Nāmakkal kaviñar irāmaliṅkam piḷḷai pāṭalkaḷ I
நாட்டுப் பாடல்கள்
Back
Namakkal kavinjar V. Ramalingam Pillai (1888-1972) Songs- part I
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம்
(in Tamil Script, TSCII format)
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - முதல் பாகம்
1. பரமன்
உலகெலாம் படைத்துக் காத்தே
உண்மையாய் எண்ண மாளா
சலமிலா தெண்ணு வோர்க்குச்
தனித்தனி பிரிந்த போதும்
மலரின்மேல் தேவ னாகி
மாலொடு புத்த னாகி
பலபல தெய்வ மாகிப்
பக்குவப் படியே தோன்றும்
2. கடவுள்
இல்லாத கால மில்லை
எண்ணாத எண்ண மெல்லாம்
சொல்லாத வேத மெல்லாம்
சூட்டாத நாமம் இல்லை
அல்லா வாய்ப் புத்த னாகி
அருளுடைச் சமணர் தேவும்
கல்லாத மனத்திற் கூடக்
கடவுளென் றுலகம் போற்றும்
3. இறைவன்
அன்பினுக் கன்பாய் வந்தும்
அறிந்தவர்க் கெளிய னாகி
முன்பினும் நடுவொன் றின்றி
மூடர்கள் மனத்திற் கூட
செம்பினும் கல்லி னாலும்
சிலந்திபோற் கூடு கட்டிச்
என்பினுக் கென்பா யென்றும்
எழுசுடர் சோதி யான
4. சொல்வதற்கு முடியாத சக்தி
இல்லையென்று சொல்வதற்கும்
இருப்பதென்பார் ருசுப்படுத்த
அல்லவென்று மறுப்பதிலும்
ஆம்என்ற மாத்திரத்தில்
வல்லமென்று அகங்கரித்தால்
வணங்கிஅதைத் தொழுவார்க்கு
சொல்லையத்துச் செயல்மனமும்
சொல்வதற்கு முடியாத
5. சூரியன் வருவது யாராலே ?
சூரியன் வருவது யாராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
பேரிடி மின்னல் எதனாலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
மண்ணில் போட்டது விதையன்று
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
அல்லா வென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
எல்லா மிப்படிப் பலபேசும்
அந்தப் பொருளை நாம்நினைத்தே
எந்தப் படியாய் எவர்அதனை
நிந்தை பிறரைப் பேசாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
6. பராசக்தி
நூறென்று மனிதர்க்கு நீதந்த வயசினில்
கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ!
ஆரெம்மைக் காப்பவர் அன்னையே உன்னையன்றி.?
பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தீ!
நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன்
நோய்வந்து புகுந்தெம்மை நொடிக்குள் மடிப்பதென்றால்
தாய்தந்தை நீயன்றித் தஞ்சம் பிறிதுமுண்டோ
வாய்தந்து வாவென்று வரமருள்வாய் தேவீ!
தாயை மறந்திருக்கும் குழந்தைகள் ஸகஜந்தான்;
சேயை மறந்தவளைச் செகமின்னுங் கண்டதில்லை.
நீயே எம்மைமறந்தால் நிலையெமக் கேதுவேறே?
நோயே மிகநலிய நொந்தனம், வந்தருள்!
நித்தம் உனைநினைந்து நியம முடன்வசிக்கச்
சுத்த மனநிலையும் சொல்லும் செயலும் தந்து
சுற்றும் பலபிணிகள் தொடரா தருள்புரியாய்
சத்திய மாய்விளங்கும் தேவீ பராசக்தி!
7. கண்ணன் பக்தி
கண்ணன் பக்தி சேர்ந்திடில்
மண்ணை வாரித் தின்றவன் ;
வீட்டில் திருடும் வெண்ணெயை
நாட்டில் சிறுவர் யாவரும்
பெண்ணைக் காணில் ஓடுவான் ;
எண்ணம் என்ன தீயதோ !
எண்ணி றந்த கோபிகள்
பெண்ணில் காமம் அல்லவே
தூய அன்புக் காதலைத்
நேய மாகும் கண்ணணை
என்றும் என்றும் பாலனாய்
கன்று காலி மேய்ப்பதில்
புலனை வெல்லும் கீதையைப்
நலனி லாத காமியாய்
ஆண்மை என்ற வன்மையும்
மாண்பிற் சேர்ந்த வேலையே
8. கண்ணன் லீலை
கண்ணன் என்றஒரு சிறுவன்-என்
எண்ண எண்ண அவன்பபெருமை-தனை
சிறுவன் என்று நினை யாமல்-அவன்
திறமை யோடுசெயல் புரியும்-நல்ல
அன்பு என்றஒரு எண்ணம்-தரும்
துன்பம் நேருகிற போது-எண்ணித்
சூது போலப்பல புரிவான்--உலகச்
தீது போலஒன்று செய்வான்--அதில்
ஆணின் அழகுமிக வருவான்--பெண்கள்
நாணிப் பெண்அருகிற் செல்வாள்--அவன்
பெண்ணின் வடிவழகில் வந்தே--ஆண்கள்
கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே--ஓரு
தாயைப் போல்எடுத்தே அணைப்பான்-உடனே
மாயக் காரமணி வண்ணன்-வெகு
கலகப் பேச்சும்அவன்வேலை--மாற்றும்
உலகம் முழுதும்அவன் ஜாலம்--அதை
9. கண்ணன் உறவு
கண்ணன் உறவைப் பிரியாதே
எண்ணம் தூயது என்றானால்
ஊக்கமும் உறுதியும் உண்டாகும்
ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும்
துன்பம் எதையும் தாங்கிடலாம்
அன்பும் அறிவும் பெரிதாகும்
சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும்
விருப்பம் எதும் சித்திபெறும்
மாடுகள் மேய்க்கும் வேலையிலும்
பாடுபட் டுழைத்திட அஞ்சோமே
தூதுவன் ஆகித் துணைவருவான்
ஏதொரு தொழிலும் இழிவல்ல
எல்லா உயிரும் இன்பமுறும்
புல்லாங் குழலை ஊதிடுவான்
பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப்
சக்திகள் பலவும் தந்திடுவான்
ஆடலும் பாடலும் மிகுந்துவிடும்
ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம்
10. கண்ணன் பாட்டு
கண்ணன் வருகிற இந்நாளே
திண்ணம் அவனருள் உண்டானால்
அசுரத் தனங்களை இகழ்ந்திடவும்
விசனம் என்பதை ஒழித்திடவும்
அரசரின் குலத்தில் பிறந்தாலும்
ஒருசிறு பேதமும் எண்ணாமல்
எங்கும் எதிலும் வேடிக்கை
இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால்
அடுக்குப் பானையை உருட்டிடுவான்:
துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன்
ஒன்றும் தெரியாப் பாலன்போல்
என்றும் இளமை குறையாமல்
நம்பின மெய்யரைத் தாங்கிடுவான் ;
வம்புகள் செய்தால் செல்லாவாம் ;
கல்வியில் தேறிச் சிறந்திடலாம் ;
பல்வித நன்மைகள் பெறலாகும் ;
பண்ணும் காரியம் முற்றிலுமே
கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம் ;
11. வருவாய் முருகா
வாவா முருகா! வடிவேல் முருகா!
தேவா உனையே தினமும் தொழுவேன்
அழியா அழகா! அறிவாம் முருகா!
மொழியா இன்பம் அடையும் முறையை
குறையா அழகே! குமரா முருகா!
சிறைவா யுலகில் சிறுகும் எளியேன்
தளரா உடலும் சலியா உயிரும்
வளரா வாடா வடிவம் உடையாய்!
நரையும் திரையும் நணுகா முருகா!
விரியும் உலகின் விரையே முருகா!
12. முருகனென்ற சிறுவன்
முருகனென்ற சிறுவன்வந்து
முன்னிருந்த எண்ணம்யாவும்
அருகுவந்து மனமுவந்தே
அடிமையென் மனத்திருந்த
இளமையந்த முருகன்வந்து
என்னுளத்தி ருந்தபந்தம்
வளமையுற்ற இளமைபெற்று
வந்ததே சுதந்திரத்தில்
அழகனந்த முருகன்வந்தென்
ஐம்புலன்க ளுக்கொடுங்கி
பழமையென் உடற்கண்வைத்த
பாரிலென்னை யாருங்கண்டு
அன்பனந்த முருகன்வந்
அஞ்சல்அஞ்சல் அஞ்சலென்
துன்பமிக்க அடிமைவாழ்வில்
சோகம்விட்டு விடுதலைக்கு
13. முருகன்மேற் காதல்
முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
தகதக வென்றொரு காட்சி--உடனே
ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
14. பிரார்த்தனை
உலகெலாம் காக்கும் ஒருதனிப் பொருளே!
உன்னருள் நோக்கி இன்னுமிங் குள்ளோம்.
இந்திய நாட்டை இந்தியர்க் கென்று
தந்தனை யிலையோ? தவறதில் உண்டோ?
காடும் மலைகளும் கனிதரும் சோலைகள்
ஓடும் நதிகளும் உள்ளன எவையும்
இங்கே பிறந்தவர் எங்களுக் கிலையோ?
எங்கோ யாரோ வந்தவர் துய்க்கச்
சொந்த நாட்டினில் தோன்றிடும் செல்வம்
எந்த நாட்டிலோ எங்கோ போய்விடக்
கஞ்சியு மின்றிக் கந்தையும் இன்றி
அஞ்சிய வாழ்வின் அடிமையிற் கிடந்து
நொந்தனம் கொள்ளை நோய்களாற் செத்து
காட்டிடை வாழும் விலங்கினுங் கேடாய்க்
நாட்டிடை யிருந்தும் நலிந்தனம் ஐயோ!
யாருடை நாடு? யாருடை வீடு?
யாருடைப் பாடு? யார்அனு பவிப்போர்!
பிறந்த நாட்டினிற் பிறவா தவரிடம்
இரந்து நின்(று)அவர் ஏவலே செய்தும்
உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும்
ஊனமிவ் வாழ்வினை ஒழித்திடத் துணிந்தோம்!
ஞான நாயகா! நல்லருள் சுரந்தே
ஆண்மையும் அறிவும் அன்பும் ஆற்றலும்
கேண்மையும் பிறர்பால் கேடிலா எண்ணமும்
அடிமை ஒருவருக் கொருவர்என் றில்லாக்
குடிமை நீதியின் கோன்முறை கொடுத்துச்
சோறும் துணியும் தேடுவ தொன்றே
கூறும் பிறவியின் கொள்கையென் றின்றி
அளவிலா உன்றன் அருள்விளை யாட்டின்
களவியல் போன்ற கருணையின் பெருக்கின்
உளவினைத் தேடி உணர்ந்திட வென்றே
வளமும் எங்கள் வாழ்நாட் போக்கி
மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய்
எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதி!
15. அனைத்தும் நீயே
ஆற்றல்கள் அனைத்தும் நீயே
போற்றிடும் வீரி யம்நீ
மாற்றரும் பலங்கள் நீயே
சாற்றரும் ஜீவ சத்தே
தீமையை வெறுத்து நீக்கும்
வாய்மையில் எனக்கும் அந்த
தாய்மையின் சகிப்பு நீயே
தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில்
உடலினும் உயிருக் கப்பால்
கடலினும் பெரிதாம் உன்றன்
அடைவரும் அமைதி தந்தே
மடமைகள் யாவும் மாற்றி
16. நெஞ்சோடு பிணங்கல்
எண்ணரிய நெடுங்காலம் இடைய றாமல்
எண்ணியெண்ணித் தவவலிமை உடைய ராகித்
திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே!
எத்திசையும் பிறநாட்டார் ஏற்றி பேசும்
பக்திமிகும் இலக்கியத்தின் மணமே வீசும்
முத்தமிழின் வழிவந்தும் முன்னோர் தம்மைப்
பித்தரென்றே எண்ணுகின்றாய் பேதை நெஞ்சே!
நாத்திகந்தான் நாகரிகச் சின்னம் போல்
மூத்தறிந்த முன்னோரைப் பின்னம் பேசிச்
சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை யேபோல்
சொந்தபுத்தி இழந்துவிடல் நன்றோ? சொல்வாய்.
ஆத்திசூடி நல்லறிவை அழித்து விட்டாய்
ஆசாரக் கோவைதன்னை இழித்து விட்டாய்
பார்த்திதனை அன்னியவரும் பரிகசித்தார்
பாவமிதைப் புண்ணியம்போல் மிகர சித்தாய்.
தள்ளரிய தெய்வத்தின் நினைவு கூட்டும்
பிள்ளையார் சுழிபோட்டுக் கடிதம் தீட்டும்
தெள்ளறிஞர் நமதுமுன்னோர் செயலைக் கூட
எள்ளிநகை யாடுகின்றாய் ஏழை நெஞ்சே!
2. தமிழ்த்தேன் மலர்
17. அமிழ்தத் தமிழ்மொழி
அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
வைய கத்தில் இணையி லாத
வான கத்தை நானி லத்தில்
பொய்அ கந்தை புன்மை யாவும்
புண்ணி யத்தை இடைவி டாமல்
மெய்வ குத்த வழியி லன்றி
வேண்டி டாத தூய வாழ்வைத்
தெய்வ சக்தி என்ற ஒன்றைத்
தெளிவு கண்ட ஞான வான்கள்
உலகி லுள்ள மனிதர் யாரும்
ஒன்று பட்டு வாழும் மார்க்கம்
கலக மற்ற உதவி மிக்க
கடமை கற்று உடைமை பெற்ற
சலுகை யோடு பிறமொ ழிக்கும்
சகல தேச மக்க ளோடும்
இலகும் எந்த வேற்று மைக்கும்
இடைவி டாமல் காட்டும் எங்கள்
கொலைம றுக்கும் வீர தீரக்
கொடியவர்க்கும் நன்மை செய்யக்
அலைமி குந்த வறுமை வந்தே
ஐய மிட்டே உண்ணு கின்ற
கலைமி குந்த இன்ப வாழ்வின்
கருணை செய்தல் விட்டி டாத
நிலைத ளர்ந்து மதிம யங்க
நீதி சொல்லி நல்லொ ழுக்கம்
அன்பு செய்தும், அருள் அறிந்தும்,
அறிவ றிந்து திறமை யுற்றே
இன்ப மென்ற உலக றிந்த
இறைவ னோடு தொடர்ப றாமல்
துன்ப முற்ற யாவ ருக்கும்
துடிது டித்தே எவ்வு யிர்க்கும்
தென்பு தந்து தெளிவு சொல்லும்
திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற
பழிவ ளர்க்கும் கோப தாப
பகைவ ளர்க்கும் ஏக போக
அழிவு செய்யக் கருவி செய்யும்
அனைவ ருக்கும் நன்மை காணும்
மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற
முறைதெ ரிந்து சேர்த்த திந்த
வழிய றிந்து நாமும் அந்த
வஞ்ச மிக்க உலக வாழ்வைக்
18. தமிழ் வாழ்க!
தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில்
அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும்.
நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம்
தமிழர்க்கும் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.
பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே
உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே.
துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்;
அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.
அன்பென்ற அதைமிக்க அறிவிக்க நின்று
துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.
அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்.
இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியெ.
அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம்.
கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்;
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்.
அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம்.
குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
மணமிக்க தமிழென்ற மதிமிக்க மொழியாம்.
பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
விலகாத நட்பிற்கு வெகுகெட்டி வேராம்;
தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம்.
எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே
அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம்.
விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால்
திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால்
சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப்
பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம்.
சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்;
காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம்
ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும்
மூலத்தை உண்ர்வெங்கள் மொழிஉண்டு பண்ணும்.
பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும்
உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும்
இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும்
அறமேதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம்.
விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும் ;
மெஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடிக் கற்கும்;
பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம்.
கொல்லாமை பொய்யாமை எனுமிவ்வி ரண்டில்
எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு
சொல்லும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்.
19. தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் ;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
'பத்தினி சாபம் பலித்துவிடும்'
சித்திரச் சிலப்பதி காரமதைச்
சிந்தா மணி,மணி மேகலையும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
தேவா ரம்திரு வாசகமும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
தாயும் ஆனவர் சொன்னவெலாம்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
நேரெதும் நில்லா ஊக்கமுடன்
பாரதி என்னும் பெரும்புலவன்
கலைகள் யாவினும் வல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
சிற்பம் சித்திரம் சங்கீதம்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
உழவும் தொழிலும் இசைபாடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
யாழும் குழலும் நாதசுரம்
வாழும் கருவிகள் வகைபலவும்
'கொல்லா விரதம் பொய்யாமை
எல்லாப் புகழும் இவைநல்கும் ;'
மானம் பெரிதென உயிர்விடுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ;
ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
உத்தமன் காந்தியின் அருமைகளை
சத்தியப் போரில் கடனறிந்தான் ;
20. இளந்தமிழனுக்கு
இளந்த மிழா! உன்னைக் காண
இதுவ ரைக்கும் எனக்கி ருந்த
வளந்தி கழ்ந்த வடிவி னோடும்
வறுமை மிக்க அடிமை நிற்கு
தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத்
தமிழர் நாட்டின் மேன்மை மீளத்
குளிர்ந்த என்றன் உள்ளம் போலக்
குற்ற மற்ற சேவை செய்து
பண்டி ருந்தார் சேர சோழ
பாயுமேடா உன்னை யின்று
கொண்ட கொள்கை அறம்வி டாமல்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
மண்ட லத்தே இணையி லாத
மகிமை கெட்டே அடிமைப் பட்டு
செண்டெ ழந்தா லென்னப் பாய்ந்து
தீர வீரம் நம்முள் மீளச்
அன்பி னோடும் அறிவு சேர்ந்த
அச்ச மற்ற தூய வாழ்வின்
இன்ப மான வார்த்தை பேசி
எம்மு டன்பி றந்த பேர்கள்
துன்ப மான கோடி கோடி
சோறு தின்ன மானம் விற்கும்
என்ப தான் நீதி யாவும்
இளந்த மிழா! என்றும் நின்றே
பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
பயமுறுத்தல் என்ப தற்கே
குணமி ருந்தார் யாவ ரேனும்
குற்ற முள்ளோர் யாரென் றாலும்
இனமி ருந்தார் ஏழை யென்று
இழிகு லத்தார் என்று சொல்லி
மணமி குந்தே இனிமை மண்டும்
மாநி லத்தில் எவருங் கண்டு
ஓடி ஓடி நாட்டி லெங்கும்
ஊன மான அடிமை வாழ்வை
வாடி வாடி அறம்ம றந்து
வாய்மை யோடு தூய்மை காட்டும்
கூடிக் கூடிக் கதைகள் பேசிச்
குப்பையோடு தள்ளி விட்டுக்
பாடிப் பாடித் தமிழின் ஓசை
பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப்
தமிழ னென்ற பெருமை யோடு
தரணி யெங்கும் இணையி லாஉன்
அமிழ்த மென்ற தமிழி னோசை
அகில தேச மக்க ளுங்கண்
கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற
கட்டி வந்து தமிழர் வீட்டில்
நமது சொந்தம் இந்த நாடு
நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
21. தமிழன் குரல்
' தமிழன் குரல்' எனும் தனிஓசை
அமிழ்தம் போன்றுள அழிவில்லா
கொல்லா விரதம் குறியாக்
எல்லா மனிதரும் இன்புறவே
அருள்நெறி அறிவைத் தரலாகும்;
பொருள்பெறா யாரையும் புகழாது;
அன்பும் அறமும் ஊக்கிவிடும்;
இன்பம் பொழிகிற வானொலியாம்;
குற்றம் கடிந்திடக் கூசாது;
முற்றும் பரிவுடன் மொழிகூட்டி
தமிழின் பெருமையை மறந்துவிடின்
தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்;
22. தமிழரின் பெருமை
தமிழா! உனக்கிது தருணம் வாய்த்தது
'அமுதாம் என்மொழி; அறமே என்வழி;
சைவமும் வைணமும் சமணமும் பவுத்தமும்
வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களை
எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமையை
இங்கே அங்கே என்ற வுரைவுகளை
ஏசு தமிழரலர் என்றகா ரணத்தால்
பேசும் தமிழருள் கிறுஸ்துவைப் போற்றும்
மகமது பிறந்தது மற்றொரு தேசம்அவர்
அகமகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை
உலகின் மதமெலாம் ஒவ்வொரு காலத்தில்
கலகம் சிறுதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக்
தன்னுயிர் நீப்பினும் பிறர்கொலை அஞ்சிடும்
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல்
கொல்லா விரதமே நல்லார் வழியென்று
எல்லா விதத்திலும் எவரும் மதித்திடும்
உலகம் முழுவதும் கலகம் உறுதுபார்!
விலகும் படிசெய்யும் வெறிகொண்ட பேச்செல்லாம்
இந்தியத் தாய்மனம் நொந்து கிடக்கையில்
அந்தப் பெரியவளின் அடிமை விலங்கறுத்துன்
தமிழகம் வாழ்கநல் தமிழ்மொழி வளர்ந்தெம்மைத்
குமிழும் நுரையுமென்னக் கூடி மனிதரெலாம்
23. தமிழ் நாடு எது? தமிழன் யார்?
வலைவீச ஆசைதரும் அலைவீசும்
விலைவாசிக் கவலையின்றி விருந்தோம்ப
'தலைவாசற் கதவினுக்குத் தாள்பூட்டே
பலதேசம் சுற்றிவந்த மகஸ்தனிசும்
பற்றொழித்த பெரியவரே பகுத்தரைக்கும்
கற்றறிந்த அரசர்களே காவல்செய்த
மற்றெரிந்த வீரனென்று மமதையுள்ள
சற்றொருவர் வருந்திடினும் தாம்வருந்தும்
வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்
வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க
ஈங்குவட இமயம்வரை இந்தியரின்
தாங்கள்ஒரு தனியென்று தடைபோட்டுத்
விசைச்சொல்லும் உலகநடை வெவ்வேறு
பகைச்சொல்லும் பலபாஷை அறிவெல்லாம்
திசைச்சொல்லுக் கென்றுதனி இடங்கொடுத்தார்
இசைச்சொல்ல இதைப்போல வேறுமொழிக்
எந்தமொழி வந்திடினும் தமிழ்மொழியை
வந்தபிற மொழியையெலாம் வரவேற்றுத்
செந்தமிழின் சரித்திரத்தைத் தெரியாமல்
இந்திமொழி வந்ததென்ற இகழ்ந்துரைப்போர்
பூச்சிபூழு உயிர்களையும் சமமென்று
பேச்சிலுள்ள வேற்றுமைக்கு மனிதர்களைப்
ஏச்சிலொரு இன்பமுள்ளோர் எக்காலும்
கூச்சலிட்டு வசையுரைப்போர் கொச்சைகளே
வேறெவரும் நுழையாமல் வேலியிட்டுத்
கூறுபடும் பலநாட்டார் கூடிநலம்
மாறுபடும் பலமதமும் மருவிமனம்
தேறிமனம் தெளிவடைவோம் ; தமிழர்களின்
24. வடநாட்டில் கொடுமை*
கோபமும் கொதிப்பும் குமிறிடும் படிபல
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
அன்னிய மதமென அடிக்கடி பழகிய
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
கொடைக்குணம் மிகுந்ததம் குலத்தவர் காத்தனர்
வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும்
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை
அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
* நவகாளி அட்டூழியம் கேட்டுப் பாடியது
25. தமிழ் மக்கள்
நிலைபெற்ற அறிவென்ற
நிறைவுற்ற அருள்கொண்ட
கலைமிக்க தமிழன்னை
கனிவுற்ற மனமொத்த
அலையற்ற கடலென்ன
அகிலத்தின் பலமக்கள்
தலைபெற்ற புகழ்கொண்டு
தயவொன்றிப் பயமின்றித்
26. பாரதி பாட்டு
அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்
'நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்
படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்
'எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்
புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்
எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி
பித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்
முத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு
சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்
நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி
வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்
இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்
பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்
'மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்
தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!
வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத
பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்
"பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்
வேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்
சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்
தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்
'அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்
தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று
பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்
உருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே
பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று
சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை
ஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே
பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்
சோற்றினுக் கறிவை விற்றுத்
சோம்பரைச் செல்வ ரென்று
கூற்றினுக் குடலம் போகக்
குறிவிடா திறந்து போகும்
வேற்றவர்க் கடிமை நீங்கும்
வீரமும் ஞானம் பொங்கச்
நாற்றிசைத் தமிழ ரெங்கும்
நாவலர் சுப்ர மண்ய
27. தமிழ்ப் பணி
தமிழன்னை திருப்பணி செய்வோமே
அமிழ்தம் தமிழ்மொழி என்றாரே!
அன்பு நிறைந்தவள் தமிழன்னை
இன்பக் கலைகள் யாவையுமே
பக்தி நிறைந்தது தமிழ்மொழியே
சக்தி கொடுப்பவள் தமிழ்த்தாயே
வண்மை மிகுந்திடும் மனமுடையாள்
தண்மை அளித்திடும் இலக்கியத்தாள்
மாநிலம் முழுதும்ஓர் சமுதாயம்
தானென அறிஞர்கள் தலைவணங்கும்
அந்நிய மொழிகளை அருவருக்கும்
நன்னயம் மிகுந்தவள் தமிழ்மாதா
பற்பல் மொழிகளைப் பகுத்தறிந்தாள்
அற்புத மாகிய மனப்பெருமை
மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல்
தன்னலம் துறந்திடும் தகவுடையாள்
அந்நிய வாழ்க்கையின் ஆசையினால்
முன்னைய பெருமைகள் முற்றிலுமே
புதுப்புது ஒளிகளில் அலங்கரிப்போம்
மதிப்புடன் படித்தவர் மகிழ்ந்திடுவார்
அன்னிய மொழியே தினம்பேசி
இன்னமும் இருந்தால் தமிழ்மொழியே
தமிழன் என்பதை மறக்காதே
'அமிழ்தம் தமிழ்மொழி' ஐயமில்லை
28. தமிழிசையின் தத்துவம்
'இசை'எனல் கருத்துடன் ஓசையும் இசைவதாம்.
'கற்றலில் கேட்டலே நன்றெ'னும் கட்டுரை
படிப்பிற்கு மட்டுமா? பாட்டிற்கும் உண்டு.
படித்துக் கற்றிடும் அறிவைப் பார்க்கினும்
கேட்டுக் கற்றிடும் அறிவே கெட்டியாம்.
என்னும் தத்துவம் இசையினால் பலம்பெறும்
செவிவழி நுழைந்தே உணர்ச்சியைத் திரட்டி
அறிவைத் தேடும் ஆவலுண் டாக்கி
எண்ணச் செய்கிற ஓசையே இசையாம்.
ஓசைகள் மட்டுமே உணர்ச்சிஉண் டாக்கலாம்.
அழுவதற் கென்றோர் ஓசையை அறிவோம் ;
சிரிப்பதைக் காட்டும் சத்தமும் தெரிவோம் ;
அச்சம் குறிக்கிற ஒலியையும் அறிவோம் ;
அதிசயப் பட்டால் அதற்கொரு தனிஒலி ;
ஐயம் வினாக்களும் ஓசையால் அறியலாம் ;
அபயக் குரலையும் ஓசையால் அளக்கலாம் ;
எல்லா உணர்ச்சியும் ஓசையால் எழலாம் ;
எனினும் ஓசையே இசை ஆகாது.
'சங்கீதம்' என்பது ஓசையின் சங்கதி.
சப்த சுரங்களைச் சமர்த்தாய்க் கலந்து
நீட்டலும் குறுக்கலும் தெளித்தலும் செய்து
நிரவல் செய்து பரவல் நிரப்பிக்
கற்பனை மிகுந்த ஓசைகள் காட்டலே
சாமான்ய மாகச் 'சங்கீதம்' என்பது.
அதிலே மட்டுமோர் ஆனந்த மிருக்கலாம்.
நாதப் பிரம்மமும் அதிலே நாடலாம் ;
அதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி இல்லை ;
ஓசையை மட்டும் ரசிப்பவர் உண்டு.
ஆனால் அவர்கள் அதற்கெனப் பழகினோர்.
அப்படிப் பழகினோர் மிகச்சிலர் ஆவர் ;
அவர்களைப் பற்றியும் அக்கறை இல்லை.
பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட
இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்பப்
'பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
தத்துவம் இதனை மனத்தில் தாங்கி,
புதுப்புது 'மெட்டை'யும் இசையிற் புகுத்திப்
பழைய 'சிந்துகள்' 'பதங்கள்' 'வண்ணமும்',
தமிழின் சொந்தச் சந்தம் பலவும்
அழிந்துபோ காமல் அவற்றையும் போற்றித்
'தமிழிசை' வளர்ப்பது தமிழன் கடமையாம்.
சங்கீ தத்தையும் தமிழன் கைவிடான்.
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு
யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,
ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
'கர்நா டகத்துச் சங்கீதம்' என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்
தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?
29. சேர்த்து வைத்த செல்வம்
"தன்குஞ்சு ஒன்றே பொன்குஞ்சு என்று
கன்னங் கறுத்த காக்கையும் கருதும்"
என்னும் பழமொழி இயல்புக் கிணங்க
அவரவர் மொழியே அவரவர்க் குயர்ந்ததாம்.
ஆயினும் தமிழை அதற்காய்ப் புகழ்ந்திடோம்.
பழமை மிக்கது தமிழெனும் மொழியாம்.
ரசங்கள் நிறைந்த ராமா யணத்தை
வான்மீகி முனிவன் வரைந்த போதே
தமிழர் நாட்டைத் தனியே புகழ்ந்தான் ;
ஆட்சியின் சிறப்பையும் அதிலே சொன்னான்.
வான்மீகி காலம் வரையறை அற்றது ;
அதற்கும் முன்னால் ஆண்டனர் தமிழர் ;
இலக்கண அமைப்பிலும் இலக்கியச் சிறப்பிலும்
தனிப்பட் டுயர்ந்தது தமிழ்மொழி என்றே
ஆராய்ந்தறிந்த அனைவரும் சொல்லுவர்.
எந்த மொழியையும் இகழ்ந்திடாத் தமிழன்
பற்பல பாஷைகள் நன்றாய்ப் படித்தும்
அறிவையே நாடி அலசிப் பார்த்தும்
உலகத்தி லுள்ள உயர்ந்த கருத்துகள்
எல்லாம் நிறைந்த இலக்கியம் உள்ளதாய்ச்
சேர்த்து வைத்த செல்வம் தமிழ்மொழி
இன்று நேற்று ஏற்பட்ட தன்று ;
மூவேந்தர் ஆட்சிக்கு முன்னா லிருந்தே
இந்திய நாட்டிலும் அந்நிய இடத்திலும்,
திரவியம் தேடித் திரைகட லோடியும்,
கப்பல் ஓட்டிக் கடலைக் கடந்தும்,
அந்நிய மன்னர் அழைப்புக் கிணங்கியும்,
எவரும் மதித்தே எதிர்கொள்ளும் இனமாய்,
எங்கும் சென்றே எவரோடும் பழகி
ஆண்டுகள் பற்பல ஆயிர மாக
வாழ்ந்த தமிழர் வருந்திச் சேர்த்தது.
உலக வழக்குடன் ஒட்டியே நின்று
'கன்னித் தமி'ழென இன்னும் களிக்கப்
புதுப்புது அறிவுகள் புகுதற் கிடந்தர
எண்ணிச் செய்த இலக்கணம் உள்ளதாய்,
உண்மை அறிவில் ஊன்றிய வேருடன்
பருத்துப் படர்ந்த பற்பல கிளையுடன்
விழுதுகள் எண்ணில வெவ்வெறு தாங்க
ஊழிக் காற்றே உரத்தடித் தாலும்
அசைக்க முடியா ஆல மரம்போல்
நேர்ந்தவர்க் கெல்லாம் நிழலே கொடுத்தும்
அலுப்பைத் தீர்த்தும் அமைதியைத் தந்தும்
கவிதையும் காட்டி, களிக்கச் செய்திடச்
செழித்து நிற்பது செந்தமிழ்ச் சிறப்பு ;
தமிழைப் போற்றுதல் தமிழரின் கடமை.
தமிழின் வளர்ச்சியை மனத்தில் தரித்தும்
அந்நியர் அறிவையும் தமிழில் பிணைத்தும்
தொழில்முறை அறிவுகள் தமிழில் தொகுத்தும்
ஏனைய நாட்டின் எல்லா அறிவும்
தமிழில் உண்டெனத் தருக்கும் படியாய்ச்
செய்து வைப்பதே தமிழ்மொழிச் சேவை.
30. கவிதை என்றால் என்ன?
அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே 'கவிதை' எனப்படும்.
'கவிதை' என்பது கற்பனை உள்ளது ;
கூட்டியும் பேசும் ; குறைத்தும் கூறும் ;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும் ; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!
31. தமிழைப் பேணுவோம்
பாஷைக ளெல்லாம் பசையற நாணிக்
கூசிக் கூசிக் குறைபடச் செய்யும்
வாசத் தமிழை வரையிலாத் தொன்மையை
வீசும் தமிழை விரிந்த கடலினைத்
தேனினும் பாகினும் தெள்ளிய அமுதினும்
ஏனினும் எதனினும் இனித்திடும் தமிழைத்
தின்னத் தின்னத் தெவிட்டாத் தமிழைப்
பன்னப் பன்னப் பலக்கும் தமிழைக்
கொள்ளக் கொள்ளக் குறாயாத் தமிழைக்
கள்ளக் கபடுகள் இல்லாத் தமிழைப்
படிக்கப் படிக்கப் பயனே தந்து
குடிக்கக் குடிக்கக் குறையா அமுதை
என்தாய் மொழியினை என்னுடைத் தமிழை
உன்தாய் மொழியினை உம்முடைத் தமிழை
எம்மையும் உம்மையும் மற்றுமிங் கெவரையும்
செம்மையாம் நம்முடைச் சிறுபிரா யத்தினில்
தொட்டிலில் விட்டுக் கட்டிலில் வைத்துத்
தோளிலும் மார்பிலும் தூக்கித் திரிந்து
பாலூட்டி வளர்த்த பாவையாம் தமிழைத்
தாலாட்டி வளர்த்த தாயாம் தமிழைச்
சீராட்டி வளர்த்த சீர்பெறும் தமிழைப்
பாராட்டி வளர்த்த பழையதோர் தமிழைக்
கோவண முடுத்துப் பாவாடை தந்த
தேவியாம் தமிழைத் தெய்வநற் றமிழை
ஆசையாம் மனைவியை அகத்தினில் விட்டு
சேவையை விரும்பும் வெறியரைப் போன்ற
பாஷையை மறந்த பாதகர் பிறந்து
தேசமிந் நாட்டின் தீவினை யாலே
சீச்சீத் தமிழெனச் சீறிப் பழித்து
நாசியை நீட்டி நாய்போல் விழுந்து
ஏசித் திரியும் இழிவுடை மாக்கள்
பேசவும் கூசிடும் பேயர்கள் பிறந்து
தன்னை வளர்த்த தமிழைப் பேசுதல்
குன்றுந் தொழிலெனக் கூசியே நின்று
பன்னப் பன்னப் பல்லைக் காட்டிடும்
சின்னஞ் சிறியவர் பிறந்தத னாலே
தாயை மறந்த தடியர்கள் போல
வாயைத் திறந்தொரு வார்த்தை சொல்லவும்
உரிமையாம் பாஷையைத் தெரியா திருப்பது
பெருமையென் றெண்ணும் பேயெனு மாக்கள்
குங்குமம் சுமந்த கழுதையே போலத்
தம்முடைப் பாஷையைத் தாமுண ராமல்
அத்துடன் அதனை அவமதித் தேசும்
பித்தரும் பதரெனும் சுத்தநிர் மூடர்கள்
பிறந்தத னாலே பெருமை மறந்து
சிறந்த நாளும் சீரும் குறைந்து
மண்ணிற் கிடக்கும் மணியே போலும்
அற்பரை அண்டிய விற்பனர் போலும்
ஆதர வில்லா வித்தையே போலும்
அணைப்பவ ரில்லாக் குழந்தையே போலும்
அநுபவ மில்லா அறிவே போலும்
மங்கிக் கிடக்கும் மருவிலாத் தமிழை
இங்கிதத் தமிழிழை இனிமையாம் தமிழை
அந்த நாளினற் சந்திர முடியோன்
சுந்தரப் படுத்த வந்துநின் றருளி
விருத்தியே செய்யக் கருத்தினி லெண்ணிப்
பெருத்த கேள்வியர் பெரியவர் சபையெனச்
சங்கரன் தானே அந்தத் தலைவனாய்த்
தங்கியே நடத்திய தனிப்பெரும் சபையெனச்
சுத்தரும் சித்தரும் பக்தரும் துதிக்க
இத்தரை யெல்லாம் இசைகொண்டு நின்றே
உலகெலாம் அழியினும் விலகிடாப் புகழொடும்
அலகிலாக் கல்விக் களஞ்சிய மாகித்
தெய்வப் பலகையைத் தன்னிட மடக்கி
ஐயமில் லாத அருந்தமி ழளித்த
சித்திரச் சபையாம் மெய்த்திருச் சபையாம்
முத்தமிழ்ச் சங்கம் விளங்கிய தமிழைத்
தாயெனப் பேணித் தமிழ்ர்கள் யாவரும்
ஓயா துழைத்தே ஒப்பிலா மொழியெனப்
புதுப்புதுக் கவியும் புகழ்பெரு நூல்களும்
விதவிதம் படைத்து வேறுள நாட்டவர்
யாவரும் வியக்க அரியா சனத்தில்
மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே.
32. தமிழ் இசை
தன்நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்
நன்னாட்டத் துடன்ராஜா நம்சர் அண்ணா
தென்னாட்டுத் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்
எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி
வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி
தந்தவர்கள் தமிழரைப்போல வேறு யாரும்
அந்தப்பெருங் குணத்திலின்னும் குறைவோ மில்லை;
சொந்தமொழிக் கலைகளெல்லாம் சுருங்கித் தேயப்
முக்கிமுக்கிப் பயின்றுபல முயற்சி செய்து
திக்குமுக்க லாடுகின்ற பாஷைக் கெல்லாம்
சிக்குமுக்காம் உச்சரிப்புச் சிறிதும் வேண்டாச்
தக்கமிக்கோர் இனிமையெனும் தமிழில் நாதச்
நாதமெனும் பிரமத்தைப் பணிவோம்; ஆனால்
கீதமென்று புரியாத பாட்டைக் கேட்டுக்
வாதமென்ன? இதிலெவர்க்கும் வருத்தம் ஏனோ?
ஓதியும் உணர்ந்ததுவும் தாய்ப்பா லோடும்
கலையென்றால் உணர்ச்சிகளைக் கவர வேண்டும் ;
நிலைகொள்ளாச் சிந்தனையை நிற்கச் செய்து
விலையில்லாப் பெருமைபல உடைய தேனும்
தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட் டாலும்
'சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன
இங்கேதும் தடையில்லை ; ஏற்றுக் கொள்வோம் ;
சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்
தங்காமல் தயங்காமல் தளர்த்தி டாமல்
கேட்டிருந்தார் பாடினவர் எல்லாம் சேர்ந்து
நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி
பாட்டினுடன் இலக்கியமும் படியப் பாடிப்
கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்தி டாமல்
பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்?
விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும்
அலைநீட்டும் கடல்கடந்த அறிவா னாலும்
நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக் கென்றே
ஆதலினால் தமிழ்நாட்டில் தமிழ்பாட்டிற்கே
காதலினால் தாய்மொழியைக் காப்ப தன்றிக்
தீதில்லா திம்முயற்சி சிறப்புற் றோங்கத்
வாதெல்லாம் விலக்கி, கலை வாண ரெல்லாம்
33. திருக்குறள் பெருமை
அமிழ்தமென்று மிகமகிழ்ந்தே
அறிவறிந்த மொழிஇதென்றே
தமிழ்மொழிக்கிங் கழிவிலாத
தரணியெங்கும் இணையிலாத
அமைதிமிக்க ஜனசமூகம்
அடிமையற்ற குடிமைபெற்ற
இமையவர்க்கும் நெறிபுகட்டும்
இங்குரைத்த குறள்களென்ப
காடுசென்று குகையடைந்து
காவிகட்டி ஓடெடுத்துக்
தாடிவைத்து மொட்டைதட்டித்
தரணிமெச்ச ஊர்கள்சுற்றித்
கூடுவிட்டுக் கூடுபாயும்
கோடிகாலம் வாழஎண்ணிக்
தேடுகின்ற உண்மையாவும்
தெய்வவாக்கு வள்ளுவன்
அன்புதந்த அருள்விளக்கி
ஆன்மஞானம் என்றுசொல்லும்
துன்பமென்ற உலகவாழ்வில்
துணைபுரிந்தே அருகிருந்து
இன்பம்என்று தவறுசெய்து
இடைபுகுந்து மாற்றுரைத்தே
தென்புமிக்க தூயவாழ்வின்
தெய்வஞான வள்ளுவன்
34. தமிழ் வளர்க்கச் சபதம்
சீர்திறந்த தமிழர்களின் புத்தாண் டிந்தச்
பார்புரந்த மனுநீதிச் சோழன் பண்டோர்
ஏர்சிறந்த ஒருமகனை ஈடாய்த் தந்தான் ;
தேர்சிறந்த தியாகேசன் திருவா ரூரில்
அமிழ்தமென எவ்வுயிர்க்கும் அன்பு செய்தே
தமிழ்மொழியின் பெருங்குணத்தின் தாரா ளத்தைத்
நமதருமை முன்னோர்கள் நெடுநா ளாக
அமைதிமிக்க தமிழ்வாழ்வைக் குலைக்க எண்ணும்
பாண்டியரும் சோழர்களும் சேர மன்னர்
நீண்டுயர்ந்து கோபுரங்கள் வடிவாய் நின்று
தூண்டியநல் லுணர்ச்சிகளின் தொகுப்பே யன்றோ
ஈண்டிவைகள் யாவினையும் இகழ்வோ மானால்
கோயில்களின் பெரும்பயனைக் குறைத்துப் பேசிக்
தூயவழி வாழ்வதற்கு நல்லோர் கண்ட
வாயில்வந்த கொச்சைகளால் வசைகள் வீசி
ஞாயமற்ற பேச்சுகளை நீக்கா விட்டால்
முன்னோர்கள் யாவரையும் மூட ரென்றும்
சொன்னவர்கள் சூழ்ச்சிகளைச் செய்தா ரன்றிச்
பொன்னாலும் புகழாலும் மயக்க வொண்ணாப்
என்னேரம் பார்த்தாலும் இகழ்வே யானால்
ஏனென்று கேட்பதற்கோ எவரும் இன்றி
கோனென்ற யாவரினும் குணமே மிக்க
நானென்ற அகங்காரம் நம்மைச் சூழ
தேனென்ற நமதுமொழி வாழ வேண்டின்
நித்தியமாம் சத்தியமே நெறியாய்க் கொண்டு
சுத்தமுள்ள பெரும்புலவர் வழியில் தோன்றிச்
எத்தனையோ பெரியவர்கள் இசைத்த நூல்கள்
அத்தனையும் அழிந்தொழிய விடுவோ மானால்
புதுமையென்றும் புரட்சியென்றும் புனைந்து கூறிப்
முதுமொழிகள் யாவையுமே மோசம் செய்யும்
சதிபுரியத் துணிந்துவிட்டோம்; தமிழ்தாய் நொந்து
கதியிழந்து போகுமெனக் கண்ணீர் கொட்டிக்
விஞ்ஞானக் கலைகளெல்லாம் விரித்திட் டாலும்
மெய்ஞ்ஞானக் கருணைவழி காக்கும் மேன்மை
அஞ்ஞானப் பொய்களையே அடுக்கிக் கொண்டிங்
பொய்ஞ்ஞானத் தீமைகளைப் போக்க வேண்டும்
தெள்ளியநல் அறங்களையே தெளிவாய்ச் சொல்லித்
வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்ன
பிள்ளைமனப் பேரறிஞன் பெம்மான் காந்தி
கள்ளமற நாமறிந்து கொள்வோ மானால்
3. காந்தி மலர்
35. காந்தி அஞ்சலி
சமனி லாத இந்த நாட்டின்
சரிச மான மாக மற்ற
அமர னாகி நம்மைக் காக்கும்
அஞ்ச லிக்கும் யாவ ருக்கும்
36. மகாத்மா
இத்தனைநாள் உலகமெல்லாம் இருந்தறிந்த
அத்தனையும் ஓருருவாய்த் திரண்டதெனக்
சத்தியமே மந்திரமாம் சாந்தமொன்றே
உத்தமனாம் காந்திமுனி உச்சரித்த
37. கண்கண்ட தெய்வம்
காந்திக்கு நிகர்வேறும் உண்டோ--மக்கள்
சாந்திக்கும் புகழ்தந்த சாந்தன்--உலகில்
மரணத்தை இனிதாக்கும் ஐயன்--என்றும்
இரணத்தை எய்யாத வீரன்--காந்தி
உயிருள்ள உடலங்கள் எல்லாம்--ஈசன்
துயருற்ற எவருக்கும் துணையாம்--காந்தி
வையத்தை வாழ்விக்க வந்தான்--மக்கள்
தெய்வத்தின் பெயர்தியாக ராசன்--என்று
பகவானைத் தரிசிக்க என்று--நாமும்
மிகவாக வாடுதல் வேண்டாம்--காந்தி
தானங்கள் வெவ்வேறு செய்து--நல்ல
மோனங்கள் தருகின்ற யாவும்--காந்தி
ஒப்புடன் உண்மைக் காக
எப்படி விரும்பி னாரோ
இப்படி உயிரை ஈந்தோர்
தப்புற நினைக்க வேண்டாம்
அற்புதப் பிறவி காந்தி
கற்பனை கடந்த சாந்தன்
பற்பல நினைந்து பேசிப்
நற்குணச் சீலன் காந்தி
உடலோடு வந்து போகும்
கடவுளை உலகில் யாரும்
அடைவரும் கருணை அந்தக்
நடைமுறை வாழ்விற் செய்த
எத்தவம் முயலு வோர்க்கும்
சத்தியத் தூய வாழ்வின்
நித்தமும் நமக்கு முன்னால்
உத்தமன் காந்தி எம்மான்
நோன்புடன் மறைந்த காந்தி
சாம்பலில் கரைந்து இன்று
தேம்பிடும் உலகம் தேறத்
ஏம்பலைப் போக்கி ஞான
சூரியன் இறப்பான்; காணும்
பாரொடு விண்ணில் மின்னப்
தேரிய அறிவு கூறும்
நேரிய காந்தி ஞானம்
39. தூய்மை ஜோதி
நீறு பூசு வோர்களும்
வேறு பொட்டு சந்தனம்
கூறும் சின்னம் இன்றியும்
மாறு கொள்ளும் யாவரும்
அமிழ்த மொத்தே அறிவினில்
தமிழ றிந்த சத்தியம்
தமைய றிந்த முனிவரும்
அமைதி தேடும் சாந்தியே
மூச்ச டக்கும் யோகமும்
பேச்ச டக்கும் மோனமும்
கூச்ச மற்ற பக்தியும்
தேர்ச்சி கொள்ளும் கருணையே
வீரம் பேசும் வெறியரும்
ஈரம் அற்ற நெஞ்சரும்
ஓரம் சொல்லு வோர்களும்
தூரம் ஓடக் காய்ந்திடும்
40. இணையிலர் காந்தி
பிறப்பிலும் பெரியவர் பெம்மான் காந்தி
இறப்பிலும் இணையிலர் எம்மான் காந்தி
துறப்பிலும் நிகரிலர் தூயோன் காந்தி
மறப்பதும் நமக்கது மாபெரும் பாவம்.
அறிவினில் ஆழியன் அரும்பெரும் காந்தி
நிறைகுண நலங்களில் நேரிலன் காந்தி
குறிசொலும் அனுபவக் குன்றாம் காந்தி
நெறிதரக் காந்தியின் நேரெவர் உலகில்!
மேழியின் சிறப்பினை மீட்டவர் காந்தி
ஏழையின் பெருந்துணை எமதரும் காந்தி
கோழையும் திடம்பெறக் கொடுத்தவர் காந்தி
வாழிய காந்தியின் வழிகொடு வாழ்வோம்.
கள்ளினை ஒழித்தவர் கடனறி காந்தி
கதருடை தந்தவர் கணக்கறி காந்தி
வெள்ளையர் தாமே விருப்புடன் ஆட்சி
விட்டிடச் செய்தது காந்தியின் விநயம்.
அன்பினை அறிந்தவன் அருள்தரும் காந்தி
துன்பினை மறந்திடத் துணைதரும் எவர்க்கும்
இன்பினை அல்ல(து) எண்ணாப் பெரியோன்
செம்பொருள் உரைத்தவர் யாரினும் சிறந்தோன்.
சோர்ந்துழல் ஏழைகள் சுகம்பெற வேண்டின்
சோம்பிடும் செல்வம் சூதுகள் நீங்க
மாந்தருக் குள்ளே மதவெறி போகக்
காந்தியை மறந்தால் கதிநமக் கேது?
41. அன்பின் உருவம்
அன்பின் உருவம் காந்திமகான்
தென்பின் நிலையம் திருவுள்ளம்
துன்பம் நேர்ந்திட வருமாகில்
முன்பிவ் வுலகம் கண்டறியா
இந்திய நாட்டின் அருள்ஞானம்
தந்தையும் தாயாம் தனித்தலைவன்
சிந்தையும் சொல்லும் செயல்யாவும்
விந்தையின் விந்தை காந்தியரின்
புண்ணியத் திருநாள் இதிற்கூடி
எண்ணிய காரியம் ஜயமாகும்
மண்ணிடை மதவெறி மடிந்துவிடும்
கண்ணியம் மிகுந்திட வாழ்ந்திடுவோம்
கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர்
வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே
சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்
காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
நேய மற்ற மதவெ றிக்கு
பேயும் கூட நடுந டுங்கிப்
நாய்ந ரிக்கும் அச்ச மூட்டும்
போய்ந டத்தும் யாத்தி ரைக்குள்
தெய்வம் என்று உலகம் நித்தம்
வைய கத்தில் 'அன்பு' என்ற
ஐயன் எங்கள் காந்தி வாழ்க்கை
மெய்யு ணர்ந்தே அன்பு சொல்லும்
42. எவர் சாதித்தார்?
கருணையின் பெருமையைப் போதித்தார்
மரணமும் அவரிடம் அன்புபெறும்
சத்திய நெறிதரும் சாத்திரமாம்
உத்தமன் காந்தியை மறந்துவிடின்
புலையும் கொலையும் புரியாமல்
உலகம் இதுவரை கண்டறியா
அணுகுண் டாலும் துன்ப முறா
இணைகண் டறியாச் சக்திதனை
இந்திய நாட்டின் மெய்யறிவை
நிந்தையும் புகழ்ச்சியும் கலைக்காத
யுத்தம் வருமோ எனஓடுங்கி
சித்தம் திகைக்கிற இப்போதில்
அன்னிய அறிஞர்கள் அனைவருமே
என்ன பயித்தியம் உன்றனுக்கே
சாந்தியை அறிந்தது நம்நாடு!
காந்தியைத் தந்தது நம்நாடு!
43. உத்தமன் காந்தி
உள்ளம் உருகுது கள்ளம் கருகுது
வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது
சித்தம் குளிர்ந்துள பித்தம் தெளிந்திடும்
புத்தம் புதியன முற்றும் இனியன
கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது
தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய
சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது
கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக்
தூக்கமும் கலைந்தது ஏக்கமும் குலைந்தது
வாழ்க்கையும் திருந்திடா நோக்கமும் விரிந்தது
வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும்
அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியிலை
ஜீவர்கள் உலகுள யாவரும் சமமெனச்
பாவமும் பழிகளும் தீவினை வழிகளும்
எழுபதும் ஐந்தும் குழகுழ வயசினில்
முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்க்கையின்
காந்தியின் தவக்கனல் சூழ்ந்ததிவ் வுலகினைக்
தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள்
ஏழைகள் எளியரின் தோழன்அக் காந்தியை
வாழிய அவன்பெயர் ஊழியின் காலமும்
44. வையகம் வாழ்த்தும் காந்தி
அடிமையின் அச்சம் போக்கி
குடிகளைக் கோன்க ளாக்கிக்
மடமையை மதியாய் மாற்றி
திடமுறச் செய்த காந்தி
மேழியைச் செங்கோ லாக்கிச்
ஏழையின் துயரம் நீக்கித்
கோழையை வீர னாக்கி
வாழிய காந்தி நாமம்
தூய்மையின் துணிவுண் டாக்கித்
வாய்மையின் வறுமை போக்கி
தீமையைத் தீமை யாலே
தாய்மையே செய்த காந்தி
உள்ளத்தைக் கோயி லாக்கி
கள்ளத்தைக் கடிந்து நீக்கிக்
எள்ளத்த ஆசை யின்றி
தெள்ளுற்ற தியாகி காந்தி
அன்பினைத் தகழி யாக்கி
வன்புலக் காம மாதி
செம்பொருள் காணும் தூய்மைச்
இன்பருள் கருணை ஜோதி
வஞ்சமும் பகையும் போரும்
பஞ்சமும் பசியும் நோயும்
தஞ்சமொன் றுண்டோ காந்தி
அஞ்சலி செய்வோம் காந்தி
காந்தியை மறந்து விட்டால்
சாந்தியை இழப்போம் மக்கள்
சேர்ந்திடும் தீமை யாவும் ;
நேர்ந்திடல் ஆகும் உண்மை
45. அற்புதன் காந்தி
ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடி,
பயனுற காந்தியின் புதுநெறி பயின்று
காந்தியின் வாழ்வே கடவுளைக் காட்டும்
சாந்தியைப் புகட்டிடும் சாத்திரம் அதுவே
இந்திய மக்களின் சுதந்திரக் கீதம்
சிந்தனை செய்வார் வந்தனை புரியும்
இல்லறம் துறவறம் இரண்டிலும் சிறந்தே
சொல்லறம் முழுவதும் சுதந்திர தேவி
நால்வகை யோகமும் நடத்திய ஞானி
தோல்வியும் வெற்றியும் தொடமுடி யாது
அரசியல் சூதுகள் அனைத்தையும் அகற்றி
உரைசெயல் அரிதெனும் உறுதியைக் கொடுத்தான்
மண்டலம் முழுவதும் சண்டைகள் மலிய
கண்டுள பின்னரும் காந்தியை நினையார்
யுத்தக் கொடுமைகள் உலகினில் ஒழிய
இத்தரை யெங்கணும் பரப்பிடும் கடமை
காந்தியின் அருந்தவம் பலித்திடும் காலம்
ஓய்ந்திடும் சண்டைபின் ஒவ்வொரு நாடும்
இமயமும் குமரியும் இருக்கிற வரைக்கும்
சமயமும் நிறங்களும் சமமெனக் கருதும்
மன்னரும் வீரரும் மந்திரி மார்கள்
உன்னரும் காந்தியின் பெரும்பெயர் ஒன்றே
இன்னொரு தம்பதி இவர்களைப் போல
அன்னைகஸ் தூரியின் அரும்புகழ் சூழும்
46. சத்தியமூர்த்தி நம் காந்தி
சாந்தியே உருவாய் வந்த
காந்தியே உம்மைக் காணக்
காந்தமொன் றணுக ஓடும்
போந்ததும் தரிச னத்தால்
மூவுல கொருங்கே யாண்டு
ஏவலில் மமதை கொண்ட
தாவிய தூணி லன்று
சேவகன் மெச்சு கின்ற
பகையினால் கொன்று வென்று
வகையிலாச் சாதி யோரை
மிகமிகத் துன்ப முற்றும்
மகம்மது நபியே என்று
அன்பொரு வடிவாய் வந்தாய்
துன்பமே சூழ்ந்த தெய்வத்
வன்பெரும் சிலுவை தன்னில்
இன்பமே நுகர்ந்த தேவன்
கனவினிற் பிணிமூப் போடு
இனியிதன் ரகசி யத்தை
கனதன ராஜ போகக்
புனிதன்அப் பௌத்த னென்று
அடிதடி வாழ்க்கை கொண்டும்
கொடியதாம் பணப்பே யாலே
முடிவிதற் கெங்கே யென்று
விடிவது பொழுது போல
குண்டுபீ ரங்கி யாலும்
மண்டிய செல்வத் தாலும்
சண்டைகள் ஜயத்தி னாலும்
மண்டல மிருண்ட போது
சாந்தமொன் றில்லை யென்றால்
ஆய்ந்தவர் சொன்ன தெல்லாம்
மாந்தினர் கள்ளே யென்ன
காந்தியென றொருவன் தோன்றிக்
சத்தியன் என்பா ருன்னைச்
பித்தனே யாவான் என்பார்
சுத்தனே என்பா ரில்லை
இத்தனை பெயரும் தாங்கும்
நம்மையும் புனித ராக்கி
தம்மையும் புனித ராக்கித்
மும்மையும் உயிர்க்கச் சாந்த
செம்மைசேர் ராட்டி னத்தின்
உனைவிடப் பெரியார் இந்த
நினைவினிற் பெரியா ருன்னை
இனியவுன் பெருமை யெல்லாம்
அனையவள் பெற்ற கீர்த்தி
ஆண்டவன் ஆணை தாங்கி
பூண்டஉன் கொள்கை யெங்கும்
நீண்டஉன் வழிசி றக்க
வேண்டுவோம் என்று சொல்லல்
47. புகழவொண்ணாக் கருணை ஜோதி
மதபேத மாச்சரியம் மறைய வேண்டும் ;
விதம்வேறு நிறம்வேறு வினைகள் வேறாம்
நிதமான மெய்யறிவின் நிலைய மாகி
பதியாகும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
ஆயுதங்கள் மிகச்சிறந்த ஹிட்லர் எங்கே?
மாயமிகும் போர்புரிந்த டோஜோ எங்கே?
பேய்புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும்
தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும்
இன்பதுன்பம் எவ்வுயிர்க்கும் ஒன்றே என்றே
அன்புவழி வாழ்ந்தவர்கள் தமிழர் நாமே
முன்பிருந்த தமிழறிஞர் சேர்த்து வைத்த
நம்பனிவன் சரித்திரமே உலகைக் காக்க
கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
நல்லாண்மை அறம்வளர்த்த தமிழ்நாடொன்றே
வல்லாண்மை நமக்குவர வாழ்ந்து சென்ற
சொல்லாண்மைப் புகழ்வொண்ணாக் கருணை ஜோதி
அணுகுண்டு வித்தைகளும் அணுக வொண்ணா
இணையற்ற பெருங்கருணை எல்லாம் வல்ல
துணைகொண்டு அவனருளைத் தொடர்ந்த காந்தித்
அணைகண்டு மதவெறியை அடக்கித் தேக்க
சாந்தவழி உலகமெலாம் போற்ற வேண்டும் ;
மாந்தருக்குள் போர்வெறிகள் மறைய வேண்டும் ;
சோர்ந்துழலும் ஏழையெலாம் சுகிக்க வேண்டும் ;
காந்திமகான் திருநாமம் வாழ வேண்டும் ;
48. சத்திய சீலன்
துறந்தவர் மிகுந்த நாட்டைத்
துறந்தவர் குறைந்த நாட்டைத்
அறிந்தவர் மொழிக ளாலும்
அறிந்தனம் அதனை யிந்தத்
வான்முறை மழைபெய் யாது
கோன்முறை கோணும் மற்றும்
சாண்வயி றதற்குக் கூடச்
தான்எனும் அகந்தை நீத்த
அன்னஅத் துறவு பூண்டோர்
சொன்னவர் துறவி யென்றோர்
முன்னைய வளங்கள் குன்றி
குன்றிய வாழ்க்கை வந்து
அக்குறை நீங்க வென்றே
இக்கணம் இந்த நாட்டின்
முக்குணம் அவற்றுள் போற்றும்
சத்குரு வான காந்தி
தாங்கண்ட இன்பம் இந்தத்
ஆங்கென்றும் ஈங்கென் றோடி
தீங்கென உலகம் சொல்லும்
நாங்கொண்ட பெருமை எங்கும்
மனிதர்கள் கடவு ளாகார்
புனிதமும் பொறுமை யாவும்
கனதையும் கருணை பொங்கும்
இனியரு கடவு ளென்பார்
கடவுளே பொய்யென் றாலும்
உடனுல குயிர்ஒன் றிற்கும்
கடனறி சாந்தக் குன்றாம்
உடலுயிர் உள்ளார் தம்மில்
நம்பின பேருக் கேனும்
அம்புவி ஏழைக் காக
வெம்பிய செய்தா ருக்கும்
இம்பரின் காந்தி வாழ்வை
ஈரமும் இரக்கம் மட்டும்
ஓரமும் பொய்யும் நீக்கி
யாரொரு சிறியர்க் கேனும்
சீரியன் காந்தி வாழ்வைச்
ஒன்றினை ஒன்று மாய்த்தே
தின்றுடல் சுகிக்கு மிந்தத்
தன்றுணைச் சுகங்கள் விட்டுத்
நின்றிடும் காந்தி வாழ்வை
தன்னுயிர் போவ தேனும்
பொன்னுயிர் பொதுமைக் கீந்துப்
இன்னுயிர் மனித வாழ்வின்
உன்னிய காந்தி வாழ்க்கை
"வாழ்ந்தவர் வாழ்ந்த வாழ்வின்
'தாழ்ந்தவர்' என்பார் தம்மைப்
வீழ்ந்துயிர் விடுவேன்" என்ற
போழ்ந்துளங் கலங்கி டாதார்
'சத்தியம்' 'சாந்தம்' என்னச்
பொத்திய உடைஒன் றோடு
நித்தமும் தன்பாற் குற்றம்
சுத்தமாம் காந்தி யாகத்
'சாந்தம்' என் றதுதான் இன்று
ஏந்திய கொள்கைக் காக
பாந்தவர் தாழ்ந்த வர்க்காய்ப்
ஆய்ந்தவர் அறிவில் என்றும்
சத்தியம் வெல்லு மென்றால்
உத்தமன் கடவு ளென்ற
இத்துறை எங்கள் காந்தி
வைத்திட வேண்டும் இந்த
49. தவமே தவம்
கதைகளிற் கேட்ட துண்டு
கவிதையிற் படித்த துண்டு
வதைபெற உடலை வாட்டி
வையகம் துயரம் தீர
விதம்விதம் பாடி னாலும்
வித்தையின் வித்தை போல
சிதைவுற வெறிகள் மிஞ்சி
சிந்தனை ஜோதி காந்தி
கல்லையும் கனியச் செய்து
கயவர்தம் மனத்தைக் கூட
எல்லையில் லாத நன்மை
ஏட்டினிற் படித்த போதும்
சொல்லரும் ஞான வாழ்வின்
சூறையும் கொலையு மாக
தில்லியில் தவமேற் கொண்டு
தெய்வமே நம்முன் வந்து
செந்தமிழ் அறிவில் எங்கும்
சிறந்தநம் கலைக ளெல்லாம்
இந்தியர் போற்றி வந்த
இழந்தனம் அழிவே செய்யும்
நொந்துநொந் தறிஞர் வாடும்
நோன்பிருந் தறங்கள் ஊட்டும்
வெந்துயர் போக்கும் ஜாதி
வேறெது நம்மைச் செய்த
வாய்மையும் அன்பும் சேர்ந்த
வாய்ப்பறை சாற்று கின்றோம்
தீமையே செய்த பேர்க்கும்
தினந்தினம் மதத்தின் பேரால்
நாம்ஒரு சகிப்புக் காட்ட
நல்லதைத் தீய தென்போம்
வாய்மையின் வைப்பாம் காந்தி
வையக மாந்த ரெல்லாம்
தரணியோர் பாப மெல்லாம்
தனியரு மனித னாகத்
மரணம்என் பதுவும் கூட
மாநிலத் தறிஞ ரெல்லாம்
புரணியும் பொய்கள் கூட்டம்
புண்ணிய எண்ணம் நம்மைப்
கருணையின் பெருமை தன்னைக்
காந்தியின் பெருமை தன்னால்
50. காந்தியிடிகள் பெருமை
இந்திய நாடு சுதந்திர மெய்தநல்
கந்தை 'பக்கீ'ரென்று தந்தொரு வன்சொன்ன
அஞ்சிக் கிடந்தநம் நெஞ்சந் துணிந்திட
வஞ்ச மிலாதவர் வாய்மையின் தூய்மையின்
ஆயுதம் இன்றியும் யாரும் வணங்கிடும்
சாயுதல் செய்திடாச் சத்திய மூர்த்திநம்
நாட்டினுக் காயுயிர் கேட்பினும் தந்திட
போட்டியிட் டேவர வீரம் புகுத்தினர்
அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும்
குடிகொண்டு கோபத்தைக் குறைவற நீக்கிய
பேதைய ரென்றுநாம் பேசிய பெண்களும்
நீதியில் லாமுறை அரசை எதிர்த்துடன்
சின்னஞ் சிறிய குழந்தைக ளும்இன்று
கன்னெஞ் சுருகிடத் தேசத்தி னைத்தொழக்
தீண்டப்ப டாதென்று மனிதரைச் சொல்வது
பூண்டொடும் போக்கநாம் விரதம் புனைந்தது
'தன்னை வதைப்பவர் தங்களுக் கும்அன்பைத்
முன்னைஇந் நாட்டினில் சொன்னவர் சொற்களை
'உடலினும் உயிரினும் உள்ளிருக் கும்ஒன்(று)
கடலுல கத்தினில் கண்ணுக்கு முன்னாகக்
காந்தி யெனும்பெயர் சாந்தம் எனும்சொல்லின்
மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி
51. காந்தியரே, தொழுகின்றோம்!
காந்தியெனும் பேரொளியே!
சாந்திநிறை பாத்திரமே!
மாந்தருக்குள் மாமணியே!
ஏந்துபுகழ் மோகனமே!
இதமுரைக்கும் வானொலியே!
பதமறிந்த பேச்சாளா!
மதவெறிக்கே பலிபுகுந்த
துதிஉரைக்கச் சொல்லறியோம்
அன்பெடுத்த திருவுருவே!
துன்பமுற்றோர் துணைக்கரமே!
இன்பமெலாம் பிறர்க்குதவி
தென்பிருக்கும் தேசிகமே!
இல்லறத்தின் சிறப்பிடமே!
நல்லறங்கள் யாவினுக்கும்
தொல்லறத்தின் புதுப்பதிப்பே!
சொல்லுரைக்கப் போதாத
சாதிமத பேதமிலாச்
நீதிநெறி பிசகாமல்
வாதுபுரி வம்புகளின்
ஏதுபுகழ் சொல்லியுனை
வலிமைக்கும் சூரியனே!
குலவவரும் சந்திரனே!
புலமைதரும் பொன்மொழியே!
தலமறிந்த தனித்தலைவ!
மதிகலங்கா மந்திரியே!
சுதிகலங்கா யாழிசையே!
நிதிமயக்கா மனநிறைவே!
கதிகலங்காச் சாரதியே!
தேடறிய செல்வமே!
ஏடறியா ஞானமே!
பாடறியா உழைப்பே!
ஈடறியா உத்தமனே!
மண்கண்ட மாதவமே!
கண்கண்ட தெய்வமே!
பண்கொண்ட இன்சொல்லே!
எண்கொள்ளா மேதையே!
கல்விதரும் நல்லறிவே!
செல்வமெனும் பொருளெல்லாம்
நல்வினைக்கு நாயகமே!
சொல்வதற்கு வேறறியோம்!
பகைமைபுகா அரண்மனையே!
புகையறியாச் சுடர்விளக்கே!
வகையறியா மானிடர்க்கு
தொகையறியாப் பொற்குவையே!
கொலைமறுத்த போர்வீரா!
நிலைஇழிந்த ஹரிஜனங்கள்
கலைமறந்த குடிசைகளைக்
அலைமறந்த குணக்கடலே!
மரணமெனும் பெரும்பயத்தை
திரணமென மதித்துயிரை
தருமணமதில் வந்துதவி
கரணமெலாம் உன்வசமாய்க்
ஏழைகளின் பெருந்துணையே!
மேழியரின் மெய்க்காப்பே!
ஊழியரின் ஊழியனாய்
வாழியநின் திருநாமம்
52. காந்தி வழி வாழ வேண்டும்
கல்லாலும் செம்பாலும் கடவு ளாக்கிக்
எல்லாரும் நினைத்துவிடச் செய்து நித்தம்
சொல்லாலும் செயலாலும் எண்ணத் தாலும்
கல்லாத எளியவர்க்கும் கடவுள் தன்மை
எந்திரங்கள் பெருகிமட்டும் என்ன நன்மை?
தந்திரங்கள் மிகப்பயின்றும் தருவ தென்ன?
சிந்தனையில் கருணைமட்டும் இல்லை யானால்
வந்துதித்துத் திருவருளை வாழ்ந்து காட்டும்
மந்திரிகள் தந்திரிகள் மலிந்தால் என்ன?
அந்தரத்தில் தோன்றுகின்ற அனைத்தும் வென்றே
எந்தஒரு உயிரிடத்தும் கருணை காட்டும்
அந்தஒரு அறிவினுக்கே உடலம் கொண்டோன்
விஞ்ஞானச் சக்திகளால் வென்றால் என்ன?
இஞ்ஞாலத் துயிர்களெல்லாம் மகிழ்ந்து வாழ
பொய்ஞ்ஞான மதவெறிகள் போக வேண்டும்
மெய்ஞ்ஞானம் நமக்குவர வாழ்ந்து சென்ற
எண்ணரிய தேசபக்தர் உயிரை ஈந்தே
மண்ணுலகில் வேறெவரும் அறியா நல்ல
புண்ணியநல் அறநெறிசேர் அரசு நாட்டிப்
அண்ணல் எங்கள் காந்திமகான் திருநா மத்தை
53. காந்தி வாழ்க
காந்தி நாமம் வாழ்க வென்று
சாந்த மாக உலக மெங்கும்
அருளி தென்ற பொருள றிந்த
தெருள டைந்த மனித வர்க்கம்
கொலைம றுத்துப் பொய்த விர்த்துக்
தலைசி றந்த காந்தி சேவை
யுத்த மென்றே உலக முற்றும்
சத்த மின்றி அன்பு செய்யும்
எந்த நாடும் விடுத லைக்கா
இந்த நாட்டின் சொந்த ஆட்சி
தீமை செய்து நன்மை சேரத்
வாய்மை தன்னை வற்பு றுத்தி
எண்ணி றந்த ஞான வான்கள்
மண்ணில் எங்கள் காந்தி போல
மாந்தர் எங்கும் கலக மின்றி
காந்தி மார்க்கம் ஒன்றை யன்றிக்
இந்தி யாவின் பெருமை முற்றும்
அந்த ஞான உரிமை தன்னை
கட்டி நின்று காந்தி செய்யும்
கிட்டி விட்ட சொந்த ஆட்சி
அமர னாகி எம்மைக் காக்கும்
அஞ்ச லித்து நிற்கும் எங்கள்
சமனி லாத சாந்த ஞான
சரிச மான மாக மற்ற
நமது நாடு உலகி னுக்கு
நானி லத்தில் இவ்வி டத்தை
அமைதி மிக்க அறிவி னோடும்
அருள வேணும் அப்ப னேஉன்
நீபி றந்த போது தேசம்
நிந்தை மிக்க அடிமை வாழ்வில்
தாய்சி றந்த அன்பி னோடு
தனியி ருந்து தவமி யற்றித்
வாய்மை அன்பு வெல்லு கின்ற
வைய மென்றும் கண்டி லாத
போய்ம றைந்த ஞான வாழ்வு
புண்ணி யத்தில் முன்னி லாத
தண்டு மிண்டு தலையெ டுத்துத்
தரும நீதி தெய்வ பக்தி
மண்ட லத்தில் எந்த நாடும்
மக்கள் யாரும் யுத்த மென்று
கண்டு நொந்து அறிஞர் யாரும்
காந்தி தேவ! நீந டந்த
தொண்டு செய்திவ் வுலகி லுள்ள
துணையி ருக்க வேண்டு மென்றே
ஏட்டள விருந்த வேதம்
எழுத்தள விருந்த கீதம்
வீட்டள விருந்த காதல்
விருந்தள விருந்த நேசம்
நாட்டள விருந்த அன்பை
நானிலத் தெவர்க்கும் அன்பே
காட்டினை! சொல்லா லல்ல
காந்தியே வீசும் சாந்தக்
பக்தியென் றாடு கின்றோம்
பாகவ தம்மென் றிங்குப்
முக்தியென் றோது கின்றோம்
மோனமும் ஞான மென்ன
சத்தினைப் போக விட்டுச்
சாத்திர சாரந் தன்னைச்
கத்துவ தென்றும் மாறா
காந்தியே வீசும் சாந்தக்
நெற்றியில் நீறு நாமம்
நியமும் நிஷ்டை யென்று
பற்றிய ஜெபம் செய்மாலைப்
பார்த்தவர் மருளும் யோக
சுற்றிய எவரும் நம்மால்
தோன்றிய ஜீவ ரெல்லாம்
கற்றனை வாழ்வில் என்றும்
காந்தியே வீசும் சாந்தக்
திடமொடும் உதித்த ஞானத்
தெளிந்தவர் மொழிந்த வற்றைத்
அடவியில் இருந்து நாளும்
அடைக்கலம் குருவை நாடி
இடம்நிறம் கால மென்னும்
இவ்வுல குதித்த பின்னர்
கடவுளின் இருக்கை கண்டோர்
காந்தியே வீசும் சாந்தக்
முனிவரர் கோடி கோடி
மூடவெம் மதியி னாலே
தனிவரும் துயரில், நோயில்
தளிர்ந்திடும் ஏழை மக்கள்
இனிவரும் அணித்தே யென்ன
இப்பெரும் உன்னைப் பெற்றும்
கனிபெரும் தூய வாழ்வின்
காந்தியே வீசும் சாந்தக்
என்கடன் பணிகள் செய்து
ஏழைகட் காக வாழ்ந்தோர்
துன்புடை யடிமை வாழ்வின்
தூயவர் சொல்லை யெல்லாம்
வன்பெரும் மிடியால் வாடும்
வாழ்விலை நமக்கே யென்று
கன்மன முடையோ ரேனும்
காந்தியே வீசும் சாந்தக்
விந்தையில் விந்தை! காந்தியின் மேலும்
ஹிந்தும தத்தில் வந்தவர் யாரும்
நிந்தையில் நிந்தை இதைவிட வேறும்
இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது
சத்தியம் மெய்யே, சாந்தமும் மெய்யே
நித்தமும் நின்று நம்மை நிறுத்து
பொய்த்திடும் பொய்யே போனது ஐயம்
உத்தமர் காந்தியின் மெய்த்தவ வாழ்வினில்
மடமையி னாலே செய்தனர் என்றே
அடவியிற் சென்றே ஐம்புலன் வென்றார்
நடைமுறை தன்னில் தினசரி வாழ்வில்
கடவுளும் உண்மை; கருணையும் உண்மை ;
தாழ்ந்தவ ரேனும் வாழ்ந்தவ ரேனும்
வேந்தருங் காணா வேதியர் காணா
மாந்தருள் தெய்வம் நம்பின வர்க்கு
காந்தியும் தப்பிக் கருணையும் தப்பிக்
பொங்கிய 'போலி'ச் சநாதன கோபம்
அங்கொரு தீங்கும் யாருக்கு மின்றி
சங்கெடுத் தூது! மங்களம் பாடு!
எங்கணும் சாந்தி யாவர்க்கும் சாந்தி
சத்தியத்தின் ஓயாத சங்க நாதம்
நித்தியநன் னெறியறிவை நீட்டும் சப்தம்
மெய்த்தவத்தை நினைப்பூட்ட மீட்டும் வீணை
உத்தமருள் உத்தமனாம் காந்தி யென்ற
முத்திவழி காட்டுகின்ற மோன தீபம்
வித்தைகளின் நித்தியவி வேக பானு
எத்திசைஎம் மாலுமிக்கும் இடம்கண் டேற
உத்தமருள் உத்தமனாம் காந்தி என்னும்
சூரியனும் சந்திரனும் தொலைந்தா ரென்ன
காரிருளில் கடியஇருள் கவிந்து யாரும்
நேருகின்ற பொழுதி லெல்லாம் கவலை நீங்க
யாருமிந்த உலகில்இது வரையிற் காணா
எப்படித்தம் உடல்வளர்த்தும் எதுசெய் தாலும்
தப்பிடவே முடியாது தடையில் லாமல்
முப்பொழுதும் உலகநலம் மூச்சாய்க் கொண்டு
இப்படித்தம் உயிர்கொடுத்த பெருமை யன்றோ
உலகறிந்த அறிவையெலாம் ஒன்றாய்ச் சேர்த்தே
அலகில்பல அற்புதங்கள் நடத்தி வைக்கும்
இலகும்ஒரு காந்தியிடம் இருந்த சத்தை
கலகம்வரின் அங்கங்கே கருணை காட்டிக்
மதவெறிகள் மாச்சரியம் மறைந்தா லன்றி
இதயமுறும் சத்தியத்தை இசைத்தார் காந்தி
உதயமுற நம்மனத்தில் உணர்ச்சி உண்டேல்
மதவெறியும் இனவெறியும் மறைய வேண்டும்
உடலமென்ற சிறுகூண்டிங் கொழிந்தா லென்ன?
கடவுளென்ற ஒருமகிமை இருந்தா லன்றோ
திடமுறுவோம் தீரமுடன் நம்மைச் சூழ்ந்த
'அடிமைஅச்சம்' நமைவந்தே அழுத்திக் கொள்ளும்
வள்ளுவரின் வழிவளர்ந்த தமிழா! நீதான்
தெள்ளுதமிழ் நூல்களெல்லாம் தெளிவாய்ச் சொல்லும்
கொள்ளைகளும் கொலைவெறியும் குமுற வாடும்
அள்ளியெங்கும் தமிழ்மொழியின் அறிவை வீசி
மாந்தரென இவ்வுலகில் பிறந்த பேருள்
சாந்தமுழு சைதன்ய மூர்த்தி யென்னும்
தேர்ந்தவருள் காந்தியினும் தெளிந்தா ரில்லை
காந்தியையும் கடந்தஒரு பொருள் உண்டென்று
கோழைகள்போல் குலைவதனால் பயனொன் றில்லை
ஏழைகளோ கொடுமைகளோ எங்கு மின்றி
ஊழிதொறும் அவன்நினைவு உதவ வேண்டி
வாழிஜெய வாழிஜெய வாழி காந்தி
ஞான மென்று சொல்லு கின்ற
நானி லத்தில் காந்தி யென்று
ஈன மிக்க அடிமை வாழ்வின்
இந்தி யாவின் விடுத லைக்கு
தான்ந டந்து வெற்றி தந்து
தனது சொந்த உடலைக் கூட
வானகத்தி ருந்து நம்மை
வைய கத்தில் மீண்டும் நம்மை
தெய்வ மேனி யோடு காந்தி
திருவ டிக்கு மாலை சூட்டி
வையம் வாழ நல்வ ரங்கள்
வஞ்ச மற்ற நெஞ்சி னோடு
ஐயன் காந்தி காட்டு கின்ற
அச்ச மேது? பிச்சை கேட்கும்
உய்ய வேறு மார்க்க மில்லை
உலகில் இன்று குமுறு கின்ற
உணவி லாமல் ஏழை மக்கள்
உணர்வி லாத தன்ன லங்கள்
குணமி லாத செல்வம் செய்யும்
கொடுமை செய்திவ் வுலகை ஆளக்
பணமி லாத ஒன்றுக் காகப்
பாவ புண்ணி யங்க ளென்ற
அணுபி ளக்கும் குண்டு செய்திவ்
அத்த னைக்கும் மாற்று நல்கும்
அடிமைத் தனத்தை விட்டோம்--ஆனால்
மடமைத் தனத்தை வென்றோம்--ஆனால்
கொடுமை எதிர்த்து வந்தோம்--இன்று
உடைமை அடையப் பெற்றோம்--ஆனால்
பதவியை ஏசி வந்தோம்--இன்று
உதவிகள் தேடிச் செய்தோம்--இந்நாள்
மதவெறி தீமை என்றோம்--நாமும்
இதுவும் சுதந்திரந் தானோ?--இனி
ஒற்றுமை வேண்டும் என்றோம்--இந்நாள்
வெற்றுரை விட்டு ழைத்தோம்--இன்று
பெற்றசு தந்திரத்தை--நாம்
நற்றவன் காந்தி சொல்லே--எந்த
ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடு
நயமிக மாந்தருள் நட்புகள் வளரும்
தயவொடு தருமமும் தானமும் ஓங்கும்
பயமற உலகினில் பற்பல நாடும்
இத்தரை மீதினில் இதுவரை தோன்றி
முத்தரும் யோகரும் முனிவரும் யாரும்
சத்திய சாந்தச் சமரசம் மேவும்
புத்துயிர் பெற்றிடக் காந்தியும் பிறந்தார்
அன்பறம் பெருகிட அதுதுணை புரியும்
துன்பமுற் றவர்களின் துயர்களைக் குறைக்கும்
இன்பமும் செல்வமும் பொதுப்பொருள் ஆகும்
வம்பரும் வணங்கிடும் காந்தியின் போதம்
61. எச்சரிக்கை
எச்ச ரிக்கை எச்ச ரிக்கை
அச்ச மற்ற வாழ்வுகாண
கலக மற்று மனிதர் வாழக்
உலகி னுக்குத் தேவை யென்ற
காந்தி போதச் சேவை செய்யக்
நேர்ந்த வாறு பேசிக் கொண்டு
காந்தி காந்தி காந்தி யென்று
காந்தி சொன்ன சாந்தி மட்டும்
சத்தி யத்தை வாழ்ந்து காட்டும்
நித்தம் நித்தம் வாழ்த்தி விட்டு
கோப மற்ற காந்தி யாரைத்
தாப மற்ற வார்த்தை பேசத்
பதவி யற்ற சேவை செய்யப்
பதவி பற்றி உதவி யற்ற
பூசை யோடு கோயி லுக்குள்
ஓசை யோடு காந்திப் பொம்மை
பகைவ ருக்கும் நன்மை செய்யப்
மிகவும் நல்ல நண்ப ரோடும்
அணுவை யும்பி ளந்த ழிக்கும்
முணுமு ணுத்துக் கனவிற்கூட
இந்த நாட்டின் ஞான மார்க்கம்
எந்தக் குண்டைக் கொண்டு மற்ற
62. காந்தி வழி
கொல்லா திருப்பது ஒன்றேதான்
எல்லாச் செயலிலும் நன்னோக்கம்
பொல்லா தவர்க்கும் தீங்கெண்ணாப்
சொல்லாற் சொன்னதைச் செய்தவனாம்
புண்ணுண் டாக்கிடப் பேசாமல்
பண்ணும் காரியம் அனைத்திலுமே
அண்ணல் காந்தியின் புகழேதான்
எண்ணில் அஹிம்சா அறநெறியை
கோபம் எதிலும் கொள்ளாது
பாபம் என்றதைப் புரியாது
தீபம் போல்அருள் ஒளிவீசும்
சாபம் நீக்கிய காந்திமகான்
அச்சம் என்பதை அறியாது
துச்சம் தனதுயிர் எனவெண்ணித்
பச்சைக் குழந்தையின் களிப்போடும்
விச்சை புரிந்தது காந்திமகான்
கோழைத் தனமதில் கிடையாது
வாழைக் கனியினும் மென்மையது
கூழைக் கும்பிடு போடாது
ஏழை எளியவர் குறைநீக்கும்
விஞ்ஞா னத்தின் வேகத்தால்
அஞ்ஞா னங்கள் மிதமிஞ்சி
இஞ்ஞா லத்தின் துயர்நீக்க
மெய்ஞ்ஞா னத்தின் உருவேபோல்
ஆயுத பலங்களில் மதிப்பிழந்தோம் ;
தீயன போர்வெறி இழுக்குகளைத்
தாயினும் இனியவன் இந்நாட்டின்
தூயநல் லருள்நெறி சூழ்ந்திடுவோம் ;
பரதேசி என்றுவந்தோர் யாரா னாலும்
ஒருதேசம் உலகத்தில் இருக்கு மானால்
வருதேச காலத்தின் வர்த்த மானம்
கருதாமல் நமதுகுணம் கலைந்தி டாமல்
தமிழ்நாட்டின் சரித்திரத்தை மனத்தில் வைத்துத்
அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கி யுள்ள
நமதாகும் மிகச்சிறந்த நாக ரீகம்
எமதாகும் மிகப்பெரிய கடமை யென்றே
பலபலவாம் தீர்மானம் படிக்க வேண்டா ;
உலகினுக்கு வேண்டுவதும் ஒன்றே ஒன்றாம் ;
கலகமின்றி மனிதரெல்லாம் கலந்து வாழக்
இலகுமிந்தத் திருப்பணியை உலகுக் காற்ற
வானிருந்து ஒருதேவன் வலிய வந்து
தானிருந்து நமக்காகத் தவங்க ளாற்றித்
மோனநெறி தவறாத காந்தி யாக
ஏனிருந்து நாம்பலவும் எண்ண வேண்டும்
காந்தியர்க்குக் கைபோல உதவி நின்று
சேர்ந்திருந்து பாடுபட்டு ஜெயமும் பெற்ற
நேர்ந்திருக்கும் நெருக்கடியை வெல்ல இன்றும்
சோர்ந்துவிடக் கூடாது தமிழா! காந்தி
சாந்தி சாந்தி சாந்தி யென்று
சோர்த்தி ருக்கும் உலகி னுக்குச்
மாந்த ருக்குள் கோப தாப
காந்தி சொன்ன மார்க்க மின்றிக்
தமிழ ருக்குக் கருணை எண்ணம்
குமிழை யத்த உயிரை நல்ல
அமுத மொத்த காந்தி மார்க்கம்
நமது சேவை அதனை ஏந்தி
காந்தியை மறைக்காதே--தெய்வக்
சாந்தியை இழக்காதே--என்றும்
வள்ளுவன் திருக்குறளைத்--தந்து
தெள்ளிய அமிழ்தமெனும்--மொழியாம்
திருக்குறள் அறிவெல்லாம்--ஒன்றாய்த்
உருக்குறள் காந்திமகான்--தந்துள
அவ்வழி பற்றிநின்றோம்--உலகின்
எவ்வித இடைஞ்சலையும்--அதனால்
போர்வெறிக் கெடுபிடியால்--அஞ்சிப்
நேர்ந்துள சமயம்இதில்--காந்தியின்
ஒவ்வொரு காரியமும்--பகவான்
தெய்வீக பக்தியுடன்--தேசத்
பிரார்த்தனை செய்யாமல்--காந்தி
பார்த்தோம் கண்ணார--அதனால்
பக்தியில் குறைந்துவிட்டோம்--மோகம்
சத்திய சாந்தத்தில்--மிகவும்
வேறுள பேச்செல்லாம்--சற்றே
தேறிய காந்திவழி--மீண்டும்
காந்தியம் நம்உடைமை--அதனைக்
காந்தியம் வாழ்ந்தொளிர--தெய்வக்
67. படிப்பினை
காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும்
காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும்
காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும்
காந்தியைப்போல் ஒழுங்காகத் திட்டம் போட்டுக்
சொன்னசொல்லை காந்தியைப்போல் காக்க வேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தி யைப்போல்
சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும்
'என்னகுறை? எங்கு வந்தீர்?' என்னக் கேட்டும்
குற்றமொன்று நாம்செயினும் காந்தி யைப்போல்
மற்றவர்கள் பெரும்தவறு செய்திட் டாலும்
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல்
சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச்
67. படிப்பினை
காந்தியைப்போல் அதிகாலை விழிக்க வேண்டும்
காந்தியைப்போல் காற்றாட உலவ வேண்டும்
காந்தியைப்போல் அளவாகப் புசிக்க வேண்டும்
காந்தியைப்போல் ஓழுங்காகத் திட்டம் போட்டுக்
சொன்னசொல்லை காந்தியைப்போல் காக்க வேண்டும்
மன்னவனோ பின்னெவனோ காந்தி யைப்போல்
சின்னவரோ கிழவர்களோ எவரை யேனும்
'என்னகுறை? எங்கு வந்தீர்?' என்னக் கேட்டும்
குற்றமொன்று நாம்செயினும் காந்தி யைப்போல்
மற்றவர்கள் பெரும்தவறு செய்திட் டாலும்
உற்றவர்கள் பிழையெனினும் ஒளித்தி டாமல்
சற்றுமவர் துன்பமுறாச் சலுகை பேசிச்
எத்தனைதான் கடிதங்கள் வந்திட் டாலும்
நித்தநித்தம் தவறாத கடமை யாக
புத்திகெட்ட கேள்விசிலர் கேட்டிட் டாலும்
பத்தியம்போல் பதற்றமுள்ள பாஷை நீக்கிப்
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாய் எண்ணிக்
மகிழ்ச்சியிலே மதிமயங்கித் தடுமா றாமல்
வெகுட்சிதனை வேரோடு களைந்து நீக்கக்
நிகழ்ச்சிகளைக் காந்தியைப்போல் நிறுத்துப் பார்த்து
வருகின்ற யாவருக்கும் எளிய னாகக்
தருகின்ற சந்தேகம் எதுவா னாலும்
திரிகின்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்து
புரிகின்ற புத்திமதி எதுசொன் னாலும்
எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப் போல்
சத்தியத்தைக் கருணையுடன் சாதித் திட்டால்
பத்தியத்தைக் காந்தியைப்போல் பார்த்துக் கொண்டால்
நித்தியனாம் சர்வேசன் கடமை யென்ற
உழைப்பின்றிச் சுகம்விரும்பல் ஊனம் என்று
அழைப்பின்றித் துன்பமுற்றோர் அருகில் ஓடி
பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழைமக்கள்
களைப்பின்றிப் பசிதீரும் வழியைக் காட்டக்
மனிதரெல்லாம் ஒருகடவுள் மக்க ளென்று
புனிதமுள்ள பரம்பொருளின் பெயரைச் சொல்லிப்
அனுதினமும் தவங்கிடந்த காந்தி அண்ணல்
தனதுமதம் தனதுஇனம் மேல்என் றெண்ணும்
சிறுதுளியும் வீண்போகாச் செலவு செய்யும்
பிறிதொருவர் பாடுபட்டுத் தான்சு கிக்கும்
நெறிதவறி வருகிறது சொர்க்க மேனும்
குறிதவறிப் போகாமல் ஒழுக்கம் காத்துக்
வீரமென்றும் வெற்றியென்றும் கோப மூட்டி
ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி
காரமுள்ள கடும்சொல்லைக் கேட்டிட் டாலும்
பாரமுற்ற மனநிலையைப் பாது காத்துப்
பொதுநலத்தைக் காந்தியைப்போல் மொழுதும் எண்ணிப்
பொதுப்பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப்
துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத்தி டாமல்
மதிநலத்தை காந்தியைப்போல் மனதிற் காத்து
மதமெனுமோர் வார்த்தையையே மறந்து வாழ்ந்தான்
சதமெனுமோர் சத்தியத்தைச் சார்ந்தி டாத
விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட் டாலும்
இதம்மிகுந்த காந்திஎம்மான் சரித்தி ரம்தான்
ஜாதிகுலம் பிறப்பையெண்ணும் சபலம் விட்டோன்
நீதிநிறி ஒழுக்கமென்ற நிறைக ளன்றி
ஆதிபரம் பொருளான கடவுட் கல்லால்
ஜோதிபெருங் கருணைவள்ளல் காந்தி சொல்லே
மந்திரங்கள் ஏவாமல் மயங்க வைத்தான்!
தந்திரங்கள் இல்லாமல் தலைவன் அனான்!
அத்தரங்கம் ஒற்றரில்லா அரச னானான்!
எந்தஒரு சக்தியினால் இயன்ற தென்றே
போனவிடம் எங்கெங்கும் புதுமை கொள்ளும்
கானகமும் கடிமனைப்போல் களிப்புச் செய்யும்
ஈனர்களும் தரிசனத்தால் எழுச்சி கொள்வார்
தீனரெல்லாம் பயமொழிவார் தீரன் காந்தி
பாடமெல்லாம் காந்திமயம் படிக்க வேண்டும்
நாடகங்கள் காந்திகதை நடிக்க வேண்டும்
மாடமெல்லாம் காந்திசிலை மலிய வேண்டும்
கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
கல்வியெல்லாம் காந்திமணம் கமழ வேண்டும்
சொல்வதெல்லாம் காந்திஅறம் சொல்ல வேண்டும்
வெல்வதெல்லாம் காந்திவழி விழைய வேண்டும்
நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
குண்டுபட்டும் திடுக்கடைந்து குலுங்கி டாமல்
கொண்டமனச் சாந்திநிலை குலைத்தி டாமல்
அண்டையயல் துணைதேடி அலண்டி டாமல்
கண்டதுண்டோ கேட்டதுண்டோ கதைதா னுண்டோ
காடுமலை குகைகளிலே தவங்கள் செய்து
மேடைகளில் உயிர்கொடுப்பேன் என்று சொல்லும்
நாடுகெடும் மதவெறியை மாற்ற வேண்டிக்
ஈடுசொல்ல முடியாத தியாகம் செய்ய
சத்தியமே தம்முடைய தெய்வ மாகச்
இத்தகைய மரணமுற்ற தேனோ என்றே
பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி
அத்தகைய சாவேதான் அடைய வேண்டி
கூழுமின்றிப் பரதவிக்கும் ஏழை மக்கள்
வாழுமுறை இன்னதென வாழ்த்து காட்டி
மாளும்முறை இதுவெனவே மனிதர் போற்ற
நாளும்அவன் பெரும்புகழை நயந்து போற்றி
கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
சொல்லுவது எல்லார்க்கும் சுலப மாகும்
எல்லையின்றி நீதிகள் எழுது வார்கள்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
கொலைகளவு பொய்சூது வஞ்ச மாதிக்
தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம்
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
விலைமதிக்க முடியாத செல்வ மன்றோ?
புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவை தன்னில்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையும் காத்த
உத்தமரைக் கண்டோமா என்னும் ஏக்கம்
"குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி
அத்தனையும் நான்பொறுத்தே அஹிம்சை காத்தும்
ஒத்துமுகம் மலர்ந்(து)உதட்டில் சிரிப்பி னோடும்
என்றுரைத்த காந்தியைநாம் எண்ணிய பார்த்தால்
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
கன்றினுக்குத் தாய்ப்போல உயிர்கட் காகக்
இன்றுலகின் துயர்நீக்கச் சிறந்த மார்க்கம்
கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
சாந்த காந்தி சத்தி யத்தின்
ஆய்ந்து பார்க்கத் தேவை யில்லை
மாந்த ருக்குள் சமுக வாழ்வு
சோர்ந்தி டாமல் நமது நாட்டை
இடிஇ டித்து மின்னல் மின்னி
கிடுகி டுத்து உலக மெங்கும்
குடுகு டுத்த கிழவர் காந்தி
துடிது டித்து உண்மை போற்றும்
வீடு பற்றி வேகும் போது
நாடு முற்றும் புதிய வாழ்வை
பாடு மிக்க சேவை விட்டுப்
கேடு என்ற எச்ச ரிக்கை
கடல்க லங்கப் புயல டித்துத்
திடமி குந்த தெளிவு கொண்ட
இடம றிந்து காலங் கற்ற
கடன றிந்த காந்தி போதம்
கர்ம வீரன் காந்தி என்னும்
தர்ம மான மழைபொ ழிந்து
வர்ம மான வார்த்தை யாவும்
மர்ம மான எதையும் விட்ட
வீர மென்றும் சூர மென்றும்
கார முள்ள வார்த்தை யாவும்
தீரர் ஞான காந்தி சங்கம்
சேர வாரும் மனித வாழ்க்கை
4. தேசீய மலர்
70. "கத்தியின்றி ரத்தமின்றி"
கத்தி யின்றி ரத்த மின்றி
சத்தி யத்தின் நித்தி யத்தை
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்
மண்ட லத்தில் கண்டி லாத
குதிரை யில்லை யானை யில்லை
எதிரியென்று யாரு மில்லை
கோப மில்லை தாப மில்லை
பாப மான செய்கை யன்றும்
கண்ட தில்லை கேட்ட தில்லை
பண்டு செய்த புண்ணி யந்தான்
காந்தி யென்ற சாந்த மூர்த்தி
மாந்த ருக்குள் தீமை குன்ற
71. என்னுடை நாடு
"இந்திய நாடிது என்னுடை நாடே"
சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
இந்தத் தினம்முதல் "இந்தியநாடு
கன்னி இமயக் கடலிடை நாடு
என்ன முறையி(து) ஏனிதை வேறு
சொன்னவர் கேட்டவர் யாரையும் நம்பிச்
என்னுடை நாட்டினை நானிருந் தாள
தன்னுடை வேலையைத் தான்செய்வ தாலே
இன்னொரு யாருக்கும் இதிலென்ன கோபம்?
அன்னியர் ஆள்வதில் நன்மைவந் தாலும்
என்னுடை வீட்டுக்கு நான்அதி காரி
பாரத நாடென்றன் பாட்டன்றன் சொத்து ;
யாரிதை வேறோர் அன்னியர் ஆள?
'வாரவர் போறவர்' யாரையும் நம்பி
வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ?
'முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு ;
சற்றும் உரிமையில் லாதவர் ஆளச்
பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம் ;
சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நின்றே
72. வாழ்க நம் நாடு
நம்நாடு செழிக்க வேண்டும்
நம்நாடு மட்டும் வாழப்
வெம்நாடு களுக்கே லாமோர்
எம்நாடு தந்த றென்றே
கண்டவர் மகிழ வேண்டும்
கொண்டவர் குலவ வேண்டும்
அண்டின எவரும் அச்சம்
தண்டமிழ் அலைகள் வீசி
இலக்கண உயர்விற் சொல்லின்
விலக்குகள் விதிகள் வைக்கும்
கலைக்கொடு தனிமை காட்டும்
தலைக்கொளும் தமிழைப் போற்றி
எந்தநாட் டெவர்வந் தாலும்
சொந்தநாட் டவர்போ லிங்குச்
தந்தநா டுலகி லிந்தத்
அந்தநம் புகழைக் காத்து
அன்பினால் கலந்து வாழ்ந்தே
வன்பெலாம் வருமுன் னாலே
என்பெருந் தமிழா லிந்த
இன்பமே தருவ தாக
அன்னியம் அறிவிற் கில்லை
என்னவே உலகில் மற்ற
தன்னொடும் வாழ வைத்த
நன்னெறி விளக்காய் நின்று
புதுத்துறை அறிவைத் தேடிப்
விதப்பல விஞ்ஞா னத்தை
பொதுப்படக் கலைக ளெல்லாம்
மதிப்பொடே எவரும் போற்ற
தமிழர்கள் உலகுக் கீந்த
அமிழ்தினும் உயர்ந்த தான
கமழ்மணம் உலகம் போற்றும்
நமதெனும் பெருமை யோடு
தாழ்வுகள் யாவும் போகத்
சூழ்கடல் உலகில் மக்கள்
ஆழ்கலை அறிவும் ஓங்கி
வாழ்ந்திட வேண்டு மென்றே
73. சுதந்திரச் சபதம்
அவரவர் உழைப்பின் பலன்களை முழுதும்
சுவையுள வாழ்க்கைக் கவசிய மான
புவியினில் எல்லா வசதியும் பெற்றுப்
எவரொரு பேர்க்கும் மறுக்கொணா உரிமை ;
இயற்கையா மிந்த உரிமையைப் பறிக்க
செயற்கையா லடக்கிக் கொடுமைகள் புரியும்
முயற்சியால் திருத்த முடியாது போனால்
அயர்ச்சியில் லாத அரசுமற் றொன்றை
ஆங்கில ஆட்சி இந்திய நாட்டை
தாங்களே சுகிக்கும் தந்திர முறையால்
ஈங்குள ஏழைக் குடிகளின் வளத்தை
ஓங்கிய செல்வம், அரசியல், ஆன்ம
ஆதலால் இந்த ஆங்கிலத் தொடர்பை
பூதலம் அறிந்த பூரண மாம்சுய
ஏதொரு நாடும் ஆதிக்க மெதுவும்
தீதிலா நிலையை அடைந்திடல் நன்மை ;
அந்தநன் னிலையை அடைந்திட நமக்கிங்
நிந்தனை மிகுந்த கொலைவழி யல்ல ;
முந்திநாம் கொண்ட சாத்விக முறையால்
இந்தியா இனியும் அதனையே தொடரும்
உத்தம மான சாந்தநல் வழியில்
நித்திய மான பரம்பொருள் சாட்சி
பத்திய மாக அதன்படி நடந்து
சத்தியம் செய்து சபதமும் கொள்வோம்
சாந்தவாழ் விற்கும் சாத்விகப் போர்க்கும்
கூர்ந்துநாம் கொண்ட நிர்மாணத் திட்டம்
சார்ந்தநற் கதரும் சாதிகள் சமயச்
தேர்ந்தநற் சேவை தீண்டாமை ஒழித்தல்
எட்டிய மட்டும் ஜனங்களுக் குள்ளே
முட்டிடும் சாதிச் சண்டைகள் நீக்கி
பட்டினிப் பஞ்சம் படிப்பிலாத் தன்மை
ஒட்டுதல் மறுத்தே ஒதுக்கின பேரை
ஆங்கிலர் நடத்தும் ஆதிக்க மதனை
நாங்களோர் நாளும் இங்கிலிஷ் காரர்
ஈங்குள அவர்கள் எத்தொழில் செயினும்
தாங்களே எஜமான் என்றிடும் தருக்கைத்
இந்துக்க ளிடையே தீண்டாத பேர்கள்
பந்துக்கள் போலப் பரிவுடன் நடத்தி
நிந்தித்து நீக்கல் சாத்விக நெறிக்கு
சிந்தித்து நமது தினசரி வாழ்வில்
மதங்களின் பெயரால் மாறுபட் டிடினும்
நிதங்கலந் தெல்லா விதத்திலும் பின்னி
இதங்கலந் திடநாம் இந்தியத் தாயின்
விதங்களை மறந்து வேற்றுமை துறந்து
கதரும் ராட்டையும் கண்களாம் நமக்குக்
எதிலும் சுகமிலா ஏழைக் கிராமம்
பதிலும் பேசிடாப் பாமர மக்களின்
கதியென அவர்க்குப் புத்துயிர் கொடுக்கக்
ஆகையால் நாமும் அனுதினம் நூற்போம் ;
போகமாய்க் கிராமக் கைத்தொழில் செய்த
ஓகையால் வாங்கிப் பிறரையும் அதற்கே
சாகுமோ என்னும் கைத்தொழில் எல்லாம்
காங்கிரஸ் கொள்கைக் கட்டளை தம்மைக்
ஓங்கிடும் போது சத்தியப் போரில்
ஆங்கது கூவி அழைத்ததும் உதவ
ஈங்கிவை எங்கள் சத்தியம் சபதம்
74. இந்தியத் தாய் புலம்பல்
காலக் கதியடியோ
ஆலம் விதையெனவே
ஞாலத்தில் என்னைப்போல்
நீலக் கடலுலகில்
கோல மிழந்துநிலை
மெத்தப் பகட்டுடையாள்
'அத்தை'யெனக் கூவியென்றன்
தத்தித் தடுமாறித்
"புத்தம் புதியபெண்ணே
சித்தங் கலங்காதே
வெள்ளைத் துகிலுடுத்து
கள்ளக் குறிசிறிதும்
அள்ளிச் செருகிவிட்ட
பிள்ளை மொழிவதெனப்
மெள்ளத் தலைகுனிந்தே
"எங்கிருந்தே இங்குவந்தாய்?
சங்கிருந்த வெண்ணிறத்தாய்!
இங்கிருந்தே உள்ளதைநீ
பங்கிருந்து கொள்வாய்நீ
இங்கிதம்நான் சொன்னவுடன்
குன்றி உரைகுழறிக்
சின்னஞ் சிறுகுரலால்
"உன்னுடை னேபிறந்தோன்
முன்னம் உனைப்பிரிந்து
அன்னவன் புத்திரிநான்
"நெஞ்சம் கலங்காதே
தஞ்ச முனக்கிருப்பேன்
கொஞ்சும் இளமையினில்
பஞ்சை யெனத்தனியே
வஞ்சி யிளங்கொடியே
சற்றுத் தலைநிமிர்ந்தாள்
உற்ற முகத்தினொடும்
சுற்றி அயல்பார்த்துச்
முற்ற மதனைவிட்டு
தத்தியதன் மேல்நடக்கத்
"தாவில்லை உள்ளேநீ
வா" என்று சொன்னவுடன்
தூவெள்ளை யானஅவள்
தாவள்ய மானஅந்தத்
கோவென்று கூட்டமிட்டென்
ஆனபடி என்னுடனே
மேனியவள் ஆடையெல்லாம்
"ஏனி· திளங்கொடியே!
"மீனுணவும் ஊனுணவும்
தேனுங் கனிகாய்என்
சொல்லி முகஞ்சுளித்தாள்
கொல்லைச் சிறுவீட்டிற்
மல்லிகை முல்லைமலர்
அல்லி நிறத்தவளை
மெல்லத் துவட்டிவிட்டு
தக்க உடைகொடுத்து
மிக்க விலையுயர்ந்து
ஒக்க அவளைமிக
பக்கம் உடனிருத்திப்
துக்கம்மிக ஆறியவள்
என்னுடைய மக்களுடன்
இன்னும் பணியாட்கள்
என்ன சிறுகுறையும்
சொன்னபடி எல்லாரும்
பண்ணியந்தப் பெண்மணியைப்
அஞ்சி அடக்கமுடன்
வஞ்சி யிளங்கொடியாள்
குஞ்சு குழந்தையெல்லாம்
கொஞ்சி விளையாடிக்
நெஞ்சம் மிகக்களித்து
இந்தவிதம் என்வீட்டில்
சொந்தம்மிகக் கொண்டாடிச்
வந்திருக்கும் நாளையிலே
"எந்தனுடை ஊரின்மேல்
உன்றனுடை உத்தரவில்
"என்ன தடைஇதற்கே?
சொன்னவுடன் என்றனக்குத்
கன்னியவள் தன்னவர்க்குக்
பின்னைச் சிலநாளில்
அண்ணனென்றும் தம்பியென்றும்
வந்தார் பலபேர்கள்
தந்தே னிடமவர்க்கும்
சந்தேகம் நானவர்மேல்
அந்தோ! இருந்துவிட்டேன்
நொந்தேன் நிலைதவறி
அன்னவர்கள் கொண்டுவந்த
மின்னுகின்ற கண்ணாடி
இன்னும் மயக்குகின்ற
என்னுடைய மக்களுக்கே
கன்னி யவள்சிரிக்கக்
நாளுக்கு நாளதன்மேல்
மேலுக்கு மேலாக
'பாலுக்குங் காவலொடு
தோல்நிற்க உள்ளிருந்த
கோல்செய்த என்வாழ்வைக்
என்ன உரைத்தாளோ!
அன்னைதந்தை தெய்வமென்றே
என்னுடைய மக்களென்னை
சொன்னபடி கேட்பதில்லை ;
கன்னியவள் மோகத்தால்
கொண்ட சமயம்விட்டார்
பண்டைப் பெருமையுள்ள
கண்டபடி உண்டுடுத்துக்
பெண்டொருத்தி தன்மயக்கில்
சண்டையிட்டுத் திரிவார்நான்
75. நாட்டை மறந்தனை மனமே!
நாட்டை மறந்தனை மனமே
பாட்டை நினைத்திலை சிறிதும்
பூட்டிய விலங்குடன் புலம்பும்
ஏட்டிற் படித்தனை அறநூல்
வேதம்வே தாந்தங்கள் வளர்த்து
பூதங்கள் விபத்துகள் குறைந்து
சாதமும் வயிற்றிற்கில் லாமல்
ஏததன் காரணம் என்றே
தன்னுயிர் போற்பிற உயிரைத்
பொன்னொளி வீசிய நாட்டின்
அன்னியர்க் குளவுகள் சொல்லி
உன்னுடன் பிறந்தவர் வருந்த
மாற்றலர்க் கிடங்கொடுத் தேழை
கூற்றுவன் கணக்கிடும் நாளில்
வீற்றிருந் தாண்டஉன் அரசை
ஆற்றுவை இப்பழி அகற்ற
சொந்த சுதந்தரம் மறந்தாய்
பந்தம கன்றிட நினையாய்
அந்தமி லாதவள் செல்வம்
கந்தையும் கஞ்சியும் அற்றார்
அடிமையிற் பழகினைப் பொழுதும்
குடிமுறை குறைந்தனை சிறிதும்
மிடிமையிற் கிடந்ததுன் நாடு
மடமையில் மயங்கியிப் பிறப்பின்
கொண்டவள் குலக்கொடி வாடக்
வண்டர்கள் எனவல்ல முன்னோர்
கண்டவர் சிரித்திடக் களித்து
அண்டிய அயலவர் மயக்கால்
ஜாதியை மதத்தினைப் பழித்துச்
வாதுகள் மிகுந்தன நாட்டில்
ஏதினி விடுதலை எனவே
ஓதிய ஒற்றுமைக் குழைத்தே
தேனுள்ள தாமரை மேலே
நானுள்ள இப்பெரும் நாட்டின்
ஊனுள்ள தேகத்தி னோடும்
ஏனென்ன என்றிலை மனமே
ஆண்டவன் உனக்கென்ற நாட்டில்
பூண்டுடல் வளர்த்தனை நெஞ்சே!
மீண்டுமுன் நாட்டினை மீட்க
ஆண்டொழில் புரிகுவை யாயின்
76. சுதந்திரம் வேண்டும்
கண்ணொளி யின்றி மற்றக்
பண்ணளி இனிமை யூட்டாப்
புண்ணியப் புகழொன் றில்லாப்
திண்ணிய சுதந்தி ரத்தின்
உண்டிகள் பலவும் செய்தே
கண்டொரு கனிவு சொல்லக்
பெண்டரும் அழகு மிக்காள்
தொண்டுசெய் துரிமை யின்றிச்
அன்பறம் வளர்த்தி டாமல்
வன்புகள் சூதும் வாதும்
இன்பமும் ஊக்கம் ஆன்ம
துன்பமும் சோம்பல் சூழும்
கல்வியும் கலைகள் யாவும்
செல்வமும் புகழும் தேயும்
நல்லவர் வருந்தி வாட
தொல்லைகள் கட்சி கட்டும்
இச்சைபோல் இருந்து வாழ
உச்சமாம் மனித ஜென்மம்
நச்செனும் அடிமை வாழ்வை
நிச்சய சபதம் பூண்டு
உலகினுக் கறிவு தந்த
கலைகளைக் கணித்து ஜீவக்
பலபல கொடுமை முற்றிப்
நலமெடுத் துரைக்க வேண்டும்
77. சுதந்திரமில்லா ஒரு நாடு
சுதந்திரத் திருநாள் தொழுவோம்நாம்
நிதந்தரும் தரித்திரம் நீங்கிடுவோம்
கோயில் குளங்களை இடித்தெரியும்
பேயின் கூத்தினைத் தடுத்திடவே
மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும்
போக்கிடச் சுதந்திரம் வேண்டிடுவோம்
பகைவர்கள் தங்களுக் குபசாரம்
நகைமிகும் அரசியல் முறைமாற
சுதந்திரம் இல்லா ஒருநாடு
எதிர்த்திடும் துயர்களைச் சகித்திடுவோம் ;
பொதுஜன நாயக முறைகாணும்
எதுதடை நேரினும் அஞ்சாமல்
78. சுதந்தரத் தேவி
சுதந்தரத் தேவியைத் தொழுவோம் வாரீர்
சுகம்பெற அதுதான் வழியாம் பாரீர்
பதந்தரும் மானிடப் பண்புகள் வளரும்
பரமனை உணர்ந்திடப் பக்தியும் கிளரும்.
விடுதலை யடைந்தது சுதந்தரம் இல்லை
வெற்றிகள் என்பதும் வெறிதரும் தொல்லை
கெடுதலை நீக்கிடக் கிருபைகள் செய்யும்
கேண்மையின் வடிவே சுதந்தரத் தெய்வம்.
அன்னிய உதவியை அவசியம் நீக்கும் ;
அதுதான் சுதந்தர ஆற்றலைக் காக்கும் ;
பொன்னிலும் உயர்ந்தது சுதந்தரச் சிறப்பு ;
பொறுமையும் வாய்மையும் அதற்குள பொறுப்பு.
ஆயுத வெறிகளை அப்புறம் ஒதுக்கி
அன்பின் நெறிகளில் அரசியல் புதுக்கி,
சாய்கிற வரையிலும் சமரசம் பரப்பி,
சண்டைகள் விலக்குதல் சுதந்தரப் பொறுப்பு.
அற்புதன் காந்தியின் அறநெறி கொண்டோம் ;
அடிமை விலங்குகள் அகன்றன கண்டோம் ;
கற்பெனக் காந்தியின் நன்னெறி காப்போம் ;
கருணையும் ஆற்றலும் கலந்திட நோற்போம்.
சுதந்தரம் அடைந்தோம் என்ற
எதிர்ந்தன எதிர்பா ராத
முதிர்ந்துள யுத்த வேகம்
விதந்தனில் நமது நாட்டின்
அரும்பெரும் காந்தி யண்ணல்
பெருந்திறல் காங்கி ரஸ்தன்
குறும்புகள் வளர்ந்தி டாத
விரும்பிடும் ராம ராஜ்ய
அதிகார மோக மின்றி
சதிகார எண்ணம் சேராச்
துதிபாடி நாட்டை வாழ்த்தும்
நிதியாக காங்க்ரஸ் நின்று
காந்தியை மறந்தி டாமல்
சாந்தியிற் குறைந்தி டாமல்
மாந்தருக் கறிவு காட்டும்
நேர்ந்துள நமது நாட்டின்
பாரினில் ஒருநா டேனும்
சீரிய முறையில் ராஜ
போரிட நினைப்பா ருண்டேல்
தீரமாய் நமது நாட்டின்
ஆயுத வெறிகள் மிஞ்சி
தீயன குறிகள் கண்டே
நாயகன் காந்தி தந்த
தாயகம் நமது நாட்டின்
அன்னியர்கள் நமைஆண்ட அவதி நீங்கி
என்னினும்என்? சுதந்தரத்தின் இன்பம் காண
தன்னலமே பெரிதாகக் கருதி டாமல்
பொன்னின்உயர் சுதந்தரத்தைப் பாது காக்கப்
உயிர்கொலையை அஞ்சிஅஞ்சி ஒதுக்க வேண்டும் ;
பயிற்சியுடன் அன்புநெறி பழக வேண்டும் ;
முயற்சிமிக உணவளிக்கும் தொழில்க ளெல்லாம்
உயர்ச்சியென்றும் தாழ்ச்சியென்றும் பேதமின்றி
அஞ்ஞானச் சூழ்நிலையை அதிக மாக்கி
விஞ்ஞான வெறிமறைய வேண்டு மென்ற
இஞ்ஞாலம் இதுவரைக்கும் காணாத் தூயன்
மெய்ஞ்ஞானத் தவநெறியால் நமது தேசம்
எண்ணரிய தியாகிகளை எழும்ப வைத்த
மண்ணுலகம் இதுவரையில் அறியா நல்ல
கண்ணனைய சுதந்தரத்தின் காட்சி மேவக்
திண்ணமுடன் காந்திவழி நிற்போ மானால்
புண்படுத்தல் எதற்கெனினும் தீதே என்றும்
உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டு மின்றி
பண்புடைய மனப்பான்மை பலிக்க வேண்டி
மண்புகழும் குடியரசு நமதே யாகும் ;
சட்டதிட்டச் சிறப்புமட்டும் சரிசெய் யாது
கட்டுதிட்ட உணர்ச்சியுடன் குடிக ளெல்லாம்
திட்டமிட்டுக் காத்திருந்து சேவைசெய்யும்
வட்டமிட்டு நம்மறிவைப் பாது காக்க
பிறநாட்டு வழிகளைநாம் பின்பற் றாமல்
திறம்காட்டி மெய்யறிவின் தெளிவும் சேர்ந்த
உறங்காமல் காந்திமகான் உபதே சத்தை
அறங்காட்டும் புதுமுறையில் ஆட்சி செய்வோம் ;
எந்திரங்கள் தந்தவெறி குறைய வேண்டும் ;
தந்திரங்கள் பணம்பறித்தல் தடுக்க வேண்டும் ;
சிந்தனையில் தெய்வபயம் சேர வேண்டும் ;
மந்திரமாய்க் காந்திமகான் திருநா மத்தை
சுதந்தரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
நிதந்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
சோறும் துணிமணி சுகங்களைக் காட்டிலும்
கூறும் நலங்களை விலைகொடுத் தாயினும்
வீறும், கருணையும், வித்தக ஞானமும்
தேறும் பொழுதினில் சுதந்தரம் தொழத்தகும்
உத்தமன் காந்தியின் மெய்த்தவ பலத்தால்
சுத்தநல் வழிகளில் சுதந்தரம் அடைந்தோம்
கைத்தலம் கிடைத்துள கற்பகச் செடிஇதைக்
சத்திய சபதம் பக்தியில் காப்போம்
தேசீய வாரத்தைச் சிந்திப்போம்--இந்தத்
தேசத்தின் தந்தையை வந்திப்போம்
மாசற்ற காந்தியின் நாமமே--என்றும்
மனிதர் குலத்துக்குச் சேமமாம்.
சேவைகள் காரியம் வெல்லுமா--அன்றிச்
செல்வச் செருக்குகள் செல்லுமா
தேவை நமக்கின்று சேவைதான்--அது
தெய்வக் கருணையை மேவுமால்.
சத்தியம் நம்மிற் குறைந்ததால்--பல
சங்கடம் வந்து நிறைந்ததே.
பத்தியம் விட்டுப் பிரிந்திடில்--என்ன
பயனுள வாகும் மருந்துகள்?
நீரில் குளித்திடும் ஆசையால்--சேற்றை
நிறையத்தன் மேனியில் பூசல்போல்
ஊரைத் திருத்திட எண்ணினோம்--சொந்த
ஊழல் மிகுந்திடப் பண்ணினோம்.
ஒற்றுமை சேரப் புகுந்தவர்--தம்முள்
ஒருவரை ஒருவர் இகழ்ந்தனர் ;
குற்றம் நிறைந்தது நாட்டிலே--உண்ணக்
கூழும்கு றைந்தது வீட்டிலே.
வீர கேசரி என்ன நின்றுநம்
விட்டொ ழிந்தது கெட்ட காலமும்
தூரம் ஓடின சூது வாதுகள்
சூடு பட்டன கேடு கெட்டன
கோர மாகிய அடிமை வாழ்வெனும்
குற்றம் முற்றிலும் பற்று விட்டன
ஈரம் மிக்க இலங்கை நாடினி
இன்று தொட்டுச் சுதந்த ரம்தரும்
ஏசு நாதனைப் புத்த தேவனை
இணையி லாதநம் காந்தி அண்ணலை
ஆசி யாவினில் பகுதி யாகிய
ஆதி வந்தவர் பாதி வந்தவர்
வாச மாயுள மக்கள் யாவரும்
வம்பு துன்புகள் வாதபேதமும்
ஈச னுண்மையை எண்ணு புண்ணிய
எதிரி யென்றிட எவரு மின்றியே
மலைவ ளத்திலும் நதிவ ளத்திலும்
மதிவ ளர்த்தினி நிதிவ ளர்த்திடும்
கலைவ ளர்த்தொரு நிலைகொ டுத்திடும்
கடமை செய்தபின் உரிமை எய்திடும்
கொலைவ ளர்த்திடும் மதவெ றித்திமிர்
குவல யத்தவர் கவலை யற்றிடக்
அலைக டல்நடு அரண மைந்துள
அச்ச மற்ற சுதந்த ரத்துடன்
சேர சோழரின் பாண்டி மன்னரின்
சேர்ந்தி ருந்திட நேர்ந்தி டும்படி
தீர யோசனை செய்யி லிந்தநம்
திட்ட மாகவும் ஒட்டி நிற்பது
தூர மாகிய தேச மக்களின்
தொன்று தொட்டுளம் ஒன்று பட்டுள
வாரம் மிக்குள இந்தி யாவுடன்
வந்த இந்த சுதந்த ரத்தினை
புத்த தேவரின் போத நன்னெறி
பூர ணத்தமிழ் ஞான மென்பதைப்
ஒத்து வாழ்வது மெத்த வும்சுல
உன்ன வேறினி என்ன வேற்றுமை?
சத்தி யத்தினும் சாத்வி கத்தினும்
சமர சத்தினி சங்க நாதம்
யுத்த மென்கிற பித்தை வெட்டிட
ஊழி யம்செய ஈழ நாடுதன்
ஆயுத பலத்தை நம்பாதே
ஞாயமும் அன்பும் நமதுதுணை
எந்திர சக்திகள் ஏய்த்துவிடும்
தந்திர யுக்தியும் சதமல்ல
சாகிற துணிச்சல் போதாது
வேகிற நெருப்பால் சமைத்திடலாம்
தைரியம் எத்துணை இருந்தாலும்
செய்கிற தெல்லாம் சிறுமை தரும்
வீரரும் சேனையும் வேண்டியதே
ஈரமும் இரக்கமும் கெடுத்தவரை
விஞ்ஞா னத்தால் கொல்லுவதை
அஞ்ஞா னத்தின் வடிவன்றோ
கண்டுபி டித்தவர் நடுங்குகிறார்!
மண்டலத் தறிஞர்கள் மயங்குகிறார்!
கொல்லும் வித்தைகள் பெருகுவதா!
சொல்லும் வல்லவர் சொல்லுங்கள்
இதுதான் தருணம் அடுத்துளது
பொதுவாய் உலகினில் போர்வெறியை
உத்தமன் காந்திசொல் கடைப்பிடித்தால்
சத்தியம் சாந்தமும் வளராமல்
இந்திய மக்கள் பொதுச்சிறப்பாம்
வந்தனை புரிவது வாய்மைகளை
கொலைவழி மறுப்பவர் தமிழ்மக்கள்
நிலைதரும் வள்ளுவன் மொழிகற்போர்
புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும்
புரட்சி என்னும் சொல்லின் பொருளிலும்
புத்தம் புதிதென நத்தப் படுவதைப்
நித்தம் கண்டுள சொத்தை வழிகளில்
மருட்சி தந்திடும் முரட்டு வார்த்தையில்
திரட்சி யாகிய மகிழ்ச்சி வாழ்க்கையைத்
பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால்
சதிபல செய்திடும் வழிகளில் விழுவதும்
வேதனை யேதரும் தீதுள நெறிபல
போதனை தந்திடும் நூதன வழிகளில்
சூதுகள் அரசியல் நீதிகள் என்றிடும்
வீதியில் சந்தியில் விழிக்க விட்டொரு
கொன்று குவிப்பதை வென்றி எனச்சொலும்
சென்று மறைந்தன என்று சொலும்ஒரு
சண்டையும் கொலைகளும் பண்டைய நாள்முதல்
வண்டர்கள் வழிகளைக் கொண்ட புரட்சியில்
தீமையி னால்எதும் நன்மைகள் வரினும்
வாய்மையின் அன்பால் வருகிற நலமே
உத்தமன் காந்தியின் உபதே சம்தான்
சத்திய நெறிதரும் சாத்விக முறையே
மன்னவன் நானே மந்திரி என்சொல்
என்னுடை நாடு என்னுடை வீடு
அன்னியர் இங்கே உள்ளவர் யாரும்
என்னுடை ஏவல் சொன்னதைச் செய்தோர்
என்னுடைக் காடு என்னுடைப் பாடு
மன்னவன் நானே மந்திரி என்ஆள்
சொன்னதைச் செய்து பண்ணையைக் காக்கச்
இன்னமும் இந்தச் சின்னத் தனத்தில்
என்னுடைப் பெட்டி என்னுடைத் துட்டு
பொன்னையும் வெள்ளிச் செம்புஎன் றாலும்
சின்னப் பயலோநான் சித்தம்கெட் டேனோ
மன்னவன் நானே மந்திரி வைப்பேன்
மந்திரி நானே மன்னன் ஆவேன்
இந்திய நாட்டில் நொந்தவ ரின்றி
அந்தமி லாதான் ஆண்டவன் தந்தான்
சிந்திய செல்வம் சேகரம் செய்து
எத்திசையில் எம்மொழியில் எவர்வாய்ச் சொல்லில்
சத்தியத்தின் வழிகாட்டும் அறிவை யெல்லாம்
இத்தினத்தே கூட்டியுள்ளோம் இனிதே எண்ணி
நித்தியமாம் அறங்களையே நினைவில் வைத்து
மன்னவரைச் சதிபுரிந்து வெட்டி மாய்த்தும்,
சொன்னவரைச் சுட்டெரித்தும், துன்மார்க் கத்தால்
இன்னபல கொடுமைசெயும் பிறநாட் டாரை
முன்னையநம் நாகரிகம் முரண்ப டாமல்
அடிமைகொளும் நம்விலங்கை அகற்ற வேண்டும் ;
கொடுமைசெயும் வழக்கமெல்லாம் கொளுத்த வேண்டும் ;
'முடியுமெனில் அப்படியே முடிப்போம் ; இன்றேல்
திடமதுதான் தீரமோடு வீர மாகும் ;
ஒருபகுதியில் ஒருஜாதி ஒரும தத்தார்
மருவாத பழங்கால நிலைமை யெல்லாம்
ஒருநாட்டில் பலமதங்கள் பலநாட் டாரும்
பெருநீதி இதைமனத்தில் பிசகி டாமல்
வள்ளுவரின் வாழ்க்கைதனை நினைப்பு மூட்டி
கள்ளமிலாக் காந்திமுனி காட்டித் தந்த
தெள்ளியநல் புதுவழியே உலகுக் கின்று
தள்ளரிய அப்பெரிய தவத்தைத் தாங்கத்
தமிழ்மொழி வளர்த்த ஞானம்
தமிழ்வழி அரசு நீதி
குமிழ்தர உலகை வாட்டும்
அமிழ்தினை உண்டா லென்ன
சிலம்பினைக் காட்டிக் கேட்ட
குலம்பழி கொண்ட தென்று
நலம்பிழைத் தறத்தைக் கொன்ற
தலம்புகழ் மன்னன் காதை
கன்றினை மைந்தன் கொல்லக்
'இன்றுனக் குற்ற துன்பம்
தன்மகன் உயிரைக் கன்றின்
வென்றிகொள் நீதி மன்னன்
கொண்டவன் அயலூர் போகக்
அண்டினர் கதவைத் தட்டில்
விண்டதை மறந்து செய்த
தண்டனை தனக்கே தந்த
திடமிகும் தெய்வ பக்தன்
கடமையும் தீர வீரக்
'அடிமையாய் வாழ மாட்டேன்
கொடுமையை எதிர்த்து நின்ற
உள்ளமும் உடலும் கூம்ப
வள்ளலக் காந்தி செய்த
தள்ளரும் அறங்க ளாகத்
வள்ளுவன் வாழ்ந்து சொன்ன
கற்புடைப் பெண்கட் கெல்லாம்
சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம்
மற்பெரும் வீரர்க் கெல்லாம்
நற்பெயர் நாட்டிற் காக்கும்
அன்னிய கொடிக ளெல்லாம்
பொன்னியல் போக வாழ்வின்
என்னுடைப் பரத நாட்டின்
பின்னையும் அறிவு தேடும்
பிறநாட்டுக் கொடிக ளெல்லாம்
மறம்நாட்டி மக்கள் தம்மைச்
அறம்நாட்டி உலகை யாண்ட
நிறம்காட்டி நிலையா யுள்ள
பச்சையாம் நிறத்தினாலே
நிச்சயம் வெள்ளை அந்த
துச்சமிவ் வுலக மென்னும்
அச்சமில் குடிசைக் கூலி
தருமமே குறியாக் கொண்டு
கருமமே கடனென் றோதிக்
வருமமும் வஞ்சம் நீக்கும்
பெருமைநம் கொடியைப் போலப்
இந்திய மகனே! இந்த
முந்தியுன் முன்னோர் தந்த
எந்தஓர் நாட்டிற் கேனும்
சந்ததம் உலகுக் கெல்லாம்
'எந்தத் தேசம் எந்தக் குண்டை
என்று மக்கள் உலகில் எங்கும்
இந்த நாடு பெற்றெ டுத்த
இன்பமாக மனிதர் வாழ
சொந்த ஞானத் தெளிவு கொண்டு
சுத்த மாக நின்று சாந்த
தந்து போன இந்த நாட்டின்
தாழ்ந்து போற்றி உலக முற்றும்
இமயம் தொட்டுக் குமரி மட்டும்
இந்தி யாவின் மக்க ளென்ற
சமயம் என்றும் ஜாதி என்றும்
சமதை யாக மொழிகள் யாவும்
அமைதி யாக தேச சேவை
அவதி மிக்க ஏழை மக்கள்
நமது நாடு உலகி னுக்கு
நாங்கள் என்றும் பணிபு ரிந்து
முன்னி ருந்த நமது நாட்டின்
முற்று மிந்த உலகி னுக்கும்
என்ன துன்பம் எந்த வேளை
எந்தை காந்தி தந்த சாந்த
தன்ன லம்ம றந்து நாட்டின்
தரணி தன்னில் யுத்தம் என்ற
மன்ன னிந்த பரத நாட்டின்
மாசி லாத சேவை செய்து
தேச பக்தர்திருக் கூட்டம்--தேச
பாச பந்தமெல்லாம் ஓடி--விடப்
பிச்சை யெடுக்கவந்த தல்ல--வேறு
இச்சை வந்துமிகத் தள்ள--தேசம்
தூங்கித் தூங்கிவிழும் தமிழா!--உன்
ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா!--உன்னை
எழுந்து நின்றுகண்ணைத் துடைத்தே--உன்
அழுந்திக் கீழிருந்து வாடும்--அன்னை
வெட்டி வெட்டியெறிந் தாலும்--எமை
சுட்டி ரத்தம்சொரிந் தாலும்--நாங்கள்
சாந்த மூர்த்தியந்தக் காந்தி--சொன்ன
மாந்தர் யாருமினி உய்ய--உயர்
தேவி சக்திதுணை கொண்டு--இந்தத்
கூவிக் கூவியெங்கள் தொண்டு--செய்யக்
'சத்தியம் நிலைக்கும்' என்று சங்கூதுவோம்!
'நித்தியம் கடவுள்' என்று சங்கூதுவோம்!
'நீதியே நிலைக்கும்' என்று சங்கூதுவோம்!
'வாது சூது பொய்மையாவும் ஒன்றோடொன்றாய்
'புண்ணியம் பலிக்கும்' என்று சங்கூதுவோம்!
'மண்ணிற்செய்த நன்மைதீமை யல்லாமலே
'தருமமே நிலக்கும்' என்று சங்கூதுவோம்!
'கருமமே சிறக்கும்' என்று சங்கூதுவோம்!
'உண்மையைக் கடைபிடித்து யர்ந்தவர்களை
'தண்மையான சாந்திபெற்ற தக்கோர்முன்னே
'கோபமற்றுக் குணமிகுந்த நல்லோர்முன்னால்
'பாபமற்ற வாழ்க்கையுள்ள பண்பாளரைப்
. பயமுறுத்த ஒன்றுமில்லை,' என்றூதுவோம்!
'அன்புகொண்டு ஆசையற்ற நல்லார்களை
'வன்புதுன்பம் வஞ்சமாயம் எல்லாமிதோ
'கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர்
'வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே
'ஆன்மசக்தி கண்டுகொண்ட அன்பாளரை
தான்மறந் தகந்தைவிட்ட தக்காரையே
சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்!
காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது
கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும்
கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்
பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும்
திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்
இருட்டினிற் செய்திடும் யாவையும் மறைந்திடும்
சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்
வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட
மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது
எங்கணும் யாவினும் இருந்தருள் கடவுளும்
இந்திய நாட்டின் இணையிலாக் கொடியே
தந்திரம் மோசம் தன்னலம் கருதா
எந்திரப் பேயின் இறுமாப் பழித்து
சந்திர சூரியர் வந்துபோம் வரையிலும்
பாரத நாட்டின் பகையிலாக் கொடியே!
ஊரெலாம் செழித்து உயிரெலாம் களித்து
பாரிடைக் கடவுள் படைத்ததன் பொருள்கள்
நேரிய வாழ்வில் நியாயம் நிலவிடும்
ஆருயிர் நாட்டின் அரசியற் கொடியே!
வீரிய ஞான வித்தகர் தங்கி
ஊரிய மனிதன் உளம்மிக மகிழ
பாருள யாரும் பணிந்திடு மாறு
96. கொடி வணக்கம்
கொடிவ ணக்கம் செய்வோம்--நாட்டின்
முடிவ ணங்கியதைப் பற்றி--அதன்
புதுமை யானகொடி பாரீர்--வேறு
முதுமை யாயெவர்க்கும் பொதுவாம்--வாழ்வின்
பச்சை யானஒரு தோற்றம்--நமக்குப்
இச்சை யானபொருள் கூடப்--பக்தி
துய்ய வெள்ளைநிறக் காட்சி--உண்மை
மைய மாகநிற்கும் மர்மம்--சத்யம்
துறவின் வர்ணமந்தக் காவி--உலகின்
சிறையும் வீடுமதற் கொன்றே--என்னும்
நடுவில் ராட்டையன்று பார்ப்போம்--அதில்
வடுவி லாததொழில் நூற்றல்--குடிசை
பக்தி, சத்தியம், தியாகம்--இவற்றின்
நித்தம் நித்தமிந்த நீதி--தம்மை
ஜாதி பேதமதில் இல்லை--மற்றும்
நீதி யானபல முறைகள்--தமக்கு
என்ன புதுமையிது பாரும்--கொடி
அன்னைக் கொடியிதனைப் பாடு--அதன்
ஏழை எளியவர்கள் யார்க்கும்--பயம்
வாழி நமதுகொடி வாழி--புது
97. 'ஜேய் ஹிந்த்'
'ஜேய் ஹிந்த்' என்கிற
'ஜேய் ஹிந்த்' என்கிற
ஜீவநன் னாதம்
தேசத்தில் ஒற்றுமை
தேசத்தில் ஒற்றுமை
பேய்கொண்ட தென்ன
பேத உணர்ச்சியை
அச்சத்தைப் போக்கி நல்
அடிமைக் குணங்களை
துச்சம் உயிரெனத்
தூண்டிடும் சக்திகள்
விடுதலை ஆர்வத்தில்
வீரத் தனங்களில்
துடிதுடிப் போடிந்தத்
சொல்லித் தராமலும்
'வந்தே மாதரம்'
வாழ்த்திநம் அன்னையின்
'தந்தோம் உன்றன்,
தைரியம் சொல்வது
வாலிபர் நெஞ்சின்
வரையற்ற த்யாகி
கோலிய சேனையின்
குறையாது ஜேய் ஹிந்த்
Comments
Post a Comment