைத்துச்
ஒருபேழை தனைத்தந்தேன் அதனை வாங்கி
பெருமக்கள் தமையெல்லாம் உளம்வ ருத்திப்
எரிமூளும் கண்ணாலே அஞ்ச வைப்பான்
இயல் 61
ஓடிக்கொண் டேயிருக்கும் குதிரை, காதில்
ஆடிக்கொண் டேயிருக்கும் நெற்றித் தொங்கல்!
தேடிக்கொண் டேஇருந்தாள் பேழை தன்னைத்
பாடிக்கொண் டேஇருந்தாள் நிலைமை பற்றிப்
"பண்டிருந்த பாண்டியனார் பரிசை, என்றன்
கண்டிருந்த துண்டென்றால் கூறு வீரோ?
வண்டிருந்து பண்பாடிக் கொண்டி ருக்கும்
தொண்டிருந்த உள்ளத்தீர்! மறவர் மக்காள்!
நீர்அடையும் விழியுடையாள்தெருக்கள் தோறும்
சீரடைய வேண்டுமெனில் எல்லா மாண்பும்
பாராடையும் தீமையெல்லாம் நீங்கி நல்ல
பேரடைய வேண்டுமெனில் பேழை வேண்டும்!
இயல் 62
அகல்வானில் விட்டு விட்டு மின்னல் போல
பகல்வானம் மாணிக்கப் புனலா டுங்கால்
புகலானாள்; குதிரையினை விட்டாள்! அங்குப்
துகிர்உடலில் மணந்தடவ இசைய ரங்கு
தாமரைக்கண் இமைஇதழோ அசைய வில்லை
பூமறைப்ப தைப்போலும் எழிற்கன் னத்தில்
நீமறைக்கா தேஉன்றன் இன்ப யாழை
தீமையிலா உயிர்பருகக் கிடந்தாள்; வையம்
மீதுயர்ந்த இருதோள்கள் ஒளியை வாரி
ஊதுகின்ற வளைகொம்பின் புருவத் தின்மேல்
மோதுகின்ற இளங்களிறு போல்ந டந்து
காதலில்லை அவன்கண்ணில்! தேன்பற் றாத
கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை!
ஒளித்திரைபோல் தலைமயிர்சிங் கத்தின் தோற்றம்!
துளித்தநறுந் தேனென்று சொல்லும் சொல்லைத்
தொடங்குகுரல், முழங்குகின்ற கடலே! ஆனால்
களிக்கஒரு காதலில்லை அன்னோன் கண்ணில்!
அடுக்கிவைத்த அழகழகாம் உறுப்புக் கள்மேல்
தடுக்கிவிழும்; எழும்ஒன்றில் சறுக்கி வீழும்!
எடுக்கஎடுக் கக்குறையாச் சுவையின் ஊற்றை
துடிக்குமோர் காதலில்லை அன்னோன் கண்ணில்!
தீங்கைஇனிப் பொறேனென்னும் கண்கள்! என்றன்
வேங்கைஅவன்! அஞ்சாதே என்ற பேச்சு
ஏங்கையிலே எனைமீட்டான்! ஓடம் விட்டே
பாங்குறஓர் காதலில்லை அன்னோன் கண்ணில்!
விழியில்லை; உணர்வில்லை; குடிசை தன்னில்
மொழியில்லை இதுமருந்தே எனும்ப டிக்கு
வழியில்லை என்றிருந்த என்கண் முன்னே
எழுகின்ற காதலில்லை அன்னோன் கண்ணில்!
இயல் 63
நனவுலகில் இவ்வண்ணம் இருந்தாள் அன்னம்!
கனவுலகில் இலக்கியத்தைத் தொடர்வா ளானாள்;
கனிஇதழில் புதைத்துடலை ஒருக்க ணித்துக்
இனிநானும் இவ்வுடலும் புளியும் ஓடும்
துவராடை உடுத்திருந்தான்! தோலின் ஆடை
தவறாமல் கைப்பிடியாய்ப் பிடித்தி ருந்தான்!
எவரேனும் எதிர்க்கையிலே உதவு மென்றே
கவிகைஇவை யல்லாமல் எல்லாம் நீத்த
இயல் 64
வெண்தாடி நிலம்புரள மேல்நி மிர்ந்த
கொண்டாடும் கற்பாறை போலி ருந்தான்
வண்டோடு பூவிதழும் பறக்கக் காற்று
திண்டாட வைக்கையிலே இமைதி றந்தாள்!
விரைந்தெழுந்தே ஆடைதனை ஒதுக்கி நின்று
"தெரிந்துகொண்டேன் நின்உள்ளம் வாழ்க நன்றே!
வரும்சிறிதும் வருந்தாதே" என்று சொல்ல
"அருங்கிளியே உனக்கான ஆட வன்பால்
பெரியானைக் கைகூப்பிக் குதிரை ஏறிப்
அருகினிலே வேலன்வரக் கண்டாள். கையால்
"தெருவினிலே நின்றிருப்பேன் வரவு நோக்கிச்
"இரு" என்றான். செம்மானூர்க் குடிசை சேர்ந்தாள்;
இயல் 65
அப்போது அங்கு ஓர் பூதம் வௌிப்பட்டது. எல்லோரும் பறந்தார்கள். நரிக் கண்ணனிடம் சொன்னார்கள்.
தென்மலையில் பேழையினைத் தேடு கின்றார்
சின்னகுகை புகுந்திடுவார்! மாலைப் போதும்
மின்னிற்றுப் பெருங்கூச்சல் கேட்ட தங்கே!
நின்றதொரு நெடும்பூதம்! நரிக்கண் ணன்பால்
ஓடினான் நரிக்கண்ணன் தென்ம லைக்கே;
ஆடியதும், நெடுவேலைச் சுழற்றி நின்றே
மூடிவைத்த தெருக்கதவை உதைத்துத் தள்ளி
பாடுபட்டு நான்கண்ட சூழ்ச்சி தன்னைப்
நரிக்கண்ணன் எண்ணினான்! பூதந் தன்னை
பெரிதாகும் நிலைகண்டான்! நடுக்கம் கொண்டான்!
தெரியாமல் இருந்தேனே எனமு டித்தான்!
அரைக்காதம் அதைநினைத்தான்! ஓட லானான்!
வடதிசையைத் தான்மறந்து மேற்கு நோக்கி
தடதடென ஆயிரம்பேர் எதிவந் தார்கள்;
கொடும்பூதம் வந்ததெனக் கூறி னார்கள்;
பிடித்தான்பின் ஓட்டத்தைக் கிழக்கு நோக்கிப்
இயல் 66
அன்னம் உள் நுழைந்தாள். வேலன் முதலியவரும் சேர்ந்தார்கள்.
அரண்மனையில் நரிக்கண்ணன் ஆட்கள், பெண்கள்,
பெரும்பூத மாய்த்தோன்றக் கதறி, ஓடிப்
பரணுக்குள் குடிபுகுந்தார்! இவ்வா றாகப்
திரண்மலைத்தோள் வேலனொடும் நீலி யோடும்
"ஆளுயரம் இருந்ததுவாம் நரியார் பூதம்!
தோளுயர்ந்த இரட்டையாட் பூத மன்றோ
கோளுக்குக் கோள், பொய்க்குப் பொய்யே வேண்டும்;
நாளும்எழில் நாட்டார்கள் பூத மென்று
"சிரித்துவிளை யாடஇது நேரமன்றே!
இருப்பவனோர் திருடனென இயம்பு கின்றார்
"இருக்கட்டும்! நீலிநீ துறவி யாரை
நெருப்பிற்கு நீருண்டு தணிக்க! அன்னம்
துறவுடையார் "பேழைஅகப் படும்" என் கின்றார்!
அறிவுடையார் பிறர்தம்மை நம்பித் தம்பால்
முறையாமோ இமைப்பொழுதே அமைதி கேட்டேன்
நிறைவுறும்உன் மொழியான குளிர்ம ரத்து
கரும்பெடுத்துப் பிழிந்ததுவும் என்சொல் தானோ?
அரும்பெடுத்துக் கொட்டியதும் என்சிரிப்போ?
சுரும்பெடுத்த இசைபோலும் சொல்லெ டுத்தால்
இரும்பெடுத்துச் செய்திருக்கும் என்றன் காதில்
பிள்ளைநிலை என்னுமொரு கனியின் சாறும்
கொள்ளைபடப் பெய்துவைத்த இளமை என்னும்
மொள்ளையிலே "உயிர்" என்பார் பார்த்தி ருத்தல்
அள்ளையிலே காதல்,அதை அருந்தல் இன்பம்!
இயல் 67
மற்றுமொரு பேச்செடுத்தாள் அன்னம். அங்கே
ஒற்றைஎரு திழுத்துவந்த வண்டி விட்டே
கற்றைமலர்க் குழலுடையாள் நீலி யோடு
மற்றவரைப் புறம்போக்கி வேலன் காதில்
நீலியவள் விடைபெற்று வௌியிற் சென்றாள்
சேலின்விழி மகிழ்ச்சியினால் மின்னும்! வாயின்
வேலியிட்ட நன்செயிலே விதைத்த வித்தும்
மேலும்அவன் அடிமையுளம் உடையான் அல்லன்,
இயல் 68
ஓதுகின்றான் நீலியுடம் நீலன்: "என்றன்
பூதமென ஒன்றில்லை என்று முன்பு
மோதுதல்போல் வரும்பூதம் பார்த்தாய் அன்றோ?
தீதுசெய வரக்கூடும்!" என்று கூறித்
"முன்வந்த பூதத்தை நரிவி டுத்தான்!
பின்வந்த பூதத்தை இளைய அன்னம்
என்னபொருள் இதற்கென்று நீலன் கேட்டான்.
ஒன்றுமே விளங்கவில்லை என்றான் நீலன்;
"வாட்படையும் வேற்படையும் கண்டு நெஞ்சம்
ஆட்படைதான் அடிப்படையோ? அஞ்சி ஓடி
"மீட்படையா மக்கட்கு மீட்பும், சற்றும்
தோட்படையால் வையத்தை வெல்லும் வேலன்
"ஆள்பிடிக்கு மோஅவளுக்" கென்று கேட்டான்.
வாள்பிடித்த றுத்தெடுத்த செம்ம ரத்தில்
தாள்பிடித்து வாழ்கின்றாள் அன்னம்! வேலன்
தோள்பிடிக்கும்; சுவையெல்லாம் பிடித்தெ டுத்த
"எம்சொத்தே கதிர்நாடு, நாமே ஆள்வோம்
பஞ்சொத்துப் பறக்கின்றார் நாட்டு மக்கள்!
பிஞ்சொத்த கண்ணாளுக் கிந்த நாட்டைப்
நெஞ்சொத்த நாமிருவர் மணமு டித்து
அன்னத்தை நான்காண வேண்டும் என்றேன்
''சொன்னத்தை நான்மறந்து போக வில்லை
என்னத்துக் கவள்நம்ப வேண்டும்? அன்னாள்
"பொன்னொத்த பேழைக்கு முயல்கின் றாளா?
"ஒருதுறவி வேலனுக்கே ஆன மட்டும்
தருவதாய் உரைக்கின்றான். பேழைக் காகச்
வரும்பேழை என்றுதான் நினைக்கின் றேன்நான்
பெரும்பூதம் விட்டதுவும் துறவி வேலை!
வட்டிலிட்ட வெற்றிலைக்குச் சீவல் நெய்யால்
தட்டிலிட்டுச் செம்பினிலே இன்பால் பெய்து
பட்டிலிட்ட மேல்விரிப்பில் பூவ டிப்பைப்
கட்டிலிட்ட அறைகாட்டி நீலி தோள்மேல்
இயல் 69
அமைச்சனிடமும் பேசியிருந்தான்.
சென்றடைந்த ஆனையூர்ப் பள்ளி தன்னில்
"இன்றடைந்த பூதத்தை இதற்கு முன்னே
குன்றடைந்த நம்ஆட்கள் கண்டதுண்டோ!
"என்றுமிதைக் கண்டறியோம் கேட்டோ மில்லை"
"ஆனையூர் தனில்வந்தோம் இவ்வி டத்தில்
பானையினைத் தலைகவிழ்த்துச் செய்த தைப்போல்
ஏனிதற்கு நாமஞ்ச வேண்டும்?" என்றான்.
தேனிதழாள் நீலியிடம் பெற்ற நல்ல
இயல் 70
"பூதத்துக் கஞ்சுவதோ வேந்தே? அஃது,
ஊதப்ப றக்குமொரு சருகு! வற்றி
தோதாக ஒருதுறவி இந்தச் சூழ்ச்சி
காதலனும், துறந்தானும் அரண்ம னைக்குள்
அரண்மனையில் தேடுகின்றார்! அவ்வி டந்தான்
விரைந்தங்கு வாரீரோ" என்றான் நீலன்!
பொருந்தும்இது! நடவுங்கள் அரண்ம னைக்குள்
இருந்தங்குப் பேழையினை நாமே தேடி
"இங்கிருந்தே, எல்லாரும் பூதங் கள்போல்
அங்கிருக்கும் ஊர்மக்கள் அஞ்சிப் போவார்;
சிங்கம்வரக் கண்டஒரு மானைப் போல
எங்கிருக்கும் ஆட்களையும்அழைப்பீர்" என்றான்
இயல் 71
பூதமாக வர இருப்பதைக் கூறினான்.
அரண்மனையை நோக்கிவந்த நீலன், "நீலி
பெருமைபெறும் வேலனார், துறவி யார்க்கும்
வருவதையும் அறியீரோ? உயிர்பி ழைப்பீர்
அரசன்மகள் உள்ளழைத்தாள், நீலன் சென்றான்.
"இன்றிரவு பூதங்கள் நூறு வந்தே
ஒன்றதிலே நரிப்பூதம்! மற்ற எல்லாம்
நன்றிதனை நானறிவேன்! நானோ அந்த
என்னுயிர்போன் றாள்;அவளோ தங்கள் தோழி!
துறவியார் இவர்தாமோ! வேல னாரும்
நிறையஎனக் கன்புண்டு தங்கள் மீதில்!
பிறகெல்லாம் பேசலாம்! வருந்தீ மைக்குப்
"இறையவரின் அமைச்சருக்கு மகனா ரேநீர்
என்றவுடன் துறவியவன் "நீல னாரே
சென்றெதிர்ப்போம்! உம்தந்தை அடையா ளத்தைச்
என்றுரைத்தான். அதுகேட்ட நீலன், "தந்தை
மன்னன் அடையாளமோ தலையில் மாம்பூ
பறந்ததுவே லன்குதிரை! அன்னம் ஓர்பால்
"பிறந்ததுநம் விடுதலை நாள்! பிறந்த தின்பம்!
மறந்ததுவும் உண்டோநம் வாளும் தோளும்
அறைந்தார்கள் வெல்முரசம்! தோழர் எல்லாம்
கணக்காயர் வந்திட்டார்! தம்பால் நாளும்
துணைத்தோழர் வந்திட்டார்! நாட்டின் அன்பு
பணிக்காக உயிர்என்று கொதித்து வந்தார்!
பிணக்காடு செய்கருவி அனைத்தும் தீட்டிப்
இயல் 72
வஞ்சியவள் வேழனிடம் சென்றாள், "ஐயா
நெஞ்சுறுதி கொண்டவரும் அதைஎ திர்க்க
அஞ்சல்எனத் தாங்களுமோர் சொல்லைச் சொல்லி
கெஞ்சுபவர் சார்பில்நான் கெஞ்சு கின்றேன்
முதலிலொரு சிறுபூதம் வந்த தென்றார்!
கதிர்நாடு பட்டதுபஞ் சும்ப டாது
இதுபூதம் அதுபூதம் எனந டுங்கி
புதுமன்னன் நாடாள வந்தான்; பூதம்
அஞ்சவைக்கும் பூதத்தை எதிர்த்துக் கொல்வார்
வஞ்சிஎழில் அன்னமே இதுநம் ஆணை!
மிஞ்சவிடக் கூடாது பொல்லாங் கெல்லாம்
நஞ்சுக்கு மருந்தையா தங்கள் ஆணை
இழந்தானோர் ஏழை,பெருஞ் செல்வம் பெற்றான்
பழந்தானா என்றான்வே லன்.பழுத்த
நுழைந்தாளைத் துறவியவன் கேட்கப் பூதம்,
முழந்தாளை முறிஎன்றார் மன்னர் என்று
இயல் 73
சேறுண்டு நடவுண்டென் றிருப்பார் தாமும்
வீறுண்டு வாளுண்டென் றிருப்பார் தாமும்
சோறுண்டு மனைமக்க ளோடு சென்று
நூறுண்டு பூதங்கள் வருவ தைநான்
"வாளெடுப்பீர் இடக்கையில் பலகை கொள்வீர்!
தோளெடுக்கும் முன்பகையின் உயிரெ டுப்பீர்!
தேளெடுத்து வைத்ததென இருக்கும்; வேம்பின்
தாளெடுப்பீர் நடப்பீர்கள் வேல னாரே
இயல் 74
ஞாயிற்றின் ஒளிமுகத்து வேலன், அன்னம்
போயிற்றுக் கூட்டமிது!பூதக் கூட்டம்
ஆயிற்றா உமைக்காத்துக் கொள்வீர் என்றான்
காயிற்று வீழ்வதுபோல் நரிக்கண் ணன்தன்
நாற்புறத்தும் வளைத்தார்கள் பகைக் கூட்டத்தை;
ஏற்புரைத்து மற்றவரின் உயிரை வாங்கி
மாற்றமுறத் தீய்த்துப்பின் பிணத்தை எல்லாம்
வீற்றிருந்த துறவியவன் நடந்த எல்லாம்
இயல் 75
ஒருவன் துறவிபால் நடந்தவை கூறினான்.
தீப்பட்ட காட்டினிலே வேங்கை யோடு
சாப்பாட்டுப் பொன்னப்பன் தானும் செத்தான்;
காப்பாற்றும் எனநினைத்தார்! அதனால் மாண்டார்!
வேப்பிலைக்கை யுடையயெனைப் புறம்வி டுத்து
தேரோடு வீதியிலே கதிர்நாட் டானின்
காரோடு நிகர்குழலாள் அரசி தன்னைக்
சீரோடு வாழ்ந்திருக்க நினைத்தான்; அந்தத்
வேரோடும் தீர்த்திட்டான்! இரங்கு கின்றேன்.
பூதமெனச் சொல்வதெல்லாம் மனிதர் என்று
புகல்வதற்கே பிணத்தையெலாம் வரிசை யாக்கி
மீதமுள்ள அமைச்சரையாம் அழைத்து வந்தோம்!
ஓதுவதால் வேழநாட் டரசன் எண்ணம்
தீதொன்றும் இல்லைஇனித் துயில்வீர் என்று
இயல் 76
சன்னலிலே தென்றல்வந்து குளிர்வி ளைக்கும்!
மென்மையுறு பஞ்சணையோ துயில்க என்று
கன்னலிலே சாறெடுத்துத் தமிழ்கு ழைத்துக்
அன்னத்தின் மேல்வைத்தான் நெஞ்சை வேலன்,
விண்ணிடையே பன்னூறா யிரம்மீன் கட்கு
மண்ணிடையே பெண்ணினத்துக் கொருத்தி அன்றோ?
கண்ணிடையே மலர்க்காடா னாளே! உள்ளக்
நுண்ணிடையாள் எனக்குத்தா னோஅல் லாது
தேனைப்போல் மொழியுடையாள்; அன்ற லர்ந்த
மீனைப்போல் விழியுடையாள்; விட்ட திர்ந்த
வானைப்போல் உயர்வாழ்வு வாய்ந்தாள்; என்றன்
மானைப்போன் றாள்எனக்குத் தானோ அன்றி
பயிரடைந்த ஊட்டத்தி னூடு தோன்றும்
உயிரடைந்த ஓவியமோ! அச்சில் வார்த்த
பெயரடைந்த பெருவாழ்வு வாய்ந்தாள்! என்மேல்
உயர்வடைந்தாள் எனக்குதா னோஅல் லாமே
திருந்தாதோ முல்லையெனச் சிரிப்பாள்! நன்றே
அருந்தாதோ தும்பியென வாய்ம லர்வாள்!
வருந்தாதோ எனஆளும் வாழ்வு வாய்ந்தாள்!
இருந்தாளே எனக்குத்தா னோஅல் லாமே
கொம்பென்றால் அவள்மெய்யைத் தார்வ ருந்தும்!
கொடிஎன்றால் அவளிடையை மின்வ ருந்தும்!
அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்!
செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள்
நம்பென்பாள்!" எனக்குத்தா னோஅல் லாது
பொன்னிழையால் பூப்போட்ட நீலப் பட்டுப்
புன்னைமரம் மலர்குலுங்க நடந்த தென்ன
மன்னுமிள வரசிஎனும் வாழ்வு வாய்ந்தாள்
அன்னமவள் எனக்குத்தா னோஅல் லாமே
ஆடப்போம் புனலிலெலாம் அவளே; காற்றில்
தேடப்போம் பொருளிலெலாம் அவளே; நேரில்
பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில்
வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன்
இயல் 77
வடிந்ததுவே கருவண்ண இரவும்! ஆர்ந்து
ஒடிந்தது தீயோன்பிடித்த கொடுங்கோல்! வானில்
முடிந்ததுபூ தச்சூழ்ச்சி எனம கிழ்ந்தார்!
கடிந்துரைத்தார் நரியானைக் கைகள் கொட்டிக்
அரசனிது கேள்வியுற்றான், வியந்தான்! சென்றே
வரும்இந்த நிலைக்கிரக்கம் கொண்டா னேனும்
கருதினான்; பூதமென வந்த தாலே
ஒருகூட்டம் உண்டென்றால் அதனை நான்தான்
தொல்லைஇனிக் கதிர்நாட்டுக் கில்லை பூதச்
"வில்லைநிகர் நுதலுடைய அன்னம், பேழை
கல்லையெலாம் மலையையெலாம் கட்டி டங்கள்
இல்லைஇது வரைக்குமே அருமைப் பேழை
வேழவனோ இவ்வாறு கூறக் கேட்டு
பேழையினைக் காண்பதுவும் எந்த நாளோ!
ஏழெட்டு நாட்களிலே பேழை கிட்டா
மாழையெனும் தங்களரும் மருக ருக்கு
இயல் 78
என்று பறை அறைவித்தான்.
எவரெதனைச் சொன்னாலும் ஆம் ஆம் என்றே
தவறொன்றுமில்லைஇதில் ஏழு நாட்கள்
நவிலலுற்றான் எவ்விடத்தும் வள்ளு வன்போய்!
இவண்ஏழு நாட்களிலே பேழை காணா
சிறுகுடிலில் நல்ஆத்தா இருந்தாள்! ஆங்கே
இறையவனாம் வேழத்தான் சொன்ன வண்ணம்
அறையாயோ ஒருவழியை ஆத்தா என்றே
பெறுவாய்நீ என்றாரே அவரைக் காணப்
இடைத்துகிலால் கண்துடைத்தே அன்ன மேஎன்
நொடிப்போதும் சோர்வின்றிப் பேழை தன்னை
துடிக்கும்நரிக் கண்ணனவன் ஒழிந்தான்; நீயே
கொடிக்குநிகர் இடையாளே கதிர்நாட் டாட்சி
வாயோரம் "உயிர்வாங்கும் சிரிப்பு" மின்னி
மாயாத என்நெஞ்சம் சென்று சென்று
தீயோரும் என்நிலைமை அறிந்தால், என்றன்
பாயோரம் ஆத்தாவின் மடியின் மீது
நான்குநாள் ஆயினவே! பேழை தன்னை
நான்கேட்க வில்லையே மலர்மு கத்தில்
வான்முகிலில் பெருங்கடலின் கீழ்ப்பால் இந்த
ஊன்செவியில் நான்கேட்கப் பெற்றால் என்றன்
எனத்துடித்தே எழுந்திடுவாள்! வீதி நோக்கி
இனித்தேடும் இடம்இல்லை எனமு டித்தும்
தனித்தாளும் அரசுபோல் துறவி யங்கே
கனிச்சாற்றை நிகர்க்கின்ற தமிழ றிந்த
கணக்காயர், "அறிஞரே, துறவி யாரே,
தணிக்காத காதலனார் வேலன் கொள்ளத்
"துணுக்கமுறு கின்றதுவே என்றன் உள்ளம்
பிணக்கங்கள் வஞ்சங்கள் பிறக்கும், தூய
ஆயினும்நான் பேழைதனை நாளைக் கீவேன்
தூயஅவ் வன்னமும்இக் கதிர்நா டாளத்
ஆயவெலம் நான்முடிப்பேன், என்று ரைத்தான்.
ஆயிழையாள் நீலியவள் பொதுமன் றத்தில்
இயல் 79
அன்பாகப் பேசியும்கை தொட்டும், தோளை
இன்பாக இரவுகழித் திடலாம் என்றே
"முன்பாகச் சொல்லடிநீ பேழை பற்றி
"பின்பாகட் டும்சற்றே தமிழும் அன்பும்
"மகிழ்ச்சிக்கோர் அடிப்படைதான் பேழைச் செய்தி
புகழ்ச்சிக்கே உரியவளாம் அன்னத் திற்குப்
இகழ்ச்சிமுடி வடையுமடி! நமது நெஞ்சம்
தொகுத்துவைத்த முத்தங்கள்; கொடுக்கல், வாங்கல்
நாளைக்குப் பேழைவரும் என்றாள் நீலி!
காளைக்கும் மங்கைக்கும் கணக்கா யர்க்கும்
பாளைக்கு நிகரானநகைமு கத்தாய்
வேளைக்கு விடைகொடுப்பாய் என்று கூறி
இயல் 80
பறிக்கச் சொல்லி ஆட்களை ஏவினான்.
வீடடைந்தான் நீலனவன்! பொழுதோ இன்னும்
காடடைந்த விலங்குகள்போல் உலவ லானார்
கூடடைந்த கிளிபோலக் குடிசை தன்னில்
ஓடிடுங்கள் என்றகுரல் கேட்கும் ஓர்பால்!
எவனேனும் பேழையொடு செல்வா னாயின்
நவிலுமோர் குரல்! நீண்ட வாள்ம றைத்து
சுவரைப்போய்ப் பார்என்பான் ஒருவன்! பேழை
அவனைமறி என்றொருவன் கூறக் கேட்டே
ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை
காலடிஓ சைகாட்டா தொருவன் சென்று
வேலடியை ஆள்என்று நெருங்கி முட்கள்
மேலெழுந்த நிலவிலும்,இத் தொல்லை யாயின்
ஆளொருவன் வரக்கண்டால் ஐந்து பேர்கள்
நாளிரவு மெதுவாக நடக்கக் கீழ்ப்பால்
வேலையிலே கதிர்நாட்டின் மேற்கி னின்று
வாளோடும் வருகின்றான்! அவனைச் சூழ்ந்து
இயல் 81
எதிர்க்க - வேலன் ஆட்களும் கை கலந்தார்கள்.
சீழ்க்கையடித் தேஒருவன், வேலன்! பேழை!
வாழ்க்கையிலே வன்பிணிகள் பாய்ந்த தைப்போல்
தாழ்க்கையின்றி எதித்தார்வே லன்கூட் டத்தார்!
கீழ்க்கடலின் மிசைவந்த பரிதி அங்கே
கணக்காயர் மாணவரும், வீரப் பர்க்குக்
பிணக்காடு செய்கின்றார்! பகைவர் தாமும்
அணைத்தபடி வாள்சுழற்றும்வேலன் தன்னை
தணற்காடாய்ச் சூழ்கையிலே பேழை காக்கத்
பறந்ததுவே லன்குதிரை தெற்கு நோக்கி!
சிறந்தகணக் காயர்நெடும் பரியும் ஆங்கே
மறைந்திடுவான் வேலன்ஒரு காட்டில்! மேட்டில்
அறிந்துபகை பாயுங்கால் குதிரை தன்னை
தன்னருமைப் பேழையொடு குதிரை தன்னைத்
பின்தொடரும் பகைவர்சிலர் சோர்ந்து நிற்பார்!
இன்னல்தரும் பகைவர்தொகை குறையும் அங்கே!
மின்னொளியாள் இன்னுயிர்போல் வாள்அன் னத்தின்
இயல் 82
துறவியிடம் வந்தொருவன் வணங்கி நின்று
திறல்வேலன் பேழையுடன் திரியா நின்றான்!
முறைமையுடன் வேலனிடம் கிடைத்த பேழை
துறவிஉளம் கலங்கினான், வேழ வன்பால்
அவ்வேழ மன்னவனால் கதிர்நா டெங்கும்
எவ்விடத்தும் தீங்கில்லை; நகர்க்காப் பாளர்
கவ்விற்று மாலைஇருள்! வேலன் தன்னைக்
இவ்வளவில் வேலனையும் கொன்றி ருப்பார்
நரிவாழ்வு வேரோடு சாய்ந்த பின்னும்
இருப்பவர்தாம் யாரென்று கேட்பார் சில்லோர்!
எழிற்பேழை வேண்டும்! அதை வேலன் பெற்றான்;
ஒருபொருளிற் பற்றுடையார் அறத்தால் கொள்வார்;
குடிசையிலே நல்லாத்தா மயக்கத்தாலே
விடிந்ததுவும் தானறியாள்! பரிதி மேற்கில்
படிந்ததுத னிக்குடிலில்! விளக்கு மில்லை!
உடல்நோகத் தீக்கடைந்தாள்! விளக்கை ஏற்றி
இயல் 83
சேயிழையாள் துயில்கிடந்த இடத்தில் தோய்ந்த
வாயிலிலும் உட்புறத்தும் வௌிப்பு றத்தும்
தூயவளே அன்னமே என்று கூவிச்
நீயோடி இறந்திட்டாய் எனத்து டித்தாள்!
அன்னத்தைச் செங்குருதி சாயக் குத்தி
புன்னையடி யிற்புதைத்தார் என்றன் ஆத்தா
சொன்னபடி துடித்தழுது புரண்டாள் நீலி!
சின்னக்குடி லில்குருதி வெள்ளம் கண்டு
இயல் 84
இக்கொடிய காட்சியினை வேலன் கண்டான்.
பொற்கொடி எங்கே? என்று விரைந்து கேட்டான்.
அக்கொடியார் சாக்குத்திப் பட்ட புன்னை
தைக்கின்ற வேல்நூறும் அம்பு நூறும்
ஐயகோ என அலறி என்றன் வாழ்வும்
கையாலும் தலைமோதி "கண்ணே உன்றன்
பொய்யாத பாண்டியனார் பரிசை, உண்மை
வையாயோ என்றாயே வஞ்சி, தூக்கி
இயல் 85
எங்குள்ளாய் உடன்வைத்துக் கொள்வாய்" என்றே
அங்குள்ள புன்னையினை எண்ணி வேலன்
பொங்குதுயர் காணவும்பொ றாத தாகி
மங்காமல் விழிக்கும்நரி மண்ணை எற்ற
பிணமேடு தனைக்கண்டான்; நெஞ்சி ரண்டாய்ப்
தணலேறிச் சுட்டதுபோல் துடித்தான்! காணத்
மணல்மீது தான்வைத்தே பேழை தன்னை
உணர்வேதும் கலங்கியதோ எனநி னைத்தான்.
"சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச்
குவிக்கின்ற காதலொளி விழிக்கும், கார்போல்
உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே
அவிந்தனையே திருவிளக்கே! இந்த வையம்
படித்ததுண்டு; கேட்டதுண்டு; கண்ட தென்ன?
தடித்தஉடல் பெருநெறியிற் சென்ற தில்லை;
வடித்தெடுத்த மொழியாளே, மலர்க்கண் காட்டி
முடித்தனையே திருவிளக்கே! இந்த வையம்
பிறக்கமுடி யாதினிமேல் பெண் ஒருத்தி!
மறக்கமுடி யாதஎல்லாம் பேசி, இன்ப
சிறக்கஒரு முறையேனும் மூழ்க வில்லை!
இறப்பதுவோ திருவிளக்கே! இந்த வையம்
மோதல் ஒன்றோ? எதிர்ப்பொன்றோ இப்பே ழைக்கு?
ஈதல் ஒன்று மற்றொன்று சாதல் என்றே
காதலன்றோ என்வெற்றி! கண்தி றந்து
சாதலுண்டோ திருவிளக்கே! இந்த வையம்
வெண்ணிலவை எட்டிவிட்டேன் என்றி ருந்தேன்;
பண்ணமைந்த தமிழ்ப்பொதிகை எனக்கே என்றேன்;
திண்ணெனவே இழந்தேனே, பசியைப் போக்கத்
மண்ணடைந்தாய் திருவிளக்கே! இந்த வையம்
கடைவிழியில் நிலவுசெயும் உனது சாயல்
இடையழகு மின்னலிடை இல்லை யேசெவ்
உடையெல்லாம் நீலமணி கடலோ நாணும்!
மடிந்தாயோ திருவிளக்கே! இந்த வையம்
இயல் 86
நிலவு அப்போது முகிலில் மறைந்திருந்தது.
புதைத்தாரோ இரக்கமிலார் பொன்னு டம்பைப்
பதைத்தானாய்ப் பிணப்புதையல் தோண்டிக் கூட்டைப்
ஒதுக்கிமுழு நிலாமுகிலில் புதைந்த தாலே
கொதித்துள்ளம், கண்ணேஎன் கண்ணே என்று
'முத்தமடி' கடைசிமுறை! ஒன்றே ஒன்று
தொத்துகிளி யே என்று மலர்க்கன் னத்தைத்
மொய்த்தமுகில் கிழித்துவௌிப் பட்ட தாலே
கொத்தாகக் குழல்கழன்ற நிலையும் கண்டான்!
இயல் 87
நிலை கண்டான்; எறிந்தான் பிணத்தை! வெறுத்துரைத்தான் பெண்ணுலகை!
சீ! என்று பிணமெறிந்து விரைந் தெழுந்து
ஏ!இதற்குத் தானா? இவ்வழியு டற்கா?
வாயெச்சில் கண்டாலும் அருவ ருக்கும்!
ஈயருந்த அழகுதசை எறும்பு மொய்க்க
பேன்நாறி வீழ்குழலைத் தேனா றென்றும்
மேல்நாறும் சளிமூக்கை எட்பூ என்றும்
ஊன்நாறும் ஊத்தைப்பல் வாய்உ தட்டை
தோல்நாறும் கன்னம்கண் ணாடி என்றும்
உடல்சுமக்கும் உரல்போலும் இடையை, வானின்
கொடுங்குள்ள வாத்துநடை அன்ன மென்றும்
இடும்பையிலே இடும்குதிகால் சுவடி என்றும்
கெடும்படியே சொல்லிவைத்தார் புலவர், நேரில்
கண்ணுக்கு மையிட்டும் காதில் மூக்கில்
ஒண்ணாத குழலுக்கு மலர்கள் இட்டும்
பெண்ணென்று வந்தவளை இட்ட வெல்லாம்
மண்ணுக்கு வைத்தசுமை; வாழ்வின் நஞ்சு
மாவடுவென் றால்விழியை மரமே நாணும்!
காவடிபோ லும்தோளை மூங்கில் என்றால்
நாவடுச்சொல் தேனென்றால் வண்டோ ஒப்பும்?
சாவடியின் கால்விலங்கு நிகர்க ழுத்தைச்
தேன்பாதி கொடுநஞ்சு பாதி என்றும்
வான்பாதி படுசூறை பாதி என்றும்
ஊன்பாதி பெருநோயும் பாதி என்றும்
நான்பாதி நீபாதி என்பர் ஆயின்
இருளெல்லாம் பகலாக எண்ணி, நாளும்
தெருளில்லா நெஞ்சுடையேன் அலைந்தேன், இன்பம்
அருளில்லா வாட்படைக்கும் வேற்ப டைக்கும்
பொருளில்லாப் பெண்மையைநான் பொருளா யெண்ணிப்
தாய்க்கேனும் தொண்டுசெயார்! அன்பு கொண்ட
போய்த்தூய தொண்டுசெயார்! தமிழ்வ ளர்க்கும்
ராய்த்திகழத் தொண்டுசெயார்! அடிமை மாற
நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார்
பெண்ணினத்தைத் தூற்றலுற்றான்; பெண்ணி னத்தைப்
கண்ணிழந்தான் போலிருந்தான்; எதையும் அங்குக்
உண்ணுவதும் தீர்ந்திட்டான். மெய்வெ றுத்தான்!
பண்படுத்த முடியாதோ உலகை என்றான்!
இயல் 88
முதுவையம்! தீச்செயலால் முடிந்த வையம்!
அதுபோதில் பின்புறத்தில் அன்னம் வந்தே
இதுவைய மாஎன்றான்! "உள்ளேன்" என்றாள்!
புதுவையம்! புதுவையம்! இதுதான் என்றான்;
திகழ்வேலன் பாண்டியனார் பரிசு தன்னைச்
புகழ்க்குரிய பேழையினைக் கொள்க" என்றான்!
மகிழ்ச்சியொடு கீழ்அமைத்தாள்; திறந்தாள்: கண்ணால்
முகம்தாழ்த்திக் கால்விரலால் தரையைக் கீறி
இயல் 89
"ஆம்"என்றான், அள்ளூற! "இனிமேல் உம்மை
அத்தான்என் றழைத்திடுவேன்" என்றாள் அன்னம்!
"தூமணியே செய்"என்றான்! "என்னை வந்து
தொடுங்கள்அத்தான்" என்றுரைத்தாள்! தீர்ந்த பின்னர்
"மாமயிலே இனிமெதுவாய் நடப்பாய்" என்று
"தீமையுறு பிணமென்ன? இறந்த தாகச்
"தெங்குபெருங் குலைசுமந்த தைப்போல் பேழை
செங்கையிலே சுமந்துகுடி சைபு குந்தேன்.
மங்கைஎழில் அன்னமெங்கே என்று கேட்டேன்.
செங்குருதி தோய்ந்திருத்தல் கண்டேன். அங்கே
செவ்விழியால் நீர்பெருக இருந்தாள் நீலி!
இங்குவந்தேன்; சரி, அதுபோ கட்டும் பெண்ணே!
இன்பமன்றோ நடைமுத்தம்" என்றான் வேலன்.
இயல் 90
வந்தபோது ஆத்தா வியப்புற்றுச் சொன்னதையும் சொல்கிறாள்.
"உம்அன்னை யுடன் துயின்றேன். விடியு முன்னே
அம்மருங்கில் தீயவர்கள் எனைஎ திர்த்தார்!
செம்மையுற இருஎன்றான்; வௌியிற் சென்றால்
இம்மதியின் ஒளியினிலே குடிசை வந்தேன்;
நானிறந்து போனேனாம்! புன்னை யண்டை
தேனிதழாள் நீலிஇது சொன்னாள்! அந்தச்
ஊன்உகுத்த செங்குருதி குடிசை தன்னில்
போனதுயிர் எனும்படியே அருமை ஆத்தா
இயல் 91
"என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன்
இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான்
என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான்.
கன்னலின்சா றென்கின்றார் மெய்யா?" என்றான்;
"நானில்லை எனத்தெரிந்தால் நீரு மில்லை.
தானிந்த நாட்டினையும், எனையும் பெற்றுத்
தேனில்லை எனில்நல்ல வண்டு மில்லை
ஏனறிய வில்லை? இருக்கட்டும்; தென்றல்
இயல் 92
வேழவனின் படைமறவர் காப்ப ளிக்க
வாழ்கஎன வாழ்த்துரைத்த வண்ணம் வந்தார்!
பேழையினைக் கண்டார்கள் வேல னோடு
தாழுமுழுத் துறவியவன் வந்தான்! ஆத்தா
வெற்றியெல்லாம் நீர்அருளிச் செய்தீர் என்று
உற்றபெரு வாழ்வனைத்தும் நீவிர் தந்தீர்
பெற்றவன்தன் பிள்ளைக்கு நலத்தைச் செய்தான்
ஒற்றுநரை முடிநீக்கி வீரப் பன்தன்
இயல் 93
தெருவெல்லாம் மறுநாளே முரச றைந்து
பெருநாடெல் லாம்உரைத்தார்; வான்ம றைத்துப்
இருள்நாடா திருக்கும்வகை விளக்கும் இட்டார்;
வருகாலிற் சிலம்பசைய மாதர் இல்லம்
அரசிருக்கைப் பெருங்கூடம் சிறக்க, ஆங்கே
முரசெழுப்பக் கருவியெலாம் இசையெ ழுப்ப
வரிசையொடு காத்திருக்க வேழ நாட்டு
திருமணமும் இது" என்றான்! "கதிர்நாட் டாட்சித்
இயல் 94
தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார்; தமிழி சைக்குத்
அமுதமொழி மங்கைமார் மலர்பொ ழிந்தே
தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன்
கமழ்கின்ற பெருங்கூடம் விட்ட கன்றார்
மணித்தவிசில் வீற்றிருந்த பசிய கிள்ளை
அணித்தான குளிர்புனலை ஏந்தி முல்லை
தணிக்காத காதலொடும் அன்புள் ளானைத்
பணிச்சியரால் உளவறிந்தே விரைவில் அன்னம்
முற்றும்.
Comments
Post a Comment